Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaanathil Kolamittu and Punitha Oru Puthir
Vaanathil Kolamittu and Punitha Oru Puthir
Vaanathil Kolamittu and Punitha Oru Puthir
Ebook263 pages1 hour

Vaanathil Kolamittu and Punitha Oru Puthir

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Vaanathil Kolamittu and Punitha Oru Puthir

Read more from Rajeshkumar

Related to Vaanathil Kolamittu and Punitha Oru Puthir

Related ebooks

Related categories

Reviews for Vaanathil Kolamittu and Punitha Oru Puthir

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaanathil Kolamittu and Punitha Oru Puthir - Rajeshkumar

    19

    1

    மூளை மட்டும் ஏன் சோர்வு அடைவதில்லை?

    - ஷண்முகம் பாலமுருகன், விருத்தாசலம்.

    மின்சாரம் ஏன் சோர்வடைவதில்லை?! அதே மாதிரிதான். (உடல் சோர்வாக இருந்தாலும், மூளை விறுவிறுவென்று வேலை செய்வதைத்தான் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்!) கார்டெக்ஸ் என்னும் மூளையின் மேல் பகுதியில் மட்டுமே ஆயிரம் கோடடி நரம்பு செல்கள் உண்டு. அவற்றை இணைக்கும் ‘ரோடுகளின்’ (Fibres) மொத்த நீளம் (ஒரு சதுர அங்குலப் பகுதியில் மட்டும்) 10,000 மைல்கள்! பயங்கர நெட்ஒர்க் அது! ஆகவே, அசாத்தியமான அறிவாளியால்கூட மூளையைச் சோர்வடைய வைக்க முடியாது! (உடலைச் சோர்வடைய வைக்கும் நோய்கள் மூளையில் உருவாகலாம் என்பது வேறு விஷயம்!)

    - (ஹாய் மதன் -- ஆனந்தவிகடன்).

    சாம்பல் நிற வேன் அந்த காப்பகத்தினுள் நுழைந்தது. அதன் உடம்பில் நீளமான துணி பேனர். அதில் ஆயில் பெயிண்ட்டால் தீட்டப்பட்ட எழுத்துக்கள் பளிச்சிட்டன.

    ‘ஜனப் பிரியா வார இதழ் மற்றும் ரங்காச்சாரி ட்ரஸ்ட் சேவைக் குழு.’

    வேன் போர்ட்டிகோ ஓரமாய்ச் சென்று இயக்கத்தை உதறிக் கொண்டு நின்றது.

    கதவுகள் விரிய வார இதழ் நிருபர் கலைதாசன், நிருபர் சுமி, பிறகு ரங்காச்சாரி ட்ரஸ்ட்டின் உறுப்பினர்கள் ஒன்றிரண்டு பேர்.

    காப்பக சிப்பந்தி ஒருவர் வேகமாய் வந்து அவர்களை வரவேற்றார்.

    வாங்க...

    டாக்டர் சரஸ்வதி வந்துட்டாங்களா..? கேட்டுக் கொண்டே கலைதாசன் அவர் பின்னால் நடந்தார்.

    அவர் தலையசைத்தார்.

    அவங்க அப்பவே வந்துட்டாங்க...

    குறுகலான வராந்தா முடிவில் ஆபீஸ் அறை தெரிந்தது. உள்ளே நுழைய டாக்டர் சரஸ்வதியும் காப்பக அமைப்பாளர் ரேவதி நாராயணனும் இருந்தார்கள்.

    ரேவதி நாராயணன் பரபரப்பாய் அவர்களை வரவேற்றாள். இருக்கைகளைக் காட்டினாள்.

    உட்காருங்க.

    சிப்பந்தி எக்ஸ்ட்ரா நாற்காலிகளைக் கொண்டு வந்து போட்டார்.

    அவர்கள் உட்கார்ந்த பின் சரஸ்வதியை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

    இவர்தான் காப்பக டாக்டர்...

    சரஸ்வதி கை கூப்பிப் புன்னகைத்தாள்.

