Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

L Board Murder
L Board Murder
L Board Murder
Ebook159 pages43 minutes

L Board Murder

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
L Board Murder

Read more from Rajeshkumar

Related to L Board Murder

Related ebooks

Related categories

Reviews for L Board Murder

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    L Board Murder - Rajeshkumar

    17

    1

    இன்று மோசமான நாள். காலையில் காலண்டர் ராசி பலனில் கண்ணில் பட்ட இந்த வார்த்தை என்னைக் கொஞ்சம் பாதிக்கவே செய்தது.

    இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லைதான். ஆனால் மனித மனத்தின் விசித்திர பழக்கம் நீங்கள் அறிந்ததுதானே...? கெட்ட விஷயங்களைத் திரும்பத் திரும்ப அசை போடுவது அதன் இயல்பு.

    இருங்கள். முதலில் என்னைப் பற்றிச் சொல்லி விடுகிறேன்.

    பரந்த மேஜைக்குப் பின்னே சுழல் நாற்காலியில் அமர்ந்து கொண்டு - எதிரே இருந்த ஜியெம்... எம்.டி... ஆகிய வயதான தலைகளுக்கு ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்த எனக்கு அப்படி ஒன்றும் அதிகம் வயதாகி விடவில்லை.

    முப்பதுக்கும் முப்பத்தைந்துக்கும் இடையிலான ஒரு வயதை என் தோற்றத்தை வைத்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். என்னை இளம் தொழிலதிபர் என்று குறிப்பிட்டாலும் சரி... அல்லது மில்லினர்... என்று குறிப்பிட்டாலும் சரி... அதில் தவறு எதுவும் இல்லை.

    சாதாரண குடும்பத்தில்தான் பிறந்தேன். பிறவிக் குணமாய் அமைந்திருந்த கடும் உழைப்பும்... அவ்வப்போது தழுவிச் சென்ற அதிர்ஷ்டக் காற்றும் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் மேலே உயர்த்திக் கொண்டு சென்றது.

    ஹார்ட் அட்டாக்கில் இறந்து போய் விட்ட என் அண்ணனுக்கு நான் நிறையவே நன்றி சொல்ல வேண்டும். வாழ்க்கையின் சில முக்கியமான கட்டங்களில் பழுத்த அனுபவசாலியான அவருடைய ஆலோசனைக்கு நான் செவி சாய்த்திருக்காவிட்டால் இந்த வரம் சாத்தியமில்லை.

    எனக்கும் அண்ணனுக்கும் பல வருட இடைவெளி இருந்தது. கிட்டத்தட்ட அப்பா ஸ்தானத்தில்தான் அவர் இருந்தார். பழுத்த அனுபவசாலி. நான் காலேஜ் படித்து... ஆறு மாசம் வேலை இல்லாமல் தண்டச்சோறு சாப்பிட்டது.... எல்லாம் அவர் வீட்டில்தான்.

    அவருடைய ஆலோசனையின்படிதான் பிசினஸ் மேனேஜ்மேண்ட் எடுத்துப் படித்தேன். படித்து முடித்த பிறகு அவர் சொன்ன கம்பெனிகளுக்குத்தான் அப்ளிக்கேஷன் போட்டேன்.

    கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு கம்பெனியில இருந்து அப்பாயின்மென்ட் ஆர்டர் வந்தது. தினமும் விரக்தியோடு பேக்கரி டீயையும், சிகரட்டையும் செரித்துக் கொண்டிருந்த எனக்கு அதி பயங்கர சந்தோஷம். ஆர்டரைப் படிக்கப் படிக்கவே வீல் சேரில் சுழல்வது போல பிரமை.

    மத்தியானம் அண்ணனிடம் ஆர்டரைக் காட்டினேன்.

    கங்கிராஸுலேஷன்ஸ்...

    சொன்னவர் கண்ணாடியைச் சரியாய்ப் பொருத்திக் கொண்டு - நிதானமாய் ஆர்டரில் பார்வையைப் போட்டார். எழுத்தெழுத்தாய்ப் படித்தார்.

    கடைசியில் அவர் உதிர்த்த வார்த்தைகள் எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

    இந்த வேலைல நீ சேர வேண்டாம்...

    அண்ணா...?

    கம்பெனி சட்டதிட்டங்கள் எம்பிளாயிக்கு பெனிஃபிஷியலா இல்லை... உனக்குத் தரப்பட்டிருக்கிற ரெஸ்பான்சிபிலிட்டி ஆட்டு மந்தைத்தனமானது... இங்கே நீ புதுசா கத்துக்கவோ புதுசா சாதிக்கவோ எதுவுமே இல்லை... தவிர சம்பளமும் ரொம்பக் குறைச்சல்!

    எனக்கு மனசுக்குள் குழப்பமும் அவர் மேல் கோபமும் கூட பிறந்தது.

