Yasothaigal
By Subra Balan
()
About this ebook
இது என்னுடைய ஐந்தாவது சிறுகதைத் தொகுதியாக மலர்கிறது. ஒரு கணக்குப் பார்த்தால், நான் எண்ணிக்கையில் அதிகமான சிறுகதைகளை எழுதி விடவில்லைதான். ஒரு நூறைச் சற்றே தாண்டலாம், அவ்வளவே. ஆயினும் ஆரோக்கியமான சிந்தனைகளைப் பதிவு செய்திருக்கிறேன் என்கிற நம்பிக்கையும், சந்தோஷமும் நிறையவே இருக்கிறது.
மிகப் பெரும்பாலான கதைகள் நான் பழகிய, பழகும் மனிதர்களை நினைவூட்டக் கூடும். நிஜமான வாழ்க்கையிலேயே ஏராளமாய் சுவைகள் மலிந்துள்ளபோது, கற்பனையை வலிந்து போய்த் தேடிக் கொண்டிருப்பானேன்? எனினும் அறிவியல் நோக்கில் எழுதப்பட்டுள்ள சில கதைகள் அதற்கு விலக்கானவை என்று தோன்றலாம். அது முழுமையான உண்மையில்லை, ஒரளவு என்னுள், என்னைச் சுற்றி ஏற்படுகிற உணர்வுகளை மையப்படுத்தியே அறிவியலையும் எடுத்துக் கொள்கிறேன். இந்தத் தொகுப்பில் உள்ள 'பூச்சி...', 'தொட்டில்' இரண்டும் அவ்வகையில்....
என்னைப் படிக்கிறவர்களுக்கு எப்போதும் நன்றி; எப்படி விமர்சித்தாலும் சரியே!
ஸாயிரம்!
மிக்க அன்புடன்
- சுப்ர. பாலன்
Read more from Subra Balan
Silambu Salai Rating: 0 out of 5 stars0 ratingsUlagam Enbathu... Rating: 0 out of 5 stars0 ratingsThalangalin Tharisanam Rating: 0 out of 5 stars0 ratingsPulveli Payanangal Rating: 0 out of 5 stars0 ratingsVellam Vadintha Piragu… Rating: 0 out of 5 stars0 ratingsYathumagi Ninraal! Rating: 0 out of 5 stars0 ratingsArul Tharum Aalayangal Rating: 0 out of 5 stars0 ratingsKanavugalukku Kaathiruthal Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chinna Kathaigal 100 Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Oor Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsMelidangal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Yasothaigal
Related ebooks
Kana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Kannadi Konangal Rating: 4 out of 5 stars4/5Theerkka Sumangali Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalin Deepam Ondru... Rating: 0 out of 5 stars0 ratingsSorna Jaalam Rating: 5 out of 5 stars5/5Bommai Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsRajamadhangi Rating: 5 out of 5 stars5/5Thulli Thiriyum Ninaivalaigal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsSaathan Sollai Thattu Rating: 0 out of 5 stars0 ratingsJarigai Siraigal Rating: 4 out of 5 stars4/5Thottu Vidum Thooram Rating: 0 out of 5 stars0 ratingsSollattuma Konjam? Rating: 0 out of 5 stars0 ratingsEllarukkum Pidikkum Kavithai! Rating: 0 out of 5 stars0 ratingsKudumbam Oru Kathambam Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe...! Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsMouna Kanavu Rating: 5 out of 5 stars5/5வசந்தம் வருமா..? Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Padikkalam Rating: 0 out of 5 stars0 ratingsManakukai Ooviyamaai... Rating: 5 out of 5 stars5/5Oru Sivappu Patchaiyaakirathu Rating: 0 out of 5 stars0 ratingsBrahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Thirumbi Paar Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - January 2019 Rating: 0 out of 5 stars0 ratingsPinangalin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsSwarangal Rating: 0 out of 5 stars0 ratingsJaithu Kattuvom Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Malathi Rating: 0 out of 5 stars0 ratingsEnnavarey Mannavarey Rating: 0 out of 5 stars0 ratingsSittukuruvi Rating: 0 out of 5 stars0 ratingsMaya Nathiyile Naan...! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Yasothaigal
0 ratings0 reviews
Book preview
Yasothaigal - Subra Balan
http://www.pustaka.co.in
யசோதைகள்
Yasothaigal
Author:
சுப்ர. பாலன்
Subra Balan
For more books
http://pustaka.co.in/home/author/subra-balan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளக்கம்
என்னுரை
1. பச்சரிசி மாங்காயும் பக்கத்து வீடும்
2. மயிலிறகுகள்
3. யசோதைகள்
4. ஒரு யுத்த காண்டம்
5. இருபத்திரண்டாம் பக்கத்து மூலை
6. காதல் வந்த நேரம்
7. சுமையான சுகம்
8. இவள் ஒரு தனி ரகம்!
