Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aabathu Odi Vidu
Aabathu Odi Vidu
Aabathu Odi Vidu
Ebook215 pages2 hours

Aabathu Odi Vidu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

N.C. Mohandoss has written more than 300 novels, more than 500 short stories, 23 novelettes, more than 3000 articles and 4 TV dramas. He has written on social topics and has to his credit more than 100 books published which have appeared in all leading Tamil magazines and newspapers. His writings are dedicatd for the students of Annamalai university tamilnadu for reaserach to obtain Phd.

N.C.Mohandoss has been conffered with doctorate for community services by The world tamil university, Meryland.

Mohandoss attributes his inspiration to the popular "Thuglak" magazine and reveres "Saavi" who encouraged him to write more and more. His success is also due to the efforts of Mr Ramesh of 'DinaMalar' and the constant support and guidance of his friend, Mr Manohar.

N.C.Mohandoss as the Founder of INDIAN FRONTLINERS, KUWAIT, a SERVICE Organisation registered with the Indian Embassy, Kuwait, has pioneered a number of social service activities and extended financial help to several orphanages, hospitals, and senior citizen homes, poor students for their educational and also for the welfare of stranded Indian workers in Kuwait.

Awarded by Dr.Kalam :

At the diamond jubilee of Anbu Paalam service organization function held on 4th oct 2013 --In acknowledgement of the support and assistance extended by NC.Mohandoss to ‘Anbu Paalam’ for the past 20 years, Dr .Kalam felicitated Founder & Writer N.C.Mohandoss with a Momento and Gold Medal . (matter and photo attached).

Mohandoss has also compiled, edited and released 23 parts of FRONTLINERS book, on Talented Indians in Kuwait, India tourism, Indian Embassy services, Indian educational institutions in Kuwait ,community services,Indian Achievers Globally and about Enviroment protection.

Mohandoss hails from a remote village called Nambukuruchy in Tiruchi District, Tamil Nadu which still lacks the post office.

He is working for Kuwait National Petroleum Company . Mohandoss feels a sense of pride in owning that his success is due to the support, patience and guidance of his wife ARULMOZHI, and their only daughter VINU, who correctly reads his mind and reflects his ambitions and aspirations in every way

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580132405672
Aabathu Odi Vidu

Read more from Nc. Mohandoss

Related to Aabathu Odi Vidu

Related ebooks

Related categories

Reviews for Aabathu Odi Vidu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aabathu Odi Vidu - NC. Mohandoss

    http://www.pustaka.co.in

    ஆபத்து, ஓடு ஓடிவிடு!

    Aabathu, Odu Odividu!

    Author:

    என்.சி. மோகன் தாஸ்

    NC. Mohandoss

    For more books

    http://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆபத்து, ஓடு ஓடிவிடு!

    துரத்தி... துரத்தி...

    கொலைவிழும் இரவு

    தொந்தரவுக் காண்டம்

    ஒரு கொலையின் விலை!

    எனக்குள் சொர்க்கம்

    உயிரும் மெய்யும்

    எதிர் வீடு

    கணேசு

    கணக்கு தீர்க்கிறேன்

    வாழ்த்துரை

    சமீபத்திய சில ஆண்டுகளுக்குள் கிடுகிடுவென்று முன்னேறியுள்ள தமிழ் எழுத்தாளர்களில் நண்பர் என்.சி. மோகன்தாஸ் குறிப்பிடத்தக்கவராய் விளங்குகிறார். அதில் எனக்கு மகிழ்ச்சி.

    எனது எ. க. எ. (எப்படிக்கதை எழுதுவது) பாடங்கள் தனக்கு உறுதுணையாக இருக்கின்றன என்று மோகன்தாஸ் கூறினார் மேலும் மகிழ்ச்சி.

    மொந்தை மொந்தையாக நீண்ட பாராக்களில் கதையை அமைக்காமல் சின்னச் சின்னப் பாராக்களில் அமைத்தால் விறுவிறுப்பும் வேகமும் அதிகரிக்கும் என்பது அடிப்படையான உண்மை.

    கண்ணதாசனின் உரைநடை படைப்புக்களில் இதைக் காணலாம். நண்பர் மோகன்தாஸ் அந்த உத்தியை வெற்றிகரமாகக் கடைபிடித்து வருகிறார். கண்ணதாசன் கதைகளில் இடையிடையே வாழ்க்கையின் உண்மைகளைப் பற்றிய தத்துவ வரிகளும் இருக்கும்.

