Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unakkagave Vazhgirean
Unakkagave Vazhgirean
Unakkagave Vazhgirean
Ebook125 pages45 minutes

Unakkagave Vazhgirean

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குணசீலனுக்கும் ஊர்வசிக்கும் திருமணம் முடிவு செய்து ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆனால் ஊர்வசி வேறு ஒருவரை விரும்பியதை குணசீலனின் அம்மாவிற்கு தெரிய வருகிறது. குணசீலன் தனது மனைவியை ஏற்றுக்கொண்டானா? இல்லையா?
அவரது வாழ்வில் பல திருப்பங்கள் நடைப்பெறுகிறது அதை விறுவிறுப்பான முறையில் சுமதி அவர்கள் எழுதியுள்ளார்.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580137106171
Unakkagave Vazhgirean

Read more from R. Sumathi

Related to Unakkagave Vazhgirean

Related ebooks

Reviews for Unakkagave Vazhgirean

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unakkagave Vazhgirean - R. Sumathi

    https://www.pustaka.co.in

    உனக்காகவே வாழ்கிறேன்

    Unakkagave Vazhgirean

    Author:

    ஆர்.சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    மணமகன்: குணசீலன்.

    மணமகள்: ஊர்வசி.

    பெயர்கள் வர்ண விளக்குகளால் ஒளிர அந்த மண்டபம் களைக்கட்டியிருந்தது.

    மாப்பிள்ளை அழைப்பு வெகு ஜோராக நடந்து கொண்டிருந்தது. அலங்கரிக்கப்பட்ட காரில் குணசீலன் புது மாப்பிள்ளைக்குரிய அழகுடனும், கம்பீரத்துடனும் அமர்ந்திருந்தான். கம்பீரத்துடன் கொஞ்சம் வெட்கம் கலந்திருந்தது அவனுடைய சிரிப்பில்.

    காருடன் இணையாக நடந்து அவனை கலாட்டா செய்தபடியே வந்தனர். நண்பர்கள்.

    மண்டப வாசலுக்கு ஊர்வலம் வந்ததும் பெண் வீட்டார் வந்து ஆரத்தி எடுத்தனர்.

    குணசீலன் இறங்கி நண்பர்களுடன் நடந்தான். பெண் வீட்டார் காட்டிய மணமகன் என்ற அறைக்குள் நுழைந்தது தான் தாமதம், கழுத்திலிருந்த மாலையை கழற்றி சுவரில் இருந்த ஆணியில் மாட்டி விட்டு அப்பாடா... என இருக்கையில் அமர்ந்தான்.

    என்னடா... மச்சான் இதுக்கே அலுத்துக்கிட்டா எப்படி? இன்னும் எவ்வளவோ இருக்கு நண்பன் ரமேஷ் அவன் தலையில் இருந்த ரோஜா இதழ்களைத் தட்டியவாறே சிரித்தான்.

    ச்சே! என்னடா இதெல்லாம் கூத்து. என்னமோ நாடகத்துல வர்றமாதிரி வேஷம் போட்டு தெருத் தெருவா ஊர்வலம் போய்கிட்டு... குணசீலன் அலுத்துக் கொண்டான்.

    இதுக்குத்தான் இந்த அரேஞ்டு மேரேஜெல்லாம் வேண்டாம்னு நான் நேரடியா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டேன் என்று பெருமைப்பட்டுக் கொண்டான் சங்கர்.

    ஆமா! பெரிய சாதனை செய்துட்டே இப்படி ஊரறிய கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னை கட்டி வச்சு உரிச்சிருப்பானுங்க. அதான் ஓடிப்போய் திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்டே... ரமேஷ் சங்கரை வாரினான்.

    டேய்... போடா போடா! சாதனைதான்டா. காதலிக்கறதே பெரிய சாதனைதான். அதுக்கெல்லாம் ஒரு தைரியம் வேணும். தன்னோட வாழ்க்கை முழுசும் வரப்போறவளை நாமே தேர்ந்தெடுக்கறதுக்கு ஒரு தைரியமும், துணிச்சலும் வேணும். அம்மா அப்பா கூட போய், ஏதோ ஒரு பொண்ணை பார்த்து சொஜ்ஜி, பஜ்ஜி தின்னுட்டு மண்டைய ஆட்டிட்டு வர்றவனுக்கெல்லாம் இந்த தைரியம் வராதுடா...

    சங்கர் இப்படி சொல்லவும் ரமேஷ் டேய்... குணா உன்னைத்தான்டா சொல்றான் என போட்டுக் கொடுத்தான்.

