Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Natchathirap Pookkal
Natchathirap Pookkal
Natchathirap Pookkal
Ebook106 pages1 hour

Natchathirap Pookkal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vimala Ramani, an exceptional Tamil novelist, written over 700 novels, 1000 short stories, More than 600 dramas have been broadcasted on Trichy and Coimbator Radio Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466350
Natchathirap Pookkal

Read more from Vimala Ramani

Related to Natchathirap Pookkal

Related ebooks

Related categories

Reviews for Natchathirap Pookkal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Natchathirap Pookkal - Vimala Ramani

    24

    1

    இனி இன்பமே!

    இனிவரும் நாள் எல்லாம் இன்பமே!

    எல்லாம் இன்ப மயம்!

    எத்தனை கோடி இன்பங்கள் வைத்தாய் இறைவா!

    அப்புறம்...? -

    ஹும்... அடுத்த அடி நினைவில் இல்லை... இருந்தாலும் முதல் அடியிலேயே உடம்பெங்கும் புத்துணர்வு!

    பாரதி! என் பாரதி!

    சிறு வயதிலேயே அகால மரணமடைந்தாலும் நீ இன்னமும் எங்கள் உள்ளங்களில் வாழ்வது உன் எண்ணங்களின் எழுச்சியால்!

    ‘நிற்பதுவே... நடப்பதுவே...’

    ஏற்கெனவே பாரதி பாடல்களை கேசட்டில் கேட்ட மகிழ்ச்சியுடன், சுவாதி, தியேட்டருக்குள் நுழைந்தபோது நியூஸ் ரீல் போட்டுவிட்டார்கள்.

    இருட்டில் தெரியாமல் மிதித்த பார்வையாளர்களிடம் இருட்டில் முகம் தெரியாமலே ‘எக்ஸ்கியூஸ்மி’ என்று சொல்லி இவள் இருக்கையில் அமர்ந்த போது...?

    படம் ஆரம்பமாகிவிட்டது!

    ஏக கைதட்டல்கள்! ஏக வரவேற்புகள்... ஆஹா! நம்மிடம் இன்னமும் தேசிய உணர்வு மிச்சமிருக்கிறது என்கிற பெருமிதம்.

    இறந்த பாரதியை எடுத்து வரும்போது அந்த முண்டாசு கவிஞனின் முகத்தை கேமரா க்ளோஸப்பில் காட்டியபோது... –

    ஏக விசில் சப்தம்!

    சுவாதிக்குப் புரியவில்லை! இது பாராட்டா? கிண்டலா?

    யாரோ ஒருவன் கிண்டல் அழுகை அழ... அனைவரும் கோரஸாக கிண்டல் அழுகை.

    எழுந்திரப்பா...

    ஒரு நடிகையின் பெயரைச் சொல்லி –

    அவளைக் கூப்பிடுங்கப்பா...

    இவள் பிரமித்துப் போனாள்.

    என்ன இது அநியாயம்? ஒரு தேசிய கவிஞனுக்கு சமூகம் செலுத்தும் அஞ்சலியா?

    ஒவ்வொரு வசனத்திற்கும் எதிர் வசனம்!

    ஏத்தப் பாட்டிற்கு எதிர்பாட்டு!

    இவள் வந்த மகிழ்ச்சியென்ன?

    இவளுள் இருந்த உணர்வுகள் என்ன?

    பக்கத்தில் யாரோ இருவர் பேசிக்கொண்டார்கள்.

    ஏதோ காலேஜ் ஸ்டூடன்ஸாம்... மொத்தமா டிக்கெட் ரிஸர்வ் பண்ணிட்டு வந்திருக்காங்க! அதான் க்ரூப்பா கிண்டல் பண்றாங்க...

    என்ன ஸார் இது அநியாயம்? இவங்களுக்கு தேசிய உணர்வு இல்லாம இருக்கலாம். அதுக்காக மத்தவங்க உணர்ச்சிகளுக்கு மதிப்புத் தர வேண்டாம்? நாம எத்தனை பேர் பப்ளிக் வந்திருக்கோம்! நம்ம பணம் வேஸ்ட்... நேரம் வேஸ்ட்! இதென்ன இவங்க காலேஜ் பங்ஷனா? கல்லூரி மேடையா? பேசறது கல்லூரி ப்ரொஃபஸரா? பொது நிகழ்ச்சியிலே நாகரிகம் தெரியாம ஏன் இப்படி நடந்துக்கறாங்க?

    திரையில் பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும் கிண்டல் கை தட்டுக்கள்...

    ‘போதும்பா... நிறுத்து’ போன்ற அறிவுரைகள்...

    இவளால் தாங்க முடியவில்லை...

    எழுந்துவிட்டாள்!

    இவர்களுக்குப் படம் பார்க்க இஷ்டமில்லை என்றால் பிறகு ஏன் வருகிறார்கள்?

