Thottathil Oru Veedu
()
About this ebook
சிறுகதைகள் என்பது வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி என்பார்கள். எழுத்தாளன் தனது வாழ்வில் சந்தித்த மனிதர்களை, நிகழ்ச்சிகளை , அனுபவங்களை. கற்பனைகளை கதைகள் மூலம் படம்பிடித்து காட்டுவதுண்டு.
இந்த சிறுகதைகள் தொகுப்பில் பல்வேறு மனிதர்களின் வாழ்க்கை, அவர்களது விருப்பு வெறுப்புகள், மனிதன் மனிதனை ஏமாற்றும் ராஜ தந்திரங்கள் என பல்வேறுபட்ட மனிதர்களின் கதைகள் இந்நூலில் இடம் பிடித்திருக்கின்றன.
மனிதனோடு பின்னிப் பிணைந்திருப்பது காதல். காதல் இல்லையேல் மனிதன் இல்லை என்றே சொல்லும் அளவிற்கு காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பது மனித வாழ்க்கையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த புத்தகத்தில் அந்த மென்மையான காதலும் அதன் வலிகளும் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. வாசித்து புரிந்து கொள்ளுங்கள்.
Read more from Irenipuram Paul Rasaiya
Gnabagankal Thaalaattum Rating: 0 out of 5 stars0 ratingsKoothadiyum Naaru Pettiyum Rating: 0 out of 5 stars0 ratingsOrupakka Kathaigal Ezhuthuvathu Yeppadi...? Rating: 0 out of 5 stars0 ratingsPanaiyolai Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Kann Theduthey Rating: 0 out of 5 stars0 ratingsUravu Solla Oruthi Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Uthirvathillai Rating: 0 out of 5 stars0 ratingsVenthu Thaniyum Venjinangal Rating: 0 out of 5 stars0 ratingsPanaiyolaipaai Rating: 0 out of 5 stars0 ratingsNee Thana Andha Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsNaan Thedum Jevvanthi Poovithu Rating: 0 out of 5 stars0 ratingsThol Serum Poomaalai Rating: 0 out of 5 stars0 ratingsAmma Rating: 0 out of 5 stars0 ratingsVadalimaram Rating: 0 out of 5 stars0 ratingsKaathirunthu Kaathirunthu Rating: 0 out of 5 stars0 ratingsThaali Kayiru Rating: 0 out of 5 stars0 ratingsVaa.. Vaa.. Vasanthamey Rating: 0 out of 5 stars0 ratingsPoovey Unnai Nesithean Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Arangerum Neram Rating: 0 out of 5 stars0 ratingsSaathuryam Rating: 0 out of 5 stars0 ratingsKanmaniye... Kadhal Enpathu Rating: 0 out of 5 stars0 ratingsGnabagam Varuthey Rating: 0 out of 5 stars0 ratingsKadaloora Kanavugal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thottathil Oru Veedu
Related ebooks
Thedal Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsIni Vazhkkai Inikkum! Rating: 0 out of 5 stars0 ratingsImaikatha Iravu Rating: 5 out of 5 stars5/5Yathumagi… Rating: 0 out of 5 stars0 ratingsGopuramum Bommaigalum Rating: 0 out of 5 stars0 ratingsUnakkagavey Naan... Rating: 5 out of 5 stars5/5Puthithai Pirantheaney... Rating: 4 out of 5 stars4/5Rail Sneham Rating: 0 out of 5 stars0 ratingsAndharmugam Rating: 0 out of 5 stars0 ratingsAnthikaala Mogam Rating: 0 out of 5 stars0 ratingsT.R.vin Thernthedukkappatta Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Tharkaliga Unnathangal Rating: 0 out of 5 stars0 ratingsParijadha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsTheeyiniley Valar Jyothiye Rating: 5 out of 5 stars5/5Endrendrum Kaadhalan Rating: 0 out of 5 stars0 ratingsKaal Rasi Rating: 0 out of 5 stars0 ratingsMana Kathavu Rating: 0 out of 5 stars0 ratings100 Oru Pakka Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsNandriyudan Nandhini Rating: 0 out of 5 stars0 ratingsDegam... Sandhegam! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalinal Kathaiyumundaam-Sirukathai Thoguppu-2 Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Eliyum Naanum Rating: 0 out of 5 stars0 ratingsKai Serum Neram Rating: 0 out of 5 stars0 ratings‘Mana’vilakku Rating: 0 out of 5 stars0 ratingsIdhaya Regai Rating: 5 out of 5 stars5/5Thirunthivittal Divya! Rating: 0 out of 5 stars0 ratingsEppodhumalla, Eppodhavathu Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thottathil Oru Veedu
0 ratings0 reviews
Book preview
Thottathil Oru Veedu - Irenipuram Paul Rasaiya
https://www.pustaka.co.in
தோட்டத்தில் ஒரு வீடு
Thottathil Oru Veedu
Author:
ஐரேனிபுரம் பால்ராசய்யா
Irenipuram Paul Rasaiya
For more books
https://www.pustaka.co.in/home/author/abibala
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. தோட்டத்தில் ஒரு வீடு
2. அபயக்கரம்
3. அல்ப ஆசை
4. யாருமற்றதொரு குடிசை
5. கட்டவிழும் கரங்கள்
6 எஸ்.எம்.எஸ் சில் ஒரு ஏகாந்தம்
7. பழையன புகுதலும்
8. தொலைந்து போகும் ஞாபகங்கள்
9. பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
10 பார்வை ஒன்று போதுமே
11 நெஞ்சில் ஒரு பாரம்
12 முள்வேலிகள்
13. தன்மான ஆட்டம்
1. தோட்டத்தில் ஒரு வீடு
அலுவலகம் முடிந்து களைப்புடன் வீடு திரும்பினேன். பூட்டியிருந்த அறைகதவின் வாசற்படியில் அமர்ந்திருந்தார் தாமோதரன் பெரியவர். என்னைக்கண்டதும் கையிலிருந்த தடிக்கம்பை தரையில் ஊன்றியபடி மெல்ல எழுந்து வாசற்கதவை திறக்க வழி விலகி நின்றார்.
அவரது முகம், தலை, மார்பு என்று அனைத்து பிரதேசங்களிலும் முடிகள் வெள்ளிகம்பிகள் போல வெளுத்து கிடந்தன. அணிந்திருந்த வெள்ளை ஜிப்பா அழுக்கு படிந்து பழுப்பு நிறமேறி இருந்தது.கட்டியிருந்த வேட்டி சலவைக்குப் போயி வெகுநாட்கள் ஆகியிருக்கக்கூடும். வயது எழுபத்தி ஒன்பது என்று என்றோ ஒருநாள் சொன்னதாய் ஞாபகம்.
நான் தங்கியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளரின் தந்தைதான் இந்த பெரியவர். பெரியவருக்கு அவரது மகன் வீட்டில் தங்க உரிமை இல்லை. ஒரு கிலோமீட்டர் தூரத்தில் யாருமற்றதொரு தோட்டத்தின் நடுவிலிருக்கும் சிறு குடிசையில் தான் ஜீவனம். காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் தன் மகன் வீட்டுக்கு வந்து திண்ணையில் அமர்ந்திருப்பார்.
அவரது நிழல் வீட்டிலுள்ளவர்களின் கண்ணில் பட்டால் தான் அவருக்குரிய ஆகாரத்தை அவருக்கே உரித்தான தட்டில் வைத்து திண்ணையில் வைத்துவிடுவார்கள். பெரியவர் அந்த ஆகாரத்தை தின்று விட்டு திரும்ப காலாற நடந்து தோட்டத்திலிருக்கும் தனது குடிசைக்கு சென்று விடுவார். நான் அந்த வீட்டில் வாடகைக்கு குடியேறி வந்ததிலிருந்து பெரியவர் எனது அறைக்கு வந்து என்னோடு பேசுவது அவருக்கு ஒரு பொழுதுபோக்காக இருந்தது.
தம்பி ஏன் இண்ணைக்கு இவ்வளவு நேரம் தாமதம்!
தனது வாயில் கிடந்த வெற்றிலைச்சாறை துப்பிக்கொண்டே கேட்டார்.
என் நண்பன பார்க்கப் போனதுல தாமதமாயிடிச்சு. நீங்க சாப்பிட்டீங்களா பெரியவரே?
எனக்கேட்டேன். ம்
என்று சொல்லிவிட்டு எனது அறையிலிருந்த வார இதழ்களை புரட்ட ஆரம்பித்தார். நான் உடை மாற்றி விட்டு வந்து டீ போட்டு அவரிடம் நீட்டினேன் பெரியவர் டீயை தேவார்மிதம் பருகுவதைப்போலே மிகவும் ரசித்து குடிக்க ஆரம்பித்தார்.