    அண்ணா... ஸம்திங் ஈஸ் பெட்டர் தென் நத்திங்... சும்மா இருக்கிறதுக்கு இந்த வேலையை ஏன் செய்யக்கூடாது...? அஞ்சாயிரம் ஒண்ணும் குறைஞ்ச சம்பளமா எனக்குப் படலை...

    அண்ணா சிரித்தார்.

    விஷ்ணு... நீ சொன்ன ஸம்திங் ஈஸ்... ப்ராவெர்ப் இந்த விஷயத்தில் ஒத்து வராதுப்பா... இங்கே போய் மாட்டிக்கிட்டின்னா அப்புறம் ஒரு சுழல்மாதிரி அமுக்கிடும். முன்னேற்றத்துக்கான வேற எந்த முயற்சியும் செய்ய முடியாத அளவுக்கு தட்டி தட்டி உக்கார வெக்கிற வேலை இது... உச்சியிலிருந்தே துவங்கு...ன்னு கேள்விப்பட்டிருக்கியா...?

    நீங்க வெச்சிருக்கிற ஜென் புஸ்தகத்துல படிச்சேன்...

    ம்... அதுதான் கரெக்ட்... துவக்கமே அமோகமா இருக்கணும்... முதல் கோணல் முற்றும் கோணல்ன்னு தமிழ்ல நெகட்டிவ்வா சொல்லியிருப்பாங்க... அதையே திருப்பிப் போட்டு யோசிச்சுப் பாரு... உன்னோட திறமைக்கு இன்னும் பெட்டர் ஆப்பர்ச்சூனிட்டி வரும்... கொஞ்சம் வெயிட் பண்ணு...

    பல விதமாய் யோசித்துப் பார்த்தேன். என்னால் அண்ணா சொன்னதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. கைக்கு எட்டியதை நழுவ விட்ட உணர்வே நீடித்தது.

    மறுபடி பேக்கரியில் சிகரெட் பற்ற வைக்கும் போதெல்லாம் ஒரு நல்ல வாய்ப்பை நழுவ விட்டு விட்டோமோ என்ற உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.

    ஆனால் அவர் சொன்னதுதான் சரி என்று மேலும் மூன்று மாதங்கள் போன பின்புதான் எனக்குப் புரிந்தது.

    வெளிநாட்டுத் தொடர்புகள் உள்ள ஒரு மிகப் பெரிய கம்பெனியில் எனக்கு வேலை வாய்ப்புக் கிடைத்தது.

    இதிலே சேர்ந்துக்கோ... என்றார்.

    அங்கே நிறையக் கற்றுக் கொண்டேன். உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் நிறைய மனிதர்களை பழக்கமாக்கிக் கொள்ள முடிந்தது.

    நான்கு வருஷங்களுக்குள்ளாகவே அபார அனுபவம் கிடைத்தது. கார் வாங்கி விட்டேன். பங்களா வாங்கி விட்டேன். பல ஜாதகங்கள் வந்தன. அலசி ஆராய்ந்து அண்ணாவின் ஆலோசனைப் படிதான் சகுந்தலாவின் கழுத்தில் தாலி கட்டினேன். அவள் பிறவிப் பணக்காரி. என்னிடம் படுபயங்கர அட்டாச்மென்ட். என்னிடம் பேசாத நாளில் தூக்கமே வராது என்பாள். பயங்கர பொசசிவ்நெஸ் வேறு. பார்ட்டிகளில் எவளாவது என்னிடம் கை குலுக்கி விட்டால் இரைந்தே விடுவாள். எந்தப் பெண்ணாவது என்னிடம் சிரித்துப் சிரித்துப் பேசினால் -

    கல்யாணம் ஆன ஆம்பிளை கிட்டே வழியாதே... என்று முகத்திலடித்தாற் போலச் சொல்லி உடனுக்குடன் துண்டித்து விடுவாள்.

    நான் அவளுடையவன் என்பதில் அவள் மிகுந்த அக்கறை காட்டுவாள். எனக்கு அது பிடித்தே இருக்கிறது. சொல்லப் போனால் என் மனைவி என் மேல் உயிரையே வைத்திருக்கிறாளே என்று ரொம்பப் பெருமையாய் இருக்கிறது.

    மண வாழ்க்கை ஒரு வருஷம் ஓடியிருக்க-ஒரு நாள் மாமனார் சொன்னார்.

    "அடுத்தவன் கிட்டே கை கட்டி நிக்க வேண்டாம். நான் பணம் போடறேன்... நீங்க சொந்தமா செய்யுங்க...

    வாழ்க்கையில் அது இன்னொரு படிக்கல்.

    இப்போது மிகப்பெரிய தலைகள் எல்லாம் என்னிடம் கைகட்டி நிற்கின்றன. என் அனுபத்திற்கும் அறிவுக்கும் கிடைக்கும் மரியாதை.

    "ஸோ...

    Enjoying the preview?
    Page 1 of 1