Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sei Seiyathey!
Sei Seiyathey!
Sei Seiyathey!
Ebook203 pages1 hour

Sei Seiyathey!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Sei Seiyathey!

Read more from Rajeshkumar

Related to Sei Seiyathey!

Related ebooks

Related categories

Reviews for Sei Seiyathey!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sei Seiyathey! - Rajeshkumar

    ராஜேஷ்குமார்

    பகீர் செய்திகள் - 1

    சிறைகளில் ரௌடித்தனம் செய்யும் கைதிகளை அடக்கி வழிக்குக் கொண்டு வர போலீஸார் ஒரு வழியைக் கையாளுகிறார்கள். இதற்கு பெயர் ரெட் ஹாட் ஆபரேஷன். (RED HOT OPERATION) மூர்க்கமான கைதிகளை சிறிதும் வெளிச்சம் வராத ஒரு சிறிய இருட்டறையில் தள்ளி பூட்டிவிடுவார்கள். அந்த அறைதான் சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும், டாய்லட் போவதற்கும். எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு பக்கெட் தண்ணீர்தான் தருவார்கள். அறையில் துளியும் காற்று வராது. பகல் முழுவதும் அந்த அறை வெப்பத்தை உள்வாங்கி - இரவில் அந்த அறைக்குள்ளேயே வெப்பத்தை உமிழ்வதால் கைதியின் உடம்பு வேக வைத்த உருளைக்கிழங்கு தினுசுக்கு மாறிவிடும். இந்த அறையில் ஒரு கைதி 24 மணி நேரம் இருந்தால் போதும் - பெட்டிப்பாம்பாய் அடங்கி விடுவான்.

    1

    இன்ஸ்பெக்டர் குருபிரசாத் ஜீப்பை ஸ்டேஷன் வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தபோது சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் நடுத்தர வயது நபர் ஒருவரை சற்றே அதட்டலாய் விசாரித்துக் கொண்டிருந்தார். குருபிரசாத்தைப் பார்த்ததும் நாற்காலியினின்றும் எழுந்து சல்யூட் வைத்தார்.

    என்ன.. தியாகராஜன்...? யார் இந்த ஆள்...? எதுக்காக விசாரணை பண்ணிட்டு இருக்கீங்க...? குருபிரசாத் தன்னுடைய நாற்காலிக்குப் போய் சாய்ந்து கொண்டே கேட்டார்.

    ஸார்! இவன் பேர் செந்தட்டி. புறநகர் பகுதியில் இருக்கிற ஒரு மயானத்தில் வெட்டியான் வேலை பார்க்கிறான். ஏதோ புகார் குடுக்க வந்து இருக்கான். அதான் என்கொயர் பண்ணிட்டிருந்தேன்.

    புகாரா...! என்ன புகார்?

    அவன் இன்னும் வாய் திறந்து சொல்லலை ஸார்!

    வாடா இங்கே...!

    அந்த நபர் அழுக்கு சர்ட்டும், அழுக்கு லுங்கியும் அணிந்து ராத்திரி சாப்பிட்ட டாஸ்மாக் வாசனையோடு குருபிரசாத்துக்கு எதிரில் போய் நின்றான். பாதி முகத்தை தாடியும் மீசையும் தத்து எடுத்திருந்தது.

    அய்யா... கும்புடறேன்!

    என்ன புகார்... சொல்லு...!

    அய்யா... அது... வந்து... இன்னிக்குக் காலையில மயானத்துக்கு மேற்குபக்கம் முளைச்சிருந்த களைகளைப் புடுங்கி சுத்தம் பண்ணிட்டிருந்தேன்யா. அப்ப ஒரு சமாதியை யாரோ தோண்டிட்டு மறுபடியும் மண்ணைப்போட்டு பழைய சமாதி மாதிரியே பண்ண முயற்சி செஞ்சிருக்காங்க...! நாயோ நரியோ மண்ணைப் பறிச்சிருக்கும்ன்னு நினைச்சேன். ஆனா அதுக பண்ணியிருந்தா அது வேற மாதிரி இருந்துருக்கும்ய்யா.

    குருபிரசாத் நிமிர்ந்து உட்கார்ந்தார். அப்படீன்னா அது மனுஷன் பண்ணின வேலைதான்னு சொல்லவர்றியா...?

    ஆமாங்கய்யா...

