Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aatuvithal Yaaroruvar?
Aatuvithal Yaaroruvar?
Aatuvithal Yaaroruvar?
Ebook131 pages49 minutes

Aatuvithal Yaaroruvar?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தை வரம் இல்லாது போக, பனிரெண்டு நாட்கள் தொடர்ந்து கோவிலில் அங்கப் பிரதட்சணம் செய்கிறாள் சாவித்திரி. பத்து நாட்களை சிரமப்பட்டு முடித்தவளுக்கு உடல் நிலை மிகவும் மோசமடைய அவள் கணவன் ராஜகோபால் அங்கப் பிரதட்சணத்தை நிறுத்திக் கொள்ளுமாறு சொல்கிறான். ஆனால், அந்த தடைகளை மீறி செய்தால்தான் வேண்டுதல் நிறைவேறும் என்கிறாள்.
பதினோராம் நாள் அங்கப் பிரதட்சணத்தையும் வேதனையோடு முடித்தவளுக்கு, பனிரெண்டாம் நாள் புது சோதனை வருகின்றது. கோவிலினுள் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்திருப்பதாய் தகவல் வர, யாரையும் கோயிலுக்குள் அனுமதிக்க மறுக்கின்றது காவல்துறை.
எச்சரிக்கையை மீறி அங்கப் பிரதட்சணத்தில் ஈடுபட். அதை வெற்றிகர்மய் முடிக்கிறாள் சாவித்திரி.
கோவிலுக்குள் தீவிரவாதிகள் வைத்த குண்டு ஏனோ வெடிக்காது போக, அந்த தீவிரவாதக் குழு கோபத்துடன் ஆராய்கின்றது.
மறைத்து வைக்கப்பட்ட வெடி குண்டை மீட்டெடுத்த காவல்துறை, அது வெடிக்காமல் போனத்ற்கான காரணத்தை உணர்ந்து, பிரமிப்படைகின்றது.
ஏன் குண்டு வெடிக்கவில்லை?...விடை...நாவலின் இறுதியில் உள்ளது.
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580130005099
Aatuvithal Yaaroruvar?

Read more from Mukil Dinakaran

Related to Aatuvithal Yaaroruvar?

Related ebooks

Related categories

Reviews for Aatuvithal Yaaroruvar?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aatuvithal Yaaroruvar? - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    ஆட்டுவித்தால் யாரொருவர்?

    Aatuvithal Yaaroruvar?

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    கிழித்துப் போடப்பட்ட நாராய் படுக்கையில் கிடக்கும் மனைவியைப் பார்த்து விழியோரம் ஈரம் கசிந்தார் ராஜகோபால்.

    சாவித்திரி... இவ்வளவு பிடிவாதம் தேவையா? எப்படியிருந்த நீ... இப்ப எப்படி ஆயிட்டே தெரியுமா? உன்னைப் பார்க்கப் பார்க்க என் நெஞ்சு பாறாங்கல்லாய்க் கனக்குது தெரியுமா? பேசும் போதே அவர் உதடுகள் துடித்தன.

    சிரமப்பட்டு புன்னகை பூத்த சாவித்திரி, மொத்தம் பனிரெண்டு நாள்... ஒரு நாள் கூடத் தவறாம அங்கப் பிரதட்சணம் பண்ணனும்... அதான் பரிகாரம்! நேத்தோட பத்து நாள் முடிஞ்சுதுங்க! இன்னும் ரெண்டு நாள் எப்படியாவது கஷ்டப்பட்டு அங்கப் பிரதட்சணத்தை முடித்து விட்டால் போதுங்க! நம்மோட கவலை மொத்தமா தீர்ந்திடும்ங்க! நம்ம குலம் செழித்திடும்ங்க! நம்பிக்கையோடு சொன்னாள்.

    அவளைப் பார்த்து அழுவதா? சிரிப்பதா? என்றே தெரியவில்லை ராஜகோபாலுக்கு. அந்த நிமிடம் அவர் கோபம் முழுவதும் பக்கத்து விட்டுப் பெண்மணி பத்மாவின் மீதுதான் பாய்ந்தது. ஹும்... அவ ஒரு பெரிய மனுஷின்னு அவ பேச்சைக் கேட்டுக்கிட்டு... எவனோ சிவகிரிச் சித்தராம்... அவனை இங்கிருந்து நாற்பது கிலோமீட்டர் தாண்டியிருக்கற பொன்னூத்து மலைக்குப் போய்ப் பார்த்திட்டு வந்திருக்கா... அதுல வந்ததுதான் இத்தனையும்!