    நான் ஜனப்பிரியாவின் ரெகுலர் வாசகி... அதுல வர்ற ஆர்ட்டிக்கிள்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும்... குறிப்பாக சுமிங்கற பேரில் வரும் கவரேஜைச் சொல்லணும்...

    கலைதாசன் அவளைக் காட்டினார்.

    இவள்தான் சுமி...

    ஓ... சுமி இத்தனை சின்னப் பொண்ணா...? ஆர்ட்டிக்கிள்ஸ் ரொம்ப மெச்சூரிட்டியா இருக்கு...

    தேங்க்ஸ் டாக்டர்... என்றாள் சுமி.

    சரஸ்வதி தொடர்ந்து சொன்னாள்.

    உங்க பத்திரிகையைப் பொழுது போக்கு புத்தகம்னுதான் எல்லாருமே சொல்றாங்க. ஆனா நான் அப்படிச் சொல்ல மாட்டேன்... பொழுது போக்குங்கற இனிப்பைத் தடவி எத்தனையோ நல்ல காரியங்களை ஓசைப்படாம செஞ்சிட்டு வர்றீங்க... உதாரணமா இப்ப நீங்க ரங்காச்சாரி ட்ரஸ்ட்டோட இணைஞ்சு செய்யத் துவங்கி இருக்கும் இந்த சமூக சேவையைச் சொல்லலாம்.

    உங்க பாராட்டு அத்தனையுமே எங்க எடிட்டரைப் போய்ச் சேரணும் டாக்டர்... ஏன்னா பத்திரிகையின் ஒவ்வொரு அசைவையும் தீர்மானிக்கிறவர் அவர்தான்... என்று சொல்லிப் புன்னகைத்தாள் சுமி.

    நாம இப்போ வந்த வேலையைப் பார்க்கலாமா? என்றார் ட்ரஸ்ட்டைச் சேர்ந்த நபர் ஒருவர்.

    கலைதாசன் தலையசைத்துவிட்டு சரஸ்வதியைப் பார்த்துக் கேட்டார்.

    டாக்டர்... நாங்க சொன்னபடி இந்த இல்லத்தில் இருக்கிற மனநலம் குன்றிய பெண்களில் ட்ரீட்மெண்ட் தந்தா குணப்படுத்த முடியுங்கற கேஸ்களைக் குறிச்சு வெச்சீங்களா?

    எஸ். அந்த மாதிரி கேஸ்களை நோட் பண்ணி வெச்சிருக்கேன்.

    மொத்தம் எத்தனை பெண்கள்...?

    நாலு பேர் தேறுவாங்க.

    அவங்களை வரிசையா நாங்க பார்க்கலாமா?

    ஷ்யூர்...

    தலையசைத்த சரஸ்வதி, ரேவதி நாராயணனைப் பார்க்க, அவள் இருக்கையை விட்டு எழுந்தாள்.

    வாங்க போவோம்...

    அந்த அறையினின்றும் வெளியேறி வராந்தாவுக்கு வந்தார்கள்.

    நடக்க நடக்க ரேவதி நாராயணன் கேட்டாள்.

    உங்க சமூக சேவைக் குழு மூலமாக சிகிச்சை அளிக்க எங்க இல்லத்திலிருந்து மட்டும்தான் பேஷண்ட்ஸை தேர்ந்தெடுக்கப் போறீங்களா?

    இல்லை... முதல் கட்டமா பத்துப் பெண்களை செலக்ட் பண்ணி ஃபாரின் டாக்டர்களை வரவழைச்சு சிகிச்சை தரப்போறோம்... சிகிச்சை தந்தா குணமாகற நிலைமையில் உங்க இல்லத்தில் பத்துப் பேர் இல்லையே... அதனால் வேற சேவாசிரமங்களிலிருந்தும் பெண்களை எங்கள் சேவைக்கு எடுத்துக்கப் போறோம்.

    பெண்கள் மட்டும்தானா?

    எஸ்...

    என்ன காரணம்...?

