தப்பு தப்பாய் ஒரு தப்பு..!
By Devibala
()
About this ebook
அந்த அறையே தட்டாமாலை ஆடியது சிவாவுக்கு.
'ஓ இது ஒரு கொலை!'
'நான் அறைந்ததால்தான் உஷா செத்துப் போனாள். ஆத்திரத்தில் நிதானம் தவறி விட்டது...'
'அவள் உனக்கு துரோகம் செய்தாள். அதனால் நீ நிதானம் இழந்தாய்!'
ஒரு குரல் உள்ளே அலற -
அதை மீறிக்கொண்டு பீதி புறப்பட்டது!
'காரணம் எதுவானாலும் இது கொலை!'
குபீ'ரென்று உடல் முழுவதும் வியர்க்க, உடைகளே நனைந்து போகுமளவு வியர்வை கொட்டியது.
வாசல் கதவு திறந்திருப்பது அப்போதுதான் நினைவுக்கு வர, ஓடிப்போய் சாத்தித் தாளிட்டான்.
'உன் முன் கோபம் ஒருநாள் உன்னை அழ வைக்கப் போகுதுடா சிவா!'
அம்மா தீர்க்கதரிசி! என்றோ சொன்ன சொல், இன்று பலித்துவிட்டது!
எத்தனை நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தானோ தெரியவில்லை. அறைக்குள் இருள் சூழத் தொடங்கியிருந்தது...
'சட்' டென சுதாரித்துக் கொண்டு எழுந்தான்!
'ஏதாவது செய்ய வேண்டும்!'
'உடலை மறைக்க வேண்டும்!'
நேரம் பார்த்தான்இரவு 7:20.
'ஊர் உறங்க இன்னும் குறைந்த பட்சம் மூன்று மணி நேரமாவது ஆகும். அதன் பிறகுதான் செயல்பட வேண்டும்.
எட்டு மணிக்கு மேல்!
சாய்ந்து உட்கார்ந்தபோது –
கதவு படபடத்தது!
ஒரு நொடி மூச்சே நின்று விட்டது சிவாவுக்கு.
'யார்... யார்...' என்ற கேள்வி சகல செல்களிலும் அசுர வேகத்தில் ஆக்ரமிக்க-.
கதவு மறுபடியும் 'படபடா...'
'நடு ஹாலில் மல்லாந்திருக்கும் உஷாவை முதலில் அப்புறப்படுத்த வேண்டும்...'
உடலைத் தரையோடு சேர்த்து 'தரதரவென இழுத்துக்கொண்டு உள் அறைக்குப் போனான். அது அவர்களது படுக்கையறை. அங்கே அவளைக் கிடத்தி, பெட்ஷீட்டால் தலையோடு, கால் மூடினான். மறுபடியும் வெளிப்பட்டு, கதவை தாள் போட்டான்.
வாசல் கதவைத் திறந்தான்!
'வாகீசன்!'
"என்னடா இவ்ளோ நேரம்?" படுக்கையறைப் பக்கம் பார்வையை விட்டான். தாள் போடப்பட்டிருக்க, "ஓ... ஐயாம் ஸாரி... உன்னோட இனிமையான நிமிஷங்களை சிதைச்சிட்டேனா?" என்றான்.
"பரவால்லை... உட்கார்! என்ன இந்த நேரத்துல?"
"நேத்தும் எனக்கொரு ஈ எஸ் பிடா சிவா!"
"வேற பொழப்பில்லை உனக்கு!"ஸாரிடா. எனக்கு வர்ற ஈ எஸ் பி எல்லாமே அப்படியே பலிக்குதுடா... நேத்திய ஈ எஸ் பி பலிக்காது. பலிக்கவும் வேண்டாம்."
"என்ன அது?"
"உன்னைப் பத்தினது!"
"சொல்லு!"
"ஸாரிமா... சொன்னா கோச்சுக்கமாட்டியே. இது நடக்காது. வெறும் உணர்வுதான்!"
"சொல்லித் தொலை!"
"நீ அண்ணியை ஓங்கி அடிக்கற! அண்ணி சுருண்டு விழறாங்க. பயந்து போய் நீ பார்த்தா... ஸாரிடா சிவா... இதுக்கு மேல வேண்டாம்."
வெளிறிப் போனான் சிவா.
