Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pasumai Niraintha Ninaivugal
Pasumai Niraintha Ninaivugal
Pasumai Niraintha Ninaivugal
Ebook89 pages1 hour

Pasumai Niraintha Ninaivugal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466336
Pasumai Niraintha Ninaivugal

Read more from Parimala Rajendran

Related to Pasumai Niraintha Ninaivugal

Related ebooks

Reviews for Pasumai Niraintha Ninaivugal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pasumai Niraintha Ninaivugal - Parimala Rajendran

    24

    1

    வண்ணத்துப்பூச்சிகளாக, பல்வேறு வண்ணங்களில் அழகழகாய் பெண்கள் அந்த இடத்தில் வட்டமிட,

    அவர்களை ரசிப்பதற்கென்றே மாணவ பட்டாளம் அந்த இடத்தில் குழுமியிருக்க,

    சிரிப்பும் பேச்சுமாக அந்த இடம் களை கட்டியிருந்தது.

    அந்த ஆர்ட்ஸ் காலேஜில் வாசலில் நின்றிருந்த வாட்ச்மேன் உள்ளே நுழைந்த லெக்சரர் பவானியை பார்த்து வணக்கம் தெரிவித்தான்.

    ஏய் மேடம் வந்தாச்சு - பவானி வருவதை தூரத்திலிருந்து பார்த்து சொல்ல,

    அப்படி அவங்ககிட்டே என்னடி இருக்கு, எல்லாரும் பவானி மேடம்னா அவ்வளவு கிரேஸா இருக்கீங்க.

    அவங்கள மாதிரி அன்பாக, ஒரு ப்ரெண்டு மாதிரி பழகிற லெக்சரர் யாராவது இருக்காங்களா சொல்லுங்க. இத்தனை வயசுக்கும் பார்க்க கம்பீரமாக, அழகாக இருக்காங்க.

    விட்டா அவங்க ஜாதகத்தையே சொல்வீங்க போலிருக்கே.

    சொல்லட்டுமா. மேடத்தோட. ஹஸ்பெண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜீனியராக இருக்காரு. ஒரே மகன் இங்கே பி.டெக் முடிச்சுட்டு, அமெரிக்காவில் எம். எஸ். படிக்கிறாரு. படிப்பை முடிச்சுட்டு அடுத்த மாசம் இந்தியா வர்றாரு. போதுமா. இன்னும் டீடெய்ல் வேணுமா.

    இங்கே பாருடி... பவானி மேடம் பேமலியை பத்தி இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கா.

    "ஒருத்தங்களை மனசுக்கு ரொம்ப பிடிச்சுட்டா அவங்களை பத்தி தெரிஞ்சுக்க நினைப்போம்தானே, அந்த ரகம் நாங்க.

    நேத்தைக்கு க்ளாஸ் எடுத்தாங்க பாரேன், பின்ட்ராப் சைலன்ஸ். அவங்க சொல்லி தரதை கவனிச்சாலே போதும். நல்லா மார்க் ஸ்கோர் பண்ணலாம்."

    தோழிகள் பேசுவதை காதில் வாங்கியபடி அங்கு அமர்ந்திருந்த நீது, போதும், அவங்களை பத்தி புகழ் பாடினது கொஞ்சம் நிறுத்திறீங்களா.

    எரிந்து விழுந்தாள்.

    என்னடி இவ, எப்ப மேடத்தை பத்தி பேசினாலும் எரிஞ்சு விழறா.

    அவளுக்கென்னவோ, அவங்களை பத்தி பேசினாலே பிடிக்கமாட்டேங்குது. பிஸிக்ஸ் க்ளாஸில்கூட வேண்டா வெறுப்பாதான் உட்கார்ந்திருக்கா. உனக்கும், அவங்களுக்கும் அப்படியென்னடி ஜென்ம பகை.

    நான் உங்களோடு இருக்கணும்னா, அவங்களைப் பத்தி பேசறதை நிறுத்துங்க. இல்லாட்டி நான் கிளம்பறேன்.

    அம்மா, தாயே நீ கோபிச்சுக்கிட்டு போயிடாதே. அப்புறம் இந்தப் பக்கம் சுத்திக்கிட்டு இருக்கிற நம் காலேஜ் ஹீரோக்கள் எல்லாம் இடத்தை காலி பண்ணிட்டு போயிடுவாங்க.

    அவர்கள் பேச்சு, வேறு திசைக்கு திரும்ப கல்லூரி மணியும் ஒலிக்க, கூட்டம் கலைய ஆரம்பித்தது.

    நீது, காண்டீன் போலாமா... நான் இன்னைக்கு லஞ்ச் எடுத்து வரலைடி.

    சரி வா போவோம்.

    தோழியுடன் காண்டீனை நோக்கி செல்ல, அங்கே பவானியும், இன்னும் இரண்டு லெக்சரர்களும் சாப்பிட்டு கொண்டிருக்க,

    வேண்டாம் வா போலாம்.

    என்னடி, காண்டீன் வரைக்கும் வந்துட்டு போவோம்னு சொல்ற.

    அங்கே பாரு அந்த பவானி மேடம் இருக்காங்க. அவங்க சாப்பிட்டு போனப் பிறகு வரலாம்.

    உன்னை புரிஞ்சுக்கவே முடியலை நீது. அப்படியென்ன இவங்ககிட்டே இவ்வளவு னிவேசம் காட்டற...

    இங்கே பாரு. நீ வேணும்னா போய் சாப்பிடு. நான் போறேன்.

    சரி சரி அப்புறமாவே வரலாம்.

    இருவரும் நடக்க...

    நீது, நான் ஒண்ணு கேட்டா சொல்லுவியா.

    என்ன?

    உனக்கு பவானி மேடத்தை முதலிலேயே தெரியுமா?

    சின்ன வயசிலிருந்தே தெரியும்.

    என்னடி சொல்றே?

    ஆமாம். எங்கம்மாவோட கூடபிறந்த தங்கை. என் சித்திதான் பவானி மேடம்.

    ஆச்சரியத்துடன் நீதுவை பார்த்தாள் அவள் தோழி.

    2

    அடுப்படியில் வள்ளி சமையலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாள். வெள்ளை பணியாரம், கார சட்னி, வெண்பொங்கல், வடை எல்லாம் தயாராகி ரெடியாக இருந்தது. காரட் அல்வா அடுப்பில் இருந்தது.

    வள்ளி, சாம்பார் வச்சுட்டியா?

    ஆச்சும்மா சமையல் ஏறக்குறைய முடிஞ்சுடுச்சு. இட்லி மட்டும்தான் பாக்கி. தம்பி வந்ததும், சூடா வேக வைத்து எடுத்துடறேன்.

    பவானியிடம் வள்ளி சொல்ல, காரட் அல்வாவை வாயில் போட்டு சுவைத்தவள், நல்லாயிருக்கு வள்ளி, இனிப்பு அளவோடு சரியா இருக்கு. நவீனுக்கு ரொம்பப் பிடிக்கும்.

    பவானி, பவானி.

    அம்மா ஐயா கூப்பிடறாரு.

    என்னங்க இதோ வந்துட்டேன்.

    இன்னும் உள்ளே என்ன செய்யற. உன் மகனை ரிசீவ் பண்ண ஏர்போர்ட்டுக்கு போக வேண்டாமா?

    அவன்தான் கிளம்பறதுக்கு முன்னால போனில் வர வேண்டாம்னு சொன்னானே. டாக்ஸி எடுத்துட்டு வந்துடறேன்னு சொன்னான். நாம போகணுமா.

    "என்ன

    Enjoying the preview?
    Page 1 of 1