Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naan Kolaikaaran Alla
Naan Kolaikaaran Alla
Naan Kolaikaaran Alla
Ebook95 pages1 hour

Naan Kolaikaaran Alla

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vimala Ramani, an exceptional Tamil novelist, written over 700 novels, 1000 short stories, More than 600 dramas have been broadcasted on Trichy and Coimbator Radio Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466350
Naan Kolaikaaran Alla

Read more from Vimala Ramani

Related to Naan Kolaikaaran Alla

Related ebooks

Related categories

Reviews for Naan Kolaikaaran Alla

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naan Kolaikaaran Alla - Vimala Ramani

    21

    1

    உஜ்வல் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான். எப்படியும் முடித்து விடவேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் முடித்துவிட வேண்டும்.

    உஜ்வல் தன் பீரோவைத் திறந்தான்.

    அதில் தயாராய் ஒரு செட் மாற்று உடைகள். நாடக நடிகன் மாதிரி வேஷம் மாற்றும் சாதனங்கள். செம்பட்டை முடி உள்ள விக், குறுந்தாடி... உஜ்வல் வேஷம் மாற ஆரம்பித்தான்.

    அவன் வேஷம் மாற... மாற... மனமும் பற்பல விதங்களில் வண்ணம் மாறி மாறித் தோற்றமளித்தது.

    அம்மா படத்தின் முன் சிறுவன் உஜ்வல் அழுதபடி நின்று கொண்டிருக்கிறான். அம்மா சுவரில் சித்திரமாக மாலையுடன் தொங்கிக் கொண்டிருக்கிறாள்.

    அம்மா... மா... மா... -அடிவயிற்றிலிருந்து உஜ்வல் அழுகிறான்.

    யாரோ கதவைத் தட்டுகிறார்கள்.

    கதவைத் திறந்தவன் ‘அம்மா’ - என்று கூப்பிட வாயெடுத்து அடங்கிப் போகிறான். அம்மாதான் இறந்துவிட்டாளே!

    இது யார் புதிது? இப்படி அப்பாவுடன் இணைந்து... ஒட்டிக்கொண்டு பெட்டியும் படுக்கையுமாக இந்த வீட்டில் நுழைகிற இவள் யார்?

    உஜ்வல், இதுதான் உன் சித்தி. இனிமே இவளைத்தான் நீ அம்மான்னு கூப்பிடணும்...

    ‘அம்மா...’ - என்று வாய் அழைக்க மறுத்தது. இவன் வாய் தன் தந்தையையே ‘அப்பா’ - என்று கூப்பிட மறுத்தது. இன்று இவனுக்குத் தாயும், தந்தையும் இருவரும் இல்லையோ?

    ‘சித்தி அழகாக இருந்தாள். கவர்ச்சியாகச் சிரித்தாள். இந்தக் கவர்ச்சியில்தான் அப்பா தலைகுப்புற விழுந்து விட்டார். இதே கவர்ச்சியினால்தான் படுத்த படுக்கையாக இருந்த மனைவிக்கு யாருக்கும் தெரியாமல் விஷம் கொடுத்துக் கொன்று விட்டார்.

    அப்போது அவன் சிறுவன். காரணங்களும், காரியங்களும் தெரியவில்லை. அதற்குபின் அரசல் புரசலாக அக்கம் பக்கம் பேசிக் கொண்டபோது, நிகழ்ந்தவைகளை மீண்டும் ‘மலரும் நினைவுகள்’ ஆக்கிப் பார்த்தபோது அந்தக் கூற்றுக்கள் உண்மை என்றே தெரிந்தன.

    இல்லாவிட்டால் டாக்டரைக் கூட வரவழைக்காமல் ‘அம்மா செத்து விட்டாள்’ - என்று இவரே அறிவித்து, பள்ளிக்குப் போயிருந்த மகனைக்கூடக் கூப்பிடாமல் அவசரம் அவசரமாக பிணத்தைச் சுடுகாட்டிற்கு எடுத்துப் போய், இவனை நேரே பள்ளியிலிருந்து சுடுகாட்டிற்கே கூட்டிப் போய்...

    ‘அப்பா... ஏம்பா பாதி கிளாஸிலே கூப்பிட்டனுப்பிச்சீங்க?"

    அப்பா பேசவில்லை. கார் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. இவன் வீட்டைத் தாண்டி ‘கார்’ போனபோது...

    இன்னிக்கு வீட்டிலே என்னப்பா விசேஷம்? நிறையக் கூட்டம் இருக்கே?

    அப்பா இதற்கும் பதில் பேசவில்லை.

    வேகமாகப் போன ‘கார்’ ‘சடன்’ பிரேக் போட்டு ஓரிடத்தில் நின்றது.