    மோகன்தாஸ் அந்த விஷயத்திலும் கவனம் செலுத்தி தன் படைப்புகளை மேலும் மெருகூட்டிக் கொள்ள வேண்டும் என்பது இளம் எழுத்தாளர்களில் ஒரு சிலரைத் தவிர பலபேர், பழைய ஆங்கில நாவல்களை அதிகம் படிப்பது கிடையாது. ஆரம்ப எழுத்தாளர்களுடன் நிறைய பழகியதை வைத்து இதைச் சொல்கிறேன். இது அவசியம் நீக்கிக் கொள்ள வேண்டிய குறை.

    டிக்கன்ஸையும் டூமாவையும் இன்னும் பலரையும் படித்தால் எல்லைகள் விரியும். கற்பனை பெருகும்.

    நிறைய படியுங்கள் படிப்பதை நிறுத்தவே நிறுத்தாதீர்கள். அதுதான் இன்ஸ்ப்ரேஷன் என்று சமீபத்தில் கூட நண்பர் சுஜாதா எனக்குச் சொன்னார். அதையே மோகன்தாஸ் போன்ற இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

    நண்பர் மோன்தாஸின் எழுத்து வெகுவாய் வளர மீண்டும் எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    -- ரா. கி. ரங்கராஜன்

    *****

    ஆபத்து, ஓடு ஓடிவிடு!

    1

    சவிதா தியேட்டர் ஸ்டாப் வந்ததும் ரோஷிணி பஸ்ஸிலிருந்து இறங்கி மணி பார்த்தாள். ஒன்பது சேலைத் தலைப்பை சரி பண்ணிக் கொண்டு, சந்திக்கப் போகிற ஆபத்தை அறியாதவளாய் அவள் இன்டர்வியூ லட்டரைப் பிரித்துப் பார்த்தாள்.

    அலுவலகப் பெயரும் அதன்கீழ் முகவரியும் குறிக்கப்பட்ருந்தது. எர்ணாகுளம் ஹை கோர்ட்டிற்குப் பின்புறம் என்கிற குறிப்பும் இருந்தது.

    பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவரிடம் வழி கேட்கலாமா என நினைத்தாள். ஆனால், எப்படி கேட்பது...? மலையாளம் உதைத்தது. ஆங்கிலத்தில் விசாரிக்கலாம். ஆனால் விசாரிக்கப் போகிற நபரிற்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டுமே...

    டிப்டாப்புடன் ஒரு பேண்ட் நபர் எதிர்பட,எக்ஸ்க்யூஸ் மீ! என்றாள்.

    அவர் யெஸ் என்க கேட்டாள்.

    ஈ ரோடில் நேராயிட்டு போயி இடது வசம் திரிஞ்சா மதி! என்றார் மலையாளத்தில்.

    தாங்க்ஸ் சொல்லிவிட்டு 'நேராயிட்டு' நடந்தாள்.

    அவளுக்கு சொந்த ஊர் திருச்சி. பி.காம். - டைப் ரைட்டிங் - ஷார்ட் ஹேண்ட். அவள் தமிழ்நாட்டில் வேலை தேடும் படலத்தில் இருக்க - ராஜாராமன் அவளுக்குத் தெரியாமலேயே, அவள் பேரில் இங்கு அப்ளை பண்ணியிருந்தான். இன்டர்வியூவும் வந்துவிட்டது.

    ராஜாராமன் ரோஷிணியின் அண்ணன் அவனுக்கு கனரா பாங்கின் எர்ணாகுளம் பிராஞ்சில் ஆபீசர் வேலை. அவன் தான் இன்டர்வியூ விபரம் சொல்லி அவளை ஊரிலிருந்து வரவழைத்திருந்தான்.

    அவர்கள் வீடு பணம்பள்ளி நகரில் இருந்தது. மீன் பிடி துறையின் ஆராய்ச்சி நிறுவனம், எர்ணாகுளத்தின் மேற்கு பக்கம் கடல் காயலைத் தொட்டுக் கொண்டு அதன் அலுவலகம் இருக்கிறது.

    ரோஷிணி எர்ணாகுளத்திற்கும் மலையாளத்திற்கும் புதுசு என்பதால் ராஜாராமன் காரில் கொண்டுபோய் விடுவதாய்ச் சொல்லியிருந்தான். ஆனால், மானேஜர் 'திடீ'ரென அவனை அழைக்கவும் - அவன் தன் மனைவி சுலோச்சனாவை துணைக்குப் போகும்படியும் தான் வந்து அங்கு பிக்-அப் பண்ணிக் கொள்வதாயும் சொல்லிவிட்டுப் போயிருந்தான்.

