Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irandu Manam Vendum
Irandu Manam Vendum
Irandu Manam Vendum
Ebook114 pages48 minutes

Irandu Manam Vendum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateJul 21, 2019
ISBN6580105704362
Irandu Manam Vendum

Read more from Vidya Subramaniam

Related to Irandu Manam Vendum

Related ebooks

Reviews for Irandu Manam Vendum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irandu Manam Vendum - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    இரண்டு மனம் வேண்டும்

    Irandu Manam Vendum

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. வாசலில் பெரிதாக மாக்கோலம் மலர்ந்திருந்தது. கூடத்தில் நெளிநெளியாய் இழைக்கோலம் போட்டு காவியிட்டிருந்தது. அரவிந்தனின் முகத்தில் கோடி சூரியப்பிரகாசம் தெரிந்தது. கால்கள் ஓரிடத்தில் நிற்காமல் வளைய வந்து கொண்டிருந்தன. அவன் தங்கைகள் பட்டுப்பாவாடை தாவணி சகிதம் குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தலையில் வைத்திருந்த மல்லிகைப்பூக்கள் ஆங்காங்கு விழுந்திருந்தது. டேப்ரிக்கார்டரிலிருந்து குன்னக்குடியின் ஜனரஞ்சகம் கலந்த இனிய வயலின் இசை ஒலித்துக்கொண்டிருந்தது. பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மாவை ஒரு நிமிடம் நின்று ரசித்தான் அரவிந்தன். பவித்ராவின் முகம் நினைவுக்கு வர தனக்குள்ளே சிரித்துக்கொண்டான்.

    என்ன அரவிந்தா எங்கே சஞ்சாரம்? வைத்தி மாமா பட்டென்று முதுகில் அடித்துக் கேட்க கலைந்து போய் அவரைப் பார்த்து சிரித்தான்.

    ஒண்ணுல்ல. வயலின்ல அப்டியே லயிச்சுப் போய்ட்டேன்.

    ம்! நீ விடற இந்த புருடாவை நான் நம்பணுமாக்கும்? சும்மா சொல்லுடா உன் வயசுல நானும் இப்டி சஞ்சாரம் பண்ணினவன் தான்.

    அப்பறம் என்னை என்ன கேள்வி? அரவிந்தன் சிரித்தபடி நகர்ந்தான்.

    அடுக்களையிலிருந்து ஏலக்காய் மணமும், நெய்யில் முந்திரி வறுபடும் மணமும் கலந்து வந்தது.

    இன்னும் நாலு கரண்டி நெய்யை விடு சாவித்திரி. பிள்ளைக்கு கல்யாணம்! பிசுக்கு பிடிக்கறயே வைத்தி மாமா அடுக்களைக்கு வந்து தங்கையை வம்புக்கு இழுத்தார்.

    நா எத்தனை கரண்டி விட்டாலும் உங்களால் சாப்பிட முடியப்போறதில்லை. ஒரு பக்கம் ஷுகர், ஒரு பக்கம் பி.பி. அப்பறம் என்ன?

    நா சாப்டாட்டா என்ன? எனக்கும் சேர்த்து என் ஆம்படையா சாப்டுவாளே. எதுக்கு சொல்றேன்னா நாளைக்கு கேசரியைப் பத்தி யார் குறை சொல்றாளோ இல்லையோ இவ என்னண்ட சொல்ல ஆரம்பிச்சுட்டாளானா ஓய மாட்டா.

    அய்யோ பாவம். சிவனேன்னு இருக்கற மன்னியை எதுக்கு இப்போ வம்புக்கு இழுக்கறேள்?

    நீ விடு சாவித்திரி. அவருக்கு வேற வேலை என்ன? மன்னி எழுந்து துருவிய தேங்காயை மிக்ஸி ஜாரில் போட்டாள். வைத்தி மாமா இன்னும் யாரை, வம்புக்கு இழுக்கலாம் என்பது போல் வாசற்பக்கம் போனார்.

    புருஷன் செத்துப்போகும் போது சாவித்திரிக்கு இருபத்திஆறு வயது தான். அரவிந்தனுக்கு ஏழுவயது. அடுத்த தம்பிக்கு இரண்டு வயது பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டதில் வயிற்றில் ஆறு மாதக்கருவாக இரட்டை பெண் குழந்தைகள் என்று அத்தனை பேரையும் அனாதையாக்கிவிட்டு மூளைக்கட்டி ஆபரேஷனில் செத்துப்போனார்.

    அந்த நிமிடம் வரை சாவித்திரிக்கு பக்கபலமாய் இருப்பது அவளுடைய இரண்டு அண்ணாக்கள் தான். மாமாக்களின் தயவில் தான் குடும்பம் நடந்தது. அரவிந்தன் படித்ததும் அவர்களுடைய கருணையால் தான். பெரியமாமாவின் தயவில் தான் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றான். எம்.பி.ஏ., பட்டத்தோடு திரும்பி வந்து பம்பாயில் மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு அமர்ந்தான்.