    சரி..! ஒருத்தன் உன்னோட கட்டுப்பாட்டுக்குள்ளே இருக்கிற மயானத்துல பூந்து ஒரு சமாதியை தோண்டியிருக்கான். உனக்கு எப்படி தெரியாமே போச்சு?

    அய்யா மன்னிக்கணும்! ராத்திரி நேரத்துல எனக்கு மருந்து இல்லேன்னா தூக்கம் வராது! மருந்து சாப்பிட்டதாலே எனக்கு முழிப்பு வரலை.

    மருந்தா... என்ன மருந்து?

    சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் சிரிப்போடு குறுக்கிட்டார்.

    ஸார்! அவன் டாஸ்மாக்கைச் சொல்றான்.

    செந்தட்டி அழுக்குப் பற்களில் சிரித்தான். அய்யா சொல்றது சரிதாங்கய்யா...! நேத்து ராத்திரி மருந்தை கொஞ்சம் அதிகமாவே எடுத்துகிட்டேன். காலையில் எந்திரிக்கும்போதே ஒன்பது மணியாயிருச்சு...!

    சரி! நீ இப்போ... என்ன சொல்ல வர்றே?

    அய்யா! ஆறுமாசத்துக்கு முன்னாடி செத்துப்போன ஒரு அழகான பொண்ணை அந்த இடத்துலதான் அடக்கம் பண்ணினாங்க. நான்தான் அடக்கம் பண்ணினேன். மண்ணாலான அந்த சமாதியை ஒரு வருஷம் வரைக்கும் பராமரிக்கச் சொல்லியிருந்தாங்க. பணமும் குடுத்துட்டு போனாங்க. இப்ப அந்த சமாதியை யாரோ தோண்டிட்டு மறுபடியும் மண்ணைப்போட்டு மேடு பண்ணியிருக்காங்க. இது மாதிரியான ஒரு சம்பவம் இதுவரைக்கும் நடந்தது இல்லீங்கய்யா. நாளைக்கு ஏதாவது பிரச்சினைன்னா என்னைத்தான் கூட்டிகிட்டு வந்து லாக்கப்புல உட்கார வைச்சு லாடம் கட்டுவீங்க. அதான் நானே புகார் குடுத்துட்டு போலாம்ன்னு வந்தேன்.

    செத்துப்போன அந்தப் பொண்ணு யாரு?

    நோட்டு புக்கைப் பார்த்தாத்தான் பேரு அட்ரசெல்லாம் தெரியும்ய்யா...!

    குருபிரசாத் திரும்பினார்.

    தியாகராஜன்! ஜீப்பை எடுங்க. ஸ்பாட்டுக்குப் போய் பார்த்துட்டு வந்துடலாம். தீவிரவாத கும்பலைச் சேர்ந்தவங்க யாராவது சமாதியைத் தோண்டி ஏதாவது ஆயுதங்களைப் பதுக்கி வெச்சிருக்கலாம்..! ரெண்டு கான்ஸ்டபிளும் வரட்டும்.

    இப்ப... நான் ஜீப்பை ரெடி பண்ணிடறேன் ஸார்!

    அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் செந்தட்டியை ஏற்றிக்கொண்டு ஜீப் கிளம்பியது. குருபிரசாத் செந்தட்டியை ஆழம் பார்க்க சின்னச்சின்ன கேள்விகளாய்க் கேட்டுக் கொண்டே வந்தார்.

    எத்தனை வருஷமா வெட்டியானா வேலை பார்க்கிறே?

    பதினெட்டு வருஷமாச்சய்யா...

    குடும்பத்தோடு இருக்கியா?

    இல்லீங்கய்யா.. நான் ஒண்டிதான்... பஞ்சாயத்து ஆபீஸ்ல மாசமானா சம்பளம் குடுத்துடுவாங்க. ஒரு உடம்பை அடக்கம் பண்ணினா நூறு ரூபாய் கிடைக்கும்..! பொளப்பு போயிட்டிருக்கு...

    குடிக்கப்போற இடத்துல யார்கிட்டெல்லாம் பேசுவே?

    நான் யார் கூடவும் பேச்சு வெச்சுக்கமாட்டேன்ய்யா... போய் குடிச்சுட்டு நிதானமாய் வீட்டுக்கு வந்து படுத்துக்குவேன்...!

    பொம்பளை சினேகிதம் உண்டா?

