Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ranjani
Ranjani
Ranjani
Ebook85 pages36 minutes

Ranjani

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'ரஞ்சனி' கதையும் வெளிவந்த தொடர்கதைதான். அது சமீபத்தியது. துன்பம் வரும் வேளையில் ஒரு பெண் எப்படித் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்கிற என்னுடைய ஆவலை வெளிப்படுத்திய கதை. ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக என்னிடம் கதை கேட்டபோது சொல்லப்பட்ட கரு. அது நடக்காமல் போனதும், பத்திரிக்கையில் தொடர்கதையாக மலர்ந்தது. என் முயற்சிகளுக்கெல்லாம் ஆதரவளிக்கும் என் அன்பு வாசகர்களுக்கு இந்த நூலைக் காணிக்கையாக்குகிறேன்.
Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580134005552
Ranjani

Read more from Girija Raghavan

Related to Ranjani

Related ebooks

Reviews for Ranjani

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ranjani - Girija Raghavan

    http://www.pustaka.co.in

    ரஞ்சனி

    Ranjani

    Author:

    கிரிஜா ராகவன்

    Girija Raghavan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/girija-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ரஞ்சனி

    இரும்மா.... இரும்மா... முதல்ல அவங்கள்லாம் போகட்டும். அப்புறம் அவங்க வெளியில வந்தப்புறம் நீங்க போகலாம்... தள்ளுங்க...ம்.. தள்ளுங்க சொல்றேன் கோவில் காவலாளி தன் கையில் இருந்த லத்தியை சுழற்றியபடி தரிசனத்திற்குக் காத்திருந்த கூட்டத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தாள்.

    ரஞ்சனி கொஞ்சம் தள்ளி பிரகாரத் தூண் அருகில் உட்கார்ந்திருந்தாள். அவள் கையில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணப் புத்தகம். தினமும் மாலையில் கோயிலுக்கு வந்து சஹஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்துவிடுவது அவள் வழக்கம். ரஞ்சனியைப் பார்த்தால் இருபத்தி ஆறு வயது என்று மதிப்பிடவே முடியாது. அவள் அப்பா கூட இருபது தான் நடக்கிறது என்று கூசாமல் பொய் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் ரஞ்சனிக்கு வயது முந்தா நாளுடன் இருபத்தி ஆறு ஆகிவிட்டது.

    பார்க்க பளிச்சென்று இருப்பாள் ரஞ்சனி. நீளவாட்டில் கொஞ்சம் பெரிய கண்கள். கொஞ்சநேரம் பார்த்தால் ஏதோ சொல்வது போல் பேசும் கண்கள். கத்திரித்தெல்லாம் விடாமலேயே பட்டையாய் தெளிவாய் விரியும் புருவம். நெற்றிக்கு நடுவிலிருந்தே சரேலென்று இறங்கும் மூக்கு. மேலுதடை விட சற்றே தடித்த அடி உதடு. அதுவே ரஞ்சனிக்கு தனி அழகு. முன் வரிசைப் பற்களின் ஓரமாக ஒன்று மட்டும் சற்றே இன்னொரு பல்மேல் ஏறி இருக்கும். ஆனால் அதுதான் ரஞ்சினியின் சிரிப்பை மேலும் அழகாக்குகிறது. நீள நேர் வகிடும், இடுப்புக்குக் கீழ் இறங்கிய தடித்த பின்னலும், சாந்துப் பொட்டும் அதன் அரணாக நிற்கும் விபூதியும், குங்குமமும் இவையெல்லாம் மட்டும் ரஞ்சியை அழகாக்கவில்லை. எப்போதும் துறு துறுவென்றிருக்கும் அவள் சுபாவமும், சட்டென்று ஒட்டிக்கொள்ளும் குணமுமே எல்லோருக்கும் ரஞ்சனியைப் பிடிக்க வைத்துவிட்டது.

