Nerungi Vaa Nilave
5/5
()
About this ebook
Read more from Vidya Subramaniam
Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Nadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Atchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Ullam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsKasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Maaresa Maangal Rating: 5 out of 5 stars5/5Thandanai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Androru Naal Rating: 3 out of 5 stars3/5Unakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Purusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 5 out of 5 stars5/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Veezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsThennangkaatru Rating: 5 out of 5 stars5/5Aagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsNadhiyai Thedi Vandha Kadal Rating: 5 out of 5 stars5/5Udal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Engirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Madhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Kanniley Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsShanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Garudan Rating: 5 out of 5 stars5/5Aasai Thee Valarthen Rating: 5 out of 5 stars5/5
Related to Nerungi Vaa Nilave
Related ebooks
Neeyindri Naanillai Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsPenn Vannam Kandean Rating: 0 out of 5 stars0 ratingsUn Manaivi, En Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsKasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Oomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Mattrumoru Maalai Neram Rating: 0 out of 5 stars0 ratingsThisaimaari Paayum Nathi Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsAmma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratingsKaraiyaangal Rating: 5 out of 5 stars5/5En Su(vaasa) Malare... Rating: 5 out of 5 stars5/5நதிக்கரையோரம்! Rating: 0 out of 5 stars0 ratingsVaasamilaa Malaridhu Rating: 0 out of 5 stars0 ratingsSamsaram Enbathu Veenai! Rating: 0 out of 5 stars0 ratingsThoorathu Nilavu Rating: 5 out of 5 stars5/5Thanthai Sol Mikkathor Rating: 0 out of 5 stars0 ratingsUllamella Un Vasamai… Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Thean Nila Rating: 5 out of 5 stars5/5Yaar Antha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsAahaya Malargal Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Neethaney Rating: 5 out of 5 stars5/5Ammavukku Oru Veedu Rating: 5 out of 5 stars5/5Aahaya Panthal Rating: 5 out of 5 stars5/5Paarvai Ondre Pothume... Rating: 3 out of 5 stars3/5Veesum Thendral Naan Unakku Rating: 0 out of 5 stars0 ratingsKadhalai Vittu Vidu...! Rating: 5 out of 5 stars5/5Moondru Mudichu Rating: 5 out of 5 stars5/5Kakitha Roja Rating: 5 out of 5 stars5/5Neerindri Oru Nadhi Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nerungi Vaa Nilave
1 rating0 reviews
Book preview
Nerungi Vaa Nilave - Vidya Subramaniam
http://www.pustaka.co.in
நெருங்கி வா நிலவே
Nerungi Vaa Nilave
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidya Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
1
விடியற்காலையில் யாரோ கதவைத் தட்டும் சப்தம் கேட்க, ராமச்சந்திரன் அவசரமாக எழுந்து தன் மூக்குக்கண்ணாடியை மாட்டிக்கொண்டு வாசற்பக்கமாக வந்தார். அதற்குள் அடுக்காளையிலிருந்து வந்த அவர் மனைவி சந்திரா கதவைத் திறந்திருந்தாள்.
நாங்க மாலை முரசுலேர்ந்து வரோம்ங்க,
என்ன விஷயம்?
இங்க ஆர்த்தின்னு …
என் பொண்ணு தான் …
வாழ்த்துக்கள் சார். உங்க பெண்ணை இன்டர்வியூ பண்ணத்தான் வந்திருக்கோம்.
என்ன விஷயம்?
இன்னிக்கு ப்ளஸ் டூ ரிஸல்ட் வருது சார். உங்க பொண்ணு மூணு பாடத்துல முதல் மார்க் வாங்கியிருக்காங்க.
கடவுளே …!
ராமச்சந்திரன், சந்திரா இருவரும் நம்ப முடியாத சந்தோஷ அதிர்ச்சியில் ஒரு வினாடி பேச்சடைத்து நின்றார்கள். ஒருவரை ஒருவர் கண் விரித்து பார்த்துக் கொண்டார்கள்.
என்ன சார் ஸ்வீட் ஷாக்கா?
வந்தவர்கள் கேட்க சட்டென்று சுதாரித்துக் கொண்டனர். நீ போய் ஆர்த்தியை எழுப்பு
மனைவியை அனுப்பினவர், வந்தவர்களை உள்ளே அழைத்து உட்கார வைத்தார்.
ஏய் ஆர்த்தி எழுந்திரேன்,
அம்மா அவள் கன்னத்தில் பச்சென்று முத்தம் கொடுக்க ஆர்த்தி வியப்போடு கண் விழித்தாள்.
என்னம்மா இன்னிக்கு முத்தமெல்லாம் தடபுடலா இருக்கு! எனக்கு பிறந்தநாள் கூட இல்லையே.
அய்யோ என் செல்லம்! எனக்கு இருக்கற சந்தோஷத்துல உன்னை குழந்தையாட்டம் ரெண்டு கையாலயும் வாரி நெஞ்சோட அணைச்சுண்டு கொஞ்சணும் போல இருக்கு.
