Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pesum Rojakkal!
Pesum Rojakkal!
Pesum Rojakkal!
Ebook113 pages50 minutes

Pesum Rojakkal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352850495
Pesum Rojakkal!

Read more from Rajesh Kumar

Related to Pesum Rojakkal!

Related ebooks

Reviews for Pesum Rojakkal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pesum Rojakkal! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    பேசும் ரோஜாக்கள்!

    Pesum Rojakkal!

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ***

    பேசும் ரோஜாக்கள்!

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    ***

    1

    தாவரங்களின் மொழி

    காற்று வீசினால் மட்டும்தான் செடி கொடிகள் அசையும் என்று எல்லோரும் நம்பிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் காற்று வீசாத நேரங்களில் கூட செடி கொடிகள் அசைகின்றன என்றும், அந்த அசைவுகள் மூலம் மனிதர்கள் உணர முடியாத சில சத்தங்களை எழுப்பித் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றன என்றும் பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தாவர ஆராய்ச்சி வல்லுநர்கள் கண்டு பிடித்துள்ளனர். அப்படி பேசிக்கொள்ளும்போது அல்ட்ரா சோனிக் மூலமாக மட்டும் உணரக்கூடிய சில சப்தங்கள் உண்டாகின்றன. பூமிக்கு அடியில் உள்ள வேர்ப் பாகங்கள் நீர் ஆதாரம் சரியாக இல்லாத பட்சத்தில் தாவரத்தின் மற்ற பாகங்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை கொடுக்குமாம். இந்த எச்சரிக்கை வந்ததுமே, செடிகள் புதிதாய்த் தளிர் இலைகளை உருவாக்காமல் எல்லா வேலைகளையும் நிறுத்தி வைக்குமாம்.

    சென்னையின் ஒரு முற்பகல் நேரம். அமிலத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட மாதிரி வெயில் உடம்பை றெுத்து எடுத்துக் கொண்டிருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பு ஒரு நீண்ட க்யூ - விசா வாங்குவதற்காக - தலைகளில் கர்ச்சீப்களைப் போட்டபடி காத்துக் கொண்டிருந்தது.

    அண்ணாசாலையில் வாகனங்கள் ஒரு அவசர வேகத்தோடு தலைதெறிக்க ஓட, வேதிகா தன்னுடைய பிங்க் நிற ஸ்கூட்டியை டூ வீலர் பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு... தன் தோளில் தொங்கிக் கொண்டிருந்த கைப்பையிலிருந்து செல்போனை எடுத்தாள். 23 வயதாகும் வேதிகாவுக்கு அழகான முகம். அதில் தேன் நிறக் கண்கள். பீட்ரூட் சாறுபட்ட தினுசில் சதைப்பிடிப்பான ஈரம் மின்னும் உதடுகள். சின்னச் சின்னத் தங்கத் துணுக்குகளோடு மெலிதான காது மடல்கள்.

    செல்போனில் எண்களை ஒற்றிவிட்டு நிதானமான குரலில் பேச ஆரம்பித்தாள்:

    ஸ்வாதி! நான் வேதிகா...!

    மறுமுனையில் அந்த ஸ்வாதி பேசினாள்:

    என்ன வேதி ...! எம்பஸிக்கு முன்னாடி வந்துட்டியா?

    வந்துட்டேன்...!

    சரி...! பின் பக்கம் ஒரு கேட் இருக்கு... அங்கே வந்துடு. கேட்ல செண்ட்ரி இருப்பார். நான் ஏற்கெனவே செண்ட்ரிகிட்ட உன்னைப் பத்தி சொல்லிட்டேன், வேதிகான்னு உன்னோட பேரைச் சொல்லு. அவர் அலவ் பண்ணிடுவார். நீ நேரா காரிடார்க்கு வந்துடு. வெயிட் பண்ணிட்டு இருப்பேன்...! ஒரு அரைமணி நேரத்துக்குள்ளே நீ உன்னோட வேலையை முடிச்சுட்டு போயிட்டே இருக்கலாம்.

    ரொம்ப தேங்க்ஸ் ஸ்வாதி...!

    இதுக்கெல்லாம் போய் யாராவது தேங்க்ஸ் சொல்வாங்களா?

    எனக்கு என்னோட மேட்டர் இமயமலை மாதிரி தெரியுது. உனக்கு அது பரங்கிமலை... நான் அன்னிக்கு உன்னை ஸ்கை வாக் மாலில் பார்த்தது என்னோட அதிர்ஷ்டம்...!

