Uravu Solla Oruthi
()
About this ebook
பூவாய் பிறந்தாலும் பொன்விரல்கள் தீண்டலையே நான் பூமாலை ஆகலையே என்று அரளிப்பூக்கள் அழுவதாய் மேத்தாவின் கண்ணீர் பூக்கள் கவிதை சொல்லும். திருமணம் ஆகாமல் ஜன்னல் கைதிகளாய் ஏங்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் திருமணம் குறித்த ஏக்கங்கள், ஆசைகள், மோகங்கள் எல்லாவற்றையும் மனதில் அடக்கி திருமணம் நடக்குமா…? தன் வாழ்வில் பூங்காற்று திரும்புமா என்று கவலைப்படும் பெண்ணின் கனவுகள் நாவலை நனைத்திருக்கிறது.
பெற்றோருக்காக இளமையில் வலிய வந்த காதலை உதறிவிட்டு பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட காத்திருந்த ஒரு அபலைப் பெண்ணுக்கு கடைசியில் தன்னை திருமணம் செய்து கொள்ள ஒரு முதிர்ந்த ராஜகுமாரனாவது வரமாட்டானா என ஏங்கித் தவிக்கும் ஒரு அபபைப் பெண்ணின் மன வலியை இறக்கி வைக்கிறது இந்த நாவல்.
வாசித்தால் வசமாவீர்கள். வாசியுங்கள்.
Read more from Irenipuram Paul Rasaiya
Thaali Kayiru Rating: 0 out of 5 stars0 ratingsKoothadiyum Naaru Pettiyum Rating: 0 out of 5 stars0 ratingsKaathirunthu Kaathirunthu Rating: 0 out of 5 stars0 ratingsPanaiyolaipaai Rating: 0 out of 5 stars0 ratingsOrupakka Kathaigal Ezhuthuvathu Yeppadi...? Rating: 0 out of 5 stars0 ratingsKadaloora Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsVadalimaram Rating: 0 out of 5 stars0 ratingsNaan Thedum Jevvanthi Poovithu Rating: 0 out of 5 stars0 ratingsThottathil Oru Veedu Rating: 0 out of 5 stars0 ratingsSaathuryam Rating: 0 out of 5 stars0 ratingsAmma Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Kann Theduthey Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Uthirvathillai Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Arangerum Neram Rating: 0 out of 5 stars0 ratingsGnabagankal Thaalaattum Rating: 0 out of 5 stars0 ratingsPanaiyolai Rating: 0 out of 5 stars0 ratingsGnabagam Varuthey Rating: 0 out of 5 stars0 ratingsPoovey Unnai Nesithean Rating: 0 out of 5 stars0 ratingsThol Serum Poomaalai Rating: 0 out of 5 stars0 ratingsVenthu Thaniyum Venjinangal Rating: 0 out of 5 stars0 ratingsKanmaniye... Kadhal Enpathu Rating: 0 out of 5 stars0 ratingsVaa.. Vaa.. Vasanthamey Rating: 0 out of 5 stars0 ratingsNee Thana Andha Kuyil Rating: 0 out of 5 stars0 ratings
Related to Uravu Solla Oruthi
Related ebooks
Ellarukkum Pidikkum Kavithai! Rating: 0 out of 5 stars0 ratingsMogam Enbathu Ithuthano? Rating: 0 out of 5 stars0 ratingsSorna Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsTheerkka Sumangali Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalin Deepam Ondru... Rating: 0 out of 5 stars0 ratingsVanavil Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsAnalai Kaayum Ambuligal Rating: 5 out of 5 stars5/5Thinai Maalai Nootraimbathu Rating: 0 out of 5 stars0 ratingsYasothaigal Rating: 0 out of 5 stars0 ratingsUndhan Manam Nandhavanam Rating: 5 out of 5 stars5/5Marainthirukkum Marmam Rating: 0 out of 5 stars0 ratingsOru Thai Uruvaagiral Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Rosavey Rating: 0 out of 5 stars0 ratingsKakkaigalin