Uravu Solli Vilayadu...
By R. Sumathi
()
About this ebook
Read more from R. Sumathi
En Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Innum Thudikirathu! Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Nimidangal Rating: 0 out of 5 stars0 ratingsGandharva Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsNandha En Nila Rating: 0 out of 5 stars0 ratingsNijamai Sila Nimidangal! Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Ennai Thodu Rating: 0 out of 5 stars0 ratingsSirukathai Thoguppu - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Tharumo En Megam? Rating: 0 out of 5 stars0 ratingsKattru Marakkumo Kaadhal? Rating: 0 out of 5 stars0 ratingsSirukathai Thoguppu - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsKai Veesum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Ethanai Kanavugal... Rating: 0 out of 5 stars0 ratingsEn Mazhaye... En Mayilirage!... Rating: 0 out of 5 stars0 ratingsAlli Vacha Malligaiye! Rating: 0 out of 5 stars0 ratingsArputha Aani Muthey! Rating: 0 out of 5 stars0 ratingsInaiyana Ilamaaney Rating: 5 out of 5 stars5/5Kaadhal Pookkal Uthiruma? Rating: 0 out of 5 stars0 ratingsUnakkagave Vazhgirean Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Konjum Saaral Rating: 0 out of 5 stars0 ratingsSillunu Oru Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsJeeva Jothi Rating: 0 out of 5 stars0 ratingsOndru Serntha Ullam Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsPoomagal Oorvalam Rating: 0 out of 5 stars0 ratingsEnnennavo En Nenjile... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solli Vidai Peruvathu... Rating: 0 out of 5 stars0 ratingsPonnezhil Poothathu Pudhu Vaanil... Rating: 0 out of 5 stars0 ratingsPaarvai Ondre Poothume Rating: 0 out of 5 stars0 ratingsEnna Vilai Azhage! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Uravu Solli Vilayadu...
Related ebooks
Mazhaithuli Mattum Unakku Rating: 5 out of 5 stars5/5Moondru Mudichu Rating: 5 out of 5 stars5/5Un Madiyil Kaithanean! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solla Vaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Manam Rating: 0 out of 5 stars0 ratingsManam Varuda Vanthaayaa Rating: 0 out of 5 stars0 ratingsAnge Sendru Anbai Sollu Rating: 0 out of 5 stars0 ratingsLinga Bairavi Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Pookkal Malarattum Rating: 0 out of 5 stars0 ratingsEngey Aval En Devathai Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Thevathai Rating: 4 out of 5 stars4/5Vizhiyele Malarnthathu Rating: 5 out of 5 stars5/5Uthaya Nila Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Arangerum Neram Rating: 0 out of 5 stars0 ratingsPogumidam Vegu Thooramillai Rating: 5 out of 5 stars5/5Ennennavo En Nenjile... Rating: 0 out of 5 stars0 ratingsKan Varaintha Oviyame Rating: 0 out of 5 stars0 ratingsKaathal Malarum Kaaththiru Rating: 0 out of 5 stars0 ratingsEnnodu Kalanthuvidu! Rating: 0 out of 5 stars0 ratingsPenmai Thorpathillai Rating: 0 out of 5 stars0 ratingsPoojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Thaalam Thappiya Paadal Rating: 0 out of 5 stars0 ratingsKann Pesum Vaarthaigal! Rating: 0 out of 5 stars0 ratingsThalaimuraigal Rating: 0 out of 5 stars0 ratingsPookkal Malarum Rating: 5 out of 5 stars5/5Poi Vaa Nathiyalaiye Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe...! Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsParuva Mogam Rating: 4 out of 5 stars4/5Kaiyarukil Poomaalai Rating: 4 out of 5 stars4/5Vanakkathirkuriya Kaathaliye Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Uravu Solli Vilayadu...
0 ratings0 reviews
Book preview
Uravu Solli Vilayadu... - R. Sumathi
http://www.pustaka.co.in
உறவு சொல்லி விளையாடு...
Uravu Solli Vilayadu...
Author :
ஆர். சுமதி
R. Sumathi
For more books
https://www.pustaka.co.in/home/author/r-sumathi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
1
வளையல் காப்பு விசேஷம் நடந்த வீட்டிலிருந்து வருவதற்குள் மணி இரவு எட்டைத் தொட்டுவிட்டது. ஆர்யனும் லட்சணாவும் எத்தனை மணிக்கு வருவார்கள் என்று தெரியவில்லை. போன் செய்து எதுவும் சொல்லவும் இல்லை. பெரும்பாலும் இப்படி வெளியில் செல்லும்போது ஹோட்டலிலேயே சாப்பிட்டு வந்துவிடுவர். வளைகாப்பு வீட்டில் அவள் சாப்பிட்டுவிட்டதால் அவளுக்கு எதுவும் தேவை இல்லை. அப்படியே அவர்கள் சாப்பிடாமல் வந்தாலும் தோசைமாவு இருக்கிறது. தோசை ஊற்றிக் கொடுத்துவிடலாம் என்று நீட்டிப்படுத்து விட்டாள்.
