Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Deivam Thantha Veedu…!
Oru Deivam Thantha Veedu…!
Oru Deivam Thantha Veedu…!
Ebook149 pages52 minutes

Oru Deivam Thantha Veedu…!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115702913
Oru Deivam Thantha Veedu…!

Read more from Lakshmi Rajarathnam

Related to Oru Deivam Thantha Veedu…!

Related ebooks

Reviews for Oru Deivam Thantha Veedu…!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Deivam Thantha Veedu…! - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    ஒரு தெய்வம் தந்த வீடு...!

    Oru Deivam Thantha Veedu…!

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    ஆசிரியர் உரை

    அன்பு நிறை வாசக நெஞ்சங்களுக்கு!

    அன்பு வணக்கங்கள்!

    ஒரு தெய்வம் தந்த வீடு...! என்ற நாவலுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். படித்துத் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

    தொடர்ந்து எனது நாவல்களை மாத நாவல் வடிவில் வெளியிட்டு வரும் அக்ஷயா சிறப்பு நாவல் வெளியீட்டுக் குழுவினருக்கு எனது அன்பு கலந்த நன்றிகள்.

    மீண்டும் உங்களை அடுத்த நாவலில் சந்திக்கிறேன்...

    அன்புடன்

    லட்சுமி ராஜரத்தினம்

    ***

    1

    வீடு கொள்ளாத மனிதர்கள் வந்து விட்டனர். 'சங்கீத வித்வான் செந்தில்நாதனுக்கு அறுபதாம் கல்யாணம் என்றால் சும்மாவா!-?'

    'அவருக்கு இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள். லண்டன், கலிஃபோர்னியா, நியூஜெர்ஸி, கனடா என்று இருந்தார்கள். அப்பாவுக்கு அறுபதாம் கல்யாணம் என்றதும் பரிசுப் பொருள்களுடன் பறந்து வந்து விட்டார்கள். அதுவும் கலைகளுக்குப் பெயர் பெற்ற தஞ்சாவூரில் என்றால் கேட்கவா வேண்டும்?'

    அவர்கள் பிறந்து, வளர்ந்து, ஓடியாடி விளையாடி, படித்து, கல்யாணம் நடந்த ஊராயிற்றே. வந்த அன்றே இரண்டு மாத லீவில் எந்தெந்த கோயில்களுக்குப் போக வேண்டும் என்று திட்டம் போட்டனர். உள்ளூரில் அழைப்பிதழ்களை செந்தில்நாதனின் சிஷ்யர்கள் கொடுத்தாலும், நெருங்கிய உறவினர்களை நேரில் போய் அழைத்து விட்டு வந்தார்கள்."

    பெரியவன் விஸ்வநாதன் பட்டு வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு சமையற்காரர்களிடம் மெனுபற்றி பேசிக்கொண்டு இருந்தான். இடையிடையே அம்மா, தங்கைகளிடம் அபிப்ராயம் கேட்டுக் கொண்டிருந்தான்.

    அப்பா, பீட்ஸா உண்டு இல்லையா? என்று அவனுடைய மகன் கேட்டான்.

    பிட்ளைதானே... போட்டாப் போச்சு.... என்று வயதான சமையற்காரர் காது கேளாமல் சொன்னதும் கொல்லென்ற சிரிப்பு எழுந்தது.

    "இங்கெல்லாமும் பிட்ஸா வந்துட்டது. ஆர்டர் பண்ணிட்டாப் போச்சு...'' என்று சமையற் குழுவில் இருந்த இளைஞன் பளிச்சென்று பதில் சொன்னான்.

    பதில் சொன்னாலும்... உடம்பு எடுப்பாகத் தெரிய மாடர்ன் டிரஸ்ஸில் நின்ற பூர்ணிகாவின் மீதே அவன் பார்வை சென்று மீண்டது.

    செந்தில்நாதனின் மூத்த மகள் சாந்தாவின் பெண் பூர்ணிகா. அந்த இளைஞனின் பார்வையைக் கவனித்த சாந்தா, மகளின் அருகே வந்தாள்.

    உள்ளே போ. போய் பாவாடை, தாவணியைப் போட்டுண்டு வா. நம்மூர்க்கு இதெல்லாம் சரி. அந்தாளின் பார்வையே சரியில்லை... என்று தாழ்ந்த குரலில் மகளைத் துரத்தினாள் சாந்தா.

