Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Udhaya Kaalam
Udhaya Kaalam
Udhaya Kaalam
Ebook194 pages1 hour

Udhaya Kaalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

N.C. Mohandoss has written more than 300 novels, more than 500 short stories, 23 novelettes, more than 3000 articles and 4 TV dramas. He has written on social topics and has to his credit more than 100 books published which have appeared in all leading Tamil magazines and newspapers. His writings are dedicatd for the students of Annamalai university tamilnadu for reaserach to obtain Phd.

N.C.Mohandoss has been conffered with doctorate for community services by The world tamil university, Meryland.

Mohandoss attributes his inspiration to the popular "Thuglak" magazine and reveres "Saavi" who encouraged him to write more and more. His success is also due to the efforts of Mr Ramesh of 'DinaMalar' and the constant support and guidance of his friend, Mr Manohar.

N.C.Mohandoss as the Founder of INDIAN FRONTLINERS, KUWAIT, a SERVICE Organisation registered with the Indian Embassy, Kuwait, has pioneered a number of social service activities and extended financial help to several orphanages, hospitals, and senior citizen homes, poor students for their educational and also for the welfare of stranded Indian workers in Kuwait.

Awarded by Dr.Kalam :

At the diamond jubilee of Anbu Paalam service organization function held on 4th oct 2013 --In acknowledgement of the support and assistance extended by NC.Mohandoss to ‘Anbu Paalam’ for the past 20 years, Dr .Kalam felicitated Founder & Writer N.C.Mohandoss with a Momento and Gold Medal . (matter and photo attached).

Mohandoss has also compiled, edited and released 23 parts of FRONTLINERS book, on Talented Indians in Kuwait, India tourism, Indian Embassy services, Indian educational institutions in Kuwait ,community services,Indian Achievers Globally and about Enviroment protection.

Mohandoss hails from a remote village called Nambukuruchy in Tiruchi District, Tamil Nadu which still lacks the post office.

He is working for Kuwait National Petroleum Company . Mohandoss feels a sense of pride in owning that his success is due to the support, patience and guidance of his wife ARULMOZHI, and their only daughter VINU, who correctly reads his mind and reflects his ambitions and aspirations in every way

Languageதமிழ்
Release dateMay 13, 2020
ISBN6580132405387
Udhaya Kaalam

Read more from Nc. Mohandoss

Related to Udhaya Kaalam

Related ebooks

Reviews for Udhaya Kaalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Udhaya Kaalam - NC. Mohandoss

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    உதய காலம்

    Udhaya Kaalam

    Author :

    என்.சி. மோகன் தாஸ்

    NC. Mohandoss

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நூலாசிரியரைப் பற்றி

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    நூலாசிரியரைப் பற்றி

    பிறருக்கு யோசனைகள் - புத்திமதிகள் சொல்வதும், எழுதுவதும், மிக எளிது. அவற்றை கடைப்பிடிப்பதுதான் கடினம். எழுத்தும் பேச்சும் வெறும் உபதேசங்களாக மட்டுமின்றி அவற்றை நடைமுறையில் கடைபிடிக்க வேண்டும் என்று தீவிரமாயிருக்கும் எழுத்தாளர்களில் என்.சி. மோகன்தாஸும் ஒருவர்.

    எழுத்துலகில் இதுவரை 500+ சிறுகதைகள், 200+ நாவல்கள், 10+ குறுநாவல்கள், 3,000+ கட்டுரைகள், 4 டி.வி. நாடகங்கள் என பிரபல இதழ்களில் எழுதி, அவைகள் 100+ புத்தகங்களாக 10+ பதிப்பகங்கள் மூலமும் ஆன்லைனிலும் வெளியாகியுள்ளன.

    திருச்சி மாவட்ட - லால்குடி வட்டத்தில் நம்புகுறிச்சி எனும் (போஸ்டாபீஸ் இல்லாத - போன் உண்டு) கிராமத்தில் பிறந்து, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் B.Sc இரசாயனம் படித்து, கொச்சின், சென்னை, குவைத் பெட்ரோலியம் கம்பெனிகளில் வேலைபார்த்து எழுத்தையும் சமூகத் தொண்டையும் தொடர்ந்து வருகிறார்.

    குவைத்தில் சேவை குணமுள்ள நண்பர்களுடன் Indian Frontliners அமைப்பை நிறுவி, அதன் முலம் குவைத்தில் வெற்றிகரமாய் செயல்பட்டுவரும் இந்தியர்களின் வெற்றிப் பயணத்தை Indian Frontliners தலைப்பில் புத்தகமாய் தொகுத்து - இதுவரை 22 பகுதிகள் வெளியிட்டுள்ளார்.

