Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unnidam Mayangukiren
Unnidam Mayangukiren
Unnidam Mayangukiren
Ebook85 pages1 hour

Unnidam Mayangukiren

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

R.Sumathi, an exceptional Tamil novelist, written over 100 novels, 250 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465889
Unnidam Mayangukiren

Read more from R.Sumathi

Related to Unnidam Mayangukiren

Related ebooks

Reviews for Unnidam Mayangukiren

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unnidam Mayangukiren - R.Sumathi

    14

    1

    சூரியன் இரண்டாவது முறையாகக் கோபம் கொண்டு சிவந்த மாலை நேரம்.

    உதயகுமார் பரபரப்பான சென்னையின் சாலையில் கொஞ்சமும் பரபரப்பின்றித் தளர்வாய் நடந்தான். நெஞ்சு நிறையக் கனம் இருந்தது. உடம்பு அதைத் தாங்க முடியாமல் தளர்ந்து விட்டது.

    காலையிலிருந்து எத்தனை நிறுவனங்கள்தான் ஏறி இறங்குவது? கால்வலி வந்ததுதான் மிச்சம். மதியம் குடித்த தேநீர் வயிற்றைக் கலக்கிக் கொண்டே இருந்தது. பசி கண்களை இருட்டியது. காது அடைத்தது. கல்லூரியில் படிக்கும் போது இருந்த உடம்பு கூட இப்பொழுது இல்லை. கவர்ச்சியான முக வசீகரம் இப்பொழுது இல்லை. லேசாய்க் கன்னத்தில் ஒடுக்கு விழுவதைப் போன்று இருந்தது.

    வேலை கிடைக்காத வேதனையில் உடம்பு நாளுக்கு நாள் இளைத்தது.

    வீட்டிற்குச் செல்லவே பிடிக்கவில்லை. அப்படியே எங்காவது சென்றுவிடலாமா என்று தோன்றியது. எவ்வளவு விண்ணப்பங்கள் போடுவது! எவ்வளவு நேர்முகத் தேர்விற்குத்தான் சென்று திரும்புவது! அம்மா முதுகு ஒடியத் தையல் எந்திரத்துடன் போராடி எத்தனை காலத்திற்குத்தான் சம்பாதிப்பது! பாவம்... அவளுக்கும் வயதாகி விட்டது. உட்கார வைத்து அம்மாவுக்குச் சோறு போடும் வயதில் அவளிடம் ஒரு ப்ளேடு வாங்குவதென்றால் கூடப் பணம் கேட்க வேண்டியதாகி உள்ளது.

    என்ன செய்வது?

    அம்மா எவ்வளவு சிரமப்பட்டு எம்.காம். படிக்க வைத்தாள்! எவ்வளவு கனவு கண்டிருப்பாள்! மகன் வளர்ந்து வேலைக்குச் சென்று சம்பாதித்துப் போடுவான் என்று.

    ஆனால் -

    இப்படித் தண்டச்சோறாய் இருக்கிறேனே. அழுகை வந்தது.

    வீட்டிற்குச் செல்ல மனம் இல்லாமல் கடற்கரைக்கு வந்தான்.

    மனிதனுடைய எல்லா உணர்ச்சிகளையும் சுமக்கும் இடம் இந்தக் கடற்கரைதான்.

    இங்குதான் எத்தனை மகிழ்ச்சி, எத்தனை குதூகலம், எத்தனை எத்தனை சோகக் கண்ணீர்...!

    சூட்டை வெளியேற்றிய மணல் சில்லென இருந்தது. ஒரு ஒதுக்குப்புறமாய் மனித சலனமற்ற இடத்தில் வந்து அமர்ந்தான்.

    மனம் சற்று லேசானதைப் போலிருந்தது. எல்லோரையும் பார்த்தான். எல்லோரிடமும் மகிழ்ச்சி இருப்பதாகத் தெரிந்தது. தான் மட்டுமே வேதனைக்குரியவனாகவும், கவலைப் படுபவனாகவும் தோன்றியது.