    ''போம்மா, எனக்கு தாவணி போட்டுக்க வரல...'' என்று பூர்ணிகா சிணுங்கினாள்.

    ''வரலையா? உன்னை இங்கேயே விட்டுட்டுத்தான் போகப் போறேன்...'' என்று தன் அருமை மகளை மிரட்ட, சாந்தாவின் கணவன் சிவாவோ மகளின் உதவிக்கு வந்தான்.

    ''சாந்தா, குழந்தையை மிரட்டாதே...'' என்றவன் சமையல் ஆட்களிடம், நீங்க எதுக்கு இங்கே நின்னு வேடிக்கை பார்க்கறீங்க! போயி சமையல் சாமான்கள் சரியா இருக்குதான்னு பாருங்க என்றான்.

    "நீ வாடி உள்ளே...'' என்று மகளை இழுத்துக் கொண்டு உள்ளே போனாள் சாந்தா.

    ஈஸிச்சேரில் படுத்துக் கொண்டு இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார் செந்தில்நாதன். மனதிற்குள், 'ஞானமொசக ராதா...' என்று பூர்விக் கல்யாணி ஓடிக் கொண்டிருந்தது.

    அடுத்தவள் பைரவி வந்தாள். "அப்பா, இன்னிக்கு சுமங்கலிப் பிரார்த்தனை. போயி ஸ்நானம் பண்ணிட்டு வந்துடுங்கோ...'' என்ற மகளையே கண்ணிமைக்காமல் பார்த்தார்.

    'விஸ்வநாதன், சாந்தா, ஷண்முகம் என்ற மூவருக்குப் பின் பிறந்தவள் இந்த பைரவி.'

    "என்னப்பா, இப்படிப் பார்க்கிறீங்க?''

    ஒண்ணுமில்லேம்மா... இந்தக் கூடத்துல ஓடியாடின குழந்தைகள் நீங்கள்லாம். அந்த ஞாபகம் வந்தது.

    "எனக்கும் ஞாபகம் இருக்குப்பா. எங்க நாலு பேரையும் பாட்டுப் பாடணும்னு இழுத்து உட்கார வைப்பேள். நாங்க சரளி வரிசையைக் கூட சரியா கத்துக்கலே. இன்னிக்கும் எங்க மாமியார் ஒரு பெரிய வித்துவானோட பொண்ணு... கெளரி கல்யாணத்தைக் கூட நாளு, கிழமைன்னா நான் பாட வேண்டி இருக்குது என்பார். என்ன பண்றது? ஆனா நீங்க பாடற கரகரப்ரியாவும், கல்யாணியும் என்னோட காதுலேயே ஒலிச்சுண்டு இருக்குப்பா...'' என்று சற்று தழுதழுத்த குரலில் சொன்னபொழுது செந்தில்நாதன் கண் கலங்கினார்.

    ''பரவாயில்ல... ஏதோ ரெண்டு ராகங்கள் பேரையாவது சொல்றியே? அதுவரைக்கும் சந்தோஷம்தான்...

    ''இப்ப வர்ற சினிமாப் பாட்டுகள் கர்னாடக சங்கீத ராகங்களை அடிப்படையா வச்சுப் பாடறாளே... அதையும் தவிர நான் பாரீன்ல இருந்தாலும் இப்ப நம்ம பக்கத்துக் கோயில், பண்டிகைகள்னு பரவி இருக்கேப்பா. ஒரு கச்சேரியைக் கூட நான் விடறது இல்ல. எனக்கு அங்கே பத்மபூஷண் செந்தில்நாதனுடைய பொண்ணுங்கற மரியாதை இருக்குப்பா...''

    இதைக் கேட்டு மனதிற்குள் செந்தில்நாதன் சந்தோஷப்பட்டாலும், ''உன்னை யாரும் பாடிடச் சொல்றதில்லையே?'' என்று குசும்புத்தனமான ஒரு கேள்வியைப் போட்டார்.