    போகும் போதே அவளைத் தடுத்துப் பார்த்தார் ராஜகோபால்.

    த பாரு சாவித்திரி... உனக்கு இந்தக் காலச் சாமியார்ப் பசங்களைப் பத்தியெல்லாம் அவ்வளவா தெரியாது! எல்லாருமே ஃபிராடுப் பசங்க! ஏமாந்த ஜனங்க தலைல மொளகா அரைச்சு... காசைப் பிடுங்கறதுதான் அவனுக வேலையே! அதுக்காக... இல்லாததையும்... பொல்லாததையும் சொல்லி... நல்லா இருக்கற மனசைக் குழப்பி... பரிகாரம் என்கிற பேர்ல என்னென்னமோ செய்யச் சொல்லுவானுக!

    ப்ச்... எங்கியோ... எப்பவோ... யாரோ ஒருத்தர் ரெண்டு பேர் தப்பு செஞ்சிட்டாங்கன்னா... அதுக்காக ஒட்டு மொத்தமா எல்லாரையுமே ஃபிராடுன்னு சொல்லாதீங்க! உண்மையானவங்களும் நிறைய பேர் இருக்காங்க! அவங்க தங்களோட சக்தியால பல பேருக்கு நல்லது செஞ்சிருக்காங்க! பல பேர் அவங்களால நல்ல பலன்களை அடைஞ்சிருக்காங்க!

    திருமணமாகி பதிமூன்று வருடங்களாகியும் தன் வயிற்றில் ஒரு சிசு உருவாகவில்லையே? என்கிற வேதனையின் தாக்கம்தான் அவளை அந்த அளவிற்கு சாமியாரை நம்ப வைத்திருக்கின்றது என்பதைப் புரிந்து கொண்ட ராஜகோபால், எனக்கு மட்டும் குழந்தை ஆசை இல்லையா? நீ உண்டாகணும்... ஒரு பையனையோ... பொண்ணையோ பெத்து என் கைல போடணும்!னு நானும் உள்ளூர எல்லாக் கடவுள்களிடமும் விண்ணப்பம் வெச்சிட்டேதான் இருக்கேன்! கார்ப்பரேஷன் ஆபீஸ்ல குடுக்கற விண்ணப்பங்களுக்குக் கூட பதில் கிடைச்சிரும் போலிருக்கு! கடவுள் கிட்ட குடுக்கற விண்ணப்பங்களுக்குத்தான் பதிலே கிடைக்க மாட்டேங்குது! விரக்தியின் வெளிப்பாடாய் இருந்தது அவரது பேச்சு.

    அதுக்காக சலிச்சிடாதீங்க! தொடர்ந்து நீங்க சாமி கிட்ட விண்ணப்பம் போட்டுட்டே இருங்க! நான் இந்தப் பக்கத்துல... சாமியார்கள் கிட்ட விண்ணப்பம் போட்டுட்டே இருக்கேன்! ரெண்டு பேர்த்துல யாராவது ஒருத்தருக்காவது பலன் கிடைக்கட்டும்!... எப்படியோ நம்ம குழந்தை ஆசை... வாரிசுக் கனவு நிறைவேறினாப் போதும்!" என்றாள் சாவித்திரி.

    நிறைவேறும்! கண்டிப்பா நிறைவேறும்! அதான்... ஒண்ணுக்கு நாலஞ்சு டாக்டர்கள் கிட்டப் போயி நாம ரெண்டு பேரும் நம்ம உடம்பைக் காட்டி டெஸ்ட் பண்ணிட்டோமே? எல்லா டாக்டர்களும் ஒரே மாதிரிதானே சொன்னாங்க? உங்க ரெண்டு பேர் கிட்டேயும் ஒரு குறையும் இல்லை... நிச்சயம் உங்களுக்குக் குழந்தை பிறக்கும்!ன்னு! அதனால இத்தனை வருஷம் காத்திருந்த நாம்... இன்னும் கொஞ்ச காலம் காத்திருப்போமே?