"ம்! சொல்லு!"
"அ... அண்ணி செத்துட்டாங்க! தூக்கம் எனக்குக் கலைஞ்சு போச்சு!"
'என்ன துல்லியமான கணிப்பு. பின்னால் நடப்பதை முன்கூட்டியே அறியும் ஆற்றல் இவனுக்குண்டு. இதற்கு முன்னால் நாலு சம்பவங்கள்!'
'இதுவும் நிஜம்தான்!'
"சரி... சரி... அண்ணியைக் கூப்பிடு. சூடா ஒரு காபி குடிச்சிட்டுப் போயிர்றன் நான்!"
யோசிக்கத் தொடங்கினான் சிவா.
'இந்த வாகீசன் வாரத்துக்கு நாலு நாள் வீட்டுக்கு வரும் தோழன். இனிமேல் உஷாவைக் காணவில்லையானால், கட்டாயம் கேட்பான். எத்தனை நாள் பொய் சொல்ல முடியும்? இவன் தன் ஈ எஸ் பி யோடு, இதை இணைத்துப் பார்த்தால்?'
'ஆனால் இவன் நல்லவன்!கழுத்தை அறுத்தாலும் ரகசியத்தை வெளியே விடாத ஸ்நேகிதன்.
இந்த உடலை வைத்துக்கொண்டு, நான் தனியாக இயங்குவது சாத்தியமில்லை!'
'இவனையும் அழைத்துக்கொண்டால்?'
'நோ... நீ செய்தது கொலை.
ஒரு மூன்றாவது நபருக்குத் தெரியலாமா?'
'வாகீசன் மூன்றாவது நபர் என்று சொல்லும் ரகமல்ல. அவன் உயிர்த் தோழன். கட்டாயம் உதவுவான்!'
"என்னடா பேசமாட்டேங்கற?"
".....!?"
என் சிவா உன் முகம் ஒரு மாதிரியிருக்கு? வந்த நிமிஷத்துலேயிருந்து நானும் பார்த்துட்டுத்தான்! இருக்கேன்!"
சிவா தன்னை மறந்து 'சட்'டென உடைந்தான்...
"வாகீ... இந்த முறையும் உன் ஈ எஸ் பி பலிச்சிருக்குடா!".
வாகீசன் அதிர்ச்சியில் எழுந்து விட்டான்
Read more from Devibala
ஜரிகை வேட்டி Rating: 0 out of 5 stars0 ratingsஊர்மிளா - '96' Rating: 0 out of 5 stars0 ratingsபுது அவதாரம் Rating: 0 out of 5 stars0 ratingsஅதிகாலைச் சூரியன் Rating: 0 out of 5 stars0 ratingsகைகேயி - 96 Rating: 0 out of 5 stars0 ratingsகொஞ்ச(ம்) வா! Rating: 0 out of 5 stars0 ratingsசீதைக்கு ராமன் சித்தப்பா Rating: 0 out of 5 stars0 ratingsசிரிக்காமல் விடமாட்டோம்! Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணகி - '96' Rating: 0 out of 5 stars0 ratingsகோடைத் தள்ளுபடி Rating: 0 out of 5 stars0 ratingsபல்லக்கில் ஏறு... Rating: 0 out of 5 stars0 ratingsவேண்டாம் விளையாட்டு! Rating: 0 out of 5 stars0 ratingsமேடைக்கு வாங்க! Rating: 0 out of 5 stars0 ratingsபின்னர் அறிவிக்கப்படும்! Rating: 0 out of 5 stars0 ratingsமூச்சுவிட நேரமில்லை! Rating: 0 out of 5 stars0 ratingsஆலயப் பூக்கள்... Rating: 0 out of 5 stars0 ratingsசின்ன மணிக் குயிலே! Rating: 0 out of 5 stars0 ratingsகனல் மணக்கும் கண்ணீர்..! Rating: 0 out of 5 stars0 ratingsசிறகுகள் விரியும்! Rating: 0 out of 5 stars0 ratingsசரித்திரம் திரும்புகிறது! Rating: 0 out of 5 stars0 ratingsபுதிய அரசாங்கம்! Rating: 0 out of 5 stars0 ratingsதாய் பிறந்தாள்! Rating: 0 out of 5 stars0 ratingsகண் பேசும் வார்த்தைகள்... Rating: 0 out of 5 stars0 ratingsகூட்டத்திலே கோயில்புறா... Rating: 0 out of 5 stars0 ratingsஅம்மா மாதிரி... Rating: 0 out of 5 stars0 ratingsஉள்ளத்தால் துடிக்கிறேன்! Rating: 0 out of 5 stars0 ratingsகோலாகலம்..! Rating: 0 out of 5 stars0 ratingsபட்டு வண்ண ரோஜா! Rating: 0 out of 5 stars0 ratings
Related to தப்பு தப்பாய் ஒரு தப்பு..!
