Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Viral Thodum Thooraththile
Viral Thodum Thooraththile
Viral Thodum Thooraththile
Ebook127 pages1 hour

Viral Thodum Thooraththile

By Usha

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJul 1, 2018
ISBN9781043466213
Viral Thodum Thooraththile

Read more from Usha

Related authors

Related to Viral Thodum Thooraththile

Related ebooks

Reviews for Viral Thodum Thooraththile

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Viral Thodum Thooraththile - Usha

    23

    1

    தன்யா கதவுகளைத் திறந்தாள்.

    காத்திருந்த குளிர்காற்று தை மாதத்து பனியையும் சேர்த்துக் கொண்டு உள்ளே வந்தது.

    கிழக்கு உயிர் பெற்றுக் கொண்டிருந்த காட்சியைப் பார்த்தாள்.

    சிறு முறுவல் இதழ்களில் தோன்றியது.

    இன்னொரு புத்தம் புது விடியலைக் காணும்போது நெஞ்சுக்குள் இதம் படர்ந்தது.

    இளஞ்சிவப்பு புடைசூழ பொன் கதிர்களைச் சுமந்தபடி கதிரவன் பூமியைக் காண்பதற்காக வருகிற நித்தியக் காட்சியை, இயற்கையை வியந்தபடி பார்த்தாள் அவள். ‘ஓ மனிதா, இப்போது கூட ஒன்றும் முழுகிப் போய்விடவில்லை, இதோ ஒரு புதிய நாள், இதோ ஒரு புது சந்தர்ப்பம், எடுத்துக்கொள், உபயோகித்துக் கொள்’ என்று எவ்வளவு பெருந்தன்மையுடன் விடியலை வழங்குகிறது இயற்கை என்று தோன்றியது அவளுக்கு.

    தன்யாம்மா... தன்யாம்மா...

    அடுத்த அறையிலிருந்து மெல்லிய அழைப்பு கேட்டது.

    இதோ வந்துட்டேன்... என்றபடி அவள் விரைந்தாள்.

    அன்னபூரணியம்மாள் படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருந்தாள்.

    குட்மார்னிங் அம்மா... புன்னகை செய்தபடி தன்யா கட்டிலை நெருங்கினாள். நல்லா தூங்கினீங்களா? வலி குறைஞ்சிருக்கா? எப்படியம்மா இருக்கீங்க இப்போ? என்றாள் சரிந்திருந்த தலையணையை சரியாக்கியபடி,

    நாலு மணிக்கெல்லாம் முழிப்பு வந்துச்சு தன்யா... மறுபடி தூக்கம் வரலே. கொட்டு கொட்டுன்னு உக்காந்திட்டிருக்கேன்... அன்னபூரணி சலித்துக் கொண்டாள்.

    நாலு மணிக்கே முழிச்சுகிட்டீங்களா? ஏம்மா, என்னைக் கூப்பிட்டிருக்கலாம் தானே? மைல்டா செடேஷன் கொடுத்துத் தூங்க வெச்சிருப்பேனே? தன்யா வியப்புடன் சொல்ல, அந்த அம்மாள் பெருமூச்சு விட்டாள்.

    மனசு வரலேம்மா தன்யா... நைட் டியூட்டி பாக்கற நர்ஸ் மாதிரியா நீ இருக்குறே? போனவாட்டி இதே மாதிரி பிளட் பிரஷர் அதிகமாகி முட்டிக்கால் வலியும் கூடிப்போய் தாமரை ஆஸ்பிடல்ல கெடந்தேன்... ராப்பூரா பொட்டு தூக்கம்னா பொட்டு தூக்கம் இல்லாம ஒக்காந்திருப்பேன்... நைட் டியூட்டி பாக்கற நர்ஸுக இருக்காளுகளே, என்னை அப்படியே எரிக்கிற மாதிரி பாப்பாளுக. கொஞ்சம்கூட கவலைப்படாம ரெஸ்ட் ரூம்ல போய் குறட்டை விட்டுட்டுத் தூங்குவாளுக... ஒன்னைத்தாம்மா மொதல் தடவையா பாக்கறேன். ராத்திரி பூரா வார்டுங்க, ரூமுங்க, அங்க இங்கன்னு போயிகிட்டும் வந்துகிட்டும் டூட்டி பாக்கற நர்ஸை... என்றாள் மூச்சு விடாமல்.

