Kavithai Arangerum Neram
()
About this ebook
தொலைக்காட்சியின் வருகைக்குப் பிறகு மேடை நாடகங்கள் பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கின்றன. மேடை நாடக நடிகர்கள் ஒரு நாடகத்தை மேடையில் அரங்கேற்ற படும் கஷ்டங்கள் வலிகள் ஆகியவற்றை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது.
பொதுவாக நாடக நடிகைகள் என்றால் அவள்மீது தவறான முத்திரை விழுந்து விடும் இந்த காலகட்டத்தில் சேற்றில் முளைத்த செந்தாமரை போல நாவலின் கதாநாயகி தன்னோடு நடிக்கும் ஒரு நடிகரை மனதார விரும்புகிறாள்.
சமூகம் அவர்களை வசை பாடியதா... இருவரையும் இணைத்து வைத்ததா என்பதை சொல்லும் அழகான நாவல் இது.
பெற்றோர் சம்மதிக்க மறுப்பு காட்டியபோது அவளைக் கரம் பிடிப்பதே முதல் வேலை என்று உறுதி கொண்ட கதாநாயகன் சென்னைக்கு வேலை தேடிச் சென்று வேலை வாங்கி அவளை திருமணம் செய்ய ஊர் வருகிறான்.
வந்த இடத்தில் அவள் காணாமல் போகிறாள். அவளைக் கண்டுபிடித்து கரம் பிடித்தானா இல்லையா என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லப்படும் நாவல்தான்.
கவிதை அரங்கேறும் நேரம். சுகமான காதல் காவியம்.
Read more from Irenipuram Paul Rasaiya
Kadaloora Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsThol Serum Poomaalai Rating: 0 out of 5 stars0 ratingsOrupakka Kathaigal Ezhuthuvathu Yeppadi...? Rating: 0 out of 5 stars0 ratingsKoothadiyum Naaru Pettiyum Rating: 0 out of 5 stars0 ratingsGnabagam Varuthey Rating: 0 out of 5 stars0 ratingsAmma Rating: 0 out of 5 stars0 ratingsThaali Kayiru Rating: 0 out of 5 stars0 ratingsPoovey Unnai Nesithean Rating: 0 out of 5 stars0 ratingsThottathil Oru Veedu Rating: 0 out of 5 stars0 ratingsPanaiyolai Rating: 0 out of 5 stars0 ratingsNee Thana Andha Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsGnabagankal Thaalaattum Rating: 0 out of 5 stars0 ratingsSaathuryam Rating: 0 out of 5 stars0 ratingsVadalimaram Rating: 0 out of 5 stars0 ratingsUravu Solla Oruthi Rating: 0 out of 5 stars0 ratingsPanaiyolaipaai Rating: 0 out of 5 stars0 ratingsVaa.. Vaa.. Vasanthamey Rating: 0 out of 5 stars0 ratingsKaathirunthu Kaathirunthu Rating: 0 out of 5 stars0 ratingsKanmaniye... Kadhal Enpathu Rating: 0 out of 5 stars0 ratingsVenthu Thaniyum Venjinangal Rating: 0 out of 5 stars0 ratingsNaan Thedum Jevvanthi Poovithu Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Kann Theduthey Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Uthirvathillai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kavithai Arangerum Neram
Related ebooks
Yamunavin 48 mani neram Rating: 0 out of 5 stars0 ratingsMun Anthi Saral Nee... Rating: 5 out of 5 stars5/5Natchathira Kutram Rating: 0 out of 5 stars0 ratingsMedai Nadagangal + Thiraipadangal - Oru Paarvai Rating: 0 out of 5 stars0 ratingsPrayachchitham Rating: 4 out of 5 stars4/5கோவையில் ஒரு குற்றம் Rating: 0 out of 5 stars0 ratingsKovaiyil Oru Kutram Rating: 5 out of 5 stars5/5Kavarchi Illamal Kalyanama? Rating: 0 out of 5 stars0 ratingsSnehamai Oru Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsNeengatha Nila Rating: 0 out of 5 stars0 ratingsPannaiyar Magal Rating: 0 out of 5 stars0 