9. சத்திய மூர்த்தியின் காக்கைகள்
10. பொறியில் சில எலிகள்
11. பூச்சி...!
12. சலனங்கள்
13. இவளும் இவள் பல்வலியும்
14. தொட்டில்
என்னுரை
இது என்னுடைய ஐந்தாவது சிறுகதைத் தொகுதியாக மலர்கிறது. ஒரு கணக்குப் பார்த்தால், நான் எண்ணிக்கையில் அதிகமான சிறுகதைகளை எழுதி விடவில்லைதான். ஒரு நூறைச் சற்றே தாண்டலாம், அவ்வளவே. ஆயினும் ஆரோக்கியமான சிந்தனைகளைப் பதிவு செய்திருக்கிறேன் என்கிற நம்பிக்கையும், சந்தோஷமும் நிறையவே இருக்கிறது.
மிகப் பெரும்பாலான கதைகள் நான் பழகிய, பழகும் மனிதர்களை நினைவூட்டக் கூடும். நிஜமான வாழ்க்கையிலேயே ஏராளமாய் சுவைகள் மலிந்துள்ளபோது, கற்பனையை வலிந்து போய்த் தேடிக் கொண்டிருப்பானேன்?
எனினும் அறிவியல் நோக்கில் எழுதப்பட்டுள்ள சில கதைகள் அதற்கு விலக்கானவை என்று தோன்றலாம். அது முழுமையான உண்மையில்லை, ஒரளவு என்னுள், என்னைச் சுற்றி ஏற்படுகிற உணர்வுகளை மையப்படுத்தியே அறிவியலையும் எடுத்துக் கொள்கிறேன். இந்தத் தொகுப்பில் உள்ள 'பூச்சி...', 'தொட்டில்' இரண்டும் அவ்வகையில்....
என்னைப் படிக்கிறவர்களுக்கு எப்போதும் நன்றி; எப்படி விமர்சித்தாலும் சரியே!
ஸாயிரம்!
மிக்க அன்புடன்
- சுப்ர. பாலன்
1. பச்சரிசி மாங்காயும் பக்கத்து வீடும்
ஒரு நார்னா, ஒரு இழை நார் கூட இருக்காது. அவ்வளவு பட்டு மாதிரி இருக்கும். தெரியுமோடி பொண்ணே
என்று சொல்லிக் கொண்டே ஒரு மாம்பழத்தைக் கொடுத்தார் பக்கத்து வீட்டு மாமி. அப்படித்தான் அந்த முதல் அறிமுகம் ஆனது.
கையகலம் ஆனாலும் சொந்தத்தில் ஒரு பூமியை வாங்கி, பத்துக்குப் பத்து சதுர அடி பரப்பிலாவது வீட்டைக் கட்டிவிட வேண்டும் என்கிற நீண்ட நாள் கனவு நிறைவேறிய தருணம். நல்ல தண்ணீர் வளம். நல்ல மண். பத்துக்கு பத்தல்ல - அதைவிட எட்டு மடங்கு பெரிய 'குடில்', நல்ல சுற்றுப்புற மனிதர்கள் - எல்லாம் சேர்ந்து வந்து ஓர் இடம் கிடைத்தே விட்டது. ஒரு கிரவுண்டுக்கும் கொஞ்சம் குறைவான பரப்பு.
