Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Megala
Megala
Megala
Ebook93 pages55 minutes

Megala

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மேகலா என்பவள் வீட்டின் கடைக்குட்டி. மேகலாவின் அப்பா கடைசி மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார். மேகலாவின் திருமணம் சிறப்பாக நடைபெற்றதா? மேகலாவிற்கு நிகழ்ந்த சோகம் என்ன? மேகலாவின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டதா? வாசித்து அறிவோம் மேகலாவை…

Languageதமிழ்
Release dateAug 13, 2022
ISBN6580155608697
Megala

Read more from Lakshmi

Related to Megala

Related ebooks

Reviews for Megala

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Megala - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மேகலா

    Megala

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    அது மேகலா எடுத்த முடிவு.

    அந்த பயணத்திற்கு அவள் பெரிய பெட்டி எடுத்துக் கொள்ளவில்லை.

    அமெரிக்காவில் தன் டாக்டர் கணவருடன் அவள் வசித்த காலத்தில் அடிக்கடி விமானப் பயணங்களை ஏற்றதுண்டு.

    அதன் விளைவாகக் கற்றுக்கொண்ட பாடம், அது பயணங்கள் இனிமையாக சுகமாக சுலபமாக அமையவேண்டும் என்றால், தேவைக்கு மீறிய சாமான்களை நிரப்பி எடுத்துச் செல்லாது, மிகச் சில பொருள்களுடன் கையில் சுமக்கும் அளவிற்கு சிறியபெட்டி ஒன்றுடன் பயணப்பட வேண்டும். அங்கங்கே பெட்டியைத் தூக்க ஆட்களைத் தேடிக்கொண்டு நிற்கக்கூடாது.

    முதல் தடவையாக, இப்போதுதான் அவள் தமிழ்நாட்டுப் பயணத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். தாய்நாட்டிற்குத் திரும்பி வந்து பம்பாயில் குடியேறி ஆறு ஆண்டுக்குப் பின்னர்தான் அவள் தன் உறவினர்களைப் பார்க்க வேண்டும் என்ற முடிவை எடுத்தாள்.

    முப்பது ஆண்டு காலத்திற்கு மேல் அவள் அமெரிக்காவில் தன் கணவருடன் வாழ்ந்து வந்தாள். மாரடைப்பில் அவர் திடீரென்று மரணமடைந்து விட்டதால், தன்னத்தனியே அங்கே நீடித்து வாழப் பிடிக்காது, தாய்நாட்டிற்குத் திரும்பிவிட்டாள். தனக்கு என்று குழந்தை இல்லையே என்ற குறையைத் தவிர அவளது தாம்பத்திய வாழ்க்கையில் அந்த முப்பது வருடங்களில் எந்தவிதமான குறையோ அவளுக்கு இருக்கவில்லை. பாஸ்ட்டன் நகரில் தன் கணவனுடன் அழகான வீட்டில், கார்கள், ஆடம்பர பொருள்கள் என்று மிகவும் வசதியாகவே வாழ்ந்தாள். இறந்துபோன கணவன், அவளுக்கு நிறையவே பணத்தை வங்கியில் வைத்துவிட்டுப் போயிருந்தார். வீடு, கார்கள் எல்லாவற்றையும் விற்றுவிட்டு, தேவைப்பட்ட சில பொருட்களுடன் அவள் தாய்நாட்டிற்குத் திரும்பிவிட்டிருந்தாள்.

    அமெரிக்காவில் அவள் வாழ்ந்த காலத்தில் அண்டை அயலில் இருந்த சில இந்தியக் குடும்பத்துடன் அவளுக்குத் தொடர்பு இருந்தது. அவர்களில் பலர் வடநாட்டவர்கள். ஒரு சிலர் தமிழர்கள். ஆனாலும் அந்த தமிழர்களுக்கு அவளைப்பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. கரிசிலாம்பட்டி மேகலாவை பற்றிய சரித்திரம் அவர்களுக்குத் தெரிய நியாயமில்லை. அவர்கள் அனைவருக்கும் அவள் டாக்டர் ரவீந்திரன் மனைவி என்ற அளவில்தான் பழக்கம்.