    அய்யோ... அந்த பக்கமெல்லாம் நான் எட்டிக் கூட பார்க்கறது இல்லீங்கய்யா..! நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருப்பேன்.

    இருபது நிமிஷ பயணத்தில் இடிந்துபோன சுற்றுச் சுவர்களோடு அந்த மயானப்பகுதி வந்தது.

    காய்ந்த கோரைப்புற்கள் எல்லா திசைகளிலும் தெரிய நிறம் நிறமாய் பெயிண்ட் அடிக்கப்பட்ட சமாதிகள் பார்வைக்கு கிடைத்தது.

    ஜீப்பிலிருந்து இறங்கினார்கள்.

    ஓடு சரிந்த வீடு ஒன்று பூவரசம் மரத்துக்கு கீழே தெரிய, செந்தட்டி சொன்னான்.

    இதானய்யா என்னோட வூடு!

    போய் மொதல்ல அந்த புக்கை கொண்டா! இன்ஸ்பெக்டர் குருபிரசாத் சொல்ல - செந்தட்டி பூட்டப்பட்டு இருந்த வீட்டைத் திறந்து கொண்டு உள்ளே போய் ஒரு அழுக்கான நோட் புத்தகத்தோடு வந்தான். வேகமான நடை.

    நீயே அந்தப் பக்கத்தை தேடி எடு...

    நோட்டைப் புரட்டி நைந்துபோன பக்கங்களைப் பிரித்து பால்பாயிண்ட் பேனாவால் கிறுக்கலாய் எழுதப்பட்டு இருந்த பக்கத்தைக் காட்டினான் செந்தட்டி. சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வாங்கிப் பார்த்தார்.

    இறந்த பெண்ணின் பெயர் ரேகா (21). திருமணமாகவில்லை. அப்பாவின் பெயர் பொன்னுரங்கம். மருத்துவமனையில் இயற்கையான மரணம். (மருத்துவச் சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளது) இறந்த தேதி, நேரம், அடக்கம் செய்யப்பட்ட தேதி நேரம், வீட்டு முகவரி. எல்லா விபரங்களையும் படித்து முடித்த தியாகராஜன் அதே பக்கத்தில் இணைக்கப்பட்டு இருந்த மருத்துவச்சான்றிதழையும் சரிபாத்துவிட்டு குருபிரசாத்திடம் நிமிர்ந்தார். ஸார்...! எல்லா விவரங்களும் சரியான முறையில் தெளிவாய் எழுதப்பட்டு இருக்கு..!

    குருபிரசாத் செந்தட்டியிடம் திரும்பினார்.

    அந்தப் பொண்ணோட சமாதி எங்கே இருக்கு?

    மேற்குப் பக்கமாய் கை காட்டினான் அவன்.

    வந்து காட்டு!

    நடந்தார்கள்.

    பகீர் செய்திகள் - 2

    வேலை கிடைத்து வளைகுடா நாட்டுக்கு சென்ற ஒரு இளைஞர் நம்ம ஊர் சமையல் பொருள்களான மஞ்சள் தூள், மிளகாய் பொடி, மிளகுத்துள், கசகசா போன்றவைகளையும் கொண்டு சென்றுள்ளார். இந்திய விமான நிலையத்தில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் போய் இறங்கிய விமான நிலையத்தில் பிரச்சினை உருவாயிற்று. அவருடைய சமையல் பொருள்களை சோதனை செய்த கஸ்டம்ஸ் அதிகாரிகள் கசகசா பொட்டலத்தை தனியே எடுத்துக் கொண்டு வழக்கை பதிவு செய்தனர். காரணம், அந்த நாட்டின் சட்டவிதியின்படி கசகசா ஒருவகை போதைச் செடியின் விதை. இளைஞர்க்கு விஷயம் தெரிந்ததும் பதறினார். கசகசா இந்தியாவில் ஒரு சமையல்பொருள் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அந்த வாதம் எடுபடவில்லை. வழக்கு கோர்ட்டுக்கு போயிற்று. வழக்கின் முடிவில் இளைஞர்க்குக் கிடைத்த தண்டனை என்ன தெரியுமோ? மரணதண்டனை.

    2

    அந்த அதிகாலைப்பொழுது ஆரஞ்சு வர்ணத்தோடு விடிந்து கொண்டிருக்க, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வைசாலிக்கு சட்டென்று விழிப்புத்தட்டியது.

    Enjoying the preview?
    Page 1 of 1