Related ebooks
Thappu Thappaai Oru Thappu Rating: 0 out of 5 stars0 ratingsNettruvarai Nee Yaaro mm Rating: 0 out of 5 stars0 ratingsSuvaasam Unnodu Rating: 0 out of 5 stars0 ratingsChandrodhayam Oru Pennanatho? Rating: 0 out of 5 stars0 ratingsதீயைச் சுடும் தென்றல்! Rating: 0 out of 5 stars0 ratingsTheeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsUyir Thirudargal Rating: 0 out of 5 stars0 ratingsUn Per Solla Aasaithan Rating: 0 out of 5 stars0 ratingsThee Kozhunthil Pani Thuliyai..!!! Rating: 0 out of 5 stars0 ratingsSoozhnilaik Kaithigal Rating: 0 out of 5 stars0 ratingsAgmark Thorogam Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Devathai! Rating: 0 out of 5 stars0 ratingsNetru Varai Nee... Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsKanavil Vanthaval Rating: 0 out of 5 stars0 ratingsகனவில் வந்தவள்! Rating: 0 out of 5 stars0 ratingsVaanaville Vaanamalla Rating: 0 out of 5 stars0 ratingsமுத்தமிட ஆசை! Rating: 0 out of 5 stars0 ratingsMuththamida Aasai Rating: 0 out of 5 stars0 ratingsKuttram Azhaikkirathu Rating: 5 out of 5 stars5/5Kannellaam Un Vannam Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணெல்லாம் உன் வண்ணம்..! Rating: 0 out of 5 stars0 ratingsஇதயம் தேடும் என்னுயிரே..! Rating: 0 out of 5 stars0 ratingsNaan Kolaikaaran Alla Rating: 0 out of 5 stars0 ratingsAbaaya Arivippu! Rating: 4 out of 5 stars4/5Urugi Odum Mezhugugal Rating: 5 out of 5 stars5/5Thaalattum Vennilavey Rating: 0 out of 5 stars0 ratingsEn Selvam, En Raja! Rating: 0 out of 5 stars0 ratingsPoovizhi Vaasalile! Rating: 0 out of 5 stars0 ratingsAnbil Vantha Raagame Rating: 5 out of 5 stars5/5Oru Kaathal Crime Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for தப்பு தப்பாய் ஒரு தப்பு..!
0 ratings0 reviews
Book preview
தப்பு தப்பாய் ஒரு தப்பு..! - Devibala
1
சுவர் கடிகாரம் நாலு முறை அடித்து ஓய்ந்த போது ஃபைலை மூடி வைத்துவிட்டு எழுந்து விட்டான் சிவா.
ஆறுமணி வரை ஆபீஸ் நேரம்.
இரண்டு மணி நேரம் பர்மிஷன்.
கல்யாணம் முடிந்து - ஒரு மாத லீவும் முடிந்து இன்றுதான் அலுவலகம் வருகிறான்.
மறுபடியும் பர்மிஷன்.
அப்படி... இப்படி வெளியே வரும்போது நாலே காலாகி விட்டது.
ஸ்கூட்டரை ஸ்வீட் ஸ்டாலின் முன்பு நிறுத்தி முந்திரி அல்வா வாங்கிக் கொண்டான்.
ஜாதி மல்லி ஒரு பந்து, ரோட்டோரப் பூக்காரியிடம் சேகரித்துக் கொண்டான்.
ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தபோது...
சார்... சார்...!
பின்னால் பார்த்தால், மூச்சிரைக்க ஓடிவரும் ஆபீஸ் பாய்.
என்னப்பா?
மானேஜர் உங்களை அவசரமா கூப்பிடறார்!
எதுக்கு?
