Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mannithu Vidu... Magane...!
Mannithu Vidu... Magane...!
Mannithu Vidu... Magane...!
Ebook135 pages51 minutes

Mannithu Vidu... Magane...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அரசு மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனைப் பிரிவில் பணி புரிபவர் அருணகிரி. சவங்களை அறுத்து பிரேதப் பரிசோதனையை டாக்டர்கள் முடித்து விட்டுச் சென்றதும், அவர்கள் வெளியே எடுத்துப் போட்ட உடலின் பாகங்களை மீண்டும் உடலுக்குள் திணித்து தையல் போடும் பணி அருணகிரிக்கு. ஒவ்வொரு முறை அந்தப் பணியை செய்யும் போதும் கூறு போடப்பட்டுக் கிடக்கும் அந்த மனித ஜீவனுக்காக கண்ணீர் சிந்துவார் அருணகிரி.

உடன் பணிபுரியும் ஆறுமுகம் அருணகிரியின் அந்தச் செயலுக்காக அவரைக் கிண்டல் செய்வான்.

இளம் வயதிலேயே மனைவியை இழந்தவரான அருணகிரி மறுமணம் செய்து கொள்ளாமல், தன் மகன் பெருமாளுக்காக தனி மரமாகவே வாழ்ந்தார். தாயில்லாப் பிள்ளை என்ற காரணத்திற்காக அவன் மீது தன் உயிரையே வைத்திருந்தார் அவர். அதே நேரம், தன் மகன் பெருமாளை அதிக செல்லம் கொடுத்து வளர்க்க அவன் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகிறான்.

ஒரு முறை, நகரில் சிறுமியொருத்தியைக் கற்பழித்த பெருமாளை காவல்துறை என்கௌண்டர் செய்து விட, அவனுடைய பிரேதப் பரிசோதனை முடிந்த பின் வழக்கம் போல் உள்ளே செல்கிறார் அருணகிரி…

அடுத்து நடந்தது என்ன?

அது நாவலுக்குள் உள்ள ரகசியம்….வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580130006338
Mannithu Vidu... Magane...!

Read more from Mukil Dinakaran

Related to Mannithu Vidu... Magane...!

Related ebooks

Reviews for Mannithu Vidu... Magane...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mannithu Vidu... Magane...! - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    மன்னித்து விடு... மகனே!...

    Mannithu Vidu... Magane!...

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    அந்த அரசு மருத்துவமனை மதிய நேரத்திலும் பரபரப்பாய் காணப்பட்டது. அடித்துக் கொண்டிருந்த சுரீர் வெயிலுக்கு யாரும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. எல்லோரும் ஏதோ நிலவொளியில் உலவுவது போல் அந்த வெயிலிலும் நடமாடிக் கொண்டிருந்தனர். அந்த ஏரியா காற்றில் மருந்து வாடை நிரந்தரமாய்க் கலந்திருக்க, அதனூடே லேசாய் ரத்தக் கவுச்சி வாடை இருப்பதை ஒரு சிலர் மட்டுமே உணர்ந்து முகத்தைச் சுளித்துக் கொண்டு உலவினர். மருத்துவமனையின் சீனியரோ சீனியர் டாக்டரிலிருந்து அடிமட்ட சிப்பந்தி வரை கல்லா கட்ட ஆரம்பித்திருந்தனர்.

    ஆட்டோக்காரர்கள் எதிர்ப்படும் எல்லோரிடத்திலும், ஆட்டோவா சார்? என்று எந்திரத்தனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தனர். சிலர் அவர்களைக் கண்டு கொள்ளாமலே செல்ல, சிலர் மட்டும் வேண்டாம்ப்பா என்று சொல்லி விட்டுச் சென்றனர்.

    யாரோ ஒரு கட்சித் தொண்டன் சாலை விபத்தில் ஏகமாய் அடிபட்டு வந்திருக்க, மருத்துவமனைக்கு உள்ளே இருக்கும் எல்லா மரத்தினடியிலும் கரை வேட்டிக்காரர்கள் நிறைந்திருந்தனர். அவர்கள் பேச்சில் உள்ளூர் அரசியல் தொடங்கி... உலக அரசியல் வரை எல்லாமும் அலசப்பட்டுக் கொண்டிருந்தது.