    இந்த நூல்களை - குவைத்தில் அகில இந்திய அளவில் பிரபலங்களை வரவழைத்து, வெளியிட்டு நிதி திரட்டி பல நற்காரியங்கள் செய்து வருகிறார்கள். அத்துடன் www.iflkuwait.com இணையதளத்தின் ஆசிரியராகவும் இருந்து அதன் மூலமும் இவரது சேவை, இந்தியாவிலிருந்தும் தொடர்கிறது.

    எங்கும் எதிலும் இந்தியர் என்ற உணர்வை தூக்கிப் பிடிப்பார் என் சி எம்.

    இவரது IFL நேரடியாகவும், இந்திய தூதரகம் மற்றும் பிற சேவை நிறுவனங்கள் மூலமாகவும், கல்வி - சுகாதாரம் - பேரிடர்நிவாரணம் - முதியோர் பராமரிப்பு, கோவிட் நிவாரணம் - என அனைத்து தருணங்களிலும் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.

    இதன் காரணமாய் சிறந்த சேவைக்காக Dr. கலாம் விருது, குவைத் இந்திய தூதரகத்தின் சேவை விருது, முல்லைச்சரம் பொன்விழாவில் இசைஞானி விருது, இலக்கியவீதி அமைப்பின் அன்னம் விருது, கலாம் சர்வதேச விருது, கம்பன் கழக விருது என பல விருதுகளுக்கு இவர் சொந்தக்காரர்.

    இந்த வாழ்வில் – இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி பண்ணி பார்ப்பதைவிட பெரிய சந்தோஷம் வேறு எதுவுமில்லை. பிறருக்கு உதவும் அளவில் வசதி வாய்ப்புகளை தந்துள்ள இறைவனுக்கு மோகன்தாஸ் நன்றி தெரிவிப்பதுடன், தன்னை இந்தளவிற்கு வளர உதவின, ஆசிரியர் சாவி, தினமலர் ஆசிரியர் கே. ராமசுப்பு, லேனா-ரவி தமிழ்வாணன், ஆசிரியர் மணியன், வண்ணப்பட யோகா, ப்ரியா கல்யாணராமன், பாவைசந்திரன், ஜீஏ, நண்பன் மனோகர், பி. வெங்கடராமன் முதல் பலரையும் நமஸ்கரிப்பதில் பெருமைப்படுகிறார்.

    1

    விடியும் போதே ஊரில் இரைச்சலாயிருந்தது.

    மார்கழியின் இயல்பான கோயில் பஜனைகள் ஒருபக்கம், தேர்தலுக்காக முளைத்திருந்த ஸ்பீக்கர்கள் மறுபக்கம் காதை கிழித்துக் கொண்டிருந்தன.

    இருளிற்கு பனி போர்வை போர்த்தியிருந்தது.

    பஸ் ஸ்டாண்டின் டீ கடையில் பேப்பர்கள் விரிந்து கிடந்தன. சிலருக்கு டீ உள்ளே போனால்தான் காலைக் கடன்கள் தீரும். வேறு சிலருக்கோ பேப்பர்!

    ஸ்கூல் கிரவுண்டில் என்ன விசேஷம்? ஒரே தோரணமாயிருக்கு. பெரிது ஒன்று பேச்சை ஆரம்பித்து டீயை சுவைத்தது.

    அது வந்து… நம்ம இன்ஜினியர் வின்சென்ட் பாபு தேர்தலில் நிற்கிறாரில்லே… அவருக்கு வேண்டி தலைவர் திருமால் வளவன் பிரச்சாரம் செய்ய வராறாம்!

    அப்போ பழைய எம்.எல்.ஏ. ஜெயச்சந்திரனுக்கு சீட் இல்லையா?

    இல்லை. இளைஞர்களுக்கு வழிவிடச் சொல்லி தலைவர் வற்புறுத்தினாராம். காரணம் அது இல்லைன்னு அவருக்கும் தெரியும். முடிஞ்சவரை மோதி பார்த்துட்டு விலகிட்டாராம்!

    இன்ஜினியருக்கு எதுக்கு அரசியல்? ஒழுங்காய் பிழைப்பை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது?

    டீ கடைக்காரர் கிளாஸை கழுவுதலுக்கிடையில் சிரித்து, இதுவும்கூட ஒரு பிழைப்புதான்! ஜெயிச்சு வரட்டும். அப்புறம் பாருங்க சம்பாத்தியத்தை!

