Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ethuvum Oru Ellai Varai
Ethuvum Oru Ellai Varai
Ethuvum Oru Ellai Varai
Ebook141 pages49 minutes

Ethuvum Oru Ellai Varai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Ethuvum Oru Ellai Varai

Read more from Rajeshkumar

Related to Ethuvum Oru Ellai Varai

Related ebooks

Related categories

Reviews for Ethuvum Oru Ellai Varai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ethuvum Oru Ellai Varai - Rajeshkumar

    16

    1

    அந்தக் கறுப்பு நிற மெட்டாடர் வேன் தெருமுனையில் நின்றபோது நேரம் இரவு 11.30. தலைக்கு மேல் கார்த்திகை மாதத்தின் மேகங்கள் இருட்டான வானத்தில் உலாவிக் கொண்டு மழை பெய்யலாமா வேண்டாமா என்று யோசித்தது. எரிந்து கொண்டிருந்த கார்ப்பரேஷன் குழல் விளக்குகளின் வெளிச்ச உடம்பில் மோதி மோதி பால் குடித்துக் கொண்டிருந்தன மழைக்கால ஈசல்கள். ரோட்டின் ஓரமாய் இருந்த குப்பைத் தொட்டி அருகே - ஒரு நாய் இன்னொரு நாயை ‘ஆணா பெண்ணா?’ என்று முகர்ந்து கொண்டிருந்தது. தெருவில் ஜனநடமாட்டம் அறவேயில்லை. எந்த வீட்டிலோ விழித்துக் கொண்ட கைக்குழந்தையொன்று - நிலவியிருந்த நிசப்தத்தை இரண்டாய் வகுந்தெடுக்கிற மாதிரி வீறிக் கொண்டிருந்தது.

    மெட்டாடர் வேனின் ட்ரைவிங் சீட்டில் உட்கார்ந்திருந்தவன் பின்னால் திரும்பிப் பார்த்து அகஸ்டோ என்றான்.

    ம்...

    போய்ட்டு வா... தெரு நமக்கு சாதகமாயிருக்கு...

    பின் ஸீட்டில் நிழலுவருங்களாய் உட்கார்ந்திருந்த மூன்று பேரில் ஒருவன் தோளில் தொங்க விட்டுக்கொண்ட ஜோல்னா பையோடு இறங்கினான். உடை நேர்த்தியாய் இருந்தது. ஒழுக்கமான தலைவாரல். உயரமான உடம்புக்கு ஏற்ற மாதிரியான சதை போட்டு புஷ்டியாய் நடந்தான். சத்தமெழுப்பாத ஷூக்கள் அவனுக்கு ஒத்துழைப்பைக் கொடுக்க ரோட்டின் வலதுபக்க ஓரமாய் நடந்து - அந்த பங்களாவின் காம்பௌண்ட் கேட்டுக்கு முன்பாய் நின்றான்.

    யார் ஸார் அது...? கேட்டை ஒட்டின மாதிரி இருந்த கூண்டிலிருந்து - அந்த குள்ள வாட்ச்மேன் டார்ச்சின் வெளிச்ச வட்டத்தோடு வெளிப்பட்டான். அகஸ்டோ, வாட்ச்மேன் பக்கத்தில் நெருங்கும் வரை காத்திருந்து பின் கேட்டான்.

    சௌந்தர்ராஜைப் பார்க்கணும்.

    அவர் இந்நேரத்துல யாரையும் பார்க்க மாட்டார்.

    அது மத்தவங்களுக்கு. என்னை பார்க்கிறதுக்காக அப்பாயிண்ட்மெண்ட் குடுத்திருக்கார்.

    உங்க பேரு...?

    அகஸ்டோ...

    வாட்ச்மேன் கூண்டுக்குள் போய் - இண்ட்டர்காம் டெலிபோன் மூலம் பேசினான். அய்யா! உங்களைப் பார்க்கிறதுக்காக... ‘அகஸ்டோ’ன்னு ஒருத்தர்...

    உள்ளே அனுப்பு... என்று பதில் வந்தது. அதைத் தொடர்ந்து பங்களாவின் மாடியறையொன்று ட்யூப்லைட் வெளிச்சத்தைப் பூசிக் கொண்டது.

    போங்க ஸார்... காம்பௌண்ட் கேட்டை வாட்ச்மேன் திறந்துவிட - உள்ளே நுழைந்து கொண்டே அகஸ்டோ கேட்டான்.

    உள்ளார நாய் இருக்கா...?

    இல்ல ஸார்... போன மாசந்தான் செத்துப் போச்சு...

    அதன் ஆத்மா சாந்தியடைவதாக... சொல்லிச் சிரித்தபடி அகஸ்டோ உள்ளே போனான். இருட்டில் லான் வந்தது. அதையொட்டிய சிமெண்ட் திட்டில் நடந்து போர்டிகோவுக்கு வந்தான். ஸ்டாண்டர்ட் இரண்டாயிரம் இருட்டில் மினுமினுத்தது. போர்டிகோ வாசற்படி ஏறும்போது - கதவு திறக்கப்பட - நைட்கவுனில் சௌந்தர்ராஜ் நின்றிருந்தார்.

