Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Radhavin Thirumanam
Radhavin Thirumanam
Radhavin Thirumanam
Ebook77 pages32 minutes

Radhavin Thirumanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"அன்று நான் செய்த பிழை - இன்று உங்களை மணந்து கொள்வதால் மறையப் போவதில்லை." ராதாவின் இந்த தீர்க்கமான முடிவின் பின்னனியில் உள்ள அந்த இருண்ட கால நிகழ்வுகள் என்ன? அந்த கசப்பான சம்பவத்தினால் ராதா அனுபவித்த துன்பங்கள் என்ன? இறுதியில் ராதா தன் எதிர்கால வாழ்க்கையை யாரோடு அமைத்து கொள்ளப் போகிறாள். ராதாவின் இந்த தீர்க்கமான முடிவினை வாசித்து தெரிந்துக் கொள்வோம்.

Languageதமிழ்
Release dateAug 20, 2022
ISBN6580155608807
Radhavin Thirumanam

Read more from Lakshmi

Related to Radhavin Thirumanam

Related ebooks

Reviews for Radhavin Thirumanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Radhavin Thirumanam - Lakshmi

    http://www.pustaka.co.in

    ராதாவின் திருமணம்

    Radhavin Thirumanam

    Author:

    லட்சுமி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    அவள் வேலை செய்த நிறுவனத்தின் தலைவர் மகளது திருமணம், நகரத்தில் பிரபலமான அபிராமி கல்யாண மண்டபத்தில் நடந்து கொண்டிருந்தது; காலை முகூர்த்தம். நிறுவன ஊழியர்கள் அனைவரும் வந்திருந்தனர். எல்லோரும் பணம்போட்டு வாங்கின வெள்ளிக் குத்து விளக்குப் பரிசை, வண்ணக் காகிதத்தில் சுற்றிக் கையில் பிடித்துக் கொண்டு ஒரு பக்கமாக உட்கார்ந்திருந்தார் தலைமைக் கணக்கர் தாமோதரன். காஞ்சிபுரப் பட்டும், சைனா சில்க்குமான அலங்காரத்தில் வந்திருந்த பெண்கள் பக்கத்தில் அவள் உட்கார்ந்திருந்தாள். தாலி கட்டி முடிந்ததும் பந்திக்கு முந்திக் கொண்டு - உடனடியாக அலுவலகத்திற்கு அத்தனை பேரும் போய்ச் சேர்ந்தாக வேண்டும். சாப்பாட்டுக்கு விழுந்தடித்துக்கொண்டு ஓடி இடம் பிடிக்கும் சங்கதி அவளுக்குப் பிடிக்காது. என்ன செய்வது? அன்று அப்பாவுக்கு மட்டும் கொஞ்சம் சாதம் வடித்து வைத்துவிட்டு... அவள் காலைக் காப்பியுடன் கல்யாணத்திற்குப் புறப்பட்டு வந்திருந்தாள். வயிறு பசியால் குடையத் தொடங்கியது.

    கட்டாயம் என்றில்லாவிட்டால் அவள் திருமணத்திற்குப் போவதே இல்லை.

    அந்தக் கசப்பான சம்பவத்திற்குப்பின் அவளுக்குக் கல்யாணம் என்பதே பெருத்த அலர்ஜியாகி விட்டிருந்தது.

    கொட்டு மேள சத்தம்... மூச்சை அடைத்தது போன்றதொரு உணர்வை உண்டாக்கியது. மலர்களும் சந்தனமும் மணந்த கல்யாணக் கூடம்... என்னென்னவோ எண்ணங்களை உண்டாக்கி அவளைத் திக்குமுக்காடச் செய்தது. அந்தக் கசப்பான நிகழ்ச்சிகள், ஏமாற்றங்கள்... அடிவயிற்றினின்று... வேதனையாக நெஞ்சை அடைத்தது. தலைவர் வீட்டுக் கல்யாணம்.

    அலுவலகமே திரண்டு வந்திருக்கும்போது அவள் வராவிடில் நன்றாக இருக்காதே...

    ஹலோ! இப்பத்தான் வந்தியா?... நான் இன்னொரு முகூர்த்தத்துக்கு ஓடிக் கொண்டிருக்கேன். இந்தப் புடவை எங்கே வாங்கினே? என்று ஒருவரையொருவர் விசாரித்து சிரித்துக் கொண்டிருந்த கலகலப்பான பெண்கள் கூட்டத்திலே, அவள் முகம் இறுகிப் போய் தன்னந்தனியாக யாருடனும் பேசாது உட்கார்ந்திருந்தாள்.

    சில ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி நெஞ்சில் நிழலாட அவள் வேதனையுடன் எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தாள். கொட்டுமேளம் - கொட்டுமேளம்... யாரோ குரல் கொடுக்க... மேள சத்தம் மண்டபத்தைக் கிடுகிடுக்கச் செய்தபோது அவள் திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள். கல்யாண வீட்டுப் பெண் ஒருத்தி தட்டை நீட்டியபோது கையில் அள்ளி வைத்துக் கொண்டிருந்த பூவிதழ்கள் வியர்வையால் கசங்கிவிட்டிருந்தன.

    இருந்த இடத்திலிருந்து அவள் தூவிய மலர்கள் - அவளுக்கு முன்னே உட்கார்ந்திருந்தவர்கள் தலைமீது விழுந்தன.

    அதற்குப்பின் கூடியிருந்தவர்களிடையே பெருத்த குழப்பம். ஒருவரையொருவர் நகர்த்திக் கொண்டு மேடைக்குச் சென்று, தம்பதியரைத் தனிப்பட்ட முறையில் கைகுலுக்கி வாழ்த்த விரைந்தவர்கள் சிலர். தம் குழந்தைகளையும், மனைவியையும் தள்ளிக் கொண்டு சாப்பாட்டு ஹாலை நோக்கி விரைந்தனர் சிலர்.

    டயட்டில் இருக்கேன் வேண்டாம் என்று, அழைத்தவரிடம் நாசுக்காகக் கூறிவிட்டு வாசலில் நின்ற பெண்கள் கொடுத்த வெற்றிலைப் பாக்குப் பையுடன் வெளியேறியவர் சிலர்.

    இது நம்ப வீட்டுக் கல்யாணம் - சாப்பிடவா என்று தட்டெழுத்தர் சரசா தோளைத் தொட்டு உலுக்க அவள் எழுந்திருந்தாள்.

    சரசா வெகு சாமர்த்தியக்காரி. முன்னதாகவே அவள் கணவர் கஸ்தூரியிடம் ஏற்பாடு செய்துவிட்டிருந்தாள்.

    அவர் தாலி கட்டி முடித்தவுடன் சாப்பாட்டு ஹாலுக்குத் தாவி முன் பக்கத்து வரிசையான நாற்காலிகளைப் பிடித்துக்கொண்டு, தாம் உட்கார்ந்த இடத்துக்கு அடுத்ததாக இருந்த மூன்று நாற்காலிகளில் நமது கைகுட்டை, கைப்பை... ஸ்கூட்டர் சாவி முதலியவற்றை அடையாளமாக வைத்து விட்டார்.

    Enjoying the preview?
    Page 1 of 1