    சாவித்திரி அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் எண்ணத்தில் அண்ணா பெண் காயத்ரியை தனது மாட்டுப் பெண்ணாக்கிக் கொள்ள விரும்பினாள். தானே அண்ணாவிடம் சென்று தன் விருப்பத்தையும் சொன்னாள். அவர் ஒரு நிமிடம் அவளை உற்றுப்பார்த்து விட்டுக் கேட்டார்.

    அரவிந்தன் இதுக்கு என்ன சொன்னான்? அவனைக் கேட்டயா நீ?

    அவன் என்ன வேண்டாம்னா சொல்லப் போறான்?

    அவன் சொல்றது இருக்கட்டும். நீ கேட்டயா அவனை?

    இல்லை.

    அவர் சிரித்தார். வயசாறதே தவிர இன்னும் உனக்கு பக்குவம் போறாது சாவித்திரி. இருந்தாலும் வீடு தேடி வந்து பொண்ணைக் குடுப்பயான்னு கேக்கற. உனக்கு ஒரு பதில் சொல்லி தானே ஆகணும். சொல்றேன் கேட்டுக்கோ. அரவிந்தனை படிக்க வெச்சதோ அல்லது வெளிநாட்டுக்கு அனுப்பினதோ எல்லாமே ஒரு பாசத்துனால தானே தவிர பின்னால் மாப்பிள்ளையா ஆக்கிக்கணும்னு கணக்கு போட்டு இல்ல. நீ சொல்றாப்போல நா பெண்ணைக் குடுத்தேன்னா என் பாசத்துக்கே அர்த்தமில்லாம போய்டும். அதுவுமில்லாம நீ நினைக்கறா மாதிரி அரவிந்தன் இதுக்கு ஒரு நாளும் சம்மதிக்க மாட்டான். ஏன்னா அவனுக்கு வேற ஒரு பொண்ணு மேல ஈடுபாடு இருக்கு. அது உனக்குத் தெரியுமோ?

    சாவித்திரி அதிர்ந்து போனாள். தமையனை இமைக்காமல் பார்த்தாள்.

    நீங்க சொல்றது நிஜமாண்ணா?

    அரவிந்தனையே கேட்டுடேன்.

    உங்களுக்கெப்டி …? அவனே ஏதாவது சொன்னானா?

    இன்னும் இல்ல. ஆனா நேரம் வரும் போது நிச்சயம் சொல்லுவான்னு நம்பறேன்.

    அப்பொ கேட்கட்டுமா வேண்டாமா?

    கொஞ்சநாள் பொறுத்துக்கோ பார்க்கலாம். சாவித்திரி வயிற்றில் கலக்கத்தோடு திரும்பி வந்தாள். அண்ணா சொன்னதற்குப் பிறகு அரவிந்தன் அவள் கண்களுக்கு புதுசாய் தெரிந்தான்.

    ‘இவனா …!’ என்று வியந்தாள். அவன் பிறந்தது முதல் நினைத்துப் பார்த்தாள். முலை கடித்து பால் குடித்த பிள்ளையா இன்று பெற்றவளுக்கே தெரியாமல் வேறொரு பெண்ணிடம் அன்பு செலுத்துகிறான்? அத்தனை வயதாகிவிட்டதா அவனுக்கு! பிரமித்துப் போனாள்.

    ஆறுமாதம் வரை வாயே திறக்கவில்லை அரவிந்தன். என்னதான் கை நிறைய சம்பாதித்தாலும் பம்பாயின் விலைவாசிக்கு எத்தனை சம்பாதித்தாலும் போதவில்லை. இந்த நிலையில் தான் அரவிந்தன் ஒரு நாள் சந்தோஷமான விஷயம் ஒன்று சொன்னான்.

    எங்க கம்பெனி மெட்ராஸ்ல ஒரு பாக்டரி திறக்கறாங்கம்மா. அதோட மொத்த நிர்வாகமும் கவனிச்சுக்கறதுக்கு யாரை அனுப்பலாம்னு மீட்டிங் போட்டு எல்லாரோட அபிப்பிராயமும் கேட்டாங்க. நா எனக்கே போக விருப்பம்னு சொல்லிட்டேன். ஏக மனசா ஓகே பண்ணிட்டாங்க. இதே சம்பளம் தான். ஆனா இருக்க வீடும், டெலிபோனும் காரும் கம்பெனியே கொடுத்துடும். மெட்ராஸ்ல பம்பாயை விட விலைவாசி கொஞ்சம் கம்மிதான். அதனால் செலவு போக மிஞ்சற பணம் நமக்கு லாபம்.

    பிள்ளை

    Enjoying the preview?
    Page 1 of 1