Oru Sivappu Patchaiyaakirathu
By Lakshmi
()
About this ebook
சந்தர்ப்பவசத்தால் சறுக்கி விழுந்து சிவப்பு விளக்குப் பகுதியில் அகப்பட்டுக்கொள்ளும் அவளைக் கண்டு சமுதாயம் சிரிக்கிறது. தன்னிடமிருந்து விலக்கி வைக்கிறது. அவளுக்கு அண்ணனாக விளங்கி அந்தச் சிவப்பைப் பச்சையாக்கிச் சமுதாயத்தின் அங்கீகாரம் கிடைக்கச் செய்கிறார் சிவசாமி வாசித்து அறிவோம்….
Read more from Lakshmi
Radhavin Thirumanam Rating: 0 out of 5 stars0 ratingsJayanthi Vandhal Rating: 0 out of 5 stars0 ratingsEn Veedu Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyumaa? Rating: 0 out of 5 stars0 ratingsIrandavathu Thenilavu Rating: 0 out of 5 stars0 ratingsMalathi Oru Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsNarmatha Yen Pogiral? Rating: 0 out of 5 stars0 ratingsPeyar Solla Mattean Rating: 0 out of 5 stars0 ratingsThai Pirakkattum Rating: 0 out of 5 stars0 ratingsMarumagal Rating: 0 out of 5 stars0 ratingsIrandaavathu Amma Rating: 0 out of 5 stars0 ratingsVelichathai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsMegala Rating: 0 out of 5 stars0 ratingsMogathirai Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Varai Rating: 0 out of 5 stars0 ratingsAthai Rating: 0 out of 5 stars0 ratingsIrandu Pengal Rating: 0 out of 5 stars0 ratingsMaayamaan Rating: 0 out of 5 stars0 ratingsAthisaya Raagam Rating: 5 out of 5 stars5/5Siragu Mulaitha Pinnar Rating: 0 out of 5 stars0 ratingsAval Thaayagiraal Rating: 0 out of 5 stars0 ratingsNadhimoolam Rating: 0 out of 5 stars0 ratingsUravu Solli Kondu... Rating: 0 out of 5 stars0 ratingsMithila Vilas Rating: 0 out of 5 stars0 ratingsUravin Kural Rating: 0 out of 5 stars0 ratingsIniya Unarvey Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsAvalukkendru Oru Idam Rating: 0 out of 5 stars0 ratingsKanavan Amaivathellam Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Vidava, Ramya Rating: 0 out of 5 stars0 ratingsIvala En Magal? Rating: 0 out of 5 stars0 ratings
Related to Oru Sivappu Patchaiyaakirathu
Related ebooks
Vidiyalai Nokki... Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Nilavu Varum Rating: 5 out of 5 stars5/5Vidupattavai Viraivil...! Rating: 5 out of 5 stars5/5Engeyum Pogavillai Rating: 0 out of 5 stars0 ratingsPattikkattu Krishnan Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Roja Rating: 5 out of 5 stars5/5Neeye.. Neeye.. Kadhal Theeye.. Rating: 4 out of 5 stars4/5Mathana Moga Rooba Sundara!! Rating: 0 out of 5 stars0 ratingsOrey Murai Un Darisanam...! Rating: 3 out of 5 stars3/5Velichathai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsKaveri Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalum Kutrame... Rating: 4 out of 5 stars4/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsMamanar Kathaigal Rating: 5 out of 5 stars5/5Kooramal Sanyasam Rating: 0 out of 5 stars0 ratings...Endral Aval Rating: 0 out of 5 stars0 ratingsAvalukku Amutherdru Per Rating: 0 out of 5 stars0 ratingsOru Santhippil... Rating: 0 out of 5 stars0 ratingsNee Sirithal Naan Siripean Rating: 0 out of 5 stars0 ratingsNandha Rating: 0 out of 5 stars0 ratingsMaariyathu Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsPulligalum Kodum Rating: 0 out of 5 stars0 ratingsNin Vasamaathal Vendum Rating: 0 out of 5 stars0 ratingsPasithalum Puli... Rating: 0 out of 5 stars0 ratingsNaayagi Nallai Varuval Rating: 5 out of 5 stars5/5Andha Naalum Vandhitatho? Rating: 5 out of 5 stars5/5Kaadhal Solla Vaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsAagaya Thottil Rating: 0 out of 5 stars0 ratingsVaigarai Vidiyal Rating: 0 out of 5 stars0 ratingsSaraiyu Kaathirukkiral Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Oru Sivappu Patchaiyaakirathu
0 ratings0 reviews
Book preview
Oru Sivappu Patchaiyaakirathu - Lakshmi
http://www.pustaka.co.in
ஒரு சிவப்பு பச்சையாகிறது
Oru Sivappu Patchaiyaakirathu
Author:
லட்சுமி
Lakshmi
For more books
https://www.pustaka.co.in/home/author/lakshmi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
1
மாலை வேளையில் மஞ்சள் வெய்யில் மங்கத் தொடங்கியதும் சிவசாமிக்கு அப்பொழுதுதான் நினைவுக்கு வந்தது. மகனும் மருமகளும் வருவதற்கு முன் அவர் ஒரு நடை கடைத்தெருவுக்குப் போய்க் காய்கள் வாங்கிவர வேண்டும்.