    நடுத்தர வயது. ஒல்லியான தேகம். கண்களில் ரிம்லஸ் கண்ணாடி. கழுத்தில் பவளமாலை போல் எதுவோ தொங்கியது. கைகளில் குளிர்க்கு இதமாய் க்ளவுஸ்.

    வாங்க, அகஸ்ட்டோ.

    ஸாரி... உங்க தூக்கத்தைக் கெடுத்துட்டேன்...

    நோ... நோ... இந்நேரம் வரைக்கும் நான் டி.வி. பார்த்துட்டும் புக்கை படிச்சுகிட்டும் உங்களுக்காகத்தான் காத்திட்டிருந்தேன்...

    அகஸ்ட்டோவை உள்ளே வரவிட்டு - கதவைச் சாத்தினார். இருவரும் அரையிருட்டான ஹாலில் நடந்து - மாடிப்படிகளில் உயர்ந்தார்கள். அகஸ்ட்டோ சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சொன்னான்.

    வீட்டை பிரமாதமாக கட்டியிருக்கீங்க சௌந்தர்ராஜ்.

    எஸ்டிமேட் பண்ணுங்க பார்க்கலாம்...

    முப்பது லட்சம்...

    சுத்தமா அரை கோடி...

    மை குட்னஸ்...

    மாடியறைக்குள் நுழைந்தார்கள். நீல வண்ண வெல்வெட் சோபாக்கள் கண்ணில் அடித்தன.

    பீ... ஸிட்டட் அகஸ்ட்டோ.

    தாங்க்யூ...

    அவன் உட்கார்ந்தான்.

    ஒரு நிமிஷம்... சொன்ன சௌந்தர்ராஜ் பக்கத்து அறையான படுக்கை அறைக்குள் நுழைந்தார். அவருடைய மனைவி ராதாலட்சுமி தூக்கம் கலைந்து போர்வையைச் சுருட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந்திருந்தாள்.

    யார்ங்க அது...? சத்தமாய் கேட்ட மனைவிக்குப் பக்கத்தில் குரலைத் தாழ்த்தினார் சௌந்தர்ராஜ்.

    வந்திருக்கிறவர் சி.பி.ஐ. ஆபீஸர்.

    சி.பி.ஐ. ஆபீஸரா...?

    ஆமா...!

    இந்த ராத்திரியில் எதுக்காக வந்திருக்கார்...?

    நமக்கு உதவி பண்ணத்தான்...

    உதவி பண்ணவா...?

    ஒவ்வொண்ணுக்கும் வாயைப் பொளக்காதே...! இன்னிக்கு மத்தியானம் இவர் ஆபீஸுக்கு வந்திருந்தார். டெல்லி சி.பி.ஐ.-ல் செக்கண்ட் கிரேட் ஆபீஸர். ஐடென்டிஃபிகேஷன் கார்டையும் பார்த்தேன். வர்ற பத்தாம் தேதியும் பதினோராம் தேதியும் நம்ம கம்பெனியையும் - வீட்டையும் சர்ச் பண்ண போறதா... முடிவு எடுத்து அதை ரகசியமாக வெச்சிருக்காங்களாம். அந்தத்தகவலை அகஸ்ட்டோ மோப்பம் பிடிச்சுக்கிட்டு வந்து - கம்பெனியில் என்னை மீட் பண்ணினார். சி.பி.ஐ. ஆபீஸர்ஸ் என்னென்ன காரணங்களுக்காக நம் கம்பெனியையும் வீட்டையும் சர்ச் பண்ணப் போறாங்கங்கிற டீடெய்ல்ஸை சொல்லுறதுக்காகத்தான் அகஸ்ட்டோ வந்திருக்கார்...

    அதுக்கு இந்த நேரத்துலதான் வரணுமா...?

    இது மாதிரியான காரியங்களுக்கு அகால நேரம்தான் கரெக்ட்...

    இவர்க்கு ஏதாவது பணம் தரணுமா...?

    பின்னே? முக்கியமா அதுக்காகத்தானே வந்திருக்கார். ரைட் டீடெய்ல்ஸை சொல்லி - நாம எப்படி ஜாக்கிரதையா இருக்கணும்கிறத விளக்கிட்டு போவார்...

    சரி... பணம் எவ்வளவு குடுக்கப் போறீங்க...?

    ஒரு லட்சம்...

    நாம சம்பாதிச்ச காசு... இப்படியெல்லாம் போகணுமா?

    நீ இப்படியெல்லாம் சொல்லுவேன்னுதான்... உன்கிட்டே முன்னாடியே விஷயத்தை சொல்லலை...

    "சரி...

    Enjoying the preview?
    Page 1 of 1