    இவங்களைப் பத்தி கவர் ஸ்டோரியும் வெளியிடப் போறோம்... இந்த ஆணாதிக்க சமுதாயத்தால பெண்கள் எப்படியெல்லாம் பந்தாடப்பட்டு கடைசியில் மன நிலை பாதிக்கிற அளவுக்குப் போறாங்கன்னு அந்த கவர்ஸ்டோரி மூலமாக ஜனங்க வெட்ட வெளிச்சமாத் தெரிஞ்சிப்பாங்க. பெண் சுதந்திரம் கிடைச்சாச்சு. ஆணுக்குச் சமமா பெண்கள் எல்லாத் துறையிலும் மேல வந்துட்டாங்கன்னு நாம பெருமையா சொல்லிக்கிறது எவ்வளவு தூரம் உண்மைன்னு அந்த கவர் ஸ்டோரி கண்ணாடி மாதிரி சொல்லிடும்...

    கலைதாசன் சொல்லி முடித்தபோது வராந்தா எல்லையில் இருந்த ஹாலைத் தொட்டிருந்தார்கள்.

    அங்கிருந்த சின்னச் சின்ன அறைகளில் மனநலம் குன்றிய பெண்கள், காப்பகத்தின் சாம்பல் நிறச் சீருடை அணிந்து தெரிந்தார்கள். இரண்டாவது அறையின் கதவைத் திறந்தாள் ரேவதி நாராயணன்.

    உள்ளே சுவர் மூலையில் உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்திருந்தாள் அந்தப் பெண்.

    பளிச்சென்று அழகான முகம்.

    இவ பேர் வைஷ்ணவி... இவ இந்த காப்பகத்தில் சேர்க்கப்பட்டு ஆறு மாசங்களாச்சு... கொஞ்சம் தீவிரமான ட்ரீட்மெண்ட் தந்தா இவளைக் குணப்படுத்த முடியும்ன்னு டாக்டர் சொல்றாங்க...

    பெரிய இடத்துப் பொண்ணு மாதிரி தெரியறாளே?

    ஆமா... இவளோட அப்பா பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்ட். வெல் டு டூ... ஆனா பாவம்... இவளோட வாழ்க்கையைப் பணத்தால காப்பாத்த முடியலை...

    இவளுக்கு மெண்ட்டல் டிப்ரஸன் ஏற்படக் காரணம் என்ன...?

    ஒரு பெண்ணோட மனசு பாதிக்கப்பட பெரும்பாலும் ஆண்களின் அயோக்கியத்தனம்தான் காரணமா இருக்கும்... இவளோட கேசும் அப்படித்தான்...

    இவளோட மனசைக் காயப்படுத்தின ஆண் யாரு?

    ஆர்வமாய்க் கேட்டாள் சுமி.

    ரேவதி நாராயணன் தன் கையிலிருந்த ஃபைலை நீட்டினாள்.

    இதில் இவளோட திகைப்பூட்டும் ஹிஸ்ட்ரி இருக்கு. படிச்சுப் பாருங்க...

    சுமி அந்த ஃபைலை வாங்கினாள்.

    கலைதாசன் ஆர்வமாய் எட்டிப் பார்த்தார்.

    சுமியின் கைகள் ஃபைல் பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தன.

    2

    கூட்டணிக்கு ஒரு விளக்கம் சொல்லுங்களேன்?

    இலக்கியத்துல அணின்னா அழகு சேர்க்கறது. அரசியல்ல இன்னைக்கு வேற மாதிரி ஆகிப்போச்சு. நாங்க வச்சிருக்கிற கூட்டணி மக்களுக்கான கூட்டணிங்கறதால மக்கள் கூட்டணி. மற்ற கூட்டணியெல்லாம் தலைவர்களுக்கானதுங்கறதால அது மக்களுக்கு எதிரான கூட்டணி.

    - (ஒரு பேட்டியில் தொல். திருமாவளவன்).

    வைஷ்ணவியும், திலகாவும் லக்ஷ்மி காம்ப்ளக்ஸின் இரண்டாம் தளத்தில் இருந்தார்கள்.

    அந்த பொட்டி ஷாப்பிலிருந்து கை நிறைய ப்ளாஸ்டிக் கேரி பேக்குகளை சுமந்தபடி வெளிப்பட்டார்கள்.

    திலகா சிரித்தாள்.