Iravu Rating: 0 out of 5 stars0 ratingsOreedam Nee Tharuvaai Rating: 4 out of 5 stars4/5ஓரிடம் நீ தருவாய் Rating: 0 out of 5 stars0 ratingsIlanthai Mara Ilaigalai Ennukiravan Rating: 0 out of 5 stars0 ratingsVasantham Varum Rating: 0 out of 5 stars0 ratingsThevai Oru Devathai Rating: 0 out of 5 stars0 ratingsEzhu Swarangal Paadum Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsMalathi Oru Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsKarai Thodatha Alai Rating: 0 out of 5 stars0 ratingsOru Uyirin Kural Rating: 0 out of 5 stars0 ratingsPuyalai Oru Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsMara Seeppu Rating: 0 out of 5 stars0 ratingsBala Thiripurasundari Rating: 0 out of 5 stars0 ratingsSorna Jaalam Rating: 5 out of 5 stars5/5Thalaimuraigal Rating: 0 out of 5 stars0 ratingsManakukai Ooviyamaai... Rating: 5 out of 5 stars5/5Aanandha Thaandavam Rating: 5 out of 5 stars5/5
Reviews for Uravu Solla Oruthi
0 ratings0 reviews
Book preview
Uravu Solla Oruthi - Irenipuram Paul Rasaiya
https://www.pustaka.co.in
உறவு சொல்ல ஒருத்தி
Uravu Solla Oruthi
Author:
ஐரேனிபுரம் பால்ராசய்யா
Irenipuram Paul Rasaiya
For more books
https://www.pustaka.co.in/home/author/irenipuram-paul-rasaiya
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 1
பனி விழும் மார்கழி மாதம். இரவில் விழுந்த பெளர்ணமி வெளிச்சத்தின் மிச்சம் விலகாமல் இருந்தது. சாயங்கால பகல் போல வெளிச்சம் அடர்ந்து இருந்தது.
விடியப்போகிறது என்ற பறவைகளின் கீச்சுக்குரல்கள் கேட்டுக் கொண்டே இருந்தன. சேவல்களின் குரல்கள் தனி அடையாளமாய் கேட்டது.
காற்றின் சலசலப்பு தென்னை மர கீற்றுகளில் பளிச்சிட்டது. பழுத்த இலைகள் மரக்கிளைகளிலிருந்து விழும் சத்தம் கூட துல்லியமாய் கேட்டது. செடிகளில் பூத்த மலர்களின் வாசம் காற்றில் கலந்திருந்தது.
சூரியன் வந்துவிட்டால் நம் ஆயுள் முடிந்துவிடும் என்ற கவலையின்றி பனித்துளிகள் புல் மெத்தைகளில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தன.
அதிகாலை நான்கு மணிக்கு அலாரம் வைக்காமலெயே எழுந்தாள் மரகதம். அணைந்திருந்த விளக்குகளை எரியவிட்டாள், அவள் கால்கள் தானாகவே சமையலறை நோக்கி நகர்ந்தன.
அடுப்பை பத்த வைத்து வறக்காப்பிக்கு பாத்திரத்தில் தண்ணீர் ஊத்தி வைத்து விட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கணவர் கருப்பசாமியை எழுப்பினாள்.
ஏங்க…மணி நாலு ஆகப்போவுது எந்திரிங்க
மரகதம் அவர் உடம்பை லேசாய் அசைத்தபடி சொன்னாள்.
கருப்பசாமி எழுந்து கடிகாரத்தில் மணி பார்த்துவிட்டு எழுந்து வெளியே போனார். கருப்பசாமிக்கு வயது அறுபதைத் தாண்டி இருந்தாலும் கடின உழைப்பில் உடல் முறுக்கேறி இருந்தது.
ஆறடிக்கு சற்றே குறைவான உயரம், விரிந்த மார்பில் அடர்த்தியான ரோமங்கள் கறுப்பு வெள்ளை நிறத்தில் சுருண்டு கிடந்தன.
எந்த கடும் குளிருக்கும் அசராமல் இருந்தது அவரது மேலாடை அணியாத மார்பு. நீண்ட மீசையில் சில முடிகள் மட்டுமே கறுத்திருந்தன, மீதமுள்ள முடிகளும் தாடியும் நரைத்திருந்தன.
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து உழைக்கத் துவங்கினால் பொழுது சாயும் வரை அவருக்கு அவரது தோட்டத்தில் வேலை இருந்து கொண்டே இருக்கும்.
மரகதம் வீட்டின் வடக்கு அறையில் படுத்திருந்த மூத்த மகன் முத்துக்கருப்பன் அறைக் கதவை தட்டினாள்.
