Varnaavin Maranam
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsTheepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsAthiradi Aattam! Rating: 4 out of 5 stars4/5
Related to Varnaavin Maranam
Related ebooks
Sei Seiyathey! Rating: 0 out of 5 stars0 ratingsAduththa Ilakku Rating: 0 out of 5 stars0 ratingsNil... Kavani...Kaathiru! Rating: 2 out of 5 stars2/5Idi Minnal Indira Rating: 0 out of 5 stars0 ratingsMella Mella Oru Thigil Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Innaley Rating: 0 out of 5 stars0 ratingsEllam Poi and Karuppu Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsSivappu Iravu Rating: 0 out of 5 stars0 ratingsMonalisa (Punnagai) Azhugai Rating: 0 out of 5 stars0 ratingsPesum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsKarkandu Ayutham Rating: 0 out of 5 stars0 ratingsPachai Poiyum Sivappu Unmaiyum Rating: 0 out of 5 stars0 ratingsEthayum Oru Thadavai! Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattume Therintha Hema Rating: 0 out of 5 stars0 ratingsVaikarai Nila Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Maranangal Rating: 4 out of 5 stars4/5Unakke Uyiraanen Rating: 0 out of 5 stars0 ratingsIthu Pothuvazhiyalla Rating: 0 out of 5 stars0 ratingsAadatha Oonjalgal Rating: 0 out of 5 stars0 ratingsKiliyugam Rating: 0 out of 5 stars0 ratingsPoi Satchi Rating: 0 out of 5 stars0 ratingsOru Theekkuchiyin Velichathil! and Naalum Therinthu Kol! Rating: 0 out of 5 stars0 ratingsSila Vellai Iravugalum Oru Karuppu Pagalum Rating: 0 out of 5 stars0 ratingsTheera Visaarippathey Poi! Rating: 3 out of 5 stars3/5Arai Vinaadi Aniyaayam Rating: 0 out of 5 stars0 ratingsSudum Nilavu Sudatha Sooriyan Rating: 0 out of 5 stars0 ratingsThaduththaal Kooda Tharuven Rating: 0 out of 5 stars0 ratings356 Rating: 5 out of 5 stars5/5Endrendrum Un Ethiri Rating: 5 out of 5 stars5/5Rattham Sinthum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Varnaavin Maranam
0 ratings0 reviews
Book preview
Varnaavin Maranam - Rajeshkumar
18
ஏடு இட்டோர் இயல்
பேரன்புமிக்க பெருந்தகைகளே...!
வணக்கம்!
நான் நலம். உங்கள் நலமும் மேன்மையாய் இருக்கும்.
சிறகுகள் விரிந்து எண்ணங்களைத் தூக்கிச் செல்கிறது.
ஆர்ப்பரிக்கும் அலைகளுடன் கடல் அளவு வாழ்க்கையை விட தெள்ளத் தெளிவாய் ஓடும் சிறிய நீரோடை வாழ்க்கைதான் சுகம்.
கடலில் ஆழமும் தெரியாது; காலமும் தெரியாது.
ஆளைக் கொல்லும் சுறாக்கள் நடுவில் - சுருட்டிப் போடும் சுனாமியை சொந்தமாகக் கொண்ட கடலைவிட - கால்அளவு நீர், பன்னீர் போன்ற சுவை.
குஞ்சு மீன்கள் நம் கால்களில் கிச்சுகிச்சு மூட்ட - கடிக்கும் மீன்குஞ்சுகளின் சுறுசுறுப்பு, கண்கள் மூலம் இரத்தத்திற்கு சுறுசுறுப்பை... சுத்திகரித்து அனுப்புகிறது.
கடல் அளவு பரந்த அந்த வனாந்தரத்தில் கொன்று - கொத்திச் செல்ல இராட்சச கழுகுகள்தான் தெரியும்.
இங்கே... நீரோடையில் - குயில், கரிச்சான் குஞ்சு, கிளிகள், அதைச் சுற்றி வண்ணப் பூக்கள் இதமான காற்றில் ஆடுவது நர்த்தகிகளின் நாட்டியம் போல் இருக்கும்.
இன்சுலின் போட்டாலும் இறங்காத சர்க்கரைக் கொதிப்பு, இந்த நீரோடை ஓசைக்கு - மகுடிக்கு மயங்கியதுபோல - மனம் அடங்கி, உள் உடம்பின் இரசாயன மாற்றங்களை செம்மைப் படுத்தி விடும்.
ஓடையின் ஓசையும், பறவைகளின் கானங்களும், கர்நாடக இசையையும் மிஞ்சும் இளையாராஜவின் - ஏர்.ஆர்.ரகுமானின் இசைக்கு எசப்பாட்டு பாடும்...
அந்த ரம்மியமான இடத்தில் இல்லம் கொண்டவன்தான் நிஜ கோமகன்.
