Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Suzhal
Suzhal
Suzhal
Ebook134 pages46 minutes

Suzhal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நகரின் மிகப் பெரிய மருத்துவமனையின் உரிமையாளரான டாக்டர் சாந்தாமணி, தன்னிடம் பிரசவத்திற்காக வரும் பெண்களில் பலருக்கு, சுகப் பிரசவம் ஆக விடாமல், வேண்டுமென்றே சிசேரியன் செய்து அதிகப் பணம் பறிக்கிறார். ஏழைகளையும் கசக்கிப் பிழிகிறார்.
மேட்டுப்பாளையத்தில், பவானி ஆற்றங்கரையில், தனது மகளின் பிரசவ செலவிற்கு பணமில்லாத காரணத்தால் வீராச்சாமி என்பவன், “ஆளிழுக்கும் வேலை”யைச் செய்கிறான்.
“ஆளிழுக்கும் வேலை” என்றால் ஆற்றில் விளையாடிக் கொண்டிருக்கும் அப்பாவிகளில் ஒருவரை, நீருக்கடியில் மறைந்து வந்து, அவர்களது காலைப் பிடித்து இழுத்து, ஆழத்தில் கொண்டு சென்று, ஒரு பாறையில் செருகி வைத்து விட்டு வருவது. பின்னர் அதே பிணத்தை எடுக்க அந்த அப்பாவியின் குடும்பத்தாரின் பேரம் பேசி பணம் பறிப்பது.
வீராச்சாமியின் அன்றைய தினப்பலியாக டாக்டர் சாந்தாமணியின் மகன் பிரவீன் சிக்குகிறான்.
“வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்” என்னும் கருத்தினை உறுதிப்படுத்தும் அருமையான கதை.
Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580130005255
Suzhal

Read more from Mukil Dinakaran

Related to Suzhal

Related ebooks

Reviews for Suzhal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Suzhal - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    சுழல்

    Suzhal

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    குடிசைக்கு வெளியே குத்துக்காலிட்டு அமர்ந்து, தீர்ந்து போன பீடியை விடாமல் உறிஞ்சிக் கொண்டிருந்தான் வீராச்சாமி. ஏற்கனவே ஒட்டிப் போயிருந்த அவன் கன்னங்கள் அந்த உறிஞ்சலில் மேலும் குழியாகி அவன் முகத்திற்கு ஒரு வித விகாரத் தோற்றத்தை ஏற்படுத்தின. வறுமை அவன் நெஞ்செலும்பில் தெரிய, பட்டினி அவன் ஒட்டிய வயிற்றில் தெரிந்தது.

    தெருவில் சுழன்றடித்த காற்று புழுதியை வாரிக் கொண்டு வந்து அவன் முகத்தில் எறிய, கண்களை மூடிக் கொண்டு, த்தூ...த்தூ என்று துப்பினான். என்ன கருமம் இது?... காத்து இப்படி மண்ணைத் தூத்தியடிக்குது?

    குடிசைக்குள் அவன் மனைவி வேலாயி, தனக்குத் தெரிந்த அத்தனை வசை வார்த்தைகளையும் உபயோகித்து அவனை நார் நாராகக் கிழித்துக் கொண்டிருந்தாள்.

    ஒரு ஆம்பளை...இப்படி பகல் நேரத்துல வூட்டுல உட்கார்ந்திருந்தா...குடும்ப வண்டி எப்படி ஓடும்?... வெட்டு...வெடுக்குன்னு வெள்ளென எழுந்து....கிளம்பிப் போயி கிடைக்கற வேலையைச் செஞ்சு...அஞ்சும்...பத்துக் கொண்டாந்து குடுத்தாத்தானே வூட்டுல அடுப்பெரியும்?... அதை விட்டுட்டு இப்படி பீடிய வலிச்சுக்கிட்டிருந்தா...வூட்டுல இருக்கறவங்க வயிறுதான் எரியும்

    அதைச் சற்றும் பொருட்படுத்தாமல், கண்களைத் துடைத்துக் கொண்டு, மேலே வெகு உயரத்தில் சென்று கொண்டிருந்த ஒரு ஜெட் விமானத்தைப் பார்த்தான் வீராச்சாமி.