    அதான் நீங்களே சொல்லிட்டீங்களேம்மா. டூட்டி பாக்கறேன்னு... கடமைன்னு வந்துட்ட பிறகு செய்யாம இருக்க முடியுமா சொல்லுங்க... தன்யா சிரித்தாள்.

    தன்யாம்மா...

    சொல்லுங்கம்மா... காபி வேணுமா?

    இல்லே... கொஞ்சம் பேசணும்... முட்டிக்கால் வலி நல்லா குறைஞ்சு போச்சா, மனசுல உற்சாகம் வந்திருக்கு. உங்கிட்ட பேசணும் போல இருக்கு.

    நா உங்கள் மகள் மாதிரிம்மா. காலை வேளைல வலி குறைஞ்சது. உற்சாகம் வந்திருக்குன்னெல்லாம் நீங்க சொல்றப்போ ரொம்ப சந்தோஷமா இருக்குமா... சொல்லுங்க அவள் படுக்கையை உதறி சீராக்கிவிட்டு எதிரில் நின்றாள்.

    இருபத்திரண்டு வயசு தானே உங்களுக்கு? என்றாள் அன்னபூரணி எடுத்த எடுப்பில்.

    அட! எப்படி கரெக்டா சொல்றீங்கம்மா, பர்த் சர்டிபிகேட்டை கைல வெச்சிட்டிருக்கிற மாதிரி? தன்யா வியந்தாள்.

    டாக்டர்கிட்டே கேட்டு தெரிஞ்சுகிட்டேன். சரி, விஷயத்துக்கு வரேன், அப்பா, அம்மா, ரெண்டு தங்கச்சிங்கன்னு கச்சிதமான குடும்பம் இல்லையா உங்களுக்கு? எனக்கும் ரெண்டு பொண்ணுங்க தான், கல்யாணம் முடிச்சு அனுப்பிட்டேன்... என் அக்கா பையன் ஒருத்தன் இருக்கான்... கோகுல்னு பேரு... கெமிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சுட்டுப் பெரிய உர கம்பெனில நல்ல பதவில இருக்கான். நான் வளர்த்த பிள்ளை தான்... உன்னைப் பாத்ததுல இருந்து மனசுக்குள்ள ஒரு ஆசைம்மா தன்யா. எங்க வீட்டுக்கு மருமகளாக்கிக்கணும் உன்னைன்னு தவிக்குது மனசு.

    எவ்வித முக மாறுதலும் இல்லாமல் தன்யா ரிப்போர்ட் கார்டை எடுத்துத் தேதியை மாற்றினாள். சின்ன டேபிள் மேல் சேர்ந்திருந்த சாத்துக்குடி பழத் தோல்களை எடுத்துக் குப்பைக் கூடையில் போட்டாள்.

    உங்க அப்பா, அம்மாவை வந்து பார்த்துப் பேசறது தான் முறை. அதுக்கு முன்னால உன்னை ஒரு வார்த்தை கேக்கணும் இல்லையா? என்ன தன்யா, பதில் சொல்லும்மா.

    தன்யா பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள்.

    புன்னகைத்தாள்.

    அட, அட! இந்த குறுஞ்சிரிப்புக்கு கோகுலோட படிப்பையே எழுதி வெச்சுடலாம் போல இருக்குதே அன்னபூரணி தவிப்புடன் படபடத்தாள். வர்ற ஞாயிற்றுக்கிழமை அமாவாசை வருது... நெறைஞ்ச நாள்... அக்காவையும் மாமாவையும் அனுப்பட்டுமா உங்க வீட்டுக்கு மொதல்ல? இல்லேன்னா இப்பவே போன் போட்டு கோகுலை இங்க வந்து பாக்கச் சொல்லட்டுமா?