ஹெட் ஆபீஸ்லேர்ந்து போன் வந்திருக்காம். கான்பிடன்ஷியல் பைல் ஒண்ணு அவசரமா தேவையாம்!
இதப்பாரு! பர்மிஷன் போட்டுட்டு வெளியே வந்தாச்சு. அவனவனுக்குனு ஒரு சந்தோஷம் உண்டு. ஆபீசைக் கட்டிட்டு என்னால அழ முடியாதுனு சொல்லு!
ஒரு நடை வந்துட்டுப் போயிடுங்களேன் சார்!
சிவாவுக்கு ஆத்திரம் தலைக்கேறியது.
என்னடா புரியாம பேசற? முடியாதுனு போய் அந்த மனுஷன்கிட்டச் சொல்லு!
சார் இது ஆபீஸ்!
தெரியும். நான் வர்றன்!
ஆத்திரத்தோடு ஸ்கூட்டரை உதைத்தான்.
பயணிக்கும் நேரம் சிவா பற்றி தெரிந்து கொள்ளலாமா?
முப்பது வயது சிவாவுக்கு போன மாதம்தான் மனைவியானாள் உஷா.
சிவா ஒன்றும் பெரிய அழகனல்ல.
சினிமா ஜனகராஜ் போன்ற தோற்றம். நல்ல புத்தி கூர்மை, நேரம் தவறாமை, நாணயம், இரக்க சிந்தனை அத்தனையும் நிரம்பிய கலவை.
‘ஆனால் கோபம் என்றால் அப்படி இப்படியல்ல. மூக்கின் மேல் நிரந்தரமான இடம் அதற்கு உண்டு. தப்பைப் பார்த்துவிட்டால் உடனே தண்டனை வழங்கி விடும் ஆவேசம் அவனுக்குண்டு. ஆள் தராதரமே பார்க்காமல் ‘முணுக் கென்று வந்துவிடும் கோபம்!’
வீட்டை நெருங்கும்போது கோபம் சற்று விலகியிருக்க,
ஸ்கூட்டரை ஸ்டாண்ட் போட்டுவிட்டு படியேறினான்.
‘கதவு சாத்தியிருந்தது.
வாசலில் செருப்புகள்?
ஆணின் செருப்பு!’
‘விரல் நுழைக்கும் வளையம் அறுந்து போன செருப்பு!’
‘யார் வந்திருக்கக் கூடும்?’
கதவு வேறு சாத்தியிருக்க,
விரலை மடக்கி கதவை அணுகிய நேரம்,
துல்லியமாகக் கேட்டது அந்தச் சிணுங்கல்...
ஸ்... விடுங்க ஆனந்த்... வலிக்குது... ப்பா... மொரட்டுத்தனம் தான்!
சற்று கரகரப்பான, காமம் சொட்டும் ஆண்தனமான பெண்ணின் குரல்...
‘உஷாவுக்கும் கட்டைத் தொண்டைதான்!’
‘பளிச்’சென ரத்த ஓட்டம் குதிக்கத் தொடங்க,
ஆவேசமாக கதவில் கை வைத்தான் சிவா!
சரி சரி... விலகுங்க... இன்னும் கொஞ்ச நேரத்துல அவர் வந்துருவார். இன்னொரு நாள் பார்த்துக்கலாம்!
அத்தனை ஜன்னல்களும் அழுத்தமாக மூடியிருக்க, காற்று நுழையக்கூட இடைவெளி இல்லாமல் இருந்தது.
சிவா படபட’ வென கதவைத் தட்டினான்.
உள்ளே பேச்சு ‘சட்’டென நின்றது.
உஷா... நான்தான்!
உள்ளே படபட’வென ஒரு ஓசை மட்டும்!
நாலைந்து நிமிடங்கள் துரித கதியில் நகர –
‘பட்’டென்று கதவைத் திறந்தாள் உஷா.
வாசலில் நின்ற நிலையிலேயே ஏற இறங்க அவளைப் பார்த்தான்.
‘உஷா முகத்தில் பேய்க்களை இருந்தது. உடைகளைத் திருத்திக்கொண்டு விட்டாள் போலும்...’
வாங்க... என்ன இவ்ளோ சீக்கிரம்?
நீ எதிர்பார்க்கலையா?
இல்லை!
அவன் பார்வை டீபாயில் விழுந்தது.
