Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Penn Vannam Kandean
Penn Vannam Kandean
Penn Vannam Kandean
Ebook94 pages56 minutes

Penn Vannam Kandean

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580105705352
Penn Vannam Kandean

Read more from Vidya Subramaniam

Related to Penn Vannam Kandean

Related ebooks

Reviews for Penn Vannam Kandean

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Penn Vannam Kandean - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    பெண் வண்ணம் கண்டேன்

    Penn Vannam Kandean

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தது. நிலவு.

    'மணி இரண்டு இருக்குமா? ஏன் இன்றைக்கு தூக்கம் வா மாட்டேன் என்கிறது?’ ஆர்த்தி ஒருக்களித்துப் படுத்து, நிலவை ரசித்துப் பார்த்தாள்.

    நாளையோடு என் கல்லூரி வாழ்க்கை முடியப்போகிறது. தெரியுமா, உனக்கு? கேம்பஸ் இன்டர்வியூவில் வேலையும் கிடைத்துவிட்டது. ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ஊதியம். ஒரு ஆண்டு பயிற்சிப் பணிக்குப் பிறகு, சம்பளம் இருமடங்காகும்.

    இருநூறு பேர் கலந்து கொண்ட நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டது மொத்தமே பத்து பேர்தான். அதல் நானும் ஒரு ஆள். அந்த ஆனந்தத்தில் தான் தூக்கம் வரவில்லை. நாளைக்கு கடைசி நாள் விருந்து, பிரிவு கண்கலங்கல், பிரியா விடை எல்லாம் இருக்கின்றன. ஒவ்வொரு படியாக உயர்வது சந்தோஷம்தான். ஆனால், ஒவ்வொரு படியிலும் இதுவரை அனுபவித்த ஆனந்தம் இனி திரும்ப வருமா? மாணவப் பருவத்தின் மகிழ்ச்சிக்கு ஈடுவேறென்ன உண்டு?

    நிலவு அவள் பேச்சை மவுனமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. ஆர்த்தி குப்புறப் படுத்துக்கொண்டு தூங்க முயற்சித்தாள். வெகுநேர முயற்சிக்குப்பின், போனால் போகிறதென்று உறக்கம் அவள் இமைகளை அழுத்தியது.

    விடிந்து வெகுநேரம் தூங்கியவளை அம்மா எழுப்ப அலறியடித்தபடி எழுந்தாள். மின்னல் வேகத்தில் குளித்து. அலங்கரித்துக் கொண்டு தன் 'ஸ்கூட்டியில்’ ஏறிக் கிளம்பினாள்.

    வர்ணங்களை வாரி இறைத்தாற் போல் கல்லூரி வளாகம் களைகட்டி இருந்தது. பூவரச மரத்தடியில் நின்றிருந்த தோழிகள் அவளைப் பார்த்ததும் கையசைத்து. குரலெழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.

    எல்லோரது முகத்திலும் சந்தோஷத்தை மீறிய ஒரு சோகம் படர்ந்திருந்தது. பிரியப்போகும் சங்கடம். மாணவப்பருவத்திற்கு இன்றோடு ஒரு முற்றுப்புள்ளி விழுந்துவிடும் என்கிற வருத்தம் இந்தக் கல்லூரி வளாகத்தில் ஐந்து ஆண்டுகளாய் எத்தனை கொட்டங்கள் அடித்திருக்கிறார்கள். இனி வாழ்க்கை இது போலிருக்காது. இதைவிட ஆனந்தமாகவே இருந்தாலும் கூட இந்த சுவை வராது.

    மலை அருவியாய் ஆரவாரமாக வழிந்தோடிய பருவம், இனி நிதானமாக ஆற்றொழுக்காக செல்லப்போகிறது.

    இன்னிக்கு நம்ம நிகழ்ச்சி என்ன? - ஆர்த்தி தோழிகளிடம் கேட்டாள்.