    ***

    வின்சென்ட் பாபுவிற்கு இருபத்தெட்டு வயது.

    பார்வைக்குப் பளீரென்றிருந்தான். நல்ல சிகப்பு. அளவான மீசை. கச்சிதமான உடல். வரிசையான பற்கள். சுருக்கமாய்ச் சொன்னால் ஆள்களை வசீகரிக்கும் தோற்றம்!

    அப்பா ஜமீன் வம்சம். ஆனால் பழைய பந்தா ஒன்றும் தற்போது இல்லை. ஊரில் நிலபுலன்கள் இருக்கின்றன. மழையில்லாததாலும், சரியான பராமரிப்பு இல்லாததாலும் முன்பு போல வருமானம் வருவதில்லை.

    வின்சென்ட்டை இன்ஜினியராக்கி பார்க்கும் ஆவலில் செலவு பண்ணி சீட் வாங்கி படிக்கவும் வைத்துவிட்டார்.

    ஆனால் அவனுக்கு வேலையில் நாட்டமில்லை. படிக்கிற போதே அரசியல் மோகம். கடைசி இரண்டு வருடங்கள் சேர்மனாய் இருந்து செயல்பட்டிருந்தான்.

    அதனால் அரசியல் தலைவர்களுடன் பரிச்சயம்!

    படித்து வெளியே வந்ததும் வேலைக்கு மனு போடவே இல்லை. தெரிந்த அரசியல் தலைவர்களைப் பிடித்து கான்ட்ராக்டில் புகுந்துவிட்டான்.

    இவன் முயற்சியில் ஊருக்குப் பாலம் ஒன்று வந்திருக்கிறது. அதனால் இவனுக்கு நல்ல பேர்.

    வீட்டில் கொஞ்சம் பணமிருக்கிறது. ஆர்வமிருக்கிறது.

    சும்மான்னாலும் கட்சியில் சீட் கேட்டான், தலைவர் கொடுத்துவிட்டார்.

    அந்தப் பூரிப்பிலிருந்து விடுபடுவதற்குள் இன்று வேட்பாளர் அறிமுகக் கூட்டம்!

    அவனுக்கு நிலை கொள்ளவில்லை. நேற்று ராத்திரியிலிருந்தே தூக்கமில்லை. தலைவரைச் சந்திக்கப் போகிறோம், பேசப் போகிறோம். அவருடன் ஒன்றாய், ஒரே மேடையில்!

    திருமால் வளவன் சாதாரண தலைவரா? இம்முறை அவருக்குத்தான் வெற்றி வாய்ப்பு என்கிறார்கள்.

    தலைவரை பார்ப்பதற்கு, அவர் பேச்சைக் கேட்பதற்காக ஊர் ஊராப் போயிருக்கிறோமே, அவர் வரவிற்காக ஜாமம்வரை காத்திருப்போமே, அப்படிப்பட்டவருடன் இன்று ஒரே மேடையில்!

    அவனுக்குப் புல்லரித்தது.

    எப்போது விடியும் என்று காத்திருந்து குளிக்க ஓடினான். அவசர அவசரமாய் டிரெஸ் பண்ணிக்கொண்டான். சிம்பிளாய் இருக்கட்டுமே என்று நாலு முழ வேட்டியும், சந்தனக் கலரில் காட்டன் சட்டையும்!

    தங்கைகள் ஓடிவந்து, டிபன் ரெடிண்ணா என்றார்கள். அவனுடைய உடையைக் கண்டு மூக்கில் சிரித்தார்கள்.

    ஏதேது, போகிற போக்கைப் பார்த்தால் காவி வேட்டி வாங்கவேண்டும் போலிருக்கே!

    வேட்டியே கட்ட தெரியாதும்பாயே… இப்போ எப்படிண்ணா?

    வின்சென்ட் சிரித்து மழுப்பினான். பெயருக்குச் சாப்பிட்டு வைத்தான்.

    அம்மா சாமி படத்திடமிருந்து குங்குமம் எடுத்து வந்து வைத்துவிட்டாள்.

    ஈஸிசேரில் அமர்ந்து பேப்பர் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவிடம் போய், அப்பா, என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க!

    காலில் விழப்போனவனைப் பற்றி நிமிர்த்தினார். பிறகு அவனை கூர்ந்து நோக்கி, உன் முடிவில் மாற்றமில்லையா? நமக்கு எதுக்குப்பா அரசியல்?