    சாமி! இனிமே எந்த ஜென்மத்திலும் உன்கூட ஷாப்பிங் வரமாட்டேன்...

    ஏண்டி...?

    நான் பார்த்து இழுத்துட்டு வரலைன்னா இன்னமும் நீ கடையை விட்டு வெளியே வரமாட்டே... நாம இந்த காம்ப்ளக்சுக்குள்ளே நுழைஞ்சு சரியா ஆறு மணி நேரம் ஆச்சு...

    வெல்... ஆறு மணி நேரம் போனதே தெரியலை இல்லே...? நான் ஷாப்பிங் வந்ததே டைம் பாஸிங்காகத்தான். பர்ப்பஸ் ஸால்வ்...

    அடிப்பாவி... டைம் பாஸ் பண்ண நீ தரும் விலை அஞ்சாயிரம் ரூபாயா...?

    ஏண்டி இப்படி வாயைப் பிளக்கறே...?

    உன்னை மாதிரி ஆட்களை நம்பித்தான் லட்சக்கணக்கா பணத்தைக் கொட்டி ஜிகுஜிகுன்னு லைட்டைப் போட்டு இத்தனை பெரிய கடைகளைத் திறந்து வெச்சிருக்காங்க...

    கார் டிரைவர் அவளைப் பார்த்துவிட்டு ஓடி வந்தார்.

    பார்சல்களை வாங்கிக் கொண்டார்.

    முன் சீட்டில் அவற்றைப் போட்டுவிட்டு பின் பக்கக் கதவைத் திறந்துவிட்டார்.

    திலகா உள்ளே அமர அவளைத் தொடர்ந்து வைஷ்ணவி காருக்குள் நிரம்பினாள்.

    நிரம்பிக் கொண்டே காம்ப்ளக்ஸின் இடப்புறம் பார்வையைத் திருப்பினவள்,

    டிரைவர்! காரை ஸ்டார்ட் பண்ண வேண்டாம்...

    திலகா அவளிடம் திரும்பினாள்.

    ஏண்டி...? இந்த காம்ப்ளக்ஸையே விலை பேசி முடிச்சிட்டுத்தான் இங்கிருந்து நகர்றதா உத்தேசமா..?

    இல்லே திலகா... அங்கே ஏதோ பேனர் வெச்சிருக்கே? என்னான்னு பாரு...

    திலகா அவள் காட்டின திசையில் விழிகளைப் போட்டாள்.

    எக்ஸிபிஷன்...

    என்ன எக்ஸிபிஷன்?

    புகைப்படக் கண்காட்சி போலிருக்கு...

    பார்த்துட்டு வரலாமா...?

    கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை...?

    என்ன சொல்றே நீ?

    நமக்குச் சம்பந்தமில்லாத இடம்... ஆர்ட் தனமா எதையாவது படம்பிடிச்சு சுவரில் மாட்டி வெச்சிருப்பாங்க... அதைப் பார்த்தா நமக்குத் தலையும் புரியாது... வாலும் புரியாது...

    உனக்கு வேணா புரியாமப் போகலாம்... எனக்கு இந்த மாதிரி விஷயங்களில் லேசா டேஸ்ட் இருக்கு...

    உன்னை என்னால புரிஞ்சிக்கவே முடியலை...

    கண்காட்சியின் முகப்பில் வெச்சிருக்கற பேனரைப் பார்த்தியா? தூரிகையின் முனையில் ஒரு கதவு திறந்திருக்கிற மாதிரி படம்... நம்மையெல்லாம் உள்ளே அழைக்கும் என்ன க்ளாஸான ஓவியம் அது...

    இப்ப என்னங்கறே?

    ஃபோட்டோ எக்ஸிபிஷனை நாம பார்த்தாகணும்ன்னு சொல்றேன்...

    நீ பிடிவாதம் பிடிச்சா யாரும் உன்னை மாத்த முடியாது... அந்த அறுவையை நீயா உணர்ந்து பாதியிலே ஓடி வரப் போறே...

    "உனக்குப் பிடிக்கலைன்னா, நீ காருக்குள்ளேயே

    Enjoying the preview?
    Page 1 of 1