    ஸ்லோகம் சொல்லி முடிச்சாச்சா. அதுகளை எல்லாம் உள்ளே அனுப்பி இருக்கா. அடுத்தது நாம் போக வேண்டியதுதான் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜெயம் மாமி எழுந்தாள். அப்படிச் சொல்லாதீங்க மாமி, அவங்களும் மனுஷங்கதானே! ஏதோ போதாத காலம் இப்படி கஷ்டப்படறாங்க புத்தி ஸ்வாதீனம் இல்லாமல் கடவுளை வேண்டி குணமாவதற்கு வந்திருக்கும் மனநோயாளிகளின் மேல் இரக்கப்பட்டுதான் அப்படி சொன்னாள் ரஞ்சனி.

    அது குணசீலம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில். திருப்பதிப் பெருமாளை நோக்கி குணசீலத்தில் தவமிருந்த வாஸயனருக்கு பிரசன்னமான வெங்கடேசப் பெருமாளை, இனிமேல் இங்கேயே இருந்து திருப்பதியைப் போல் இங்குள்ளவர்களுக்கு அருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டதோடு, மனநலம் குன்றியவர்களையும் குணப்படுத்த வேண்டும் என்று பெருமாளிடம் அவர் வேண்டிக் கொண்டதாகவும், வெங்கடேசப் பெருமாளும் பக்தனின் வேண்டுதலுக்குக் கட்டுப்பட்டு, பிரசன்ன வெங்கடேசப் பெருமாளாக இதயத்தில் தாயாருடன் பிரத்யட்சமாக வீற்றிருப்பதாகவும் ஐதீகம்.

    அதனாலேயே எத்தனை பேர் காத்து இருந்தாலும் குணசீலம் கோயிலில் மனநலம் குன்றியவர்களைத்தான் முதலில் உள்ளே அனுப்புவார்கள். பெருமாள் தீர்த்தத்தை இரண்டு வேளை குடிக்கவும், இரண்டு வேளை முகத்திலடிக்கவும், 48 நாட்கள் இப்படிச் செய்து காவேரியில் நீராடிவர மனநலம் சரியாகும் என்பது நம்பிக்கை. உண்மையில் நடப்பதும் கூட.

    அவர்களெல்லாம் மெதுவாக வெளியேற, அதைப் பார்த்து கனத்த மனத்துடன் பெருமாளைத் தரிசிக்க உள்ளே சென்றாள் ரஞ்சனி.

    இரண்டு வேளையும் குணசீலப் பெருமாளை தரிசிப்பது ரஞ்சனிக்கு ஆத்மார்த்தம். இவளத்த பெண்களெல்லாம் ஒன்று கல்யாணம் செய்து கொண்டு சென்னை, பம்பாய், டெல்லி என்றும், ஒரு சில பேர் மலேசியா, அமெரிக்கா, லண்டன் என்றும் வாழச் சென்றுவிட்டனர். மற்றவர்கள் டீச்சராகவோ, கவர்மெண்ட் உத்தியோகத்திலோ அவர்களே அமர்ந்துவிட்டனர்.

    ஒன்பதாம் வகுப்பையே முழுதும் முடிக்காத ரஞ்சனி மட்டுமே திருப்பதியிலிருந்து வந்து திரும்பிப் போகாத வெங்கடேசப் பெருமாளைப்போல் குணசீலத்திலேயே தங்கிவிட்டாள்.

    ஊருக்கெல்லாம் ஓடி ஓடி உதவி செய்யும் ரஞ்சனியுடன் ஓரளவிற்கு ஒட்டாத ஊர்க்காரர்கள். நடப்பது நடக்கட்டும் என்றுதான் ரஞ்சனியும் நாளை ஓட்டிக்கொண்டிருந்தாள்.

    என்ன முதலியாரே! சீக்கிரம் வந்துட்டீங்களோ! வாசலில் ஈசிச் சேரில் சாய்ந்திருந்த வரகுணனைப் பார்த்துக் கேட்டபடி வந்தார் சிவகுரு.

    "ஆமாம்பா, அரைநாள் லீவு போட்டுட்டு டவுனுக்குப் போயிருந்தேன். ரஞ்சனி கொஞ்சம்

    Enjoying the preview?
    Page 1 of 1