Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

NIzhal Manithan
NIzhal Manithan
NIzhal Manithan
Ebook84 pages1 hour

NIzhal Manithan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vimala Ramani, an exceptional Tamil novelist, written over 700 novels, 1000 short stories, More than 600 dramas have been broadcasted on Trichy and Coimbator Radio Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466350
NIzhal Manithan

Read more from Vimala Ramani

Related to NIzhal Manithan

Related ebooks

Related categories

Reviews for NIzhal Manithan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    NIzhal Manithan - Vimala Ramani

    19

    1

    "யுவர் குட் நேம் ப்ளீஸ்?" -என்றான் அவன்.

    ஷகுன்

    பேர் சொல்றதுக்கு சகுனம் எல்லாம் பாக்க வேண்டாங்க. சும்மா சொல்லுங்க.

    அவள் சிரித்தாளா? எங்காவது டெலிபோன் மணி அடித்ததா? ‘டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா?’

    மைகாட்... என் பேரே ஷகுன் தான்.

    அவன் ஆச்சர்யப்பட்டான்.

    இப்படிக் கூட பேர் வைப்பாங்களா? சகுனம், ராகுகாலம், எம கண்டம்னு...

    சகுனம் இல்லை... ஷகுன். முதல்லே பேரை சரியா உச்சரிக்கக் கத்துக்கங்க.

    ஆல்ரைட் கஷ்மீரா? காஷ்மீரா? ரவளியா? ரவா இட்லியா? சீ... ரவாளியா இப்படி நிறைய பேர்க் குழப்பம் இருக்கு மேடம்...

    உங்கக் கூடப் பேசிட்டு இருந்தா எல்லாமே குழப்பம்தான். அதுசரி... நடுரோட்டிலே நிறுத்தி இப்படி பேட்டி எடுக்கறீங்களே... எதுக்காக?

    கையிலே பாக்கல்லை? என்ன இருக்கு?

    ஷகுன் சிரித்தாள்.

    ஐயோ மறுபடியும் சிரிக்கிறாள்! சிரிப்பா அது? சதங்கைச் சிதறல்! இப்படி எல்லாம் உதாரணம் சொல்லக்கூடாது. அப்புறம் பட்டிமன்றத்தில் டெலிபோன் கினி கினி என்கிறது... பெண் சிரித்தால் கிணிணி என்பாளா என்பார்கள். ஆறுகள் கூட சலசலவென்று ஓடுகிறது என்பார்கள் கதைகளில்! நதி ‘சலசல’ என்று பேசிக் கொண்டா போகும்?

    இனி உதாரணமே வேண்டாம்! மறுபடியும் கேட்டான்.

    மேடம்... என் கையிலே என்ன இருக்கு? பாத்தீங்களா?

    எல்லார் கையிலேயும் இருக்கிற மாதிரி விரல்தான் இருக்கு...

    மேடம்... மைக்... மைக் தெரியல்லை...?

    அட... ஆமாம்... நீங்க...?

    சாடிலைட் டி.விக்காக நடுத்தெரு நாராயணனாக தப்பு நடுத்தெரு நாயகனாக பேட்டி எடுத்துட்டு இருக்கேன். இந்தாங்க...

    என்ன இது?

    இது மினி மைக்... உங்க ஜாக்கெட்டுக்குள்ளே தப்பா நினைக்காதீங்க... உங்க ஜாக்கெட்டுக்கு மேலே இந்த மைக்கை ‘கிளிப்’ பண்ணிக்கங்க...

    இதற்குள் கொஞ்சம் கூட்டம் சேர்ந்து விடவே அவள் சங்கடப்பட்டாள்.

    எனக்கு இது பிடிக்கல்லை... நடுத்தெருவுலே ஒவ்வொருத்தரையா நிறுத்தி இதென்ன பேட்டி?

    அங்கேதான் நீங்க தப்புப் பண்றீங்க... இந்த நிகழ்ச்சிக்கு எத்தனை வரவேற்பு தெரியுமா?

    கூட்டத்தில் ஒருவன்---

    கோபாலா-என்றான்.

    அவன் பெருமை பொங்க...

    பாத்தீங்களா? என்னை அடையாளம் கண்டுட்டாங்க... என் பேர் கோபால மாதவன் தான்!-என்றான்.

    யோவ்... உன்பேரை எவன் கேட்டான்? ‘கோபாலா கோபாலா’ பாட்டுப் போடு...

    கோபு அசடு வழிய சிரித்தான்

    இந்தாங்க கர்சீப்...

    எதுக்கு?

    முகத்தைத் துடைச்சுக்கறதுக்கு...

    ஆல்ரைட்... பீ ரெடி... காமிரா... ஸ்டார்ட்... ஆக்ஷன்... கூடவே வந்த காமிரா ஷகுனை ‘போகஸ்’ செய்தது.

    மேடம்.... உங்களுக்குப் பிடிச்ச பாட்டு எது?

    சின்ன வயசிலே இருந்து எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு...-சற்று நிறுத்தினாள்.

    டிவிங்கிள்... டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்...

    கட்... கட்...-கத்தினான். என்ன மேடம்.... இப்படி ஏடா கூடமா பதில் சொல்றீங்க?

    பின்னே என்ன ஸார்? இந்த ப்ரோக்கிராமே எனக்குப் பிடிக்கல்லை! சின்னச் சின்னக் குழந்தைகளை நடுரோட்டிலே நிறுத்தி பாட்டுப் பாடச் சொல்றீங்க... பாவம்... அதுகளும்... ‘கண்ணாளனே என் கண்ணை நேற்றோடு காணவில்லைன்னு’ பாடுது... என்ன ஸார் இது? சிக்கு புக்கு ரயிலையும். முகாபலாவையும் தேசிய கீதம் ஆக்கினது நீங்கதான் ஸார்...

    அங்கு கூடி இருந்த சில கல்லூரி மாணவிகள் கைதட்ட, ‘பிகரு பிகரு தான்... சூப்பர் பிகருதான்’ - என்று ஒருவன் பின்னணி பாட விழா... தப்பு நிகழ்ச்சி ஒரு வழியாக முடிந்தது!

    கோபு வெறுத்துப்போய் ‘பேக்ஆப்’ செய்து அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டான்.

    ஆனால் அவன் வாய் மட்டும் ‘ஷகுன்... ஷகுன்... ஷகுன்’-என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

    2

    "மே ஐ கம் இன்?" குரல் கேட்டு ஷகுன் நிமிர்ந்தாள்.

    வாவ்! கோபாலா கோபாலா! வா... வா...- என்றது மனம்... இருந்தாலும் கொஞ்சம் சமாளித்தபடி, சிரித்தபடி, மனதுக்குள் இருக்கும் நினைவுகளை வெளிக்கொணரும் பாவனையாக

    அட நீங்க... நீங்க என்று திணறியபோது -

    ஐயேம் கோபாலன்! பர்பெக்ட் ஜென்டில்மேன்! இப்போ ஒரு கன்சர்னிலே மேனேஜரா இருக்கேன். எம்.டி. வீட்டுக்கு வரச் சொன்னார். வந்தேன். வந்தா... எம்.டி. வீட்டிலே நீங்க? வாட் எ ப்ளசண்ட் சர்ப்பரைஸ்!

    ஷகுன் திடுக்கிட்டாள்.

    எம்.டி.யா? அப்போ இந்த அசடு இவள்

    Enjoying the preview?
    Page 1 of 1