கொஞ்சேன்!
ஆர்த்தி ரெண்டு கையையும் தூக்கினாள்.
என்ன அப்படி சந்தோஷம் உனக்கு?
"மூணு சப்ஜெக்ட்ல ஒரு பொண்ணு ஸ்டேட் பஸ்ட் வந்திருந்தா எந்த அம்மா சந்தோஷப்பட மாட்டா? சீக்கிரம் எழுந்து வா. உன்னைப் பேட்டி எடுக்க மாலை
முரசுலேர்ந்து வந்திருக்கா."
மை காட்!
ஆர்த்தி நம்ப முடியாமல் நெஞ்சைப் பிடித்துக்கொண்டாள். இப்படி ஒரு சந்தோஷம் வாழ்நாளில் இதுவரை அனுபவித்ததில்லை. மின்னல் வேகத்தில் எழுந்து பல் தேய்த்து அவசரக்குளியல் செய்து உடை மாற்றி பளிச்சென்று வெளியில் வந்து அவர்களுக்கு கைகூப்பி வணக்கம் சொன்னாள். அவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொன்னாள்.
உன் எதிர்கால லட்சியம் என்னம்மா?
டாக்டராகணும். இந்தியால நம்பர் ஒன் டாக்டர்ங்கற பேர் வாங்கணும்.
வெரிகுட். ஆனா, ஸ்டேட் பஸ்ட் வாங்கற எல்லோருமே ஒண்ணு டாக்டராகணும். இல்ல என்ஜினியராகணும்னு தான் சொல்றாங்க. வேற வித்யாசமா படிக்கணும்னு உங்களுக்கு தோணலையா?
இல்ல. சின்ன வயசுலேர்ந்தே எனக்குள்ள தெரியற என் உருவம், வெள்ளைகோட்டும் ஸ்டேதாஸ் கோப்பும் தான் இருக்கும்.
நல்லதுமா உங்க லட்சியம் ஈடேற எங்கள் அட்வான்ஸ் வாழ்த்துக்கள். உங்க குடும்பத்தோட ஒரு போட்டோ எடுத்துக்கணுமே.
ஓ …
ஆர்த்தி அப்பாவையும் அம்மாவையும் சந்தோஷமாக பார்த்தாள்.
"நா போய் அனுவை எழுப்பிண்டு வரேன். அம்மா உள்ளே போய், தூங்கிக்கொண்டிருந்த அனுவை எழுப்பி தலையை மட்டும் லேசாக வாரி, இழுத்துக் கொண்டு வந்து தூக்கக்கலக்கத்தோடு நிற்க வைத்தாள்.
அவர்கள் போனதும் அம்மாவும், அப்பாவும் ஆர்த்தியை கட்டிக்கொண்டு முத்தமிட்டார்கள். அனு சோபாவிலேயே தன் தூக்கத்தைத் தொடர்ந்தாள். நா போய் மில்க்மெய்ட் வாங்கிட்டு வரேன். சேமியா இருக்கா வீட்ல? பிரமாதமா பாயசம் பண்ணி, கிராண்டா சமைச்சுடு
அப்பா சொல்லிவிட்டு பாத்ரூம் பக்கம் போனார். சந்தோஷத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் மொத்த குடும்பமும் திணறியது. பரீட்சைகள் பற்றியும் அவள் படித்தவிதம் பற்றியும் பேசிப்பேசி மகிழ்ந்தது.
எனக்கு அப்பவே தெரியும். இவ ஃபஸ்ட்டு வருவான்னு! எங்கப்பா அடிக்கடி சொல்லுவார், ஆரத்தி புத்திசாலித்தனத்துல அப்படியே உன்னைக் கொண்டிருக்காடி சந்திரான்னு.
உங்கப்பா தானே? அவர் என்னிக்கு உண்மையை பேசியிருக்கார்? ஆர்த்தி அப்படியே எங்க தாத்தா மாதிரி அவர் அந்த காலத்துல ஜில்லா கலெக்டரா இருந்திருக்கார் தெரியுமோ?
எங்க கொள்ளு தாத்தா மெளண்ட் பேட்டனுக்கே வைத்தியம் பார்த்தவர்னு நா கூட கப்ஸா, புருடா எல்லாம் விட்டுக்கலாம் யாருக்குத் தெரியப்போறது!
ஆர்த்தி இருவரது பேச்சையும் ரசித்துச் சிரித்தாள்.
அடுத்த அரைமணியில் வேறொரு பத்திரிகையிலிருந்து பேட்டி எடுக்க வந்தார்கள். அன்று முழுக்க யார், யாரோ வந்தார்கள் … போன்மணி அடித்துக் கொண்டே இருந்து. பாராட்டு மழையில் நனைந்த வண்ணமிருந்தாள் ஆர்த்தி. சாயங்கால பேப்பர்கள் அத்தனையிலும் முதல் பக்கத்தில் அவள் புகைப்படத்தோடு செய்தி வெளியாயிற்று. வீட்டுக்கு வந்து வாழ்த்தியவர்கள் எல்லோருக்கும் இனிப்பு கொடுத்த வண்ணம் இருந்தாள் அம்மா.