இதா வர்றேன் அத்தே
என்று உள்ளேயிருந்து குரல் கொடுத்தாள் முத்துக்கருப்பனின் மனைவி அஞ்சலை. அறையில் படுத்திருந்த முத்துக்கருப்பனை தட்டி எழுப்பினாள்.
அவன் எழுந்து விரல்களால் கண்களைத் தடவிக்கொண்டே அறையிலிருந்த கழிவறைக்குச் சென்றான். முத்துக்கருப்பனுக்கு முப்பது வயது முடிய இன்னும் சில மாதங்கள் மிதமிருந்தன.
உழைப்பின் மூலமாக மார்பு பலமாய் விரிந்திருந்தது. வயிறு சுருங்கிக் கிடந்தது. பசி வரும்போது வயிறு உள்ளே போனதுபோல் தோன்றும். அவனுக்கு வயது அதிகமாகிப்போனாலும் தொப்பை விழுவதற்க்கான் அறிகுறி எதுவும் இருக்கவில்லை
முத்துக்கருப்பன் மூத்தவன் என்பதால் கூடுதல் பொறுப்பு அவனிடம் இருந்தது. அவனது அப்பாவுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் ஆலோசனை சொல்லும் அளவுக்கு வல்லமை பெற்றிருந்தான்.
அவன் சொல்வதைத் தான் வீட்டில் அனைவரும் கேட்டார்கள். திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் முடிந்திருந்தன. இரண்டு வயதுக் குழந்தை அகிலன் அந்த வீட்டின் செல்லக் குழந்தை
வலிய வந்த கொட்டாவியை தடுக்காமல் வாய் திறந்து காற்றை வெளியேற்றிவிட்டு அறைக்கதவைத் திறந்து கொண்டு சமையலறைக்கு வந்தாள் அஞ்சலை.
மரகதம் தெற்கு அறையில் படுத்திருந்த இரண்டாவது மகன் வாசுதேவன் அறைக்கதவைத் தட்ட வாசுதேவன் கண் விழித்தான்.
இதா வர்றேம்மா
குரல் கொடுத்துவிட்டு பக்கத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மனைவி மல்லிகாவை உலுக்கினான். அவள் உடல் அசைந்தாலும் அயர்ந்த தூக்கம் அவளை விட்டு அகலாமல் இருந்தது.
வாசுதேவன் மீண்டும் பலமாய் உலுக்க கோபத்தில் கண் விழிதது விட்டு மீண்டும் போர்வையை இழுத்து முகம் மறைத்து தூங்க ஆரம்பித்தாள்.
வாசுதேவனுக்கு வயது இருபத்தி எட்டு இருக்கும் சென்ற வருடம் தான் மல்லிகாவை மணம் செய்திருந்தான். இரண்டு வருடம் கழிந்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தார்கள்.
வாசுதேவனும் அவன் அப்பாவைப்போல நல்ல உயரமும், விரிந்த மார்பும் உடையவனாக இருந்தான். கிருதாவை தாடை வரை நீட்டமாக வைத்து மீசையை அதன் அருகில் சேரும்படி வைத்து விட்டு மீதி இடங்களை காலியாக விட்டிருந்தான்.
இனி தூங்க முடியாது என்று முடிவுக்கு வந்து முகம் சுளித்தபடி படுக்கையை விட்டு எழுந்து சமையலறைப் பக்கம் வந்து இரண்டு டம்ளர்களில் காப்பியை எடுத்து வந்து வாசுதேவனுக்கு கொடுத்து விட்டு அவளும் குடித்தாள்.
கடிகாரத்தின் முட்கள் நான்கரையைத் தொட்டபோது மூவரும் ஆளுக்கொரு கத்தியும் டார்ச் லைட்டும் மூங்கில் கூடைகளையும் எடுத்துக்கொண்டு புறப்படத் தயாரானார்கள். கத்தியின் கூர்மை கைகளை கிழித்து விடாமலிருக்க அதற்கு உறை போட்டிருந்தார்கள்.
மரகதமும், அஞ்சலையும், மல்லிகாவும் வீட்டின் வெளியே வந்து மூவரையும் வழி அனுப்பி வைத்துவிட்டு அவர்கள் போகும் வரை அவர்களைப் பார்த்தபடியே நின்றிருந்தார்கள்.
