Sarithayanam
By Balaganesh
()
About this ebook
Read more from Balaganesh
Naan Irukkirean Amma Rating: 0 out of 5 stars0 ratingsSigaram Thotta Cinemakkal Rating: 0 out of 5 stars0 ratingsOoty Varai Ularu..! Rating: 0 out of 5 stars0 ratingsPatchai Malai Marmam Rating: 0 out of 5 stars0 ratingsTorture King 12th Manimaran Rating: 0 out of 5 stars0 ratings'Jolly' Kathaigal..! Rating: 0 out of 5 stars0 ratingsIrul Kolaigal Rating: 0 out of 5 stars0 ratingsPanju Virattu Rating: 0 out of 5 stars0 ratings
Related authors
Related to Sarithayanam
Related ebooks
Appusamy Padam Edukkirar Rating: 0 out of 5 stars0 ratingsMahabharathathil Mangathaa Rating: 0 out of 5 stars0 ratingsOru Vinaadi Poru Rating: 0 out of 5 stars0 ratingsInimey Naanga Thaan Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Kuliyal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalaagi Kasindhurugi Rating: 0 out of 5 stars0 ratingsIdi Minnal Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Vettai Rating: 0 out of 5 stars0 ratingsRaathirigal Vandhuvittal! Rating: 0 out of 5 stars0 ratingsUnmaigal Urangattum Rating: 0 out of 5 stars0 ratingsMegapaaraigal Rating: 0 out of 5 stars0 ratingsAalayamaagum Mangai Manathu Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyin Colour TV Rating: 0 out of 5 stars0 ratingsVasantha Kaala Vaanampadikal Rating: 0 out of 5 stars0 ratingsமின்சாரப் புன்னகை Rating: 0 out of 5 stars0 ratingsMinsaara Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsSathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Priyasagaa Rating: 5 out of 5 stars5/5Poi Kaappalan Rating: 0 out of 5 stars0 ratingsManakkum Varai Pookadai Rating: 0 out of 5 stars0 ratingsNIzhal Manithan Rating: 0 out of 5 stars0 ratingsKan Simittum Neraththi Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Oviyam Kaiyil Serumo! Rating: 0 out of 5 stars0 ratingsEllam Income Mayam Rating: 0 out of 5 stars0 ratingsDowry Tharatha Gowri Kalyanam Rating: 0 out of 5 stars0 ratingsAnumathi Ilavasam Rating: 0 out of 5 stars0 ratingsAasai Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsChittukuruvi Suttu Pazhagu Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Pirintha Vaanam Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Sarithayanam
0 ratings0 reviews
Book preview
Sarithayanam - Balaganesh
http://www.pustaka.co.in
சரிதாயணம்
Sarithayanam
Author:
பாலகணேஷ்
Balaganesh
For more books
http://www.pustaka.co.in/home/author/balaganesh
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
கணேச பாகவதரின் கச்சேரி!
சரிதாவும், ஏரோப்ளேனும், பின்னே ஞானும்..!
சரிதாவும், தொலைக்காட்சியும்..!
சரிதா ஒல்லியாகிறாள்..!
சரிதாவும் நாயும்..!
சரிதாவும், பேயும்..!
சரிதாவும், சங்கீதமும்..!
சரிதாவும் டிரைவிங்கும்..!
சரிதாவும், வால்களும்..!
சரிதாவும், ஷாப்பிங்கும்..!
சரிதா போன டி.வி. நிகழ்ச்சி..!
சரிதாவும் லட்டும்..!
சரிதாவின் சபதம்..!
சரிதாவும் மோகினிப் பிசாசும்..!
சரிதாவும், எம்.என்.நம்பியாரும்..!
சரிதாவும், செல்போனும்..!
சரிதாவும், தேர்தலும்..!
சரிதாவும், தீபாவளியும்..!
சரிதாயணம்
பாலகணேஷ்
கணேச பாகவதரின் கச்சேரி!
நமப்பார்வதி பதயே... ஹரஹர மஹாதேவா... எல்லாருக்கும் வணக்கம். லோகத்துல எல்லாரும் க்ஷேமமா இருக்கணும், மாசம் தவறாம மழை பெய்யணும்னு வேண்டிண்டு கச்சேரிய ஆரம்பிக்கறேன். இந்தக் காலத்துல லோகத்துல புதுசு புதுசா நெறைய டி.வி. சேனல்கள் வந்துண்டிருக்கு. ஜனங்களும் சலிக்காம (சேனலை) மாத்தி மாத்திப் பாத்துண்டுதான் இருக்கா.