தேவைப்பட்ட பணத்துடன் வாங்க வேண்டிய காய்களைப் பற்றிய விவரத்தை அவரது மருமகள் பாமா ஒரு காகிதத்தில் எழுதி சாப்பாட்டு மேஜைமேல் வைத்து அது பறந்து விழாதிருக்க அலாரம் கடிகாரத்தை அதன்மீது தூக்கி வைத்துவிட்டு பன்னிப்பன்னிப் பலமுறை சொல்லிவிட்டுக் கிளம்பியிருந்தாள்.
அவள் வேலைக்குப் போகும் மருமகள்.
காலையில் ஏதோ அவளால் முடிந்ததை விநியோகித்துவிட்டு, பகல் சாப்பாட்டை பிரிட்ஜில் மீதமிருப்பதை சூடாக்கிச் சாப்பிடச் சொல்லிவிட்டு கிளம்பியிருந்தாள். பகல் வேளைக்கு அவர் பழைய சோறுதான் அன்றாடம் தின்ன வேண்டியிருந்தது.
மகனும் மருமகளும் பகல் உணவிற்கு ஹோட்டல்களை நம்பிக்கொண்டு வாழ்ந்தனர்.
இரவுதான் அந்த வீட்டில் சம்பிரதாயமான சாப்பாடு.
அப்படி ஒன்றும் பஞ்சாட்சிர பரமான்னம் படைத்து விடமாட்டாள். ஆறின சோறு, ஒரு துவையல், ரசம், அப்பளம், இப்படி ஏதாவது அவள் வேலையிலிருந்து வந்த அலுப்பிலே முடிந்ததைப் பொங்கிப் போட்டாள்.
ரசத்தில் உப்பு இல்லை என்றோ துவையல் காரம் என்றோ அவர் சொல்ல முடியாது.
நாக்கிற்கு ருசியாக உப்பும் உரப்புமாக சமைத்துப்போட்ட மனைவியின் சமையலில் குற்றம் கண்டுபிடித்து சிடுசிடுத்த மனிதருக்கு இப்போது சரியான தண்டனை.
கொஞ்சம் உப்பு வேணும். ஸால்ட்ஸெல்லரை இப்படி வைக்கிறியா அம்மா?
ஒருநாள் கேட்டுவிட்டு அவர் வாங்கிக்கட்டிக் கொண்டது ஜென்மத்துக்குப் போதும்!
ரசம் நல்லாத்தானே இருக்கு. வேலையிலிருந்து வந்த களைப்பை மறந்து சமைச்சுப்போட்டா குத்தம் சொல்லமாட்டீங்களா!
கிரீச்சென்று கத்தினாள் பாமா. அடுப்பு மேடை மீது பாத்திரங்களை அதிக ஓசையுடன் வைத்தாள்.
ஏம்பா அவளை அனாவசியமா இர்ரிட்டேட் பண்ணுகிறீங்க. இதாவது கிடைக்கிறதேன்னு திருப்தியோட சாப்பிட்டுட்டு ஒரு பக்கம் விழுந்து கிடக்க தெரிஞ்சுக்கணும்
வார்த்தைகளால் சாடினான் மகன்.
