Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iranthu Kidantha Thendral!
Iranthu Kidantha Thendral!
Iranthu Kidantha Thendral!
Ebook114 pages48 minutes

Iranthu Kidantha Thendral!

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580100404685
Iranthu Kidantha Thendral!

Read more from Rajesh Kumar

Related to Iranthu Kidantha Thendral!

Related ebooks

Related categories

Reviews for Iranthu Kidantha Thendral!

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iranthu Kidantha Thendral! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    இறந்து கிடந்த தென்றல்!

    Iranthu Kidantha Thendral!

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    கல்லீரல் என்னும் காவலன்:

    மனித உடல் சிறப்பாகச் செயல்படுவதற்கான பிள்ளையார் சுழி என்ன தெரியுமா?

    கல்லீரல், ஆம்! மனித உடலில் கல்லீரல் போன்று - ஒரே நேரத்தில் ஏகப்பட்ட வேலைகளைச் செய்யும் உறுப்பு வேறு எதுவும் இல்லை, ஆனால் கல்லீரல் குறித்த விழிப்புணர்வும், அக்கறையும் நம் மக்களிடம் கொஞ்சமும் இல்லை என்பதுதான் வேதனை.

    ஜீரண நலத்துறை மருத்துவராகப் பணிபுரியும் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் கல்லீரலைப் பற்றிச் சொல்லும் விஷயங்கள் வியப்பானவை. இந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும் அந்த விஷயங்கள் இடம் பிடித்து இருக்கின்றன.

    அந்த நள்ளிரவு நேர இருட்டை பஸ்ஸின் முகப்பு விளக்குகள் சாப்பிட்டுக் கொண்டே ஹைவேஸ் ரோட்டை அடையாளம் காட்ட - டிரைவர் உச்சபட்ச வேகத்தில் பஸ்ஸை விரட்டிக் கொண்டிருந்தார்.

    குமரனுக்கு ஜன்னலோர சீட் வசதியாய் இருந்தது. குளிர்ந்த காற்று முகத்தில் மோதியதில் கண்கள் சொருகி அவ்வப்போது தூக்கம் வந்தது. பஸ் ஏதாவது ஒரு காரணத்துக்காக வேகம் குறைகிறபோது அந்தத் தூக்கம் அறுந்து போக உடல் நிமிர்ந்து உட்கார்ந்தது.

    குமரன் தன் மணிக்கட்டில் இருந்த வாட்ச்சைப் பார்த்தான்.

    நேரம் 12.15

    'ஆனந்தி இந்நேரத்துக்குத் தூங்கியிருப்பாளா?'

    'இல்லை டி.வி.யைப் போட்டுக் கொண்டு ஏதாவது ஒரு படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பாளா?'

    குமரன் தன் மனசாட்சியோடு பேசிக் கொண்டு இருக்கும்போதே அவனுடைய சட்டைப் பாக்கெட்டில் இடம் பிடித்திருந்த செல்போன் வைபரேஷனில் அழைத்தது. எடுத்துப் பார்த்தான்.

    அவனுடைய மனைவி ஆனந்திதான்.

    மனசு பூராவும் சந்தோஷம் பூசிக் கொள்ள, செல் போனைக் காதில் ஒற்றி மற்ற பயணிகளுக்கு இடைஞ்சல் இல்லாமல் குரலைத் தாழ்த்திக் கொண்டு மெதுவான குரலில் பேசினான்.

    இப்பத்தான் நினைச்சேன்...!

    மறுமுனையில் ஆனந்தி சிரிப்போடு கேட்டாள்.

    என்னான்னு...?

    நீ இந்த நேரத்துக்கு என்ன பண்ணிட்டிருப்பேன்னு? என்ன... டி.வி.யில் படம் பார்த்துக்கிட்டு இருந்தியா...?

    இல்லை...

    பின்னே...?

    நம்ம கல்யாண ஆல்பத்தைப் பார்த்துட்டிருந்தேன்.

    அந்த ஆல்பத்தை எத்தனை தடவைதான் பார்ப்பே?

    எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்த்துட்டே இருக்கலாம். சரி, பஸ் இப்போ எங்கே வந்துட்டு இருக்கு?

    பஸ் இப்பத்தான் திருப்பத்தூரை க்ராஸ் பண்ணி அஞ்சு நிமிஷமாச்சு!

    நீங்க நம்ம ஊர் வந்து சேரும்போது எப்படியும் பொழுது விடியற நேரமாயிடும்ன்னு நினைக்கிறேன்.

    சந்தேகமே வேண்டாம்.