அதுலயும் இந்தப் பொம்மனாட்டிங்க இருக்காளோல்லியோ... அவா இந்த டி.வி.யப் பாத்துட்டு... அதுலயும் குறிப்பா சீரியல்களைப் பாத்துட்டு பிழியப் பிழிய அழுது, வீட்டுல இருக்கறவாளப் படுத்தி அவங்களை அழ வெக்கறது இருக்கே... அதையே தனி சீரியலாதான் எடுக்கணும் போங்கோ...!
இப்படி டிவி சீரியலால அவதிப்பட்டு சீரியலான... ஸாரி, சீரியஸான ஒருத்தனோட கதைய இப்ப உங்களுக்கு நான் சொல்லப் போறேன்.
ஆதௌ கீர்த்தனாரம்பத்துல நம்ம கதாநாயகன் பாலகணேஷ் மாம்பலத்துல இருக்கற அவனோட வீட்டுல கம்ப்யூட்டர் முன்னால உக்காந்து எதையோ தட்டிண்டிருக்கான். அப்ப அவன் பக்கத்துல வர்ற அவனோட தர்மபத்தினி சரிதா, ‘‘என்னங்க... கண்ணை மூடிக்கிட்டு ஆ காட்டுங்க... அப்படிங்கறா. இவ இப்படிச் சொன்னா ஏதோ விபரீதமாச்சேன்னு புள்ளையாண்டான் பயந்துண்டு, ‘‘ஆ காட்டச் சொல்றதே ஆபத்து. அதுல கண்ணை வேற மூடணுமா? எப்படிச் சாப்பிட்டாலும் நீ பண்ணின பதார்த்தத்தோட பேரை என்னால சொல்ல முடியப் போறதில்ல... அப்புறம் எதுக்கு..?
ங்கறான்.
‘‘ஹுக்கும்!’’ன்னு அவன் தோள்ல இடிச்சுட்டு, ‘‘சொன்னதைச் செய்யுங்களேன்"ன்னு அவ மிரட்டவும், அதுக்கு மேல தயங்கினா ஆபத்தாச்சேன்னு பயபக்தியா சொன்னதக் கேக்கறான் நம்ம கதாநாயகன். வாய்ல விழுந்ததைக் கடிச்சுட்டு, ‘ஆ’ன்னு அலறி கைல துப்பறான். கைல ஒரு வெள்ளையான ஒரு வஸ்துவோட சேர்ந்து வந்து விழறது அவன் கடைவாய்ப் பல்!
‘‘அடிப்பாவி...! மைசூர் பாகை இப்படியா கெட்டியாப் பண்ணுவே? என்னோட ஒரு பல்லே உதிர்ந்துடுத்து பாரு உன்னால..ன்னு அவனானா அலர்றான். அவளோ துளிக்கூட அலட்டிககாம. ‘‘மைசூர் பாகா...? நாசமாப் போச்சு! நான் பண்ணினது பாதுஷான்னா!
ங்கறா கூலா.
நம்மாளு வாயக் கொப்பளிச்சுட்டு வந்து மறுபடி சீட்டுல உக்காரப் போற நேரத்துல, ‘‘அக்கா... அத்திம்பேர் ஏன் இப்படி ‘இரண்டாம் உலகம்‘ படத்த ரெண்டாவது ஷோ பாத்துட்டு வந்தவர் மாதிரி ‘ழே’ன்னு முழிச்சுட்டிருக்கார்?’’ அப்படின்னு குரல் கொடுத்துட்டே உள்ள நுழையறான் சரிதாவோட தம்பி வாசன்.
அவனைப் பார்த்ததுமே வயத்துல புளிய... புளிய என்ன... மிளகு, உப்பு, இஞ்சின்னு சகல வஸ்துக்களையும் கரைக்கற மாதிரி இருக்கு நம்ம ஹீரோவுக்கு.