    சுலோச்சனா ஆறுமாத கர்ப்பம். அவள் ரோஷிணிக்குத் துணையாய் வருகிறேன் என்றுதான் கிளம்பினாள். இவள் தான் அண்ணிக்கு எதற்கு சிரமம் என்று வேண்டாமெனத் தடுத்துவிட்டாள்.

    நீ தனியா எப்படி போவே... உனக்கு வழி தெரியுமா?

    ஹா... என்ன பெரிய வழி! விசாரிச்சாப் போச்சு!

    எப்படி விசாரிப்பே... மலையாளம் உனக்குத் தெரியுமா...?

    மலையாளம் தெரியாட்டி என்ன... இங்கிலீஷ் கைவசம் இருக்கே! நான் பி, காம். பர்ஸ்ட் கிளாஸ் அண்ணி! மறந்திட வேண்டாம்!

    படிப்பெல்லாம் சரிதான். ஆனா, புது எடத்துல தனியா நீ போனா...

    தனியாப் போனா என்ன... பிடிச்சுட்டு போயிருவாங்களா ஏன் அண்ணி இப்படி பயந்து சாவறீங்க? இந்த ஊர்ல பொம்பளைங்க தனியா வீட்டைவிட்டு இறங்கறதில்லையா...?

    போதும்மா. உன்னோட பேசி நான் ஜெயிக்க முடியாது. உங்கண்ணனுக்குத் தெரிஞ்சா என்னைச் சும்மா விடமாட்டார்!

    அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க வீட்டுலயே நிம்மதியா ரெஸ்ட் எடுங்க. தம்பி பாப்பா வயித்துல துள்ளுது பாருங்க!

    ரோஷிணி கிளம்ப, சுலோச்சனா அவளுடைய நகைகள், தோடு போன்றவற்றைக் கழற்றி பெட்டியில் வைத்தாள்.

    ஏன் அண்ணி... அப்போ நான் போனாலும் பரவாயில்லே, இந்த நகைகள் போகக்கூடாதுங்கிறீங்களா...?

    ரோஷிணி கேட்டுவிட்டுச் சிரிக்க, சுலோச்சனா, போடி மண்டு! பி.காம். படித்த மண்டு! இந்த நகைகள் காரணமா உனக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாதுன்னுதான். தெரிஞ்சுதா?

    ***

    ரோஷிணி நடந்தாள். அவள் கையில் கறுப்பு பைல், தலையில் சிகப்பு ரோஜா, காதிலிருந்து முடிக்கு மாட்டல் கைகளில் 'கலகல' வளையல்கள், எல்லாமே கவரிங்.

    ரோட்டில் ஊனமுற்றோர் டேப்பை ஒலிக்கவிட்டு லாட்டரி பிஸினஸ் பண்ணிக் கொண்டிருந்தார்கள் ரோடு குண்டும் குழியுமாய் கிடந்தது. ஜல்லிகள் இரண்டு பக்கமும் கொட்டப்பட்டு லாரிகள் சைடு கேட்டு அலறிக் கொண்டிருந்தன.

    அவள் இன்டர்வியூவில் கேட்கப்படக்கூடும் என, மீன் வகைகளைப் பற்றி படித்தவற்றை மனதில் அசை போட்ட படி நடந்தாள். மீன் ஆராய்ச்சி நிலையம் என்றால் மீன்களை பற்றிதான் கேட்க வேண்டுமென்பதில்லை என்பது அவளுக்குத் தெரியும்.

    எத்தனை வேக்கன்ஸிகளோ... அதில் எத்தனை பேரை முன்பே தேர்ந்தெடுத்து விட்டார்களோ... யாருக்குத் தெரியும்...?

    டேங்கர் லாரிகள் எண்ணெய் சுமந்துகொண்டு ஸ்டோரேஜ் டாங்குகளுக்குப் பறந்தன. குறுகலான பாதையில் நுழைந்ததும் பெரிய பில்டிங் தெரிந்தது. ஐந்து ஸ்டோர் பில்டிங்! புதிதாய் கட்டியிருக்க வேண்டும்.