அதற்குப் பிறகு அவர் ஏன் பேசப் போகிறார்?
"மீனாட்சி எனக்கு நல்லா வேணும். உன்னை நான் பல வகையிலும் ஆட்டிப்படைச்ச பாவத்துக்கு அனுபவிக்கிறேன். நல்லாவே அனுபவிக்கிறேன். பலமுறை தமக்குள்ளே முனகிக்கொண்டு... புகைப்படமாக சட்டத்திற்குள் அடங்கி சாப்பாட்டறைச் சுவரில் தொங்கிய தமது மனைவியைப் பார்த்து பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழி?’
நேரத்திற்கு காய்களை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் சேர்க்காவிடில் பாமா வந்ததும் வராததுமாகக் கூப்பாடு போடுவாள்.
மகன் கிரிதரன் இப்படி மாறிப்போவான் என்று யார் எதிர்பார்த்தது?
ஏன் அப்பா நாள் முழுவதும் வீட்டிலே சும்மாதானே உட்கார்ந்திருக்கீங்க? இந்த ஒரு சின்ன வேலையை நேரத்தோட செய்து முடிக்கக் கூடாதா? தூங்கித் தூங்கிப் பொழுதைக் கழிச்சு... வீட்டை தரித்திரம்தான் பிடிக்கும்
மகன் உறுமும்போது அவர் உள்ளம் நொறுங்கிப் போனார்.
‘கிரி நீயாடா பேசறே... உன் வாழ்க்கை வளமாக இருக்க நான் பட்டிருக்கும் பாடு எத்தனை என்பது தெரிஞ்ச நீயா இப்படி பேசறே? நாள் முழுக்க நான் எங்கேடா தூங்கறேன்? உன் மனைவிதான் எனக்கு நிறைய வேலை கொடுத்துட்டு கிளம்பறாளே.’
‘வேலைக்காரி தேய்த்து வைத்த சாமான்களை துடைத்து அலமாரியில் அடுக்கி வைக்கிறேன். அவள் காயவைத்துவிட்டு போகும் துணிகளை எடுத்து நடமாடும் இஸ்திரி வண்டிக்காரனிடம் கொடுத்து, பெட்டி போட்டு அலமாரியில் அடுக்கி வைக்கிறேன்.’
‘தபால்காரர், வராந்தாமீது வீசிப் போட்டுவிட்டுப் போகும் கடிதங்களை எடுத்து பத்திரமாக உங்கள் பார்வைக்கு மேஜைமேல் வைக்கிறேன். எலக்ட்ரிக் பில், டெலிபோன் பில், வீட்டு வரி, தண்ணீர் வரி, இத்தனையைப் பற்றியும் உனக்கு ஞாபகப்படுத்தி, நீ கொடுக்கிற செக்கை எடுத்துக்கொண்டு வங்கிகளுக்கு நடந்தே போய் கட்டிவிட்டு வரேன்.’
‘தோட்டத்தைச் சுற்றி... புல் பூண்டு மண்டிவிடாதிருக்க அவ்வப்போது கவனமா பார்த்து சீராக்கிவிட்டு... வாங்கி வந்த எருவை செடிகளுக்கும் போட்டு மறக்காம... ஹாய் பைப்பை வச்சுகிட்டு ஒரு மணி நேரம் தண்ணீர் பாச்சறேன்.’
‘வீட்டிலே... குழாய் ரிப்பேர்... ஸ்விச் ரிப்பேர்... என்று ஏதாவது ஏற்பட்டுவிட்டால் ஓடிச்சென்று பழுது பார்க்கும் ஆளைப் பிடித்துக்கொண்டு வந்து சீராக்கிவிட்டு என் கையிலிருக்கும் சில்லறையையே அவைகளுக்கு செலவழிக்கிறேன்.