‘‘ஒரு குட் நியூஸ் சொல்றதுக்குத்தான்டா வரச் சொன்னேன். அதச் சொல்றதுக்கு முன்னால... இந்தா, இந்த ஸ்வீட்டைச் சாப்பிடுன்னு அவன் வாயிலயும் இவன் வாயில திணிச்ச அதே பதார்த்தத்தை திணிக்கறா சரிதா. ‘அடப் படுபாவி! சித்த முன்னால வந்திருக்கப்படாதோ’ன்னு மனசுல நெனச்சுண்டு, நம்மாளு அவனைப் பார்க்க, அவன் கடக் முடக்குன்னு கடிச்சு முழுங்கிட்டு ஏப்பம் விடறான். ‘‘ஸ்வீட் பிரமாதமாப் பண்ணியிருக்கேக்கா...
என்று அவன் சொல்லவும் தீப்பார்வையா முறைக்கறான் நம்மாளு.
‘‘சரி.. இனிமே நீ இந்த மாதிரி புதுசா பலகாரம் பண்ணினா முதல்ல இவனுக்குக் குடுத்துட்டு, (அவன் முழுசா இருந்தா-ன்னு மனசுல சொல்லிண்டு) அப்புறம் எனக்குத் தரணும். சரியா...ன்னு அவசர ஒப்பந்தம் ஒண்ணு போடறதுக்கு இவன் முயற்சி பண்ண, ‘‘ஹும்...! குட் நியூஸ்ன்னு எந்தம்பி சொன்னானே... அது என்னன்னு கேக்கத் தோணறதா பாரு...
ன்னு (கண்ணீரே வராம) கண்ணைக் கசக்கறா சரிதா.
‘‘ஒன்னோட தம்பியப் பாத்த சந்தோஷத்துலயாக்கும் கேக்க மறந்துட்டேன். என்ன விஷயம், சொல்லும்மா...ன்னு சமாளிக்கறான் பையன். இல்லாட்டி என்னென்ன விளைவுகள் வரும்னு நேக்கும் ஒங்களுக்கும் தெரிஞ்சதவிட அவனுக்குன்னா நன்னா தெரியும்? அவன் அப்படிக் கேக்கவுமே, சரிதா பல்லெல்லாம் வாயா சிரிச்சுண்டே, ‘‘எனக்கு மின்னல் டிவில சீரியல்ல நடிக்கற சான்ஸ் கிடைச்சிருக்கு
அப்படின்னு ஸ்லோமோஷன்ல ஒரு குண்டைத் தூக்கி இவன் மேல வீசறா.
‘‘ஐயையோ... இதென்ன விபரீதம்! நேரம் காலம் இல்லாம நீ சிரியல் பாத்துட்டு படுத்தறதே தாங்க முடியாது. நடிக்க வேற போறியா? எப்படிறீ?ன்னு முழி பிதுங்க கேக்கறான் நம்மாளு. ‘‘அதாங்க... மின்னல் டிவில ‘டீ வித் திவ்யா’ -புரோகிராம்ல உங்களப் பேட்டியெடுக்கறதுக்காக டிவி ஸ்டேஷனுக்கு வரச் சொன்னாங்கன்னு நாம போனோம்ல... நீங்க பேட்டி குடுத்துட்டிருந்த நேரத்துல சீரியல் டைரக்டர் சிவகங்கை சிவனாண்டியப் பாத்தேன். நான் பேசற ஸ்டைல் நன்னாயிருக்குன்னு சொல்லிட்டு அவர்தான் சீரியல்ல நடிக்கறேளான்னு கேட்டார். சரின்னுட்டேன்..
ங்கறா சரிதா.
‘‘அத்திம்பேர்... அக்காவோட திறமயப் பத்தி ஒங்களுக்குத் தெரியாது. ஸ்கூல் டேஸ்லயே ட்ராமாலல்லாம் நடிச்சு கப்லாம் வாங்கிருக்கா தெரியுமோன்னு அக்காக்கு சரியா ஒத்து ஊதறான் வாசன். ‘‘ட்ராமால நடிச்சாளா? என்னவா நடிச்சா?