    வானம் மாலை நேரத்து மஞ்சளாடையை உதறிவிட்டு, இருட்டுச் சேலையைக் கட்டிக் கொள்ளத் தொடங்கியது. கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலையத் தொடங்கியது.

    நேற்றைய இரவு அம்மா சொன்னது கடற்கரை இரைச்சலையும் மீறி இப்பொழுது காதில் ஒலித்தது.

    அம்மா உறங்காமல் சுவரில் சாய்ந்தபடியே உட்கார்ந்திருந்தாள்.

    வெகு நேரம்வரை புத்தகம் படித்துக் கொண்டிருந்த உதயகுமார் ஒரு வழியாய்ப் பதினோரு மணிக்குப் புத்தகத்தை முடிவிட்டு, படுப்பதற்காக விளக்கை அணைக்கப் போன போதுதான், ஜன்னல் வழியாக அம்மாவைப் பார்த்தான்.

    கண் மூடும் வேளையில் கவலையான முகம். அறையை விட்டு வெளியே வந்தான். அம்மாவின் அருகே அமர்ந்தான். தோள் தொட்டு அசைத்தான்.

    அம்மா...

    திடுக்கிட்டுப் பார்த்தாள் அம்மா.

    ‘என்னடா?’

    தூங்கலையா? மணி பதினொண்ணு ஆகுது.

    தூக்கம் வரலைடா.

    ஏம்மா, என்ன யோசனை?

    எல்லாம் உன் தங்கச்சி தமயந்தியைப் பத்தித்தான்.

    அவளைப் பத்தி என்னம்மா?

    என்னவா? இந்த வருஷத்தோட அவ படிப்பு முடியுது. திருச்சியிலேர்ந்து வந்துடுவா. அவளுக்கு ஒரு இடம் பாக்கணும். கல்யாணம் பண்ணணும். உனக்கும் ஒரு வேலை கிடைக்க மாட்டேங்குது. அவளுக்குன்னு ஒரு பொட்டு தங்கம் கூடச் சேர்த்து வைக்கலை. சம்பாதிச்சதெல்லாம் சாப்பிடறதுக்கே சரியா போயிடுச்சு. நான் என்னத்தை சேமிச்சு வைக்கறது. அந்தப் பொண்ணை எப்படிக் கட்டி குடுக்கப் போறோம்னு தெரியலை.

    அம்மா சொல்லச் சொல்ல உதயகுமாருக்கு அடி வயிற்றைக் கலக்கியது.

    அம்மா சொல்வது அனைத்தும் உண்மை.

    இளம் வயதிலேயே கட்டிய மனைவியை விட்டு விட்டு எங்கோ எவளிடமோ ஓடிப்போன அப்பா. இரண்டு குழந்தைகளோடு அனாதையான அம்மா. கையிலிருந்த தையல் தொழிலை வைத்துச் சம்பாதித்து இருவரையும் படிக்க வைத்தவள். எத்தனையோ நாள் பசி பட்டினியோடு இருக்கிறாள். ஆனால், குழந்தைகளை ஒருவேளை கூடப் பட்டினி போட்டதில்லை. எத்தனையோ கஷ்டத்திற்கிடையிலேயும் படிக்க வைத்து விட்டாள்.

    உதயகுமார், தலையெடுத்துத் தங்கையைக் கட்டிக் கொடுப்பான் என்று கனவு கண்டாள். ஆனால், அவனுக்கும் ஒரு வேலையும் கிடைக்கவில்லை. எப்படித் திருமணம் செய்து கொடுக்கப் போகிறோம் என்ற கவலை அவனை இரவெல்லாம் தூங்கவிடாமல் செய்தது.

    அவளுடைய கவலைக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று: தெரியாமல் தடுமாறினான். ஆதரவாய் அவளின் தோளை அணைத்தபடி

    Enjoying the preview?
    Page 1 of 1