    டிரைவரைக் கொஞ்சம் வேகமாய் ஓட்டச் சொல்லுங்களேன்...!

    அவர் இப்பவே இந்த பஸ்ஸை ஃப்ளைட்டாகவும் தன்னை ஒரு பைலட்டாகவும் நினைச்சுக்கிட்டு தான் பறந்துட்டிருக்கார்.

    வேண்டாங்க...! கொஞ்சம் மெதுவாய் ஓட்டச் சொல்லுங்க.

    பயப்படாதே ஆனந்தி...! நல்ல எக்ஸ்பீரியன்ஸான டிரைவர்தான். எங்கே வேகமாய் போகணுமோ... அங்கே போறார். மத்த இடங்களில் வெரி காஸியஸ் டிரைவர் தான்...

    அப்புறம்... நான் சொன்னதை யோசனை பண்ணீங்களா?

    வேலை விஷயம்தானே?

    ஆமா...!

    நான் வந்து சொல்றேன்...!

    இப்பவே சொன்னா என்னவாம்?

    இதோ பார் ஆனந்தி...! அதெல்லாம் நிதானமாய் உட்கார்ந்து பேச வேண்டிய விஷயம். இப்போ பஸ்ஸில எல்லாரும் நல்லாத் தூங்கிட்டு இருக்காங்க. என் பக்கத்து சீட்டுக்காரர் நல்லாத் தூங்கிட்டு இருந்தவர் லேசாய் அரைக் கண்ணைத் தொறந்து முறைச்சுப் பார்க்க ஆரம்பிச்சுட்டார். நான் இப்ப போனைக் கட் பண்றேன். நாளைக்குக் காலையில் பேசிக்கலாம்...

    சரி... காலையில் உங்களுக்கு என்ன டிஃபன் பண்ணட்டும்...?

    ரவா தோசையும் தக்காளி சட்னியும்.

    ரெடியாய் இருக்கும்!

    வந்துடறேன்...

    செல்போனை குமரன் அணைத்த விநாடி வேகமாய் போய்க் கொண்டிருந்த பஸ் சட்டென்று வேகம் குறைந்து ஊர்ந்தது.

    டிரைவர் கண்டக்டரைப் பார்த்து குரல் கொடுத்தார்.

    பழனியப்பன்!

    என்னண்ணே?

    கேட்டைப் போட்டுட்டான். பதினைஞ்சு நிமிஷம் 'தவம்' பண்ணியாகணும்.

    எங்கெங்கியோ பாலத்தைக் கட்டறானுக. இங்கே கட்ட மாட்டேங்கிறாங்க... என்று சொன்ன டிரைவர், ஒரு கெட்ட வார்த்தையை உச்சரித்து விட்டு பஸ்ஸை ஒரு லாரிக்குப் பின்னால் நிறுத்தினார்.

    குமரன் வெளியே எட்டிப் பார்த்தான்.

    சற்றுத் தூரத்தில் எரிகிற சிவப்பு விளக்கோடு ஒரு லெவல் கிராஸிங் பார்வைக்குக் கிடைத்தது.

    இதுவரைக்கும் எத்தனையோ தடவை இதே வழியில் குமரன் பஸ்ஸில் பயணம் செய்து இருக்கிறான். முதல் தடவையாய் இன்றைக்குத்தான் அவன் பயணம் செய்த பஸ் ரயில்வே கேட்டுக்கு முன்பாய் நின்றிருக்கிறது.

    அவனுக்கு முன்புற சீட்டில் உட்கார்ந்திருந்த ஒரு பயணி கண்டக்டரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

    யூரின் பாஸ் பண்ணிட்டு வரலாமா...?

    ஃபார்னே போயிட்டு வரலாம். தாராளமாய் போயிட்டு வாங்க. இப்பத்தான் கேட்டைப் போட்டிருக்கான். திறக்க எப்படியும் பதினைஞ்சு நிமிஷத்துக்கு மேலாயிடும்...!

    கண்டக்டர் சொன்னதைக் கேட்டுவிட்டு குமரனும் பஸ்ஸை விட்டுக் கீழே இறங்கி நின்றான்.

    அவனுக்குள்ளும் அந்த இயற்கை உபாதையின் அவஸ்தை இருந்தது. மெள்ள நடந்தான். சுற்றிலும் மெலிதான அரையிருட்டு.

    பஸ்ஸுக்குப் பின்னால் எந்த ஒரு வாகனமும் நிற்காததால் ரோட்டைக் கடந்து மறுபக்கம் போனான். குப்பைக் கூளம் நிறைந்த பகுதி

    Enjoying the preview?
    Page 1 of 1