    அவசர சிகிச்சைப் பிரிவில் அட்மிட் ஆகியிருந்த அந்த நபரை தன் செல்வாக்கின் மூலம் உள்ளே சென்று பார்த்து விட்டு வெளியே வந்த கட்சியின் ஒல்லியான மாவட்டத் தலைவரை தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு விசாரித்தனர்.

    தோழரின் நிலைமை கொஞ்சம் மிகவும் சிக்கலாய்த்தான் இருக்கும் போலிருக்கு!... மருத்துவர்களும் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது! என்று கையை விரித்து விட்டார்கள்!... நாம் எல்லோரும் அந்த தோழருக்காக பிரார்த்திப்போம்!... நம்மால் முடிந்தது அது மட்டுமே! என்றபடி தலைவர் நகர,

    பார்ப்பதற்கு பரதேசி போலிருந்த ஒரு பெரியவர் எங்கிருந்தோ ஓடி வந்து, அந்த தலைவரின் கையைப் பற்றிக் கொண்டு கதற, நெற்றியைச் சுருக்கிக் கொண்டு எல்லோரையும் பார்த்தார் தலைவர். அந்தப் பெரியவரின் உடம்பிலிருந்து வீசிய அசூசையான வாடை தலைவருக்கு குமட்டலைத் தந்தது. யோவ்... யாருய்யா இந்த ஆளு? என்று கண் ஜாடையில் தலைவர் கேட்க,

    தலைவரே... உள்ளே அடிபட்டுக் கிடக்கற நம்ம சாரங்கனோட அப்பா என்று ஒரு அடிமைத் தொண்டன் எடுத்துக் கொடுத்தான். அடுத்த விநாடியே தன் நடிப்பை ஆரம்பித்தார் தலைவர்,

    சட்டென்று அந்தப் பெரியவரை இறுக்கி அணைத்துக் கொண்டு, கவலைப்படாதீங்க பெரியவரே... உங்க மகனுக்கு ஒண்ணும் ஆகாது!... ஆண்டவன் நல்லவங்களைக் கை விட மாட்டேன்!... அவன் எங்க கட்சிக்கும் கிடைத்த சொத்து!... அவனை நாங்கள் இழக்க மாட்டோம்! என்றார் ஆஸ்கார் நடிப்புடன்.

    அய்யா... என் மொத்தக் குடும்பமும் அவனை மட்டும்தான் நம்பி இருக்கு!... அவனுக்கு ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடுச்சுன்னா நானும் என் மனைவியும்... எங்களோட ரெண்டு பொட்டைப் புள்ளைகளும் அனாதைகளாகி நடுத் தெருவுக்கு வந்திடுவோம் அய்யா அழுது கொண்டே சொன்னார் பெரியவர்.

    அய்யய்ய... அப்படியெல்லாம் எதுவும் ஆகாது!... நான் கட்சியின் மேலிடத்துக்குப் பேசியிருக்கேன்!... மருத்துவச் செலவுக்கு நிதி உதவி குடுக்கச் சொல்லிக் கேட்டிருக்கேன்!... கண்டிப்பா வந்திடும்... பயப்படாதீங்க!... உங்க பொண்ணுகளுக்கும் அரசாங்க வேலைக்கு ஏற்பாடு பண்றேன்! என்று ஒரு அக்மார்க் பொய்யை அழகாய்ச் சொன்னார் தலைவர்.

    ஆனால் அவரது அந்தப் பொய்யை அப்படியே நம்பிய தொண்டர் கூட்டம், ஹோ...வென்று கத்தி தங்கள் நன்றியை வெளிப்படுத்தியது. செம்மறியாட்டுக் கூட்டத்திற்குத்தான் சுய அறிவும் கிடையாது, கேள்வி ஞானமும் கிடையாதே?

    தன்னுடன் எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும் கைத்தடி போன்றவனை அருகில் அழைத்து, என்னோட அடுத்த புரோக்ராம் என்ன? என்று கிசுகிசுப்பாய்க் கேட்ட தலைவர், அவன் பதில் சொல்ல வாயெடுக்கும் முன், தானே முந்திக் கொண்டு, ஓ... ஏழைக் குழந்தைகளுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி இருக்கல்ல? என்றார்.