ஏங்க்கா, நீ பஸ்ட் மார்க் வாங்கினதுக்கு எனக்கென்ன பிரஸன்ட்?
அனு கேட்க ஆர்த்தி அவள் தலையில் செல்லமாக குட்டினாள்.
நா கஷ்டப்பட்டு படிச்சு மார்க் வாங்கினதுக்கு இவளுக்கு நா ஏதாவது கொடுக்கணுமாம். கதையைக் கேட்டாயா?
நீ படிக்கும் போது உன்னை டிஸ்டர்ப் பண்ணாம இருந்துருக்கேனே. அதுக்கே நீ தரணும்.
அப்படிங்களா? பதிலுக்கு நீ ப்ளஸ் டூ படிக்கும் போது உன்னை நானும் டிஸ்டர்ப் பண்ணாம இருக்கேன். நீயும் பஸ்ட் வந்துடு சரியா?
நீ மூணு சப்ஜெக்ட்ல தானே வந்துருக்க. நான் எல்லா சப்ஜெக்ட்லயும் வருவேன் பார்த்துக்க.
அன்று மாலை இந்த சந்தோஷத்தைக் கொண்டாட ஒரு சினிமாவுக்குப் போய் விட்டு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு இரவு வீட்டுக்கு வந்தார்கள். அனு தூங்கிப் போக அம்மா அடுக்களையில் மறுநாள் சமையலுக்கான சில முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருக்க அப்பா ஆர்த்தியிடம் வந்தார்.
என்னம்மா பண்ற?
இப்பலேர்ந்தே என்ட்ரன்ஸ் எக்ஸாமுக்கு ரெடி பண்ணிக்க வேணாமா? அதான் புக்ஸ் எல்லாம் தேடி எடுத்து வெச்சுட்ருக்கேன். என்ன விஷயம்ப்பா?
அப்பா யோசனையோடு அவளைப் பார்த்தார்.
உங்கிட்ட ஒரு விஷயம் பேசணுமே ஆர்த்தி.
என்னப்பா?
நா சொல்றதைப் புரிஞ்சுப்பீயா? என்னடா அப்பா இப்படி சொல்றாரேன்னு நினைக்காம நா சொல்றதைக் கேப்பீயா?
அப்பா பீடிகையோடு பேச ஆர்த்தி கண் சுருக்கி அவரைப் பார்த்தாள்.
என்னப்பா இவ்ளோ பீடிகை?
போட்டுத்தாம்மா ஆகணும். விஷயம் அப்படி.
ஆர்த்தி மெளனமாக அவரையே பார்த்தாள்.
"தன் குழந்தைகள் படிச்சு பெரிய ஆளாகணும். அவாளைப் பார்த்து பெருமைப்படணும்னு ஆசைப்படாத தாயும், தகப்பனும் இந்த உலகத்துல இருக்கவே மாட்டா. குடிசைல இருக்கறவா கூட தன் குழந்தைகளைப் பத்தி ஆயிரம் கனவு காணுவா. ஆனா சட்டியில இருந்தா தானே அகப்பையிலே வரும். வாழ்க்கையில சில கனவுகளை நனவாக்க பணத்தால் மட்டும் தாம்மா முடியும். இன்னிக்கு நிலையில் அதான் நிஜம். நம்மளை மாதிரி மிடில் கிளாஸ்க்கெல்லாம் டாக்டர்ங்கறது ரொம்ப காஸ்ட்லியான கனவு
தாயி?"
அப்பா …
ஆர்த்தி பலத்த அதிர்ச்சியோடு அவரை நிலைகுத்திப் போய்பார்த்தாள் … என்னப்பா சொல்றேள் நீங்க.
"நிஜத்தை சொல்றேன் ஆர்த்தி. நம்ம வீட்டு நிலை என்னன்னு உனக்குத் தெரியும். நானும் உங்கம்மாவும் கவர்ன்மெண்ட் உத்யோகம் பார்க்கறவா. எங்களை விட உங்களை நன்றாக படிக்க வெக்கணும்னு நாங்க ஆசைப்படறோம். உங்க ரெண்டு பேரையும் தான் எங்க சக்திக்கு மீறி நீங்க படிக்கற இந்த கான்வென்ட்ல சேர்த்ததுக்கு காரணம் படிப்போட கூட, நீங்க சரளமா இங்கிலீஷும் பேசணுங்கறதுக்காகத் தான். நாங்க படிக்க முடியாத ஸ்கூல்ல நீங்க படிக்கணும். நாங்க பேசாத இங்கிலீஷை நீங்க பேசணும். எங்களை விட அதிகம்