    அதை நெருங்க நெருங்க அவளுக்குள் படபடப்பும் பயமும் அதிகரித்தன. வியர்த்தது. வாசலுக்கு முன்னால் பெட்டி கடையில் டீ அடித்துக் கொண்டிருந்தார்கள். அதன் முன்பு நான்கைந்து இளைஞர்கள் சிகரெட் புகைத்தபடி டீ குடித்த படி...

    இவர்கள் இங்கு வேலை செய்பவர்களா இல்லை நம்மைப் போல் இன்டர்வியூவிற்கு வந்தவர்களா...?

    முன்புற விசால இடத்தில் ஸ்கூட்டர்களும் கார்களும் நிழலுக்கு நின்றன வாசலில் இருந்த நபர் ஒரு மாதிரி பார்க்க... இன்டர்வியூ! என்றாள்.

    பர்ஸ்ட் ஃப்ளோர்ல நாலாம் நம்பர் ரூம். யு கோ அண்ட் வெயிட்

    நாலாம் நம்பருக்கு முன்பு நிறைய பேர் இன்டர்வியூவில் மூக்குடைப்பட்டுத் திரும்பிப் போக தயாராய் இருந்தார்கள். காம்படிஷன் சக்ஸஸும், சயன்ஸ் டுடேயும், ஸ்போர்ட்ஸ் ஸ்டாருர் பலரின் கைகளிலும் இருக்க - அவளுக்கு கிலி தோன்றியது.

    எக்ஸாம் ஃபீவர் என்பார்களே... அது மாதிரி இன்டர்வியூ ஃபீவர்!

    நாம் ஒன்றும் பிரிப்பேர் பண்ணவில்லையே... இவர்கள் என்னென்னவோ படித்துக் கொண்டிருக்கிறார்களே... நாம் ஹோகயா தானா!

    அறைக்குள் நுழையவே அவளுக்கு மனசில்லை. பயம். பயம். நெஞ்சில் தோன்றிய பயம் கொஞ்சங் கொஞ்சமாய் கீழே இறங்கி காலையில் சாப்பிட்ட உப்புமாவை வயிற்றில் புரட்டி எடுத்தது.

    அவள் வராண்டாவில் நடந்தாள் இந்தப் பக்கமும் அந்த பக்கமும் வராண்டா நீண்டு பரவிக் கிடந்தது. மேற்பக்கம் கண்ணாடி ஜன்னல்வழி கடலும் படகுகளும் தெரிந்தன.

    கைக்கெட்டுகிற தூரத்தில் சின்னதாய் அது என்ன தீவா? போல்காட்டி பேலஸ் என பெரிய பெரிய எழுத்தில் எழுதி வைத்திருந்தார்கள். தூரத்தில் கப்பல்கள் 'பூம்ம்ம்ம்'மென ஓசையெழுப்பின. காற்று இதமாய் வந்து மேனியைத் தாக்கிற்று. காட்சி கண்களுக்கு ரம்யமாய் தெரிந்தது.

    அங்கிருந்து நகர்ந்து அங்கங்கே வைத்திருந்த வரைப் படங்களையும், ஷோ கேஸில் லைட் போட்டு வைத்திருந்த விதவித மீன்களையும் பார்த்து வியந்தாள்.

    மணி ஒன்பது முப்பது.

    இனியும் அரை மணிநேரம் இருக்கிறது. அன்று விடுமுறை போலிருக்கிறது. அலுவலர்களைக் காணோம்.

    வயிறு இப்போது ரொம்பக்கூடம் கலக்கிற்று.

    சங்கோஜப்பட்டு சங்கோஜப்பட்டு பியூன்போல தெரிந்த நபரிடம் எக்ஸ்க்யூஸ் மீ... டாய்லெட் எங்கேயிருக்கு...?

    அவர் தோ... அந்தக் கடைசில!

    அவள் வேகமாய் நடந்தாள்.

    *****

    2

    ராஜாராமன் காரை நிறுத்திவிட்டு வியர்த்துப்போய் அங்கே ஓடி வந்தான்.

    வாசல் ரிசப்ஷனிஸ்ட் நபரிடம்... இன்று டைப்பிஸ்ட் கிளார்க் இன்டர்வியூ இருக்கில்லே...

    யெஸ்...

    ரோஷிணின்னு ஒரு பொண்ணு இன்டர்வியூவிற்கு வந்திருந்தாளா... தெரியுமா...?