    ஆமான்டா அவனைத்தான் சொல்றேன். இவனால ஒரு பொண்ணை காதலிக்க முடிஞ்சதா? நம்ம ஆபீஸ்ல எத்தனை பொண்ணுங்க இருக்காளுங்க. நம்மை விட இவன்கிட்டத்தான் வலிய வலிய போய் பேசுவாளுங்க. அதிலும் அந்த சரிதாவுக்கு இவன் மேல உள்ளூர ஆசை உண்டுடா. அதை எத்தனையோ தடவை இவனுக்கு நான் கோடிட்டு காட்டினேன். இவன் காதலிச்சானா? சரியான அம்மா புள்ளை. எங்கம்மா யாரை பார்த்து கழுத்துல தாலிகட்ட சொல்றாங்களோ அவங்களுக்குத்தான் கட்டுவேன்னு பழைய படத்து கதாநாயகன் மாதிரி வசனம் பேசினான். ஆனா இவன் தம்பி குருவை பார், அப்படியே ஆப்போசிட். அழகா ஒரு பொண்ணை செட் பண்ணிட்டான். மண்டபத்துல அங்கங்க தள்ளிக்கிட்டு போய் என்ன தைரியமா டாவடிச்சுக்கிட்டிருக்கான் தெரியுமா?

    சங்கர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தான் குரு.

    என்ன... என்னைப்பத்தி பேச்சு அடிபடுது?

    எல்லாம் உன்னோட வீரபிரதாபங்களைப் பத்தித்தான்

    நான் என்ன பெரிய வீரச்செயல் செய்தேன்? தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.

    எல்லாம் உன் காதலைப் பத்தித்தான். உன்னோட லவ்வரை தைரியமா கூட்டிக்கிட்டு வந்ததுமில்லாம, அங்கங்க தனியாகூட்டிக்கிட்டு போய் சில்மிஷம் பண்ணிக்கிட்டிருக்கியே அதை சொல்றேன். என்ன இருந்தாலும் உன் தைரியம் உன் அண்ணனுக்கு வராது குருவின் தோளை பெருமையாகத் தட்டினான் சங்கர்.

    காதலிக்க தைரியம் இல்லாட்டி கூட பரவாயில்லை, எங்கண்ணனுக்கு கல்யாணம் பண்ணிக்கவே தைரியம் கிடையாது. பொண்ணு பார்க்ககூட வரமாட்டேன்னுட்டான்னா பாரேன். அம்மா பார்த்தா போதும். அம்மாவுக்கு புடிச்சா போதும்னு அநியாயத்துக்கு நல்லபிள்ளை மாதிரி நடிக்கறான். இவனை இப்படியே விட்டா என் லைன் எப்ப க்ளியராகறது? அதான் இழு இழுன்னு இழுத்துட்டு போய், எப்படியோ இந்த பொண்ணை முடிச்சாச்சு. என்னயிருந்தாலும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கறதுல உள்ள சந்தோஷம் வேற எதிலேயும் இல்லை

    குரு தோள்களை பெருமையாக குலுக்கிக் கொள்ள, சங்கர் அவனுடைய கையைப் பற்றி குலுக்கினான்.

    வாடா... மச்சான். நீ என் கட்சி...

    குணசீலன் - இருக்கையில் நன்றாக சாய்ந்தமர்ந்து மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியவாறு அவர்களை பார்த்து சிரித்தான்.

    'காதலிக்காம போனதால நான் இப்ப என்னடா குறைஞ்சுட்டேன்? எனக்கு வர்ற மனைவி படிக்கலையா? அழகாயில்லையா? பெயருக்கு ஏத்தமாதிரி அவ ஊர்வசிதான்டா...!'

    குணசீலன் பெருமையாக சொல்ல, அதே நேரம் அறைக்கு வெளியிலிருந்து அழகான பெண்ணின் குரல் வந்தது.

    குரு...

    குருவை அழைத்த குரலுக்கு அனைவரும் திரும்பினர். ரேகா நின்றிருந்தாள். குருவின் காதலி..

    யோகக்காரன்டா உன் தம்பி. போற இடத்துக்கெல்லாம் அவன் ஆளு தேடி வருது ரமேஷ் சிரிக்க, குரு, அவசரமாக வெளியேறினான்.

    அவன் வெளியே சென்றதும் என்ன மச்சான் இந்த காதல் மேட்டர் உன் அம்மாவுக்குத் தெரியுமா? என்றனர்.

    தெரியும்... தெரியும். எங்க வீட்ல பச்சைக் கொடி காட்டியாச்சு. அதனால்தான் மூத்தவனை வச்சுட்டு சின்னவனுக்கு கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு அவசர அவசரமாக எனக்கு பெண் பார்த்து கல்யாணம் வச்சாங்க...

    அதே சமயம் ரேகாவுடன் வெளியே வந்த குரு, என்ன நீ? கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாம? இப்படியா மாப்பிள்ளை ரூமுக்கு வர்றது? ஏற்கனவே நம்மைப்பத்தி அங்க கிண்டல் பண்ணிக்கிட்டிருக்கானுங்க. நீ வேற... குரு... குருன்னுக்கிட்டு...

    இதப்பாரு... இப்படியெல்லாம் என்னை திட்டினா, நான் காலையில கல்யாணத்துக்கு இருக்கமாட்டேன். இப்பவே கிளம்பி போய்டுவேன் அவள் கண்களில் சிவப்புகாட்ட.

    சரி...சரி கோபப்படாதே. உனக்கு என்ன வேணும்? சாப்பாட்ல ஏதாவது கொடுக்காம விட்டுட்டாங்களா? வா நான் வாங்கித் தர்றேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1