    மேகலா சட்டென்று யாருடனும் நெருங்கி ஒட்டிக்கொண்டு விடும் சுபாவம் உடையவள் அல்ல. பட்டும் படாமல் மற்றவர்களிடம் பழகும் போக்குடையவள்.

    பல ஆண்டு வேர் ஊன்றி வாழ்ந்த நாட்டை விட்டு, பெயர்த்துக்கொண்டு ஊர் திரும்புவது சுலபமான காரியமாக இருக்கவில்லை. ஆனாலும் அவள் கணவரின் நண்பரான கணபத்படேல் அவளுக்குப் பலவிதத்திலும் உதவி செய்தார். சூரத்தில் இருந்த தமது அக்கா மகன் மூலம் தொடர்புகொண்டு பம்பாயில் மலபார் ஹில்லில் தமக்கு ஒரு ஃபிளாட் வாங்க முயன்றபோது அவளுக்கும் அங்கே ஒரு ஃபிளாட்டை வாங்கித் தர உதவினார்.

    படேலுக்கு அமெரிக்காவைவிட்டு புறப்பட நாளும் நேரமும் கூடவில்லை.

    ஆனால், அவன் அந்த மண்ணை உதறிக்கொண்டு தாயகம் திரும்பி விட்டாள். கச்சிதமாக அழகாகக் கட்டப்பட்டிருந்த கட்டிடத்தின் முதல் தளத்திலேயே அவளுக்கு மூன்று அறைகள்கொண்ட ஒரு ஃபிளாட் கிடைத்துவிட்டிருந்தது. வாங்கியபின் சில சீர்திருத்தங்களைச் செய்து, கட்டில், மேசை, பீரோ என தேவையானவைகளை வாங்கிப்போட்டு அலங்கரித்து, கார் ஒன்றையும் வாங்கிக்கொண்டு, அதை ஓட்ட ஒரு ஆள், வீட்டை சுத்தப்படுத்தி உதவ ஒரு வேலைக்காரி, கடைகளுக்குப் போய்வர ஒரு பையன் என்று வேலையாட்களுடன் வசதியாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தாள்.

    அவளது ஃபிளாட்டின் எதிரேதான் படேல் தமக்கு ஒரு பிளாட் வாங்கிக்கொண்டிருந்தார்.

    அவ்வளவு பணத்தைப்போட்டு வாங்கி அலங்கரித்து வைத்த மனிதரால் அங்கே வாழக் கொடுத்து வைக்கவில்லை. சூரத்திலிருந்த தமது அக்காள் மகன் பிரேம்படேலை, ஃபிளாட்டை பாதுகாத்துக் கொள்ளச் சொல்லிவிட்டிருந்தார். அவனது குடும்பம் அதில் வாழ்ந்துகொண்டிருந்தது. ஆனால், படேல் அமெரிக்காவில் பணத்தை வாரிக் குவித்துக்கொண்டிருந்தார்.

    இரவில் படுக்கையில் தலைசாய்த்ததும், தான் விட்டுச் சென்ற உறவினர்களையெல்லாம் நினைத்துக் கொள்வாள். கண்களில் நீர் வெள்ளமாகப் புரண்டு கன்னங்களில் ஓடி தலையணையை நனைக்கும். மறுநாள் காலை பலத்த தலைவலியுடன் எழுந்திருப்பாள்.

    ஆமாம்! அவள் அவர்களைப் பற்றி அப்படி உருகுகிறாளே? அவர்கள் யாரும் அவளைப் பற்றி நினைக்கிறார்களா?

    தொடர்பு விட்டுப்போனதால் அவர்கள் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் என்றே தெரியாது. ஆனால் முகவரிகள் மட்டும் பத்திரமாக டைரியில் இருந்தன.

    அதுவும் குடும்ப நண்பர் செய்த தர்மம்.

    Enjoying the preview?
    Page 1 of 1