    திரையில் எங்கோ நெருப்பு பற்றிக் கொண்டபோது...

    ஐயோ... பத்திக்கிச்சு... என்று ஒரு மாணவன் பாட... தொடர்ந்து கோரஸ்

    இவள் கதவு திறந்து வெளியே வந்தாள்.

    வெளிச்சமும், ஆரோக்கியமான காற்றும் இதமாக இருந்தன.

    இவள் ஓரடி எடுத்து வைப்பதற்குள்...?

    எக்ஸ்கியூஸ்மி... நான் இந்தக் கல்லூரியின் ப்ரொஃபசர்... எங்க மாணவர்கள் சார்பா நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன். இப்ப அவர்களை எச்சரிச்சுட்டு வந்திருக்கேன். நீங்க உள்ளே போய் படம் பாருங்க...

    இவள் அவனைப் பார்த்தாள்.

    கண்ணியமிக்க தோற்றமுள்ள ஒரு இளைஞன்.

    வகுப்பறையில் எப்படி இவர்களை சமாளிக்கிறார்?

    நோ... எனக்கு மூட் அவுட் ஆயிடிச்சு. இனிமே நான் படம் பார்த்தாலும் என்னால் ரசிக்க முடியாது...

    ஸாரி மேடம்... உங்க அட்ரஸ் தாங்க... இன்னொரு நாளைக்கு நீங்க படம் பார்க்க டிக்கெட் புக் பண்ணி அனுப்பறேன்...

    நோ... தாங்க்ஸ்...

    அவள் படி இறங்கிவிட்டாள்.

    என் பேர் ப்ரொஃபஸர் பசுபதி. பாட்டனி ப்ரொஃபஸர்...

    அவன் கூறியது காதில் விழுந்தது.

    செடி கொடிகளுடன் பழகியவன் ஜடமாக இல்லாமல் மனிதனாக இருக்கிறான்! நன்றி இறைவா?!

    ஆனால், மனிதர்கள் ஜடங்களாக மாறும்போது ரசிக்க முடியுமா?

    சுவாதி வேகமாக நடந்தாள்.

    2

    சுவாதி பேப்பர் படித்துக் கொண்டிருந்தாள்.

    திரைப்பட வரிசையில்...

    தமிழ்ப் படத்தை ஆங்கிலத்தில் எழுதி இருந்தார்கள்.

    கலக்கல் அம்மையார்!

    அதென்ன கலக்கல் அம்மையார்? யாரது?

    பிறகுதான் புரிந்தது... அது கலக்கல் அம்மையார் அல்ல! காரைக்கால் அம்மையார் என்று!

    கடவுளே! இவள் பக்கங்களைப் புரட்டினாள்.

    ஏதேதோ விளம்பரங்கள்! எங்கு பார்த்தாலும் ‘ஆஃபர்கள்!’ இதை வாங்கினால் அது இனாம்!

    இலவசமாக எல்லாவற்றையும் பெறுவதில் மனிதர்களுக்கு எத்தனை மகிழ்ச்சி! ஆவல்!

    ஒரு பெண்ணை யாரும் இலவசமாக அடைய நினைப்பதில்லை!

    கல்யாணச் சந்தையில் அவளுக்குப் பேரம்!

    விபசாரச் சந்தையில் அவளுக்குக் கூலி!

    மனைவியான பின் கொத்தடிமை பாண்ட்!

    இந்தப் பெண்மைக்குத்தான்...

    ‘பெண்மை வாழ்கவென்று கூத்திடுவமடா’ என்றானே பாரதி...

    பெண்மை எங்கு வாழ்கிறது?

    பெண் என்பதால் தகுதிகள் இருந்தும் அவள் உயர் பதவிக்கு நிராகரிக்கப்படுகிற கொடுமையைப் பற்றி ஒரு பேட்டிக் கட்டுரைப் படித்த ஞாபகம்.

    தகுதியான சான்றிதழ்கள் பெறக்கூட அவளைத் தகுதியற்றவளாகக் காட்டும் சமுதாய ஆதிக்கம்!

    உரிமைகளை முழுமையும் போராடிப் பெற முடியாது! மற்றவர்கள் மதித்து தரப்படுவதுதான் அங்கீகாரம்! அந்த அங்கீகாரத்துக்காகப் போராடலாம். ஆனால் அதையும் தாண்டி நடத்தப்படும் அடக்குமுறைக்கு போராட முடியுமா?

    சுவாதி சிந்தித்தாள்.

    சமுதாயக் கட்டுப்பாடு என்கிற பெயரில் நமக்கு நாமே தளைகளை, தடைகளை உருவாக்கிக் கொள்கிறோமோ? என்ற சந்தேகம்.

    தடைகளை உடைக்க பெண்ணும் முன் வருவதில்லை...

    Enjoying the preview?
    Page 1 of 1