Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thedi Vantha Thendral
Thedi Vantha Thendral
Thedi Vantha Thendral
Ebook103 pages56 minutes

Thedi Vantha Thendral

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தீபிகா மிகவும் தன்னம்பிக்கையான பெண். தனக்கு வரும் கணவன் மிகவும் நேர்மையானவனாக இருக்க வேண்டும் என்பதற்காக திருமணத்தை தள்ளிப் போட்டிருந்தாள். அவளுக்காக தன் தீயபழக்கங்களை விட்டு அவளை திருமணம் செய்ய நினைத்தான், அவளுடைய அத்தை மகன் ராகுல். பாண்டியன் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக சமூகத்தில் ஓர் குற்றவாளியாகிறான். இவர்களில் யாரை தன் வாழ்க்கை துணையாக்க போகிறாள் தீபிகா? இந்த தென்றல் எந்த வாசலை தேர்ந்தெடுக்க போகிறது? வாங்க வாசிக்கலாம்...

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580100608139
Thedi Vantha Thendral

Read more from Devibala

Related to Thedi Vantha Thendral

Related ebooks

Reviews for Thedi Vantha Thendral

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thedi Vantha Thendral - Devibala

    http://www.pustaka.co.in

    தேடி வந்த தென்றல்

    Thedi Vantha Thendral

    Author :

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    பிறக்கும் போதே எவர் ஒருவரும் குற்றவாளியாகப் பிறப்பதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைதான் ஒரு மனிதனைக் குற்றவாளியாக்குகிறது. அவன் அதிலிருந்து மீண்டு வருகிறானா? இல்லை மூழ்கிப் போகிறானா என்பதுதான் விதி.

    கண்ணாடி முன் நின்று தன்னை ஒருமுறை முழுமையாகப் பார்த்துக் கொண்டாள் தீபிகா.

    தன் அழகை ஒரு நிமிடம் போல தானே ரசித்தாள்.

    தீபிகா! உனக்கு நேரமாச்சு! சாப்பிட வர்றியா?

    வந்துட்டேன்மா!

    உணவு மேஜைக்கு தீபிகா வந்தாள்.

    அம்மா சூடான இட்லிகளை தட்டில் எடுத்து வைத்தாள்.

    இரு இரு! ரெண்டே ரெண்டு வை. உயிர் வாழ சாப்பிடணும். சாப்பிடறதுக்காகவே வாழக்கூடாது! அப்பா எங்கே?

    இங்கே இருக்கேன்மா!

    அப்பா என்னோட ஐ.டி சலான் வந்திருக்கு. அட்வான்ஸ் டாக்ஸ் கட்டணும். அப்புறம் ஆர்.டி.ஓ... ஆபீஸ் போகணும். செக் ஒண்ணைப் போடணும்!

    ஏண்டி! அப்பாவுக்கு என்ன வயசுனு நினைச்சே? அவர் ரிடையராகி நாலு வருஷம் ஆச்சு!

    தெரியும்! சுறுசுறுப்பா இருக்காரில்லை? விடேன்! ஏம்பா? உங்களுக்குக் கஷ்டமா?

    அப்படி நான் சொன்னேனாமா?

    இன்னும் ஒரு இட்லி போட்டுக்கோடி!

    பதில் சொல்லாமல் எழுந்து போய் கை கழுவினாள். கலக்கி வைத்த காம்ப்ளானைக் குடித்தாள்.

    பால் பை நிறைய தண்ணி ஊத்தினியா? காம்ப்ளான் நல்லால்லை!

    உள்ளே போனாள்.

    கைப்பையோடு வெளிப்பட்டாள்.

    அப்பா! ஆபீஸ் பார்ட்டி ஒண்ணு ஓட்டல்ல இருக்கு சாயங்காலம். நான் வர ராத்திரி ஒன்பதாகும்!

    எந்த ஓட்டல் தீபிகா?

    அம்மாவை முறைத்தாள்.