    காத்திருக்கற அந்த காலத்துல இந்த மாதிரி சில வழிபாடுகளையும் செய்யறதுல தப்பில்லையே? கொக்கி போட்டாள் சாவித்திரி.

    ராஜகோபாலும் விடாமல் தனக்குத் தெரிந்த முறைகளிலெல்லாம் வாக்குவாதம் செய்து பார்த்தார். ஆனால், கடைசியில் ஜெயித்தது என்னவோ சாவித்திரிதான்.

    சரிம்மா... உன் மன திருப்திக்கு நீ இதைச் செய்யறே? ஓ.கே... இதுக்கு மேலே உன்னைத் தடை பண்ண எனக்கு விருப்பமில்லை! போயிட்டு வா! என்றார்.

    நான் மட்டும் தனியா போகலைங்க... என் கூட அந்த பத்மாவும் வர்றாஎன்றாள் சாவித்திரி.

    ஜாக்கிரதையா போயிட்டு வாங்கம்மா! என்று வழியனுப்பி வைத்த ராஜகோபால், சாவித்திரி திரும்பி வந்து அந்த அங்கப் பிரதட்சணப் பரிகாரத்தைச் சொன்ன போது எடுத்த எடுப்பில் அதை மிகவும் சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டார்.

    என்னது... பனிரெண்டு நாள் தொடர்ந்து கோயில்ல அங்கப் பிரதட்சணம் பண்ணனுமா? அதுவும் ஈரத் துணியோட... அய்யோ சாமி! நம்மால ஆகாது! என்றவர் திடீரென்று ஞாபகம் வந்தவராய், நீ மட்டும்தானே? நான் இல்லையே? சந்தேகத்தோடு கேட்டார்.

    பயப்படாதீங்க... நான் மட்டும்தான்... நீங்க இல்லை!

    நெஞ்சில் கையை வைத்து அப்பாடா... நான் தப்பிச்சேன் என்று சொன்னவர், எந்தக் கோவில்ல அங்கப் பிரதட்சணம் பண்ணப் போறே?

    நம்ம கரிவரதராஜ பெருமாள் கோவில்லதான்!

    முதல் இரண்டு நாட்கள் சுலபமாய் தனது அங்கப் பிரதட்சணத்தை மிகவும் எளிதாய் முடித்த சாவித்திரி, மூன்றாம் லேசாய் சிரமத்தை உணர்ந்தாள். உடல் வலியும், ஈர உடைகளால் உண்டான ஜலதோஷமும் அவளுக்கு சிறிய அளவில் பின்னடைவை உண்டாக்கின.

    மனைவியின் முகத்தை வைத்தே அவளது மன ஓட்டத்தைப் படித்து விடும் சாமார்த்தியசாலியான ராஜகோபால் மெல்லக் கேட்டார், என்ன சாவித்திரி கஷ்டமாயிருக்கா?

    ம்... அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை! புதுப் பழக்கமல்லவா அதான் கொஞ்சம் தடுமாற்றம் வருது! என்றாள் சாவித்திரி. எங்கே தனது சுகவீனத்தை ஒப்புக் கொண்டால் அதுதான் சாக்கு என்று அவளை அந்தப் பரிகாரத்தை செய்ய வேண்டாமென்று தடுத்து விடுவாரோ? என்கிற பயத்தில் மறைத்துக் கொண்டாள்.

    ஆனால், அடுத்து வந்த நாட்களில் அவள் உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப் பட்டு விட, அவளாலும் அதை மறைக்க முடியவில்லை.

    எட்டாம் நாள் அசையக் கூட முடியாமல் படுக்கையிலேயே விழுந்து விட்டாள்.

    அடுத்த தெரு டாக்டரை வீட்டிற்கே அழைத்து வந்து பார்க்கச் சொன்னார் ராஜகோபால். ஊசி போட்டு மாத்திரைகள் கொடுத்து விட்டுச் சென்ற டாக்டர் போகும் போது "நல்லா ரெஸ்ட் எடுக்கச் சொல்லுங்க மிஸ்டர்

    Enjoying the preview?
    Page 1 of 1