நானும் அண்ணன் ராஜேஷ்குமாரும், பர்லியாறு பழத்தோட்டத்தின் உள்ளே ஓடும் நீரோடையை அனுபவித்திருக்கிறோம்.
கோவை - பாலக்காடு சாலையில் ஆள் அரவம் இல்லாத இடத்தில் காரில் கணக்கு வழக்கு இல்லாமல் பேசுவது...
சிறுவாணி அணைக்கு சென்ற போது - நான் பத்திரிகையாளன் என்பதால் அனுமதிக்கப்படவில்லை. காரணம், நான் எதையும் எழுதிவிடுவேனாம். மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம் – அதை ஒட்டிய பகுதிகளில் பலமணி நேரம் பேசியது...
ஈஷாவும், கார்னியாவும் வியாபிக்காத அந்தக் காலத்தில் நாங்கள் வலம் வந்த அந்தத் தடங்கள் பசுமையானது.
நான் இருந்தால் அந்த இடம் நகைச்சுவையாயிருக்கும். அண்ணன் ராஜேஷ்குமார் இருந்தால் அன்பு அன்னநடை போடும். இருவரும் சேர்ந்தால் சொல்லவும் வேண்டுமா!
சொல்ல மறந்து விட்டேன். நான் சொன்னது கேட்டு ‘நானும் வரட்டுமா?’ எனக் கேட்டுவிடாதீர்கள்.
நாங்கள் இருவரும் இருக்கும்போது மற்றவர்களை மறந்து விடுவோம்...
அங்கே - எங்கள் நினைவுகள் எல்லாம் க்ரைம் நாவல் பற்றியும் அதன் வாசகர்களாகிய உங்களைப் பற்றியும் தான்...!
அதே லவ்வுடன்,
ஜி. அசோகன்
ராஜேஷ்குமாரின் முகநூல்
அன்பிற்குரிய வாசக உள்ளங்களே!
வணக்கம்
இன்றைக்கு நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிற விஷயம் நம் உடம்பின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. சென்ற மாதம் சென்னிமலையைச் சேர்ந்த டாக்டர் கோவிந்தராஜ் அவர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கேள்வி கேட்டார்:
என்ன ராஜேஷ்குமார்... நம்முடைய உடம்பில் உள்ள எந்த உறுப்புக்கு ‘மெடிக்கல் ஷாப்’ என்று பெயர்?
நான் கணையம்
என்று சொன்னதும் அவர் மெள்ளச் சிரித்தார்.
கணையம் அல்ல - கல்லீரல்
என்றார்.
எப்படி?
"தினசரி நாம் நூறு பர்சென்ட் சுகாதாரமாய் சாப்பிடும் உணவில் கூட குறைந்த பட்ச நச்சுப் பொருட்கள் இருக்கவே செய்கிறது. உதாரணமாக காப்பியில் காபின், புகையிலையில் நிகோடின், ஆல்கஹால் நச்சு, மெடிக்கல் வேஸ்டேஜ் போன்றவை அப்படியே ரத்தத்தில் கலந்து சென்றால் இதயம் ஒரு கழிவுக் கூடமாக மாறிவிடும். இந்த நச்சுக்கள் எல்லாம் இதயத்திற்கு போவதற்கு முன்பாக புத்திசாலித்தனமாய் கல்லீரல் ஃபில்டர் செய்து விடுகிறது. அதோடு ரத்தமும் ‘திமு திமு’வென்று நுழைந்து இதயத்தைத் திணறடித்து விடாதிருக்க, அதிகப்படியான ரத்தத்தை ஸ்பாஞ்ச் போல் உறிஞ்சி உப்பிக் கொண்டு ரத்த ஓட்டத்தை ரெகுலேட் செய்கிறது. தவிர ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்துதல், ஹார்மோன் சுரப்பிகளைக் கண்காணித்தல், ரத்தம் உறைதல் போன்ற 500க்கும் மேற்பட்ட வேலைகளை சின்சியராகக் கல்லீரல் செய்துகொண்டு இருக்கிறது. அதுவும் ஒரு கேஷுவல் லீவுகூட போடாமல் கர்மமே கண்ணாக தீவிரமாய் பணியாற்றிக் கொண்டு இருக்கிறது.
மேலும் குடிமகன்கள் விஸ்கி, பிராந்தி, சாராயம் போன்ற உற்சாக பானங்களை குவார்ட்டர் குவார்ட்டராய் விழுங்கி கல்லீரலுக்கு ஓவர்லோடு கொடுப்பார்கள். அதுவும் முக்காமல், முனகாமல், சலித்துக் கொள்ளாமல் ஓவர் டைமில் வேலை பார்த்து ரசாயனக் கழிவுகளைத் தள்ளுகிறது. ஒரு ஸ்டேஜில் தன்னால் தாள முடியாத வேலைப்பளுவின் காரணமாய் பிரிக்க முடியாத நச்சுக்களை - வேறு வழியில்லாமல் கடவுளின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு - ரத்த ஓட்டத்தில் கலக்க விட்டு விடுகிறது.