பெளர்ணமி வெளிச்சத்தை மொத்தமாய் மறைத்திருந்தது வீட்டின் அருகாமையில் இருந்த நான்கு ஏக்கர் தோட்டத்தில் வளர்ந்து கிளை பரப்பி நின்ற ரப்பர் மரங்கள்.
ஒரு அடர்ந்த வனம் போல அந்தப் பகுதி இருந்தது. பகலில் சூரியன் நடு உச்சிக்கு வரும்போது மட்டும் வெளிச்சம் கீழே விழுந்து கிடந்தது மீதி நேரங்களில் லேசான இருள் மரங்களுக்கடியில் இருப்பது போல் தெரியும்.
கருப்பசாமியும், முத்துக்கருப்பனும், வாசுதேவனும் வழக்கம்போல அவரவர் திசைகளைத் தெரிந்து கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். ரப்பர் மரங்கள் காற்றில் சலசலத்தன.
அது தங்களின் உடல்களைக் கீறி வெள்ளை ரத்தம் எடுக்க வரும் மூவரையும் பார்த்து அழும் அழுகுரலாகவே கேட்டது.
ரப்பர் மரங்களில் வெட்டப்பட்டிருந்த இடத்தில் கடைசித் துளி உறைந்து ஓட்டுக்கறையாக மரத்தில் உறைந்து இருந்தது. நெடு நீளமாய் இருந்த ஒட்டுக்கறையை கருப்பசாமி இழுத்த போது அது ஜவ்வு போல் நீண்டு கழன்று கையில் வந்தது.
கையிலிருந்த மூங்கில் கூடையில் அந்த வெட்டுக்கறையைப் போட்டுவிட்டு வலது கையால் மரத்தின் அடிப்பாகத்திலிருந்து இரண்டடி உயரத்தில் ஏற்கனவே வெட்டிய பகுதிக்கு மேலாக கத்தியால் சுற்றி வளைத்து அறுத்தான்.
இறைச்சிக்காக வெட்டப்படும் ஆட்டை தரையில் சாய்த்து அதன் கழுத்தை கத்தியால் அறுக்க விருட்டென்று பீறிட்டு எழும் ரத்தத்தைப்போல வெள்ளை நிறத்தில் ரப்பர் பால் கீழே வைத்திருந்த அலுமினிய சிரட்டையில் வடிய ஆரம்பித்தது.
கருப்பசாமி அடுத்த மரத்துக்கு நகர்ந்தான். அந்த தோட்டத்தில் மொத்தம் ஆயிரத்து ஒன்று மரங்கள் இருந்தன. மூவரும் அதை மூன்றாய் பிரித்து வெட்டிக் கொண்டு போனார்கள்.
மரகதம் சமையலறைக்கு அருகிலிருந்த அறையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மகள்கள் அனந்தலெட்சுமியையும், தங்கலெட்சுமியையும் தட்டி எழுபினாள்.
இருவரும் கண் விழித்தாலும் எழும்ப மனமின்றி படுத்தே கிடந்தனர். மரகதம் லேசாய் சூடு ஆறிய காப்பியை கொண்டு வந்து வைத்தாள்.
" மணி நாலரைக்கு மேல ஆயாச்சு, இன்னும் என்னடி தூக்கம், எந்திரிச்சி படியுங்கடி..!’ மரகதம் போட்ட சத்தத்தில் இருவரும் போர்வையை விலக்கி விட்டு எழுந்து அருகிலிருந்த காப்பியை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்கள்.
மூன்றாவது மகள் அனந்தலெட்சுமி நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் எம்,ஏ தமிழ் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தாள்.
இரண்டு ஆண் மகன்கள் போதுமென்று நினைத்திருந்தார் கருப்பசாமி. ஒரு பெண் குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும் என்று மரகதம் ஆசைப்பட அந்த முயற்சி உடனடியாகக் கைக்கூடவில்லை.
ஆறு ஆண்டுகள் கழிந்த பிறகே மூன்றாவது மகள் அனந்தலெட்சுமி பிறந்தாள். அவளுக்கு இப்போது வயது இருபத்தி இரண்டு ஆகியிருந்தது. நல்ல கலையான முகம். ஒல்லியான தேகம்.