விசேஷ வீட்டு சம்பாஷணைகளே மறுபடி மறுபடி காதில் வந்து சுழன்று கொண்டிருந்தன.
வடிவாம்பாளின் வார்த்தைகளெல்லாம் ஏனோ எரிச்சலை உண்டு பண்ணியது. வடிவாம்பாளின் வார்த்தைகள் வெறும் தொடக்கம்தான். இன்னும் ஒரு வருடம் ஆகிவிட்டால் ஊரே இதை தொடர்கதையாக்கிவிடும்.
ஒரு வருடம் தானே என பட்டிக்காரம்மாள் சொல்வதைப் போல் சமாதானமாக இருக்க முடியவில்லை.
வடிவாம்பாள் பேச்சு பிடிக்காவிட்டாலும் அலட்சியப்படுத்த முடியவில்லை.
‘இப்பவெல்லாம் பொண்ணுங்க மெதுவா குழந்தை பெத்துக்கலாம்னு கர்ப்பத்தடை மாத்திரைகளை சாப்பிடறாங்க. அதனால அவங்க பெத்துக்கலாம்னு நினைக்கறப்ப குழந்தை உருவாகறதில்லை. அப்பறம் கோவில் குளம், டாக்டர்னு சுத்தறது.’
உண்மைதானே?
இந்த ஆர்யனும், லட்சணாவும் இதைப்போல் ஏதாவது செய்கிறார்களா? கற்பனையாக நினைத்ததே அத்தனை பயத்தை கொடுத்தது. ‘ஏன் கண்டதையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டும்? இன்று கேட்டு விடலாமா?’
யோசனையாக புரண்டு கொண்டிருந்தாள்.
ஆர்யனும், லட்சணாவும் வந்தபோது மணி இரவு எட்டரை.
லட்சணா நேராக மாமியாரிடம் வந்தாள்.
அத்தை சாப்பிட்டீங்களா?
என்றாள்.
அந்த ஒற்றை வார்த்தையில் அவளுடைய உள்ளம் அப்படியே உருகிவிட்டது. பெற்ற மகளைப் போல் தன்மேல் அக்கறை எடுத்துக் கொள்ளும் லட்சணாவை பாசமுடன் பார்த்தாள்.
பெயருக்கேற்ற மாதிரியே லட்சணா மிகவும் லட்சணமாகயிருந்தாள்.
வார்த்தெடுத்த தேகக்கட்டு, பார்த்து பார்த்து வரைந்ததைப் போன்ற முக அழகு. கோர்த்து வைத்த முத்துச்சரமாக சிரிப்பு.
களைத்துப் போய் வந்தாலும் சோர்விலும், களைப்பிலும் அவளுடைய அழகு மெருகு குலையாமல் ரசிப்பைத் தூண்டுவதாகயிருந்தது.
‘கடவுளே… இந்த பெண்ணிற்கு வாழ்க்கையில் எந்த குறையும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். என்னால் முடிந்தவரை எந்த குறையும் இல்லாமல் இந்த குழந்தையைக் காப்பாற்றிவிட்டேன். நீ எந்த தண்டனையையும் கொடுத்துவிடாதே, கூடிய சீக்கிரம் இவளுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்து ஊர்வாயிலிருந்து காப்பாற்றிவிடு.’
அத்தை சாப்பிட்டீங்களா?
என மறுபடியும் லட்சணா கேட்வும் தான் அவளுடைய கேள்விக்கு தான் பதில் சொல்லவில்லை என்பது உரைத்தது. படுக்கையை விட்டு இறங்கினாள் பதில் சொல்லிக்கொண்டே.
தலைவர் வீட்டு வளையல் காப்பிற்குப் போனேன், அங்க சாப்பிட்டதே போதும். பசியில்லை. நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டிங்களா? சாப்பிடலைன்னா தோசை மாவு இருக்கு. தோசை ஊத்தி தர்றேன்
இல்ல அத்தை. நாங்க சாப்பிட்டுட்டோம். அவங்களுக்கு மட்டும் பால் ஒரு டம்ளர் வேணும்
பால் சூடாத்தான் இருக்கு. இப்பத்தான் காய்ச்சினேன் கொடு
சரி அத்தை
நகர்ந்தவளை அழைக்கலாமா என நினைத்தாள். ‘வேண்டாம் காலையில பேசிக் கொள்ளலாம்’ என அமைதியாகயிருந்தாள்.
