Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

‘Mana’vilakku
‘Mana’vilakku
‘Mana’vilakku
Ebook62 pages23 minutes

‘Mana’vilakku

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs. Jyotirllata Girija, born in Chennai. She wrote her first story when she was at the age of thirteen. She has written in so many forms - Stories for children, novels, short stories, dramas etc. So far, she has written more than 600 short stories, 19 novels, 60 novelettes and 3 dramas. She has also written 25 short stories in English and she has written around 150 stories for children.
Languageதமிழ்
Release dateSep 9, 2016
ISBN6580101501459
‘Mana’vilakku

Read more from Jyothirllata Girija

Related to ‘Mana’vilakku

Related ebooks

Reviews for ‘Mana’vilakku

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ‘Mana’vilakku - Jyothirllata Girija

    http://www.pustaka.co.in

    'மன'விலக்கு

    'Mana'vilakku

    Author :

    ஜோதிர்லதா கிரிஜா

    Jyothirllata Girija

    For other books

    http://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    'மன'விலக்கு

    என்ன விசாலி? சாப்பிட வரலாமா? எனும் குரல் ஒலிப்பதற்கு முன்னால் சாப்பாட்டு மேசை மீது எல்லாவற்றையும் தயாராகப் பரப்பி வைத்துக் கணவனை முந்திக்கொண்டு தான் குரல் கொடுத்து விட வேண்டுமென்று ஆசைப்பட்ட விசாலி முகத்தில் துளித்திருந்த வேர்வையைக் கூடத் துடைத்துக் கொள்ளாமல் தனது சமையலறை அலுவல்களில் கடைசி வேலையான தாளிப்பைச் செய்வதற்காக இரும்புக் கரண்டியை அடுப்பின் மேல் வைத்து அதில் ஒரு சிறு கரண்டி நெய்யை ஊற்றி விட்டுக் கடுகைத் தயாராய்க் கையில் எடுத்து வைத்துக் கொண்டாள்.

    நெய் காயத் தொடங்கியதும் அதில் கடுகைப் போட்டு, வெடித்ததும் கறிவேப்பிலையையும் கிள்ளிப் போட்டு ரசத்தில் கொட்டித் தாளித்து விட்டு அவள் நெற்றி வேர்வையைப் புறக்கையரல் வழித்துச் சுண்டிய கணத்தில் தியாகராஜன் தன்னறையினின்று வெளிப்பட்டான்.

    அவன் குரல் எழுப்ப முனைவதற்குள், நீங்க டைனிங் டேபிளுக்கு வரலாம்! சாப்பாடு ரெடிங்க என்றவாறு விசாலி இடுக்கியால் ஒவ்வொரு பாத்திரமாக எடுத்துக்கொண்டு போய்ச் சாப்பாட்டு மேசை மேல் வைத்தாள். சாப்பாட்டுத் தட்டையும் கழுவி வைத்தபின் தியாகராஜனுக்காகக் காத்திருக்கலானாள். அவன் கைகழுவி வந்து அமர்ந்ததும் பரிமாறத் தொடங்கினாள். 'அவன் தான் கைகழுவப்போய் விட்டானே, சில நொடிகளில் வந்துவிடப் போகிறானே' என்று பரிமாறி வைக்கக் கூடாது. அது அவனுக்குப் பிடிக்காது. அவன் வந்து உட்கார்ந்த பிறகுதான் பரிமாறலாம். 'ஏதாவது பூச்சி பொட்டு விழுந்து விடும்!' என்பான்.

    'நான்தான் பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறேனே! என்னை மீறிப் பூச்சி பொட்டு சாப்பாட்டில் விழுந்து விடுமா என்ன?' என்று அவள் கேட்டால், 'விழ இருக்கிற பூச்சி உனக்குப் பயந்து கொண்டு விழாமல் இருந்து விடுமா?' என்பான். 'உங்களுக்குப் பயந்துகொண்டு மட்டும் அது விழாமல் பறந்து போய் விடுமா என்ன?' என்று அவள் திருப்பிக் கேட்டுவிட்டால், விழிகளை உருட்டி, 'நீ ரொம்ப எதிர்த்துப் பேசறே, விசாலி!' என்று முறைப்பான்.

    எதிர்த்து வாதாடினால் பிடிக்காது அவனுக்கு என்பதைக் குடித்தனம் நடத்தத் தொடங்கிய புதிதிலேயே அவள் புரிந்து கொண்டு விட்டபடியால், மிகவும் தேவைப்பட்டாலல்லாது அவள் அவனோடு வாக்குவாதம் செய்வதில்லை.

    என்ன சமையல்? எனும் வழக்கமான கேள்வியோடு அவன் நாற்காலியில் அமர்ந்ததும், கத்திரிக்காய் எண்ணெய்க் கறி, முருங்கைக்காய் சாம்பார், மைசூர் ரசம்! என்று பதில் சொன்னவாறு அவள் பரிமாறத் தொடங்கினாள்.

    அவனுக்குப் பிடித்த சமையல் என்பதால் நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு சாப்பிடத் தயாரானான். சாம்பாரை ஆள்காட்டி விரலால் தொட்டு வழக்கம் போல் நாக்கில் வைத்துச் சுவை பார்த்த அவன், சாம்பார் நல்லால்லே, என்னமோ மாதிரி இருக்கு...! எனக்கு வேணாம்… ரசத்தை ஊத்து என்று அவன் சிடுசிடுத்ததும் அவளுக்கு முகம் சுண்டி விட்டது.

    ஒரு நிமிஷம் இருங்க என்ன கோளாறுன்னு பாக்கறேன்.

    "வேணாம், வேணாம். எனக்கு நாழியாயிடிச்சு ஆபீசுக்கு.

    Enjoying the preview?
    Page 1 of 1