    அன்னபூரணியம்மா, என் மேல இவ்வளவு பிரியம் வெச்சிருக்கீங்களே... என் மனசு நெறைஞ்ச நன்றிம்மா... தன்யா பிளட் பிரஷர் அளக்கும் கருவியை எடுத்தபடி மெல்லிய குரலில் பேசினாள். தப்பா நெனைக்காதீங்க. எனக்கு ஒரு பிரச்சினை இருக்கும்மா... வெளிப்படையாவே சொல்றேனே... ஓவரிஸ் எனக்கு சரியா இல்லையாம். வீக்கா இருக்குதாம். ஹார்மோன் சுரப்பு குறைவா இருக்கறதால கர்ப்பம் தரிக்கிற வாய்ப்பு இல்லையாம். என்னம்மா, என்ன அப்படிப் பாக்கறீங்க?

    நெஜ... நெஜமாவா சொல்றே? திகைத்துப் போனாள் அன்னபூரணி.

    சத்தியமா... ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டு தான் இருக்கேன் சரி, மைல்ட் டோஸ் கொடுக்கறேன் செடேஷன்... நீங்க தூங்குங்கம்மா. இப்ப பி.பி. எடுத்தா சரியா இருக்காது.

    வலிக்காமல் கருவியைப் பொருத்தி, இதமாகப் பம்ப் செய்துவிட்டு உடனே எடுத்துவிட்டு, தோளைத் தட்டியபடி மெல்லிய புன்னகையுடன் வெளியேறும் தன்யாவை அன்னபூரணி இமைகள் மூட மறந்து போய்ப் பார்த்தாள். உள்ளே தவித்தது.

    2

    அன்னபூரணியம்மாளின் முகம் பூராவும் வினாடியில் பரவி விட்ட அதிர்ச்சி அலைகளை நினைத்தபடியே தன்யா வீடு வந்து சேர்ந்தாள்.

    நியாயமான அதிர்ச்சிதான்.

    எந்தக் குறைபாட்டையும் ஏற்றுக்கொள்ள முடியும் தான். உடல் பாகம் குறைவு, அழகுக் குறைவு, நிறக்குறைவு, உயரக்குறைவு என்று கொஞ்சம் யோசித்து நிவர்த்தி கூட செய்து விடலாம் தான். ஆனால் தாய்மை என்பது சந்தேகத்துக்கிடமான விஷயம் என்பதை யாரும் ஒப்புக்கொண்டு விடமுடியாது. ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

    அந்த நாளை அவள் நினைத்துப் பார்த்தாள். அதே நகரின் புகழ்பெற்ற கைனகாலஜிஸ்ட் ஜமுனா ராணியிடம் தான் அப்பா உடனே அழைத்துப் போனார். ஆறு மாதங்களாக மாதா மாதம் பெண் படும் வலியைப் பொறுக்க முடியாமல்தான் தானே அப்பாயின்ட்மென்ட் வாங்கினார். அதுவும் அவள் நர்ஸாக இருக்கிற மருத்துவமனை பற்றி கூட யோசிக்காமல், சிட்டியிலேயே பிரமாதமாகப் பெயர் வாங்கியிருக்கும் மகப்பேறு டாக்டரிடமே கூட்டிப் போய் விட்டார்.

    நான்கு நாட்கள் சோதனைக்குப் பிறகு ஜமுனா ராணி தானே அறைக்கு அழைத்துத் தெளிவாகச் சொன்னாள்.

    "கர்ப்பப்பை எவ்வளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு இந்த ஓவரிஸ் ரொம்ப முக்கியம் பெண்ணுக்கு... மத்த சமயங்கள்ல கோபம், சிரிப்பு, அழுகை, சமாதானம்னு பல்வேறு வகை உணர்வுகளுக்கு ஆதாரமாக இருக்கிற இதே ஓவரிஸ்தான், பெண் கர்ப்பம்

    Enjoying the preview?
    Page 1 of 1