மிகவும் களைப்புடன் லட்சணா படுக்கைக்கு சென்று விட்டாள். பாஞ்சாலியுடன் எல்லாவற்றையும் சரிசெய்துவிட்டு சமையலறை கதவை சார்த்தி விட்டு படுக்கைக்கு வந்தாள். ஆனால் உறக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள்.
ஏதேதோ சிந்தனைகள், குழப்பங்கள், எதிர்கால பயம். இப்படி எல்லாவிதமான எதிர்மறையான எண்ணங்களும் தோன்றி அவளை உறங்கவிடாமல் செய்தது. வெகுநேரம் வரை புரண்டு, புரண்டு படுத்தவள் மனநிலையை மாற்ற லட்சணா படித்துவிட்டு கவிழ்த்து வைத்திருந்த ஒரு நாவல் புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கினாள்.
மனநிலை கொஞ்சம் கொஞ்மாக மாறி நாவலில் லயிக்கத் தொடங்க நேரம் போவது தெரியவில்லை. முக்கால்வாசி நாவலுக்கு சென்ற பின்பு கண்களை இழுத்தது.
மடியில் புத்தகத்தை வைத்துக்கொண்டே உட்கார்ந்த நிலையிலேயே கண்களை மூடிய சில நிமிடங்களிலேயே அத்தை…
என்ற குரல் அவளை விழிக்க வைத்தது. லட்சணா எதிரே நின்றிருந்தாள்.
அத்தை… ஏன் தூக்கம் வரலையா?
என்றாள்.
இல்லம்மா. தூக்கமே வரலை. அதான் சும்மா படிச்சுக்கிட்டிருக்கலாமேன்னு உட்கார்ந்தேன்.
இப்படி பன்னிரெண்டு மணிவரை தூங்காமயிருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்? சூடா பால் குடிச்சா தூக்கம் வரும். பால் சூடுபண்ணி கொண்டுவரட்டா?
வேண்டாம்மா.
இல்ல! நான் கொண்டு வர்றேன். குடிச்சுட்டுப்படுங்க
என்றபடி அவளுடைய அனுமதிக்கு காத்திராமல் அடுக்களைக்குள் சென்று பால் காய்ச்சி கொஞ்சமாக சர்க்கரை போட்டு பதமாக ஆற்றிக் கொண்டு வந்து கொடுத்தாள்.
பாஞ்சாலியின் மனம் ஐஸ்கட்டியாய் கரைந்தது.
‘இவ்வளவு அக்கறையான மருமகள் கிடைக்க நான் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட மருமகளை என் அருகிலேயே வைத்துக் கொள்ள நான் செய்ததெல்லாம் சரிதான்.’
வடிவாம்பாள் சொன்னது காதில் ஒலித்தது.
இந்தா… ரெண்டு பேர் சேர்ந்து வாழலாம். ஆனா… எத்தனை ஆண்டு ஆனாலும் குழந்தை பிறக்கறது! நம்ம கையில இல்லை! உண்மைதான். ஆனால் கடவுள் என்னை ஏமாற்றமாட்டார். என் நல்ல மனதிற்கு என் மருமகளுக்கு எந்த குறையும் வராது
கண்களில் கண்ணீர் துளிர்க்க அதை மறைத்தபடி பாலை வாங்கி பருகினாள்.
நீ தூங்கலையாம்மா? வரும்போதே ரொம்ப களைப்பாயிருந்த?
களைப்பாத்தான் இருந்தேன். படுத்ததும் தூக்கமே வரலை
யாரோ ஃபிரண்ட்டைப் பார்க்கப் போறேன்னு போனியே பார்த்தியா?
பார்த்தேன். அவளுக்கு குழந்தை பிறந்திருக்கு. போய் பார்க்கணும் பார்க்கணும்னு நினைச்சுக்கிட்டேயிருந்தேன். இப்பத்தான் அவருக்கு நேரம் கிடைச்சுது. அதனால போய்ட்டு வந்தோம்
இதைக் கேட்டதுமே பாஞ்சாலியின் மனதில் ஏதோ பிசைவதைப் போலிருந்தது.
என்ன குழந்தை?
ஆணும் பெண்ணுமா ரெட்டைக் குழந்தை
நெஞ்சு பிசையல் இன்னும் அதிகமானது. பெருமூச்சுப் பிறந்தது. லட்சணாவின் மனதிலும் வேதனையிருந்திருக்குமோ? அதனால் தான் அவளுடைய தூக்கமும் பறிபோனதா?
பாவமாகவும், ஏக்கமாகவும் அவளைப் பார்த்தாள் பாஞ்சாலி.