Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Andha Naalum Vandhitatho?
Andha Naalum Vandhitatho?
Andha Naalum Vandhitatho?
Ebook89 pages44 minutes

Andha Naalum Vandhitatho?

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105704021
Andha Naalum Vandhitatho?

Read more from Vidya Subramaniam

Related to Andha Naalum Vandhitatho?

Related ebooks

Reviews for Andha Naalum Vandhitatho?

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Andha Naalum Vandhitatho? - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    அந்த நாளும் வந்திடாதோ?

    Andha Naalum Vandhitatho?

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    வானத்துக்கும் பூமிக்கும் கொடி கட்டியது மாதிரி கம்பிச்சரங்களாய் கொட்டிக் கொண்டிருத்தது மழை. மழையைக் கண் கொட்டாமல் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஜன்னல் விளிம்புகளில் பட்டு மத்தாப்பு போல் முகத்தில் மழைத்துளிகள் தெளித்த போது ஒரு சுகத்துடன் சிலிர்த்துக் கொள்கிறேன். மூன்றாவது நாளாக மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.

    பாவம் எத்தனை குடிசைவாசிகள் இதனால் துன்பப்படுகிறார்களோ? ஆனால் எனக்கு ஆனந்தமாயிருந்தது. காரணம் நான் உறுதியான பெரிய வீட்டுக்குள் இருக்கிறேன் என்பதாலா? உறுதி என்று சொல்லும்போது எனக்கு நிறைய சமாசாரங்கள் நினைவுக்கு வருகிறது.

    ஆனாலும் உனக்கு இவ்வளவு பிடிவாதம் கூடாதுடிம்மா! என்று அம்மா என்னை அடிக்கடி, திட்டுவது நினைவுக்கு வருகிறது. அவள் பிடிவாதம் என்று சொன்னது என் உறுதியைத்தான், சில பேரின் உறுதி சிலருக்கு பிடிவாதம் பிடிப்பது போல் தான் தோன்றும் போலும்.

    மெளலி அத்தான் கூட என் உறுதியை பிடிவாதம் என்று தான் விமரிசனம் செய்தான், எனக்கு சிரிப்புதான் வந்தது. நியாயமாய் அவனிடம் கோபம்தான் வந்திருக்க வேண்டும், அவனை வெளியே தள்ளி கதவை அறைந்து சார்த்தியிருக்க வேண்டும், பிடிவாதம் என்று அம்மா விமர்சிக்கும் என் உறுதிக்கு காரணமே அவன் தானே, ஆனால் நான் சாந்தமாய் சிரித்தபடி ஆத்திரத்தை அடக்கிக் கொள்வதில் சாமர்த்தியசாலி.

    என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா நந்தினி? என்று என் பதிமூன்றாவது வயசு முடியும் தறுவாயில் அவன் கேட்டது விளையாடடுக்கோ, நிஜந்தானோ தெரியவில்லை, ஆனாலும் அப்போதே என் மனசுக்குள் ஒருவித லஜ்ஜையும் ஆசையும் பரவத்தான் செய்தது. ச்சி போ! என்று சொல்லிவிட்டு ஓடி விட்டேன், என்றாலும் அவன் கேட்ட த்வனியும் அந்த முகமும் எனக்குள் ஆழமாய்ப் பதிந்து போய் அடிக்கடி என்னை சுகமாய் இம்சித்தது.

    ஒவ்வொரு முறையும் மெளலி அத்தான் விடுமுறைக்கு வரும்போதும் எனக்கு மகிழ்ச்சி பிய்த்துக் கொண்டு கிளம்பும். அவனும் வேறு எங்கும் செல்லாமல் எங்கள் வீட்டுக்குத்தான் விடுமுறையைக் கழிக்க வருவான், தோட்டம் பூராவும் ஓடிவிளையாடி அட்டகாசம் செய்வோம்.

    சில சமயம் உபயோகமாய் பூச்செடி வைக்கிறேன் பார் என்று இருக்கும் செடிகளையும் நாசம் செய்துவிட்டு, அப்பா, கடங்காரா! என்று திட்டுவதை வாங்கி கட்டிக் கொள்வான், சில நேரம் நான் பெரிய தியாகி மாதிரி அப்பாவிடம் போய் அவன் ஒன்றும் பண்ணலப்பா, நாந்தான் தெரியாம பண்ணிட்டேன் என்று அவனுக்காக பழியை ஏற்றுக் கொண்டதும் உண்டு.

    மாம்பழ சீசன் என்றால் கேட்கவே வேண்டாம், மரத்தில் ஒரு பிஞ்சு விட்டு வைக்க மாட்டான். அப்பாவுக்கு அந்த சமயம் அவன் வந்துவிட்டால் சிம்ம சொப்பனமாயிருக்கும். ஒரு முறை நாலைந்து பசங்களோடு அவன் துறட்டி கொண்டு மாம்பிஞ்சுகளை பறித்ததைப் பார்த்து கோபம் தாங்காமல் அடித்து கூட விட்டார்.

    அன்று இரவு மெளலி அத்தானைக் காணவில்லை. அம்மா புலம்ப புலம்ப அப்பாவுக்கு பயம் பிடித்துக் கொண்டது. எனக்கும் பயமும் துக்கமும் அதிகமாகி விசும்ப ஆரம்பித்தேன். அழுது கொண்டே தோட்டத்துக்கு வந்து மெளலி அத்தாஆஆன்! எங்க இருக்க நீ? என்று பெரிசாய் கத்தினேன், பதிலில்லை.

    அப்பா முகத்தில் சவக்களை படர்ந்தது. தன் சகோதரியை நினைத்து நடுங்கினார். அத்தைக்கு ஒரே பிள்ளை மெளலி அத்தான். அவன் தான் அவளது சுவாசமே. கேவலம் இந்த மாம்பிஞ்சுக்காக என் பிள்ளையைக் காணோமலடித்து விட்டாயே என்று அத்தை அவரை வதம் பண்ணி விடுவாளே! அன்று முழுக்க யாரும் சாப்பிடவில்லை, அப்பா என் கண்ணுக்கு வில்லன் மாதிரி தெரிந்தார்.

    வாசலில் நிழலாடியது. மௌளியேதான் பதுங்கி பதுங்கி உள்ளே வந்தான்.

    அப்பா பாய்ந்து சென்று அவனை அணைத்துக் கொண்டவர் படவா! எங்கடா போன? கதிகலங்க வெச்சுட்டாயே! என்றார் நிம்மதியும் கோபமும் சேர்ந்த குரலில்.

    தோட்டத்து உள்ளூல தான் இருந்தேன் என்றான், மெளலி அத்தான் படு அலட்சியமாய்.

    அங்க என்னடா பண்ணின்ருந்த ராத்திரி பூரா?

    போய்ப்பாருங்கோ! என்றவன் உதட்டில் விஷமச் சிரிப்பு படர்ந்தது.

    எல்லாரும் தோட்டத்து உள்ளுக்கு ஓடினோம்.

    மறுநாள் வண்டியேற்றி அனுப்புவதற்காக

    Enjoying the preview?
    Page 1 of 1