    புலம்பாமே எம்பஸிக்குப் பின்பக்கம் வா... எல்லா டாக்குமெண்ட்ஸும் ஒரிஜினலாய் அப்டேட் பண்ணியிருக்கணும். ஏதாவது ஒண்ணு இல்லேன்னாலும் ரிஜக்ட் முத்திரையைக் குத்திடுவார் விசா அத்தாரிடி ஆபீஸர்.

    டோண்ட் ஒர்ரி ஸ்வாதி! நீ கேட்ட எல்லா டாக்குமெண்ட்ஸும் சுடச்சுட இருக்கு...

    எல்லாத்தையும் ஒழுங்கா ஃபைல் பண்ணியிருக்கியா?

    பண்ணியிருக்கேன்!

    வந்து சேரு...!

    வேதிகா செல்போனின் இணைப்பைத் துண்டித்து விட்டு அதைக் கைப் பைக்குள் போட்டுக் கொண்டு எம்பஸியின் பின் பக்கம் இருந்த கேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

    பத்தடி நடந்து இருப்பாள்.

    அவளுக்குப் பின் பக்கம் அந்தக் குரல் கேட்டது.

    அம்மா...! ஒரு நிமிஷம்!

    வேதிகா திரும்பினாள்.

    பார்வைக்கு வெள்ளை யூனிஃபார்ம் தரித்த அந்த நடுத்தர வயது டிரைவர் தட்டுப்பட, என்ன என்பது போல் பார்த்தாள். டிரைவர் தயக்கமான குரலில் கேட்டார்:

    நீங்க 'ஜென்யூன் ஹாஸ்பிடல்’ல வேலை பார்க்கிற நர்ஸ்தானே?

    ஆமா...

    டிரைவர் திரும்பிப் பார்த்துச் சாலையின் இடது பக்கம் ஒதுங்கி நின்றிருந்த அந்த க்ரீம் நிற மெர்ஸிடஸ் காரைக் காட்டினார்.

    முதலாளியம்மா கார்ல இருக்காங்க. உங்களைப் பார்த்துப் பேசணும்ன்னு சொன்னாங்க.

    யாரு... உங்க முதலாளியம்மா?

    பேரு ஞானாம்பிகை. நீங்க வேலை பார்க்கிற ஹாஸ்பிடலில் ஆறு மாசத்துக்கு முன்னாடி அவங்க ஒரு நோயாளியாய் அட்மிட்டாகி யிருந்தாங்க. நீங்கதான் பார்த்துகிட்டீங்களாம்.

    வேதிகா மலர்ந்தாள்.

    ஓ! அந்த அம்மாவா..? இப்போ எப்படி இருக்காங்க...?

    நல்லா இருக்காங்கம்மா...! உங்களைப் பார்த்ததும் காரை ஓரமாய் நிறுத்தச் சொன்னாங்க...!

    வேதிகா எம்பஸிக்கு வந்த வேலையை மறந்துவிட்டு அந்தக் காரை நோக்கி வேக வேகமாய்ப் போனாள். காரின் கதவைத் திறந்து வைத்திருந்த அந்த அறுபத்தைந்து வயது அம்மாள் ஒரு பெரிய புன்னகையோடு கேட்டாள்.

    வேதிகா! எப்படியிருக்கே?

    நான் நல்லா இருக்கேன்மா...! உங்களுக்கு வயித்துல அந்த ஆபரேஷன் நடந்த பின்னாடி எப்படி ஃபீல் பண்றீங்கம்மா?

    அந்த வலியெல்லாம் காணாமே போய் ரொம்ப நாளாச்சும்மா. நான் அந்த ஹாஸ்பிடல்ல ஒரு பேஷண்ட்டாய் அட்மிட்டாகியிருந்தப்ப டாக்டர் பன்னீர் செல்வம் கொடுத்த ட்ரீட்மெண்ட்டைக் காட்டிலும் உன்னோட அன்பான, கனிவான கவனிப்புத்தாம்மா என்னை முழுமையாய்க் குணப்படுத்தி வீட்டுக்கு நல்லபடியா அனுப்பி வெச்சது...!

    வேதிகா சிரித்தாள். நான் அப்படி என்னம்மா பெரிசா பண்ணிட்டேன்...? ஒரு பேஷண்ட்கிட்ட ஒரு நர்ஸ் எப்படி நடந்துக்கணுமோ அப்படித்தான் நடந்துகிட்டேன்... அது என்னோட ட்யூட்டி...!

    "சரி... சரி...

    Enjoying the preview?
    Page 1 of 1