ன்னு நம்மாளு கேக்கறதுக்கு, ‘‘கதாநாயகியோட தோழிக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கும். கதாநாயகி ஒரு மனோதத்துவ டாக்டர்ங்கறதால அவளைக் குணப்படுத்துவா... எங்கக்கா தோழி கேரக்டர்ல பைத்தியமா நடிச்சாங்கறான் வாசன். நம்ம கதாநாயகன் அப்பாவின்னா எப்படி ஒரு அப்பாவி பாருங்கோ... ‘‘நடிச்சிருக்க மாட்டாடா வாசன்... சும்மா வந்து இயல்பா பேசியிருப்பா. சூப்பர் நடிப்புன்னு நம்பி கப்பைக் குடுத்துட்டாங்க...
அப்படின்னு மனசுக்குள்ள நெனக்க வேண்டியதை சத்தமாச் சொல்லித் தொலைக்கறான். ‘‘ச்சீ, போங்க..." என்று கோபமா சரிதா தன் (உலக்)கையால அவன் தலையில ஓங்கிக் குத்த... இப்ப அவனுக்குன்னா மூளை கலங்கினாப்போல ஆயிடுத்து! ஈரேழு உலகமும் நாலஞ்சு சுத்து சுத்திட்டு அப்பறமா நேராகறது அவனுக்கு! ‘ழே’ன்னு முழிக்கறான்!
அப்பறமா கொஞ்சம் சுதாரிச்சுண்டு, அப்பவும் பேமுழி முழிச்சுண்டு, ‘‘தோ பாரு சரி... இந்த மாதிரி சீரியல்ல நீ நடிக்கப் போறேன்னு சொன்னா எங்கம்மா திட்டுவா...ன்னு அவன் ஆரம்பிக்க... ‘‘ஆமா... உங்க தங்கச்சி கால்கிலோ மேக்கப்ப முகத்துல அப்பிண்டு ஊர்கோலமா வர்றதுக்குல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டா உங்கம்மா... எனக்குன்னாத்தான் சொல்லுவாளாக்கும்...
ன்னு ஆரம்பிச்சு அவ இப்ப நான் பண்ணிண்டிருக்கறதை விடப் பெரிசா ஒரு காலாட்சேபம் பண்ண... டோட்டலா டெபாஸிட் இழந்த வேட்பாளராட்டமா ஆயிடறான் நம்மாளு.
‘‘ஹும்...! ஒரு காலத்துல டெலிபோன்ல டிவி சேனலுக்குப் பேசி கப்ஸி ரமாவையே அழவெச்சவ நீ! இந்த டைரக்டர் உன்கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடுபடப் போறானோ...?ன்னு மெதுவா முனகறான். அது வாசனோட பாம்புக் காதுல சரியாப் போய் விழுந்துடறது. ‘‘அத்திம்பேர்... அது என்ன சமாச்சாரம்? நேக்குத் தெரியாதே. எங்கக்கா எப்படி கப்ஸி ரமாவை அழவெச்சான்னு சொல்லுங்கோ முதல்ல...
ன்னு தொணப்ப ஆரம்பிக்கறான். அடுத்தாத்து வம்புன்னா மட்டுமில்ல... சொந்த ஆத்துல வம்புன்னாலும் அத்தனை இன்ட்ரஸ்ட் அவனுக்கு...! இப்ப என்ன பண்றதுன்னு புரியாம சரிதாவ பரிதாபமாப் பாக்கறான் நம்மாளு.
அவனோட பார்வையப் பார்த்ததும், ‘‘ஹும்...! நீங்க ஆரம்பிச்சாச்சு. அவன் சின்னப் புள்ளைலருந்தே அடம் புடிச்சா சாதிக்காம விடமாட்டான். அப்புறமென்ன... சொல்லித் தொலையுங்கோ..."ன்னு சலிப்பாத்தானே சொல்றா. நம்மாளு மனசுக்குள்ள தானே சிரிச்சுண்டு, மேலுக்கு சாதுவா முகத்தை வெச்சண்டு வாசன்கிட்ட அந்தக் கதையச் சொல்றான். ‘‘அதையேண்டா கேக்கற... பதினஞ்சு வருஷத்துக்கு முன்னால ‘கப்ஸி உங்கள் சாய்ஸ்’ன்னு ஒரு ப்ரொகிராம் ரொம்பவே ஃபேமஸ்!