    பெத்த மக தலைப்பிரசவத்துக்கு வந்து...ஊட்டோட இருக்கா!..எந்த நேரத்திலும் அவ பிரசவ வலி வந்து துடிக்கப் போறா!...வூட்ல சல்லிக் காசு இல்லை!....அட சோத்துக்குத்தான் சம்பாதிக்கத் துப்பில்லை...அவளோட பிரசவ செலவுக்காவது சம்பாதிக்கலாமல்ல? வேலாயி வாய் ஓயாமல் கத்திக் கொண்டிருந்தாள்.

    அப்போது அந்த வழியே போன வீராச்சாமியின் பழைய சிநேகிதன் குடிசைக்குள் கையைக் காட்டி, என்ன?... சத்தம்? என்று கேட்க,

    ஒண்ணுமில்லைப்பா...உள்ளார எனக்குத்தான் அர்ச்சனை நடக்குது என்றான் வீராச்சாமி புன்னகைத்தவாறே.

    என்னவாம் கொறை உன் சம்சாரத்துக்கு? சன்னக் குரலில் கேட்டான் நண்பன்.

    வேறென்ன இருக்கப் போவுது?... .காசு பத்தாக்குறைதான்! என்றான் வீராச்சாமி.

    ஏன் பரிசல் ஓட்டப் போவலையா நீ?

    அட அந்த வயித்தெரிச்சலை ஏய்யா கேட்கறே?... இப்பெல்லாம் டூரிஸ்ட் வர்ற எவனுமே பரிசல் ஏற வர்றதில்லை!... பரிசல்ல ரவுண்டடிக்கற சுகத்தை விட...சும்மா தண்ணில குதியாட்டம் போட்டுக்கிட்டு....கரைல வெச்சு கறி மீன் சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு...கொஞ்சமா போதையை ஏத்திக்கறதைத் தான் விரும்பறாங்க!..அதனால பரிசல் தொழிலே கவுந்திடுச்சு தன் சோக கதையைச் சொன்னான் வீராச்சாமி.

    வாஸ்தவம்தான்!...அதுக்காக உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்துக்கிட்டு பீடியை ஊதிக்கிட்டிருந்தா பொழப்பு நடக்குமா?... நம்மை நம்பி இருக்கற பொண்டாட்டி புள்ளைங்களுக்கு நாமதானே எதையாவது செஞ்சு சம்பாரிச்சிட்டு வந்து தரணும்! சட்டென்று அந்த நண்பன் உரத்தகுரலி பேச,

    தனக்கு ஆதரவாகப் பேசுவான் தன் பால்ய நண்பன் என்று நம்பியிருந்த வீராச்சாமி அவன் அடித்த திடீர் பல்டியில் கோபமானான்.

    த பாரு...அதான் நீ வந்த வழி...அப்படியே வந்த வழியிலேயே போயிடு!...இல்லை...என்று விழிகளைப் பெரிதாக்கி, ஆட்காட்டி விரலைக் காட்டி அவனை எச்சரித்தான்.

    வீராச்சாமி ஆள்தான் ஒல்லி, ஆனாலும் சரியான முரட்டாள்...பேசிக்கிட்டிருக்கும் போதே கொஞ்சமும் யோசிக்காமல் பொசுக்கென்று கையை நீட்டுவான்!..என்பது தெரிந்திருந்த காரணத்தால் அந்த பால்ய நண்பன் பவ்யமாய் நகர்ந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டான்.

    அவன் சென்ற சில நிமிடங்களில் வெளியே வந்த வேலாயி, வந்திட்டுப் போன உன் கூட்டாளி என்ன சொல்லிட்டுப் போனான் கேட்டியா?... நம்மை நம்பி இருக்கற பொண்டாட்டி புள்ளைங்களுக்கு நாமதானே எதையாவது செஞ்சு சம்பாரிச்சிட்டு வந்து தரணும்!ன்னு சொன்னானல்ல?... எங்க பேச்சைத்தான் கேட்கறதில்லை!ன்னு தீர்மானம் பண்ணி வெச்சிருக்கே!...அந்த மனுஷன் உன் கூட்டாளிதானே?... அவன் சொல்றதையாவது கேட்டு...அது மாதிரிச் செய்! என்றாள்.