    நல்லா யோசிச்சுதான்ப்பா முடிவெடுத்திருக்கேன். வேட்புமனு தாக்கல் பண்ணியாச்சு. சீட்டும் கிடைச்சு இன்னைக்கு முதல் கூட்டத்துக்கு கிளம்பிட்டிருக்கேன். இனி பகவானே நினைச்சாலும்கூட மாற்ற முடியாது!

    எனக்கென்னவோ இது நல்லதாப் படலே. உன்னை இன்ஜினியராக்கியது எதுக்கு, எம்.எல்.ஏ. ஆகறதுக்கா?

    அப்பா! அதெல்லாம் பிறகு பேசிக்குவோம். நேரமாகுதுப்பா… முதல்ல என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க.

    சட்டென்று அவர் தடுப்பதற்குள் காலில் விழுந்தான்.

    போகும்போதே எதுக்கு தடசம்? பிள்ளையை ஆசீர்வதிச்சு அனுப்புங்க.

    அப்பா, மனைவியை திரும்பி முறைத்துவிட்டு அவனுடைய தலையில் கைவைத்தார். அது ஆசீர்வதிப்பது போலிருக்கவில்லை. சபிப்பது போல்!

    அவன் எழுந்து உடையைச் சரி பண்ணிக் கொண்டு, அப்போ நான் வரேம்மா!

    மதியம், சாப்பிட வந்துருவேல்ல?

    தெரியாது…

    ராத்திரிக்கு?

    சொல்ல முடியாதும்மா!

    வாசலுக்கு ஓடி, தயாராய் இருந்த காரில் தொற்றிக் கொண்டான். இன்று அவன் ஓடும் ஓட்டம் ஓர் ஆரம்பமே என்பதையும், இனி ஓடிக் கொண்டேதான் இருக்கப் போகிறான் என்பதையும் அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.

    கார் பறந்தது.

    வின்சென்ட் கனவில் மிதந்தான். தலைவரை எப்படி வரவேற்க வேண்டும், மேடையில் எப்படிப் பேசவேண்டும் என்பதற்கு மனதிற்குள் ரிகர்சல் நடத்தினான்.

    வழியில் விநாயகர் கோயில். வண்டியைக் கொஞ்சம் நிறுத்துப்பா!

    கார் சட்டென்று ஓரம் கட்டி நின்றது.

    டிரைவர் திரும்பிப் பார்த்தான்.

    வின்சென்ட் இறங்கி, நீ போய் பெட்ரோல் போட்டுகிட்டு வந்துரு. நான் வெயிட் பண்றேன்.

    போற வழியிலதான் சார் பெட்ரோல் பங்க்.

    தெரியும், கிளம்பு.

    அதுக்கில்லை சார், போகும்போது அப்படியே பெட்ரோல் அடிச்சுகிட்டு…

    சொன்னதைச் செய்!

    கார் கிளம்பிப் போனதும் வின்சென்ட் கோயிலுக்குள் நுழைந்தான். ஒப்புக்குச் சாமி கும்பிட்டான்.

    சுற்றுப் பிரகாரத்தின் பின்பக்கம் காம்பவுண்டைத் தொட்ட மாதிரி ஒரு பூவரச மரம் இருந்தது. கோயிலில் சந்தடி இல்லை. வெறுமை.

    அங்கே,

    குளித்து முடியைப் படரவிட்டு, நுனியில் ரப்பர் பேண்ட் போட்டு சந்தனமும், நெற்றியுமாய் நின்றிருந்தாள் லதா. அவள் கூந்தலில் மல்லிகை. வாயிலும்!

    அவனைக் கண்டதும் மலர்ந்தாள்.

    லதா பிரைமரி ஸ்கூலில் டீச்சர். இருபது இருபத்திரண்டு வயதுதான் தேறுவாள். அவளுக்குக் கவர்ச்சியான கண்கள்! உடலிலும் கவர்ச்சி!

    எங்கே வராம போயிருவீங்களோன்னு பயந்து போயிட்டேன் என்றாள், அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டு.

    அதெப்படி… வராம இருக்க முடியும். நான் காதலிப்பது டீச்சரையாச்சே! வரல்லேன்னா பிரம்படி கிடைக்கும்னு எனக்குத் தெரியாதா?

    கேட்டுவிட்டுச் சிரித்தான்.

    "அப்புறம்? சாமிகிட்ட பிரார்த்திச்சாச்சா… கணபதி என்ன

    Enjoying the preview?
    Page 1 of 1