அந்த சமயத்தில்தான் கல்லீரல் பாதிப்பு அடைந்து ஜாண்டீஸ் எனப்படும் காமாலை நோயாக மாறுகிறது. உண்மையில் காமாலை என்பது நோயே அல்ல. அது கல்லீரல் பாதிப்பின் ஆரம்ப அறிகுறி.
பொதுவாக லிவர் ‘டிஸ் ஆர்டர்’களுக்கு ஆங்கில மருத்துவம் உதவாது என்கிற ஒரு தவறான நம்பிக்கை இருந்து கொண்டு இருக்கிறது. இவர்கள் இயற்கை மருத்துவம் என்று சொல்லிக் கொண்டு கீழாநெல்லிச் செடியைத் தேடிப் போவது கூட பரவாயில்லை. ஆனால் பலர் கீழாநெல்லி வேரை ரிஸ்ட் வாட்ச் போல் மணிக்கட்டில் கட்டிக் கொள்வதும், தண்ணீரை மந்திரித்துக் குடிப்பதும்தான் ஹைலைட் சோகம்.
உண்மையில் கீழாநெல்லி வேர், அதன் இலைகள், காய்கள் எல்லாமே மருத்துவ குணம் கொண்டவைதான். இதை உட்கொண்டால் ‘ரீஜெனரேஷன்’ வேகம் அதிகமாகி காமாலை நோயைக் குணப்படுத்துவது உண்மைதான். இந்த உண்மையை மருத்துவ ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.
எலிகளுக்கு கார்பன் டெட்ரோ குளோரைடு மூலம் கல்லீரல் பாதிப்பை உண்டாக்கி காமாலை நோயை வரவழைத்து பின் கீழா நெல்லி பவுடரைத் தண்ணீரில் கலந்து கொடுக்கப்பட்டதில் மேற்படி உண்மை கண்டறியப்பட்டுள்ளது."
சூப்பர்.
க்ராஸ்டாக்ல யாரு?
ஸார்... நான் சுவாமிநாதன்.
மன்னை சுவாமிநாதனா?
ஆமா ஸார்.
சுவாமிநாதன்! நீங்க எனக்கு எழுதின நீண்ட லெட்டர் வந்து சேர்ந்தது. உங்க அன்புக்கு நன்றி.
ஸார்... நன்றியை அப்படி தள்ளி ஓரமா வெச்சுட்டு அடுத்த க்ரைம் நாவலோட டைட்டிலைச் சொல்லுங்க.
டைட்டில்தானே... இதோ...
சொல்லுங்க ஸார்...
யுத்த சத்தம்.
என்ன ஸார் ராணுவக் கதையா?
வெயிட் அண்ட் ஸீ.
மிக்க அன்புடன்
ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமாரிடம் கேளுங்கள்
* கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் பேசிக் கொள்வதற்கும், இரண்டு மாணவிகள் பேசிக் கொள்வதற்கும் என்ன வித்தியாசம்?
(பா.செங்குட்டுவன், நாமக்கல்)
** மாணவிகள் பேசிக் கொண்டால்....
‘ப்ரீத்தி... இன்னிக்கு நீ ரொம்பவும் அழகாயிருக்கே.’
‘தேங்க்ஸ்... ரேகா... நீயும் இன்னிக்கு அசத்தறே...ஹேர்ஸ்டைல் பிரமாதம்.’
மாணவர்கள் பேசிக் கொண்டால்...
‘என்னமோ தெரியலைடா மச்சி...நீ இன்னிக்கு இந்த டிரஸ்ல அழகாயிருக்கே’
‘ஸாரிடா... மாப்ளே...கையில காசு இல்ல’
* நம்முடைய வாழ்க்கை என்னும் திரைப்படத்தின் இடைவேளை எது?
(கிருஷ்ணகுமார், விசாகப்பட்டினம்)
** மூக்குக் கண்ணாடியை எங்கே வைத்தோம் என்று தேடும் நேரம்.
* ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாரதி பாடியும் ஜாதி இன்னமும் ஒழியவில்லையே?
(வி.சாரதி, உதகை)
** ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று அவர் குழந்தைகளுக்குத்தான் சொல்லி விட்டுப் போயிருக்கிறார்.
பெரியவர்களுக்கு சொன்னால் அவர்கள் கேட்கமாட்டார்கள் என்று பாரதியாருக்குத் தெரியாதா என்ன?
* ஏடாகூடமாய் ஒரு பொன்மொழி சொல்ல முடியுமா?
( நவநீதகிருஷ்ணன், சென்னை)
**