    ஏண்டி வேலாயி?... நான் என்ன பரிசல் ஓட்ட மாட்டேன்னா சொல்றேன்?... .எவனும் பரிசல்ல வந்து ஏற மாட்டேங்கறானுகளே...நான் என்ன செய்ய?... நானும் காலையிலிருந்து சாயந்திரம் வரைக்கும் கரைல கத்துக் கெடக்கறேன்...ஒருத்தன் கூட வர மாட்டேங்கறான்! தன் நிலைமையை பரிதாபமாய்ச் சொன்னான் வீராசாமி.

    அவன் சொல்வதில் இருந்த யதார்த்த உண்மையைப் புரிந்து கொண்ட வேலாயி, சரி...அந்தப் பரிசலைத் தூக்கிப் போட்டுட்டு...நான் சொன்ன அந்த வேலையைச் செய்!...அதை விட்டா இப்போதைக்கு நமக்கு வேற வழியில்லை!...என்றாள். அதைச் சொல்லும் போது அவள் முகத்தில் ஒரு குரூரம் தெரிந்தது.

    அந்த வேலைன்னா...எந்த வேலை?" நெற்றியைச் சுருக்கிக் கொண்டு கேட்டான் வீராச்சாமி,

    ம்ம்ம்..என்று உறுமியவள், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, வீராச்சாமியின் காதருகே வந்து, ஆள் இழுக்கற வேலையைச் செய்!...அப்பத்தான் பெரிசா காசு பார்க்க முடியும்" என்றாள் கிசுகிசு குரலில்.

    விருட்டென்று எழுந்த வீராச்சாமி, அய்ய...அதுக்கு வேற ஆளைப் பாரு!...அந்த வேலையெல்லாம் மனசாட்சின்னு ஒண்ணு இல்லாதவன் செய்யற வேலை!... என்று சொல்லி விட்டு நகரப் போக,

    தனது கனத்த நிறை மாத வயிற்றைத் தூக்கிக் கொண்டு, வேக வேகமாக வந்து குறுக்கே நின்றாள் அவர் மகள் சுந்தரி. எப்பா...உனக்கு சுய புத்தி கிடையாது...அயல் புத்தியும் கிடையாது!...அதான் அம்மா சொல்றாள் அல்ல?... அதைச் செய்ய வேண்டியதுதானே?... மனசாட்சியாம்...மனசாட்சி...இந்தக் காலத்துல அதையெல்லாம் பார்த்தா மனுஷன் பொழைக்க முடியாது!...மனசாட்சியைத் தூக்கிப் பரண் மேலே போட்டவன்தான் இன்னிக்கு வசதியா பொழைக்கறான் என்றாள்.

    ஏய்...உனக்குமா புத்தி கெட்டுப் போச்சு?... ஆள் இழுக்கற வேலைன்னா என்ன?ன்னு தெரியுமா உனக்கு?... அது தெரிஞ்சா நீயே வேண்டாம்னு சொல்லிடுவே! வீராச்சாமி மகளின் முகத்துக்கு எதிரே ஆட்காட்டி விரலை நீட்டிச் சொல்ல,

    சரி...அப்படின்னா என்ன?ன்னு நீயாவது சொல்லு சுந்தரி திருப்பிக் கேட்டாள்.

    "அதாவது...ஆத்துத் தண்ணில விளையாடிட்டு இருக்கற பசங்கள்ல ஏமாந்த சோணகிரியா இருக்கற ஒரு பையனைக் கண்ணு வெச்சு!...தண்ணிக்கு அடில உள் நீச்சம் போட்டுட்டுப் போய்...அந்தப் பையனோட காலைப் பிடிச்சு இழுத்து...தண்ணியோட ஆழத்துக்குக் கொண்டு போய்...அங்கிருக்கற

    Enjoying the preview?
    Page 1 of 1