Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vibareetha Parisu
Vibareetha Parisu
Vibareetha Parisu
Ebook100 pages35 minutes

Vibareetha Parisu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நண்பர் திரு. என். சி. மோகன்தாசின் படைப்புகளை நான் முதன் முதலில் பார்த்தது சாவி இதழில்.
பல பேனாக்களைக் குனியவைத்து, எண்ணற்ற எழுத் தாளர்களை உயர வைத்து ஊக்குவித்த பெருமை சாவிக்கு உண்டு. சாவியால் வளர்க்கப்பட்ட பல எழுத்தாளர்களுள் என். சி. மோகன் தாஸ் குறிப்பிடத்தக்கவர்.
அவரது எழுத்துகளையும் பெயரையுமே காண நேர்ந்த எனக்கு அவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஒருமுறை கிடைத்தது. கொச்சித் தமிழ்ச் சங்க அழைப்பை ஏற்றுக் குடும்பத்துடன் நான் போயிருந்தபோது, செட்டிநாட்டரசர் விருந்தினர் மாளிகையில் என்னை வந்து சந்தித்தார். இந்த அமைதியான மனிதரா இப்படி விஸ்வரூபம் எடுக்கிறார் என்று நான் வியந்தது உண்டு.
அப்புறம் வீட்டுக்கு அழைத்தார். சோட்டானிக்கராவிலுள்ள அவர் வீட்டிற்குக் குடும்பத்துடன் சென்றேன். பேசிக்கொண்டிருந்தபோது சொன்னேன்,” நீங்கள் சென்னைக்கு வந்தால் இன்னும் ஒளிவிடமுடியும்.” நான் சொன்னதற்காக அவர் சென்னை வந்தார் என்று சொல்ல மாட்டேன். ஆனால் அவர் சென்னை வர நானும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.
நாளிதழ்கள் என்பவை மல்லிகைப்பூ போன்றவை. வார இதழ்கள் என்பவை ரோஜாப்பூ போன்றவை. மாத இதழ்கள் என்பவை கூட, அடுத்த மாத இதழ்கள் வந்ததும் ஓரளவு வாடிவிடக்கூடிய இதழ்கள். நூல்கள் அப்படி அல்ல அவற்றுக்கு வயது வரம்பும் இல்லை. எத்தனையோ தலைமுறைகளைக் கடந்து நின்று வாழக்கூடிய ஆற்றல் நூல்களுக்கு உண்டு.
வளர்ந்து வரும் ஓர் எழுத்தாளரின் படைப்புகளுக்கு ஒரு நிரந்தரத்துவம் தர முனைந்ததில் மணிமேகலைப் பிரசுரத்திற்கு மகிழ்ச்சி; மனநிறைவு.
- லேனா தமிழ்வாணன்
Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580132405340
Vibareetha Parisu

Read more from Nc. Mohandoss

Related to Vibareetha Parisu

Related ebooks

Related categories

Reviews for Vibareetha Parisu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vibareetha Parisu - NC. Mohandoss

    http://www.pustaka.co.in

    விபரீதப் பரிசு

    Vibareetha Parisu

    Author:

    என்.சி. மோகன் தாஸ்

    NC. Mohandoss

    For more books

    http://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    வாழ்த்துரை

    நண்பர் திரு. என். சி. மோகன்தாசின் படைப்புகளை நான் முதன் முதலில் பார்த்தது சாவி இதழில்.

    பல பேனாக்களைக் குனியவைத்து, எண்ணற்ற எழுத் தாளர்களை உயர வைத்து ஊக்குவித்த பெருமை சாவிக்கு உண்டு. சாவியால் வளர்க்கப்பட்ட பல எழுத்தாளர்களுள் என். சி. மோகன் தாஸ் குறிப்பிடத்தக்கவர்.

    அவரது எழுத்துகளையும் பெயரையுமே காண நேர்ந்த எனக்கு அவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஒருமுறை கிடைத்தது. கொச்சித் தமிழ்ச் சங்க அழைப்பை ஏற்றுக் குடும்பத்துடன் நான் போயிருந்தபோது, செட்டிநாட்டரசர் விருந்தினர் மாளிகையில் என்னை வந்து சந்தித்தார். இந்த அமைதியான மனிதரா இப்படி விஸ்வரூபம் எடுக்கிறார் என்று நான் வியந்தது உண்டு.

    அப்புறம் வீட்டுக்கு அழைத்தார். சோட்டானிக்கராவிலுள்ள அவர் வீட்டிற்குக் குடும்பத்துடன் சென்றேன். பேசிக்கொண்டிருந்தபோது சொன்னேன், நீங்கள் சென்னைக்கு வந்தால் இன்னும் ஒளிவிடமுடியும். நான் சொன்னதற்காக அவர் சென்னை வந்தார் என்று சொல்ல மாட்டேன். ஆனால் அவர் சென்னை வர நானும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.

    நாளிதழ்கள் என்பவை மல்லிகைப்பூ போன்றவை. வார இதழ்கள் என்பவை ரோஜாப்பூ போன்றவை. மாத இதழ்கள் என்பவை கூட, அடுத்த மாத இதழ்கள் வந்ததும் ஓரளவு வாடிவிடக்கூடிய இதழ்கள். நூல்கள் அப்படி அல்ல அவற்றுக்கு வயது வரம்பும் இல்லை. எத்தனையோ தலைமுறைகளைக் கடந்து நின்று வாழக்கூடிய ஆற்றல் நூல்களுக்கு உண்டு.