‘குழாய் ரிப்பேருக்கு பனிரெண்டு ரூபாய் பிடிச்சது. ஒரு பியூசான விளக்கை மாத்த ஆறு ரூபாய் பிடிச்சதுன்னு உன்கிட்டே காசுகேட்டு கையேந்தி நிற்காம நானே கவனிச்சுக்கிறேன்.’
‘பகல் வேளை பால் டிப்போவுக்கு ஓடி... பால் பொட்டலங்களைக் கொண்டுவந்து... கிழித்து பாத்திரத்தில் ஊற்றி... காஸ் அடுப்பில் ஏற்றி காய்ச்சி தயாரா உங்களுக்கு காப்பி சாப்பிட ஒரு பக்கம் அடுப்பு மேடை மேல் வைக்கிறேன்.’
‘பதினைந்து நாளுக்கு ஒரு தடவை வீட்டை சுத்தப்படுத்தி வைக்கிறேன்.’
‘என்னடா... அப்படி முறைக்கிறே?’
‘காஸ் தீர்ந்து போனா காஸ் கடைக்கு நேரே ஓடிப்போய் சொல்லிவிட்டு வர்றது நான்தானே? மறக்காம ரேஷனில் கிடைக்கிற மண்ணெண்ணை இத்தியாதிகளை வாங்கி வைக்கிறேன்.’
‘இப்போது சொல்லு... இத்தனை வேலைகள் இடையே நான் எப்படி சோம்பேறித்தனமாக தூங்க முடியும்?
இத்தனையையும் நான் ஏன் செய்யறேன்? என் பிள்ளை மருமகள் இரண்டு பேரும் வேலைக்குப் போறவங்க... அவங்களுக்கு பாரமாக இருக்கக்கூடாது... உதவி செய்துட்டு இருக்கணும் என்கிற நல்லெண்ணம்...’
படபடவென்று அவரால் வெடித்துக் கொட்ட முடியும்.
ஆனால் பாவி மீனாட்சி அவர் வாயைக் கட்டிப் போட்டுவிட்டுப் போயிருந்தாள்.
அவருக்கும் மகன் மேல் ஆசைதான். ஆனால் மீனாட்சிக்கு கிரிதரன் மேல் உயிர்.
இனி தேறாது என்று டாக்டர் கையை விரித்ததும் மீனாட்சி விருப்பப்படி வீட்டிலேயே உயிரைவிடட்டும் என்று அவளை ஆஸ்பத்திரியிலிருந்து காரில் போட்டு எடுத்துக்கொண்டு வந்திருந்தபோதுகூட வீட்டிலே ஒரு கலவரம்.
‘புதுசா கட்டின வீடு... முதன்முதலில் நல்ல காரியங்கள் நடக்குமுன்...’
மருமகள் பாமா... கணவனிடம் பேசியதைக் கேட்டுவிட்டார். கட்டுக்கொள்ளாத கோபத்துடன் பின்பக்கம் சென்றார்.
அம்மா பாமா! இந்த வீடு மீனாட்சியின் பரம்பரை சொத்து. அவளுக்குப் பின் மகனுக்குன்னு எழுதி வச்சிருக்கா. அதுவரை அவள் தன் அறையில் கட்டிலின் மேல் படுத்துக்கிடக்க உரிமை உண்டு. ஏன் தன்னுடைய சொந்த வீட்டில் உயிர்விட அவள் ஆசைப்படுகிறது தப்பா...?
கடுமையாக அதட்டினார்.
மனைவி உயிருடன் இருந்தபோது அவருக்கு துணிவு அசாத்தியம் இருந்தது. அந்த வீட்டைச் சீர்திருத்தி பங்களாவாகக் கட்ட தேவைப்பட்ட பணத்தின் பெரும்பகுதி தன்னுடையது என்றதொரு பிடிப்பு.
மனைவி இறந்து போனதும்... அவரது நிலைமையே வேறாகி விட்டதே! வயது அதிகரித்து தள்ளாமை உடலைப் பிடித்துக் கொண்ட பின்னர் அவரது நிலை இன்னமும் பயங்கரமாகிவிட்டிருந்தது.
வராந்தாவில் கிடந்த சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்தார். அதுவரை படித்துக் கொண்டிருந்த காலை பத்திரிகையை மடித்துக்கொண்டு