ratingsMella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Bramma Kanave Pratisha! Rating: 0 out of 5 stars0 ratingsVarugiraal Unnai Thedi Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Abaayam Rating: 3 out of 5 stars3/5Oru Maalai Nera Maranam Rating: 5 out of 5 stars5/5Apple Pasi Rating: 0 out of 5 stars0 ratingsGopura Kalasangal Rating: 5 out of 5 stars5/5Oozhikkaala Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsNadigai Rating: 0 out of 5 stars0 ratingsNeethana... Nijamthana? Rating: 0 out of 5 stars0 ratingsTheerpu Thedi Varum! Rating: 5 out of 5 stars5/5Ini Min Mini Rating: 5 out of 5 stars5/5Varuvaayaa Vaasamullaiye Rating: 5 out of 5 stars5/5Appusamiyin Thaali Bakkiyam Rating: 0 out of 5 stars0 ratingsSathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Ver Pidikkum Mann Rating: 0 out of 5 stars0 ratingsThottathellam Pon Rating: 5 out of 5 stars5/5Appusamy Paritchai Ezhuthukirar! Rating: 0 out of 5 stars0 ratingsEzhuthoor Kolai Case Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kavithai Arangerum Neram
0 ratings0 reviews
Book preview
Kavithai Arangerum Neram - Irenipuram Paul Rasaiya
http://www.pustaka.co.in
கவிதை அரங்கேறும் நேரம்
Kavithai Arangerum Neram
Author :
ஐரேனிபுரம் பால்ராசய்யா
Irenipuram Paul Rasaiya
For more books
https://www.pustaka.co.in/home/author/irenipuram-paul-rasaiya
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் - 1
அத்தியாயம் – 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் – 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
கவிதை அரங்கேறும் நேரம்
நலிந்த கலைகளில் ஒன்று நாடகக் கலை. ஒவ்வொரு வீடுகளிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்து நாடகங்களை வீடுகளுக்குள் நுழைத்த போது பொது வீதியில் நாடகம் நடந்தாலும் பார்வையாளர்கள் குறைந்து நாடகக் கலை பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கிறது.
அந்த கலையை நிகழ்த்தும் பெண் நடிகைகள் சமூகத்தில் தவறாகவே பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் வலிகளை, அவர்களது உணர்வுகளை, அவர்களது காதலை இந்த நாவலில் பதிவு செய்திருக்கிறேன்.
ஒரு நடிகை மனதிற்கு பிடித்த ஒருவனை காதலித்தால் இந்த சமூகம் அவளை எப்படி பார்க்கிறது, நாடகக் கலை நிகழ்த்தும் கலைஞர்கள் படும் வலிகள், வேதனைகள் இந்த நாவலில் இடம் பிடித்திருக்கின்றன.
நாடகம் சார்ந்த நாவல் என்றாலும் விறுவிறுப்பைக் கூட்டி ஒரு தூய்மையான காதலை படம் பிடிக்கிறது இந்த கவிதை அரங்கேறும் நேரம் நாவல். வாசியுங்கள், நேசியுங்கள். தொடர்ந்து ஆதரவு தரும்படி அன்போடு விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
ஐரேனிபுரம் பால்ராசய்யா.
அத்தியாயம் - 1
காற்றுக்கு அகோரப்பசியோ என்னவோ இரைந்து கொண்டே இருந்தது. ஊழிக்காற்றின் இரைச்சலுக்கு நிலத்தில் கிடந்த சருகுகள் எழுந்து பறந்தன. காற்றின் அழுத்தம் குறைய இலைகளை பூமி திரும்ப இழுத்துக் கொண்டது.
ஆங்காங்கே சுழல்காற்று சுருட்டியதில் தரையில் கிடந்த தூசிகளும் இலைகளும் வட்டமிட்டபடி வேறு இடம் நகர்ந்தன. பெரும் காற்றுக்குப் பின்னால் மழை சோவென கொட்டியது.
முதல் துளிகள் பூமியில் பட்டு தெறித்தது. மழைக்கு வேண்டுதலோ என்னவோ நிறுத்திக் கொள்ள மனமின்றி அதிக நேரம் எடுத்துக் கொண்டு ஆட்டம் போட்டது...