இரவு பதினொன்று மணிவரை புராணக்கதைகள் தொடங்கி எழுத்தாளர் ஜெயமோகன் கதை வரை சொல்லிக்கொண்டிருந்தார். இருள் மேலும் மேலும் இறுக்கமாகிக்கொண்டே போனது. என்னிடம் பேசிக்கொண்டிருந்தவர் அப்படியே தூங்கிப்போனார். எனது அறையில் ஒருநாள் கூட அவர் தங்கியதில்லை. எவ்வளவு மணி நேரமானாலும் குடிசைக்கு போக வேண்டுமென்று அடம்பிடிப்பார். நானும் எனது இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து அவரது குடிசையில் கொண்டு விட்டு விட்டு வருவேன். அன்று ஏனோ தூக்கத்திலிருந்த அவரை எழுப்ப மனமின்றி தூங்கிப்போனேன்.
சூரியன் ஒழிந்திருந்தது போதுமென்று வெளியில் வர ஆரம்பித்தான். விடியற்காலை ஆறரை மணிக்கு அவருக்கு முழிப்பு வந்து எழுந்த போது ஏதோ செய்யக்கூடாத தவறை செய்துவிட்டவர் போல படபடத்தார். எட்டு மணி வரை என் அறையில் இருந்துவிட்டு பின் வாசல் வழியாக வெளியேறி மறுபடியும் முன்பக்க கேட் வழியாக வந்து காலை டிபனுக்காக அவரது மகன் வீட்டுத் திண்ணையில் காத்திருந்தார்.
பெரியவர் நடந்துகொண்ட விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்று மாலை என் அறைக்கு வந்த போது ஏன் பெரியவரே அப்படி நடந்துகிட்டீங்க!
என்று கேட்டேன்.
என் மகன் வீட்டுலயோ இங்க வாடகைக்கு குடியிருக்கிறவங்க வீட்டுலயோ தங்கக்கூடாதுன்னு என் மகன் சொல்லீட்டான், மீறி தங்குனா சாப்பாடு போடமாட்டேன்னும் சொன்னான்!
வெளியேறத்துடித்த கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டே சொன்னபோது எனக்கும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
ஏன் பெரியவரே வீட்டுல உங்க மகனோ,மருமகளோ,பேரக்குழந்தைகளோ யாருமே உங்ககிட்ட பேசுறதில்ல, அவ்வளவு பெரிய வீடு இருந்தும் உங்கள மட்டும் வீட்டுல தங்கவைக்காம தோட்டத்துல இருக்கிற குடிசையுல தங்கவைச்சிருக்கிறாங்களே ஏன்?
என்து கேள்வியில் பெரியவரின் முகம் சுருங்கியது.
இந்த கேள்விய நீ ஒருத்தந்தான் இதுவரைக்கும் கேக்கல, அதனால தான் உங்கிட்ட அன்யோன்யமா பழகினேன், இப்போ நீயும் கேட்டுட், இனிமே உன் அறைக்கு நான் வரமாட்டேன்!
தடிக்கம்பை ஊன்றியபடி தனது குடிசையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
ச்சே தெரியாம கேட்டுட்டனே!
என்று இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு அவருக்கு பின்னால் சென்றேன்.
என்கூட பேசாதே!
என்று பிடிவாதமாய் நடந்தே தனது குடிசைக்கு சென்றார். எனக்கு தர்ம சங்கடமாகிப்போனது. அன்றிரவு தூக்கம் வராமல் அவரைப்பற்றிய நினைவுகள் திரும்பத் திரும்ப வந்து போயின. மறுநாள் காலையில் டிபன் சாப்பிட வரும்பொழுது அவரை சந்தித்து மன்னிப்பு கேட்கவேண்டுமென்று நினைத்தபடி தூங்கிப்போனேன்.
பொழுது விடிந்து ஒன்பது மணி ஆகியும் பெரியவர் வரவே இல்லை. எனக்கு வேறு அலுவலகம் போக நேரம் ஆகிக்கொண்டிருந்தது. சாயங்காலம் அவரை சந்திக்கலாமென்று தீற்மானித்து அலுவலகம் புறப்பட்டேன்.
மாலை ஆறு மணிக்கு பெரியவர் தங்கியிருக்கும் தோட்டத்து வீட்டுக்கு சென்றேன் அவர் போர்வைக்குள் தனது உடலை மறைத்து படுத்திருந்தார். பெரியவரே!
என்று அழைத்தேன் அவரிடமிருந்து பதிலில்லை ,அவர் உடலை மெல்ல தொட்டு அசைத்தேன்.