அதை வாங்கலாமா வேண்டாமா என்கிற தயக்கத்தில் ரகுராமனும் மைதிலியும் தடுமாறிய போது இந்தப் பக்கத்து வீட்டு மாமிதான் உற்சாகப்படுத்தினார்.
விட்டுடாதிங்கோ. பார்த்தா நல்ல மனுஷாளாத் தெரியறேள். நீங்களே இதை வாங்கிட்டா எனக்கும் நல்லதாச்சே. வீட்டை விற்கறவாளுக்குப் பணமுடை ஒண்ணுமில்லே. மூணு நாலு வீடு வச்சிண்டு ஒண்ணையும் கவனிக்க முடியல்லேன்னுதான் வித்துடப்போறா. எனக்கும் தெரிஞ்சவாதான். கொஞ்சம் கேட்டுப் பாருங்கோ... நானும் சொல்றேன்.
நிஜமாகவும் அந்த வீட்டுக்காரர்கள் நல்ல மனிதர்கள்தான். எதிர்பார்த்ததைவிடக் கொஞ்சம் சாதகமாகவே விலை படிந்தது. பத்திரம் பதிவு செய்து அந்த வீட்டுக்குக் குடிவந்து இரண்டு மூன்று மாதங்களுக்குள் மாமி மிகவும் நன்றாகப் பழகிவிட்டார்.
குழந்தை சக்ரவர்த்தி பெரும்பாலும் அந்தப் பக்கத்து வீட்டிலேயே என்று பிடித்துக் கொண்டு விட்டான். மைதிலிக்கும் நல்ல துணையாகியது. அடுக்கு மாடிகள், ஒண்டுக் குடித்தனங்கள் எல்லாவற்றையும் பார்த்து அலுத்துப் போய்க் குழந்தைக்காகவாவது சொந்தத்தில் ஒரு வீடு என்று ஆசைப்பட்டார்கள். நிறைவேறியிருக்கிறது!
பக்கத்து வீட்டிலிருந்து, தோட்டத்து மாம்பழம், மாதுளை, கொய்யா எல்லாம் மைதிலிக்குக் கிடைத்துவிடும். அதுவும் அந்த ஒற்றை மாமரத்தின் காய் அவ்வளவு சுவையாக, மாவாக இருக்கும். 'பச்சரிசி மாங்காய்' என்றுதான் மாமி சொன்னார்.
மைதிலி வாங்கிய வீட்டில் துளசி மாடம், செழித்துப் படர்ந்திருந்தது. சுற்றிலும் மருதாணிப் புதர்கள். மருந்துக்கும் கூட அந்த வீட்டில் பழ மரம் ஏதும் இல்லை. பக்கத்து வீட்டைப் பார்த்துப் பார்த்து மைதிலிக்கு ஏக்கமாகக் கூட இருந்தது. வீட்டுப் புழக்கடைப்பக்கம் வெற்றிடப் பகுதியில் கற்களும், புதர்களுமாகத் தரை ஒழுங்கில்லாமலே கிடந்தது.
கொஞ்சம் புழக்கடைப் பக்கம் ஆளைவச்சுச் சரி பண்ணிக் கொடுத்தா என்ன? ஏதாவது பயிர் பச்சை போடலாம். மணத்தக்காளியாவது வளருமே...
பலமுறை மைதிலி, ரகுவிடம் சொல்லிப் பார்த்து விட்டாள். அவனுடைய ரசனைகள் வேறு. ஒன்றும் நடக்கவில்லை.