அது ஒரு நண்பகல் நேரம், சூரியனை அண்ணார்ந்து பார்த்தாலும் பார்வைக்குக் கிடைக்கவில்லை. சிகப்பு புடவையில் சுமாராக இருந்தாள் அம்சபிரியா. முகத்தில் சுருக்கங்கள் மலிந்து கிடந்தன...
உடல் தளர்ந்து இருந்தன. வயது ஐம்பதைக் கடந்து இருந்தாலும் மேக்கப் போடும்போது பத்து வயது குறைந்து விடும் என்ற அல்ப ஆசை அவளிடமிருந்தது.
அவளது கணவன் ஆறுமுகம் இருந்தவரை அவளுக்கு கவலையில்லை. ஆட்டோ ஓட்டியும், இரவில் நடக்கும் அமைச்சூர் மேடை நாடகங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு மேக்கப் போட்டும் வருமானம் வந்து கொண்டிருந்தது.
ஒரே மகள் அர்ச்சனா மதுரையில் ஒரு ஹாஸ்டலில் டிகிரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தாள்.
அம்சபிரியாவின் கணவன் ஆறுமுகம் போய்ச் சேர்ந்த பிறகு வாழ்க்கையை நகர்த்த வருமானம் இன்றியும் வேறு வழி இன்றியும் மேடை நாடகங்களில் நடிக்க வந்தாள்.
வயதான அம்சபிரியா முகத்தில் மேக்கப் கொஞ்சம் தூக்கலாக போட்டு இழந்து போன இளமையை திரும்ப எடுத்து வரப் பார்த்தாள் ஆனாலும் அருகிலிருந்து அவளை பார்க்கும் இளவட்ட நடிகர்கள் முகம் சுளிப்பதை பார்த்து மனம் வருந்துவாள்.
ஊர் கோவில் திருவிழாக்களில் நடைபெறும் நாடகங்களுக்கு நெல்லை, திருச்செந்தூர், மதுரை, கோவை போன்ற ஊர்களிலிருந்து நாடகம் நடிக்க பெண்கள் வருவார்கள், இப்பொழுது அப்படியில்லை இளம் வயது நடிகைகள் யாரும் முன்வருவதில்லை.
வயதான நடிகைகள் மொத்தம் ஐந்து பேர்கள் மட்டுமே இருந்தார்கள். எல்லோரும் நடுத்தர வயது தாண்டியவர்கள். வேறு வழியின்றி அவர்களை அழைத்து வந்து நாடகம் நடத்தும் கட்டாயம் நாடக இயக்குனர்களுக்கு இருந்தது.
அன்று அம்சபிரியாவுக்கு ஒரு நாடகம் புக் ஆகியிருந்தது. மதியம் சாப்பிட்டு விட்டு புறப்பட்டு விட்டால் இரண்டரை மணிக்கெல்லாம் நாடகம் நடைபெறும் இடத்திற்கு போய்விடலாம் வெளியே மழை நின்று பெய்துகொண்டிருந்தது.
அம்சபிரியா என்ன செய்வதென்று தெரியாமல் மழையை வேடிக்கை பார்த்தபடி மழை நிற்க்கட்டும் போகலாம் என்று காத்திருந்தாள். அவளோடு சேர்ந்து நடிக்கும் அனுசுயாவுக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்தாள். அலைபேசி ஒலிக்கவே எடுத்து குரல் தந்தாள்.
இப்ப என்னடி பண்றது... மழை இப்படி வெளுத்து வாங்குது
அங்கலாய்ப்போடு சொன்னாள் அம்சபிரியா.