    தெரியாதுங்க. யார் யாரோ வராங்க. யார் பெயரையும் நாங்க கேட்டு வச்சுக்கலை.

    கான்டிடேட்ஸ் எங்கே இருக்காங்கன்னு தெரியுமா...?

    பர்ஸ்ட் ஃப்ளோர்ல நாலாம் நம்பர் ரூம்ல.

    ராஜாராமன் மாடிப்படி ஏறி - அறைக்குள் தேடினான் ரோஷிணியைக் காணாமல் போகவே வெராண்டாவில் பார்த்தான். அங்கு கூலரிடம் நின்றிருந்தவர்களிடம் சார்... கொஞ்ச முன்னாடி ரோஷிணின்னு ஒரு பொண்ணு...

    பேர் தெரியாது சார். அடையாளம் சொன்னாப் புரிஞ்சுக்கலாம்.

    தலைல ரோஜா செருகி கைல கறுப்பு பைல்!

    ஒரு பெண்ணின் அடையாளம் என்பதால் அவர்களால் எளிதாய் ஞாபகப் படுத்திக்கொள்ள முடிந்தது.

    சிகரெட் பிடித்திருந்தவன், சிகப்பு ரோஜாவா? என்றான் சிரித்தபடி.

    ஆமாம்.

    கொஞ்ச முன்னாடி நாங்களும் பார்த்தோம்.

    இப்போ எங்கேப் போனான்னு தெரியுமா...?

    அவர்கள் உதட்டைப் பிதுக்க - ராஜாராமனிற்கு மனைவிமேல் அளவில்லாத கோபம் வந்தது. துணைக்குப் போ என்றால் வீட்டில் சும்மா படுத்து கிடக்கிறாள். அவள் வேணான்னாளாம். அதனால இவ போகலியாம்!

    அவனுக்கு இயல்பிலேயே பதட்டம் அதிகம். எப்போதும் டென்ஷனிலேயே இருப்பான். எந்த ஒரு விஷயத்தையும் எளிதாய் எடுத்துக்கொள்ள மாட்டான். அலைவான். விஷயம் முடிகிறவரை அலைவான்.

    ஒரு பெண் தனியாய் இன்டர்வியூவிற்கு வந்திருக்கிறாள் என்பது அத்தனை பெரிய விசித்திரம் ஒன்றுமில்லை. ஆனாலும், அவனுக்கு மனது சமாதானமாகவில்லை. வியர்த்தது. என்னமோ ஆபத்து நடக்கப் போகிறதென்று நெஞ்சு துடித்தது.

    அதற்குக் காரணம் அவள் மேல் அவன் வைத்திருக்கும் பாசமா இல்லை அவனுடைய டென்ஷனா - இல்லை தன் எதிரிகள் அவளை பலி வாங்கிவிடக்கூடும் என்ற பயமா... இல்லை எல்லாமுமா...?

    *****

    3

    ரோஷிணி சங்கோஜத்துடனே 'லேடீஸ் டாய்லெட்' என போர்டு தேய்ந்திருந்த அறையைத் தள்ளிப் பார்த்தாள். அது திறக்க மறுத்தது.

    ஹாண்டிலைத் திருகிப் பார்த்தாள். பலனில்லை. பூட்டப்பட்டிருக்க வேண்டும். இன்று விடுமுறை... தேவைப் படாது என்று பூட்டி விட்டார்களா...?

    இப்போது என்ன செய்யலாம்?

    வயிற்றிற்கு சமாதானம் சொல்ல முடியாமல் தவித்தாள் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் கண்களைப் பாய்ச்சியபோது ஆண்கள் பாத்ரூம் தென்பட்டது. அதனுள் புகுந்து விடுவோமா...?

    சீ... யாராவது வந்து விட்டால் அசிங்கம். அவளுக்கு மேனி சிலிர்த்தது. ஆனாலும் கட்டுப்படுத்த முடியும் என்று தோன்றவில்லை. அந்தப் பக்கம் எவருமே தென்படாத தைரியத்தில் கதவில் கை வைக்க திறந்துக் கொண்டது.

    *****

    4

    சுலோச்சனாவிற்கு மனசு சமாதானமாகவில்லை. கணவன் ரோஷிணியுடன் துணைக்குப் போகாததிற்காகக் கோபித்துக் கொண்டதற்காகக்கூட அவளுக்கு வருத்தமில்லை.

    ராஜாராமனிற்கு சமீப

    Enjoying the preview?
    Page 1 of 1