    அதுக்கில்லைடி! நீ தனியா வரணுமே! இருட்டிப் போயிடுமே! அப்பாவை வரச் சொல்ணுமானு கேட்டேன்!

    பதிலே சொல்லாமல், தன் வண்டி சாவியை எடுத்துக்கொண்டு வாசலில் இறங்கி விட்டாள்.

    அந்த நிமிடத்தின் முடிவில் ஸ்கூட்டி புறப்பட்டு தெருமுனையைக் கடந்து கொண்டிருத்தது.

    என்ன ஒரு கம்பீரமாய் போறா பாரு என் பொண்ணு?

    அப்பாவின் குரலில் பெருமை வழிந்தது.

    சகிக்கலை! வயது இருபத்தி எட்டு! குதிரையாட்டம் வளர்ந்திருக்கா. இன்னும் ஒரு கல்யாணம், காட்சினு நடக்கலை! வயத்துல நெருப்பு எனக்கு!

    வேளை வரலைடி!

    இல்லை! இது மாதிரி ஆம்பிளத்தனமா ஒருத்தி இருந்தா, வந்த வேளையும் திரும்பிப் போயிடும். நாலு மாசம் முன்னால வந்த அந்த ரிசர்வ் பேங்க் ஆபீசரை அவமானப்படுத்தி அனுப்பினா. எவன் இவளைக் கட்டிக்க வருவான்? ராட்சஸி!

    நிறுத்து மங்களம்! குழந்தையைப் பத்தி அடுத்த வார்த்தை நீ சொன்னே, நான் சும்மாருக்க மாட்டேன்!

    போதும், நிறுத்துங்க! உங்களால வந்த வினை! அதிகச் செல்லம் குடுத்து, ஒரே பொண்ணுங்கற காரணமா, அவளை ஒரு ஆம்பிளை மாதிரி வளர்த்தாச்சு! இப்ப அனுபவிக்கறோம். 24 வயது வரைக்கும் படிப்புல காலத்தை ஓட்டினா. விட்டுட்டோம். உடனே வேலை கிடைச்சது. இப்ப நாலு வருஷமா உத்யோகம்.

    இருபத்தெட்டு ஒண்ணும் இந்தக் காலத்துல கூடுதல் வயசில்லை!

    இல்லைதான். உங்களுக்கு அறுபத்தி ரெண்டு. எனக்கு அம்பத்தி எட்டு! அதுவும் கூடுதல் இல்லையா?

    நீ என்ன சொல்ற?

    ஒரு நேரம் போல இருக்காதுங்க! நமக்குக் கடவுள் ஆயுளைப் போட்டு வைக்கணுமே!

    ஏன் அப்படி நினைக்கற? சரி போயிட்டோம்னே வை! உடனே நம்ம குழந்தை வீதில நிக்கப் போறாளா? மாசம் பன்னண்டாயிரம் சம்பாதிக்கற அதிகாரிடி அவ! எல்லாரையும் போல அவளை சராசரிப் பொண்ணா நீ ஏன் நினைக்கற?

    சரி நான் பேசலை. ஆயிரக்கணக்கா சம்பாதிச்சாலும் அடிப்படைல பொம்பளை, பொம்பளைதான். அனுபவத்துல புரியும்.

    அம்மா உள்ளே போய் விட்டாள்.

    அப்பா பெருமூச்சு விட்டார்.

    அரசாங்க உத்யோகம் ஒன்றில் இருந்தவர் அப்பா. கண்ணியமாக வாழ்க்கை நடத்தியவர். தீபிகா ஒரே பெண்.

    அப்பா நாலு வருடங்கள் முன்பு ரிடையர் ஆனதும் கிடைத்த மொத்தப் பணத்தில் இந்தச் சின்ன வீட்டை வாங்கி விட்டார். பென்ஷன் வருகிறது. தீபிகாவின் சம்பளத்தில்தான் குடும்பம் வசதியாக

    Enjoying the preview?
    Page 1 of 1