    இதுவரைக்கும் சொல்லலே. பாடகர்கள் மேடையை விட்டு இறங்கினதும்... போய் கையைக் குலுக்கி, உங்க சி.டி.யைக் கொடுத்து, அப்பா இதுல தோடியைப் பிச்சு வாங்கி இருக்கார். கேட்டுப் பாருங்கோன்னு சொல்லிடுவேன். ஜுஜாவளி, நாகஸ்ராளி ராகங்களை நீங்கதானேப்பா பாடி இருக்கீங்க?

    சங்கீத ஞானம் உனக்கு காலம் கடந்து வந்திருக்கும்மா. எனக்கு என் குழந்தைகள் சங்கீத வாரிசுகளாக வரலேயேம்மா. விசு கொஞ்சநாள் வயலின் கத்துண்டான். என்ன பிரயோஜனம்? விட்டுட்டான். ஷண்முகம் மிருதங்கம் வாசிக்கறேன்னு தட்டிண்டு இருந்தான். உங்கக்கா சாந்தா டான்ஸ் கத்துக்கறேன் பேர்வழினு போனா. கஜ்ஜை பூஜைனு டிரஸ் தச்சு சதங்கை வாங்கினேன். பெரியவளாயிட்டா. உங்கம்மா ஆடக் கூடாதுனு சொல்லிட்டா. பாட்டு கிளாஸ்னா நீ ஓடி ஒளிஞ்சுப்பே. என்ன பண்றது?

    'நாலு குழந்தைகளிலும் ஒருவர் கூட தன் சங்கீத வாரிசுகளாக இல்லை' என்பது அவருக்கு கொஞ்சம் குறைதான்.

    ''இன்னும் நீங்க குளிக்கலையா? பெண்டுகள் வர்ற நாழியாச்சு...'' என்று மனைவி விசாலம் குரல் கொடுக்கவே... குளியலறையை நோக்கி நடந்தார் செந்தில்நாதன்.

    அடுத்த ஒரு மணி நேரத்தில் சுமங்கலிப் பிரார்த்தனை ஆரம்பமாகியது. வெளிக் கூடத்தில் இரண்டு மகன்கள், இரண்டு மருமகன்கள் என்று அமர்ந்து பேசலானார்கள். இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைப்பது அரிது. இதில் கலந்து கொள்ளாமல் செந்தில்நாதன் ஒலிநாடாவில் நாதஸ்வர இசையை ஒலிக்க விட்டார்.

    ஆபேரியில், 'நகுமோமு...' கன ஜோராகக் குழல் வழியே கசிந்து உருகி வந்தது.

    இரண்டாவது மருமகன் ஷங்கர் கொஞ்சம் இந்துஸ்தான் இசையில் ஈடுபாடு கொண்டவன். அதனால் கொஞ்சம் செவிகளை இசைக்குள் நுழைத்துக் கொண்டான்.

    ''மாமா.. கொஞ்சும் சலங்கைனு ஒரு பிக்சர். 'சிங்கார வேலனே'ன்னு ஒரு பாட்டு. எஸ். ஜானகி பாட... காரக்குறிச்சி அருணாசலம் நாதஸ்வரம் வாசிச்சிருப்பாரே... அது கூட ஆபேரிதானே?''

    மருமகன் சங்கீதத்தில் கொஞ்சம் ஆர்வம் காட்டுவது செந்தில்நாதனின் மனதிற்கு இதமாக இருந்தது.

    "அந்தப் படத்துலத்தானே ஜெமினி கணேசன், 'சாந்தா, உன் இசை எனும் இன்ப வெள்ளத்தில் மூழ்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாதே'னு டயலாக் பேசுவாரே...'' என்று விஸ்வநாதன் சொல்ல, ''ஆமாம்...'' என்று ஷண்முகம் ஆமோதித்தான்.

    "மாமா, நிறைய பாட்டுக்கள் சினிமாவுல ஆபேரி ராகத்தில் வந்திருக்கு. இல்லையா?'' என்று ஷங்கர் கேட்க... செந்தில்நாதன் சின்ன சிரிப்பை உதிர்த்தார்.

    ''மாப்பிள்ளை.... நான் சினிமா பார்க்கறது இல்லை. சிங்காரவேலனே பாட்டை நான் கேட்டிருக்கிறேன். அது ஆபேரினு சொல்ல என்னால்

    Enjoying the preview?
    Page 1 of 1