    வளர்ந்து வரும் ஓர் எழுத்தாளரின் படைப்புகளுக்கு ஒரு நிரந்தரத்துவம் தர முனைந்ததில் மணிமேகலைப் பிரசுரத்திற்கு மகிழ்ச்சி; மனநிறைவு.

    - லேனா தமிழ்வாணன்

    ***

    1

    அந்த வீடு எர்ணாகுளத்தின் மத்தியில் இருந்தது. வாடகை வீடு. உள்ளே மகேஸ்வரன் வாசலுக்கும் ஹாலுக்குமாய் நடந்து கொண்டிருந்தார். அவர் நடையில் ஒரு கோபம் தெரிந்தது. அவருடைய முகம் கடுகடுப்பாயிருந்தது. இடுப்பு வேட்டி அவிழ, கோபத்தை அதன் மேல் காட்டி இழுத்துச் செருகினார்.

    ஒரு வார இதழை எடுத்துக்கொண்டு அமர்ந்தபோது கமலம் வந்து, சாப்பிட வாங்க! என்றாள்.

    வேண்டாம். கொண்டு போய்க் கொட்டு!

    கல்யாணி வரும்போது வரட்டுமே, எதுக்காக இத்தனை பதற்றம்?

    எல்லாம் நீ கொடுக்கிற இடம்! என்று மனைவி மேல் பாய்ந்தார்.

    ஏங்க, இப்படி எரிஞ்சு விழறீங்க? நான் என்ன செய்வேன்?

    மூச்! உன்னோட வியாக்கியானம் எனக்கு வேண்டாம். உள்ளே போ!

    கமலம் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு உள்ளே நகர்ந்தாள்.

    மகேஸ்வரன் மீண்டும் எழுந்து நடக்க ஆரம்பித்தார். வாசலைப் பார்த்தார். ரோட்டைப் பார்த்தார். கார்களும் ஆட்டோக்களும் வீட்டைக் கடந்து போய்க் கொண்டிருந்தன.

    அவருக்கு அறுபது வயது. அந்த வயதிற்கு ஏற்றபடி ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி எல்லாமே இருந்தன.

    அவரால் எந்த ஒரு சின்ன விஷயத்தையும், அதிர்ச்சியையும் தாங்கிக் கொள்ள முடியாது. பொரிந்து தள்ளுவார்.

    அவர் பொறுமையிழந்தார்.

    கல்யாணியை இன்னும் காணோமே? எங்கே போயிருப்பாள்? ஆபீஸ் முடிந்தால் நேராய் வீட்டிற்கு வர வேண்டியது தானே! எங்காவது போகவேண்டும் என்றால் சொல்லிவிட்டுப் போவதற்கென்ன?

    சமீப காலமாய் அவள் போக்கே சரியில்லை. சம்பாதிக்கிறோம் என்கிற திமிர்! நம் பேச்சைக் கேட்பதில்லை. நம்மை ஒரு பொருட்டாயும் மதிப்பதில்லை. வரட்டும் அவள் மீண்டும் அந்தப் பழைய‘அவனுடன்’தொடர்பு வைத்திருக்கிறாளோ?

    பத்து மணியாயிற்று.

    மகேஸ்வரன் நாற்காலியிலேயே கண்ணயர்ந்தபோது ஆட்டோ வந்து நின்றது.

    கல்யாணி நனைந்துகொண்டு ஓடி வந்தாள்.

    கல்யாணிக்கு இருபத்தைந்து வயதிருக்குமா? இரண்டைக் குறைத்துக் கொள்ளுங்கள். ரோஸ் கலரில் சேலை கட்டி, ப்ளவுஸ் போட்டு டியூப்லைட் வெளிச்சத்தில் அவளும் ரோஸாய்த் தெரிந்தாள்.

    மழைத் துளியில் முடிகள் பளிச்சிட்டன. பின் தலையில் மல்லிகைப்பூ உதிர்ந்து பாதி நார் மட்டும் பாக்கியிருந்தது.

    கல்யாணி! எங்கே போயிருந்தாய்?

    சினிமாப்பா.

    யாருடன்?

    ஆபீஸ்ல ஒருத்தர், எல்லார்க்கும் சேர்த்து டிரீட் கொடுத்தார்.

    முன்னாடியே சொல்றதுக்கென்னவாம்?

    அம்மாகிட்டே சொல்லியிருந்தேனே வர லேட்டாகும்னு.

    கமலம் கதவு மறைவிலிருந்து வெளிப்பட, அம்மா, நீ அப்பாகிட்ட சொல்லலியா? கேட்டுவிட்டுத் தன் அறைக்குப் போனாள். பாட்டை ஹம் பண்ணிக்கொண்டு டிரஸ் மாற்றினாள்.

    சாப்பிட வாம்மா!

    நான் சாப்பிட்டேனம்மா. தண்ணி ஊத்திடு!

    நாங்க இன்னும் சாப்பிடலே.

    கல்யாணி ஹேர் பின்களை முடியிலிருந்து அகற்றி

    Enjoying the preview?
    Page 1 of 1