    கொஞ்ச நாழி கலைநிகழ்ச்சிகள்ல உக்காருவோம். மத்தியான சாப்பாடு சஞ்சீவனத்துல ஆரோக்கிய சாப்பாடு நாலு மணிக்கு நம்ம கல்லூரி முதல்வரோடு ஒரு சின்ன அரட்டை அஞ்சரை மணிக்கு சினிமா படம் முடிஞ்சதும் பிரியாவிடை தொலைக்காட்சித் தொடர் பார்த்த கணக்கா அழுகை. அரவணைப்பு.

    எல்லோரும் சிரித்தார்கள். கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த அரங்கம் நோக்கி நடந்தார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை உற்சாகப் படுத்தியபடி சிரிப்பும், ஆரவாரமுமாய் மதியம் வரை அங்கிருந்தார்கள்.

    சரியாக ஒரு மணிக்கு தீபிகாவின் காரில் சஞ்சீவனம் உணவகத்திற்குச் சென்றார்கள். பச்சைக் காய்கறிகளோடு இரண்டு கரண்டி சாதத்தை அரட்டையடித்தபடி சாப்பிட்டார்கள். தோழிகளில் ஒருத்தி தன் திருமணப் பத்திரிகையை அங்கு வைத்து விநியோகித்தாள்.

    பாருடி இவளை...! சத்தம் போடாம அழைப்பிதழை நீட்டுறா பாரேன்.

    ஏய்... பையன் யாருடி... நீ பாத்துக்கிட்டியா... வீட்ல பார்த்தாங்களா...?

    அம்மா - அப்பா பார்த்த இடம்தான். ஆனா, எனக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. நிச்சயதார்த்தம் முடிஞ்சு ஏழு மாசமாகுது. படிப்பு முடிஞ்சப்பறம்தான் கல்யாணம்ங்கறதால ஏழு மாசமா சூப்பரா லவ் பண்ணிட்டு இருக்கோம். ஆக, இது பெரியவங்க பார்த்து நிச்சயித்த காதல் கல்யாணம்.

    பேச்சு அப்படி இப்படி திசை மாறி எந்தவகையான கல்யாணம் நல்லது என்கிறவிதமாய்த் தொடர்ந்தது.

    என்ன இருந்தாலும் காதல் கல்யாணம்தான். சுகம்.

    அதுல நிறைய ஆபத்து இருக்கு. காதலிக்கும் போது ரொம்ப யோக்கியமா இருப்பாங்க ஆண்கள். கல்யாணத்துக்குப்பிறகு அவங்களோட நிஜ முகத்தைக் காட்டுவாங்க. அதனாலதான் பெரும்பாலான காதல் கல்யாணங்கள் விவாகரத்துல முடிஞ்சுடுது.

    அம்மா - அப்பா பாக்கற ஆண்கள் மட்டும் நல்லவங்க என்கிறதுக்கு என்ன உத்தரவாதம்?

    அவங்க குலம், கோத்திரம் எல்லாத்தையும் தீர விசாரிச் சுட்டுதானே முடிவு பண்றாங்க.

    குலம் கோத்திரத்தை வேணா விசாரிக்கலாம். குணத்தை எப்படி விசாரிப்பாங்க?

    நல்ல குலமா இருந்தா நல்ல குணம்தான் இருக்கும். நம்ம நல்லது, கெட்டது நம்மைப் பெத்தவங்களுக்குத் தெரியாதா?

    அப்படின்னா பெரியவங்க பார்த்து நடத்தற் கல்யாணத்துல விவாகரத்துகளே நடக்கிறதில்லையா என்ன?

    நடக்கலாம். அது ரொம்ப குறைவுதான். ஒரு கஷ்ட நஷ்டம் வந்தால் பெத்தவங்க ஆதரவு கிடைக்கும். காதல் கல்யாணத்துல அது சுத்தமா இருக்காது.

    "நீ என்ன சொன்னாலும் காதலிச்சு கல்யாணம் செய்துக்கறதுல இருக்கற சுகம் வேறெதுலயும்

    Enjoying the preview?
    Page 1 of 1