இருங்கக்கா…. கொஞ்ச நேரத்தில மழை நின்னுடும் அதுக்கப்புறம் போகலாம்
சடையன்குழிக்கு ஒன்றரை மணிக்கு போற பஸ் போய்டுமே…
போனா போகட்டும்… நமக்கு கருங்கல் போயிட்டு அங்கிருந்து மினி வேன் பிடிச்சு போயிடலாம்
லேட்டாகுமே… சரியா ரெண்டு மணிக்கு போகலையின்னா டைரக்டர் கத்துவான்
கத்துனா என்ன பண்ணமுடியும், மழை இந்த வாங்கு வாங்குது… சொல்லிக்கலாம், மழை நின்னதும் நேரா ஆட்டோ பிடிச்சு நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்ட் வந்துடுங்க… நானும் வந்துடுறேன்
சரிம்மா
அம்சபிரியா அலைபேசியை துண்டித்துவிட்டு மழை பெய்வது துண்டிக்கப்படாதா என்று ஏக்கமாய் பார்த்தாள். மழைக்கு அவள் மீது இரக்கம் பிறந்ததோ என்னவோ மழையின் வேகம் மெல்ல மெல்ல குறையத் துவங்கியது.
அம்சபிரியாவின் முகம் பிரகாசிக்கத் துவங்கியது. சற்று நேரத்திற்கெல்லாம் மழை தன் கூப்பாட்டை நிறுத்திக்கொண்டது. அம்சபிரியா எடுத்து வைத்திருந்த துணிமணிகள், மேக்கப் சாதனங்கள் அடங்கிய பேகை தூக்கியபடி அருகில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்தாள்.
ஆட்டோ டிரைவர் குமார் புன்னகை சிந்த அவளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டான்.
என்னக்கா… இண்ணைக்கு எங்க ப்ரோக்ராம்
சடையன்குழி
அது எங்க இருக்கு
புதுகடைக்கு முன்னாடி
நாடகம் முடிஞ்சு நைட் வந்துடுவீங்களா...? இல்ல… காலையிலே தான் வருவீங்களா…?
அந்த ஊர்ல நைட் எங்கப்பா பஸ் இருக்கு… நாடகம் முடிஞ்சு சீன் செற்று ஓணர் வீட்ல படுத்துட்டு விடியற்காலையில முத பஸ்ஸ பிடிச்சி புறப்பட்டு வந்துடுவேன்… காலையில எட்டு மணி ஆகிடும்
வந்தா எனக்கு போன் பண்ணுங்க… நானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்
சரிப்பா
ஆட்டோ வடசேரி பஸ் ஸ்டாண்டுக்கு முன்பு வந்து நின்றது. அம்சபிரியா ஆட்டோவை விட்டு இறங்கி பஸ் நிலையத்திற்குள் நடந்தாள்.
ஏற்கனவே அனுசுயா வந்து வழக்கமாக நிற்கும் இடத்தில் காத்திருந்தாள். இருவரும் கருங்கல் செல்லும் பஸ்ஸில் ஏறினார்கள். டிக்கெட் எடுத்துவிட்டு அன்று இரவு நடிக்கும் நாடகத்தின் சீட்டாவை எடுத்து இருவரும் படிக்க ஆரம்பித்தார்கள்,
பாதி தூரம் சென்றதும் அம்சபிரியாவுக்கு தூக்கம் வர ஜன்னலோரம் தலைசாய்த்து தூங்கினாள். அனுசுயாவுக்குத்தான் அந்த நாடகத்தின் கதாநாயகி வேடம். அம்சபிரியாவுக்கு காமெடி வேடம் அதனால் அவள் கவலையின்றி தூங்கினாள்.
மூன்று மணிக்கெல்லாம் மினி வேன் சடையன்குழிக்கு வந்து சேர்ந்தது. இருவரும் அவரவர் பைகளை தூக்கிக்கொண்டு இறங்கினார்கள் ரிகர்சல் நடக்கும் இடம் சற்று தள்ளி இருந்தது. அதுவரை பேக்கை தூக்குவது என்பது இருவருக்கும் பெரும்பாடாக இருந்தது.
அந்த வீட்டின் மாடிப் படியேறி வந்து சேர்ந்தபோது நாடக இயக்குனர் தேவகுமார் சிடுசிடுத்தான்.
ஏன் லேட்டு… உங்களுக்கு தினமும் இதே பொழப்புதான் நாடகம் புக் பண்ணினா கரெக்டா வர மாட்டீங்க… இப்பவே முக்கால் மணி நேரம் லேட்… இனி நாங்க எப்ப ரிகர்சல் போட்டு முடிகிறது
"தம்பி ஏன் இப்படி பேசுற… நாகர்கோவில்ல பெரிய