    யாரோ இறந்து விட்டார்கள் போலிருக்கிறது. வண்டியில் அலங்காரம் செய்து ‘அழைத்து’ப் போய்க் கொண்டிருந்தார்கள் சுடுகாட்டிற்கு. அப்பாவின் ‘கார்’ அந்த பிண ஊர்வலத்தைப் பின் தொடர்ந்தது. இவனுக்குத்தான் கஷ்டமாக இருந்தது.

    யாரோ பாவம் இறந்துவிட்டார்கள். அப்பா இந்தக் கூட்டத்தை ‘ஓவர்டேக்’ செய்யாமல் ஏன் மெள்ளவே போகிறார்? அப்போதுதான் கூட்டத்தைக் கவனித்தான் இவன்.

    அதில் போனவர்களில் பாதிப் பேர் இவனுக்குத் தெரிந்தவர்கள், இவர்கள் தெருக்காரர்கள் - அட தாத்தாவும், பாட்டியும் கூட வந்திருக்கிறார்களா?

    திடீரென்று பயம் அடிக்குடலை ஊடுருவ அம்மா... இவன் கேட்கத் தயங்கினான்.

    அப்பா நிதானமாகச் சொன்னார்.

    அம்மாதான் அது. திடீர்ன்னு உடம்புக்கு ஜாஸ்தியாகிச் செத்துப் போயிட்டா

    இவன் அம்மா... - என்று கதறி ஓய்ந்தபோது, ஓய்ந்த மாயானமே வந்துவிட்டது. அதற்குப் பிறகு நிகழ்ந்தவைகள் எல்லாம் ஏதோ திரைப்பட சோகக் காட்சி மாதிரி... புகை புகையாய் நினைவுக்கு வந்தன.

    இவன் தலை மொட்டை அடிக்கப்பட்டதும், ஆற்றில் குளித்ததும்... நெருப்புப் பந்தம் சுமந்ததும்... எல்லாமே ஏதோ இயந்திர கதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளாகத் தோன்றின.

    அம்மா சாம்பலானாள். அவள் உடலின் ஐம்பெரும் தத்துவங்கள் ஐம்பெரும் இயற்கையுடன் கலந்தது. அவள் ஆன்மா இவனுள் குடிபுகுந்தது.

    தாத்தாவும், பாட்டியும் அழுதுவிட்டு ஊருக்குப் போய்விட்டார்கள். இவன் தனியனானான். தாய் இழந்த தனயனானான். அப்போதுதான் சில நாட்களில் அப்பா எவளோ ஒருவளை அழைத்து வந்து இதுதான் உன் சித்தி. இவளை நீ இனி அம்மா என்று கூப்பிட வேண்டும் என்று சொன்னபோது இவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. அழுகை வந்தது.

    அப்பாவுக்கு வங்கியில் பணம் இருந்தது. உடம்பில் திமிர் இருந்தது. இவனுக்கு மனத்தில் பயம் இருந்தது.

    சித்தி நல்லவளோ, கெட்டவளோ இவனைப் பொருத்தவரை நல்லவளாகவே இருந்தாள். இவனைக் கொடுமைப்படுத்தவில்லை. அன்புடன்தான் நடத்தினாள். ஆனால் இவனுக்குத்தான் தாயின் இடத்தைப் பறித்துக் கொண்ட சூன்யக்காரி மாதிரி அவள் தோற்றமளித்தாள்.

    அன்று வீடே திமிலோகப்பட்டது.

    டாக்டர் காரில் வந்து இறங்கினார். அப்பா வாசலுக்கும், உள்ளுக்குமாக அலைந்து கொண்டிருந்தார். சித்தியின் அறைக் கதவு சாத்தி இருந்தது... ஏன்? என்னவாயிற்று?

    அம்மா சாகக் கிடந்தபோது கூட இந்த அப்பாவால் டாக்டரை வரவழைக்க முடியவில்லை. அவள் செத்தது நிஜம்தானா என்று டாக்டரிடம் கேட்கவில்லை. இப்போது என்னடா என்றால் உயிரோடு இருக்கிற சித்திக்கு தலைவலியா? காய்ச்சலா? வீடு இந்தப் பாடு படுகிறதே!

    இவன் எரிச்சலுடன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தான். சித்தியின் அறையைவிட்டு வெளியே வந்த டாக்டர் அப்பாவின் கைகளைப் பிடித்தார். மகிழ்ச்சியுடன் சிரித்தார்.

    கன்கிராசுலேஷன்ஸ்! நீங்க அப்பா ஆகப் போறீங்க? என்றார்.

    ஏதோ உலகத்தில் இல்லாத ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1