மைதிலியே முனைந்து, முன்வாசலில் மட்டும் கொஞ்சம் தரையைச் சமன் பண்ணினாள். மல்லிகைப் பதியன் வைத்தாள். கனகாம்பரம் தானே வளர்ந்தது. இன்னும் கொஞ்சம் பூஞ்செடிகள் வைக்க வேண்டும் என்று துளைத்தபோது, தொட்டியோடு இரண்டு ரோஜாப் பதியன்களை மட்டும் வாங்கி வந்தான் ரகுராமன்.
மாமி வந்து பார்த்துவிட்டு இந்தச் செடிக்கு இந்த மருந்து, உரம் போடு என்று அவ்வப்போது ஆலோசனைகள் தருவார்.
காலையில், மூணரை மணிக்கே அந்தப் பறவையின் 'கூ…கூ....குக்குக்கூ' ஒலி கேட்கும். அலாரம் வைக்க வேண்டிய அவசியமே இல்லாமல் அரைமணிக்கு ஒருதரம் இந்தப் பறவையின் குரல் கேட்கும். இது என்ன பறவை?
குயில்... மாங்குயில் என்று ஓர் அனுமானம். வேறு பறவையாய்க் கூட இருக்கலாம். பறவைகளின் ஒலியை வைத்து இன்ன பறவை என்று கண்டுபிடிப்பது ஒரு சுகம் என்றால், அது எதற்காகக் கத்துகிறது என்பதை அறிந்து கொள்வது மிகவும் சுவையான ஓர் அனுபவம்.
மைதிலிக்குத் தன்னுடைய தமிழ்ப் பேராசிரியர் ரத்னம் நினைவுக்கு வந்தார். வித்தியாசமான ஆசிரியர்; தமிழ்ப் பாடத்துக்கு அப்பாலும் உலகம் இருக்கிறது என்பதை உணர்த்தியவர் அவர். பறவைகள், காட்டு விலங்குகள் என்று காடு மலைகளுக்கெல்லாம் காமிராவும் கையுமாய்ப் போனவர். அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்கு உள்ளே சென்று பறவைக்குரல்களை ஒலி நாடாவில் பதிவு செய்தவர். வகுப்பறையில் சங்க இலக்கியம் பாடம் நடத்திய நேரத்தில் ஒரு நாள் அந்த நாடாப்பதிவை ஓட விட்டது அவளுக்கு நினைவுக்கு வந்தது.
-எல்லாம் நேற்றுப்போல. பேராசிரியர் ரத்னம் இப்போது எப்படியிருப்பார்? இன்னும் பறவைகளைத் தேடி சுற்றிக் கொண்டிருப்பாரா? வேலையிலிருந்து ரிடையர் ஆகியிருக்கலாம்.
பேராசிரியர் சொன்ன சில பறவைகளின் பெயர்கள் அவளுக்கு இன்னும் நினைவில் இருக்கின்றன. 'அக்காக்குயில்', 'வரிக்குயில்', 'சக்களத்திக்குயில்', 'சுடலைக் குயில்' என்று என்னென்னவோ சொல்வார். இந்த மாமரத்தில் கூவுகிற குயில் எந்த வகையானதாக இருக்கும்?
எல்லாக் கவர்ச்சிகளுக்கும் மையமாய் அமைந்த அந்த வீட்டில் கிடைத்த சந்தோஷத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். ஏழாண்டு இடைவெளிக்குப் பிறகு மைதிலி அடுத்த குழந்தைக்குத் தயாரானாள்.
குயில் குயில்னு பொலம்பிண்டே இருக்கே. பார்த்துண்டே இரு... கன்னங்கரேல்னு அதுவும் பொண்ணாய், குயில் மாதிரியே ஒண்ணு வந்து பொறக்கப்போறது…
என்று ஒரு நாள் ரகுராமன் அவளைச் சீண்டினான்.
கேட்டுக் கொண்டே வந்தார் மாமி... குயிலேதான் பொறக்கட்டுமே... என்ன போச்சாம்?