ஆஷ்ட்ரே நிரம்ப சிகரெட் துண்டுகள்.
சிவாவுக்கும் சிகரெட் பழக்கமுண்டு.
ஒரு நாளைக்கு ரெண்டே சிகரெட்.
காலையில் புறப்படும்போது காலியாக இருந்தது ஆஷ்ட்ரே.
உள்ளே காமக் கூச்சல்!
‘படபட வென ஓட்டம்!
ஆஷ்ட்ரே நிரம்ப சிகரெட் துண்டுகள்!
பின் பக்கம் பார்வை படர -
கதவு தாளிடப்படாமல் இருந்தது. அகலக் கால்களை வைத்து, நாலே எட்டில் நெருங்கினான். கதவுகளைத் திறந்தான். தோட்டத்து மண்ணில் அழுத்தமான, அவசரக் காலடிகள் கிணறுவரை போய், காணாமல் மறைய -
கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தான்.
காபி தரட்டுமா?
நான் உனக்கு என்ன மரியாதை செய்யணும்னு யோசனை பண்றேன்!
புரியலை!
எதுடீ புரியலை?
நாற்காலியைத் தள்ளிக்கொண்டு ‘சரே’ லென எழுந்தான்.
நீங்க... நீ... ங்... க...?
மூடின கதவு... வாசல்ல ஆம்பளைச் செருப்பு... உள்ளே முக்கல் முனகல். ஆஷ்ட்ரேல சிகரெட் துண்டுகள், தோட்டத்துல காலடிகள்... எல்லாத்தையும் இணைச்சுப்பாரு! என்ன கதை வருதுனு தெரியும்!
அய்யோ என்னை...
ஸ்... பேசாதே! கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் முடியறதுக்குள்ள துரோகமா?
தயவு செஞ்சு கொஞ்சம்...
அவனுக்கு ஆத்திரம் இன்னும் அதிகமானது.
‘தம்...தம். மென்று காலடிகளைப் பதித்து, உஷாவை நெருங்கிக் கொண்டிருந்தான்.
உஷா பீதி வழியும் முகத்தோடு –
அவனையே பார்க்க -
அவள் பேச நினைத்தும், நாக்கு பெயராமல் தவியாய் தவித்தாள்...
வெகு அருகில் நெருங்கி –
துரோகி...
கையை பளாரென காதும் கன்னமும் சேருமிடத்தில் இறக்க -
ஒரு பந்து போல எழும்பிய உஷா -
அப்படியே நேர்த்தியாக 600 கோணத்தில் ‘சரக்’ கென வளைந்து -
இடுப்பு வரை செங்குத்தாக கீழே நோக்கி மடிந்து, திரும்பி தரையில் மல்லாந்தாள்.
அவள் விழுந்த விதம் சிவாவை கலவரப்படுத்தியது.
அப்படியே ஒரு நிமிடம் நின்றவன் –
உஷாவிடம் எந்த சலனமும் தெரியாமல் போக-
மண்டியிட்டு உட்கார்ந்தான்.
குனிந்து அவள் முகத்தைத் தொட்டான்.
‘சட்’டென எழுந்து, ஜக்கில் தண்ணீர் எடுத்து வந்து, முகத்தில் தெளித்தான். அசைவில்லை.
மறுபடியும் உட்கார்ந்து, நாசி துவாரம் தொட்டான்.
சுவாசம் இல்லை...
மணிக்கட்டில் இயக்கம் இல்லை.
உஷா செத்துப்போய் நாலு நிமிடங்கள் முடிந்திருந்தன.
2
அந்த அறையே தட்டாமாலை ஆடியது சிவாவுக்கு.
‘ஓ இது ஒரு கொலை!’
‘நான் அறைந்ததால்தான் உஷா செத்துப் போனாள். ஆத்திரத்தில் நிதானம் தவறி விட்டது...’
‘அவள் உனக்கு துரோகம் செய்தாள். அதனால் நீ நிதானம் இழந்தாய்!’
ஒரு குரல் உள்ளே அலற -
அதை மீறிக்கொண்டு பீதி புறப்பட்டது!
‘காரணம் எதுவானாலும் இது கொலை!’
குபீ’ரென்று உடல் முழுவதும் வியர்க்க, உடைகளே நனைந்து போகுமளவு வியர்வை