    அந்தக் கைத்தடி ஆமாம் என்று சொல்லவும் முடியாமல், இல்லை என்று சொல்லவும் இயலாமல், தெரியாது என்று சொல்லவும் தெரியாமல், ஹு... ஹி... ஹி... என்று திணற,

    அப்ப... நான் அங்க போய் அந்த நிகழ்ச்சியைச் சீக்கிரம் முடிச்சிட்டு உடனே புறப்பட்டு இங்க வந்திடறேன்!... அது வரைக்கும் நீங்கெல்லாம் இங்கியே இருந்து நம்ம தம்பியைக் கவனிச்சுக்கங்க!... என்று சொல்லி விட்டுக் கிளம்பிய தலைவரை அந்த சாரங்கனின் தந்தை பரிதாபமாய்ப் பார்க்க, அய்யா..உங்க மகனை இந்த நிலையில் விட்டுட்டுப் போக எனக்கு மனசே இல்லை... நான் அங்கே போனாலும் என் மனசு முழுவதும் இங்கேயேதான் இருக்கும்!... ஆனா அங்கே நூற்றுக்கணக்கான பள்ளிக் குழந்தைகள் காத்திட்டிருக்காங்க!... நான் போகலைன்னா... அந்த ஃபங்ஷனே கேன்சல் ஆகி... அந்தக் குழந்தைகள் ஏமாந்து போயிடுவாங்க!... அதான்... உருக்கமாய்ச் சொன்னார் தலைவர்.

    பரவாயில்லைங்க தலைவரே... நீங்க போயிட்டு வாங்க... நாங்க பார்த்துக்கறோம்!... அந்த உத்தம வில்லனை, உத்தம புத்திரனாய் எண்ணி வழியனுப்பி வைத்தது செம்மறியாட்டுக் கூட்டம்.

    அப்போது தலைவரின் மொபைல் ஒலிக்க, எடுத்துப் பார்த்தார். மகளிரணித் தலைவி மல்லிகா லைனில் இருந்தாள். ம்ம்... சொல்லுங்க என்றார் இணைப்பிற்குள் புகுந்து. அப்போது அவர் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்.

    நான் ஹோட்டல் ரிசப்ஷன்ல எத்தனை நேரமா வெய்ட் பண்றது?... நீங்க வர்றீங்களா... இல்லை நான் கிளம்பட்டுமா?... போறவன் வர்றவனெல்லாம் மொறைச்சு மொறைச்சுப் பார்த்திட்டுப் போறானுக! மல்லிகா கொதித்தாள்.

    இதோ இப்பக் கிளம்பிட்டேன்! என்று சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்தவர், அந்த ஸ்கூலிலிருந்துதான் கூப்பிடுகிறார்கள்... குழந்தைகள் வெய்ட் பண்ணிட்டிருக்காங்களாம் கூசாம்ல் பொய்யைச் சொல்லி விட்டு வேக வேகமாய் காரை நோக்கி ஓடினார் தலைவர்.

    அவர் பின்னாடியே நாய்க்குட்டியைப் போல் ஓடினான் அந்தக் கைத்தடி.

    கார்க் கதவைத் திறந்தவர், திடீரென ஞாபகம் வந்தது போல், சீனியர் தொண்டன் ஒருவனை அருகில் அழைத்து, பக்கத்துல ஏதாவது கடையிருந்தா போய் கருப்பு ரிப்பன் வாங்கி... துண்டு துண்டா கட் பண்ணித் தயாராய் வைங்க!... பொசுக்குன்னு அவன் புட்டுக்கிட்டான்னா... எல்லோரும் சட்டையில் குத்திக்க வேணுமல்லவா? என்றார்.

    சரிங்க தலைவரே! என்றான் அந்த அடிமை.

    அதே மாதிரி... கட்சிப் பேர் போட்டு..கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் அடிக்கக் குடுத்திடுங்க சொல்லியவாறே காரில் ஏறிப் பறந்தார் மாவட்டத் தலைவர்.

    தீர்க்கதரிசியான அந்த மாவட்டத் தலைவர் சொன்னது போலவே, அடுத்த அரை மணி நேரத்தில் அந்த அமங்கலச் செய்தி ஆஸ்பத்திரி வளாகம் எங்கும் எதிரொலித்தது.

    "சாரங்கன்

    Enjoying the preview?
    Page 1 of 1