Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Thantha Vazhkai
Kaadhal Thantha Vazhkai
Kaadhal Thantha Vazhkai
Ebook121 pages34 minutes

Kaadhal Thantha Vazhkai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தந்தையின் துரோகத்தால் சிறுவயதிலேயே குடும்ப பாரத்தை ஏற்றுக்கொண்ட கவுதம். தன் இரு பெண் பிள்ளைகளின் நல்வாழ்வை பெரிதென என்னும் தாய் பவளத்திடம் தன் காதலை தெரிவிக்கிறான். தாய் தன் மகள்கள் மீது வைத்த காதல் தந்த வாழ்க்கை என்ன? கவுதமிற்கு வாழ்க்கையில் நடந்தது என்ன? காதல் தந்த வாழ்க்கையை என்ன என்பதையும் கதையை வாசித்து அறியலாம்...

Languageதமிழ்
Release dateJul 9, 2022
ISBN6580140608569
Kaadhal Thantha Vazhkai

Read more from R. Manimala

Related to Kaadhal Thantha Vazhkai

Related ebooks

Reviews for Kaadhal Thantha Vazhkai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Thantha Vazhkai - R. Manimala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காதல் தந்த வாழ்க்கை

    Kaadhal Thantha Vazhkai

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    சூரிய ஓய்வு நாளின் நண்பகல் வேளை! பவளம் ஓடியாடி தன் பிள்ளைகளுக்கு உணவுப் பரிமாறிக் கொண்டிருந்தாள்.

    அம்மா... கொஞ்சம் குழம்பு ஊத்து கவுதம் கேட்டதும், பவளம் இன்னும் கொஞ்சம் சாதத்தை அள்ளிப் போட்டுவிட்டு குழம்பை ஊற்றினாள்.

    ஏம்மா சாதம் போட்டே? சாப்பிட்டதே அதிகம். இதை வேற எப்படி சாப்பிடறது?

    முப்பது வயசுப் பிள்ளை பேசற பேச்சா இது? சாப்பிடுப்பா!

    அண்ணா! சாப்பாடை பாதி பசிக்கு சாப்பிடணும். மீதி ருசிக்கு சாப்பிடணும்... தெரியுமா? மோகனா மட்டன் ப்ரையை வாய்க்குத் தள்ளிக்கொண்டே சொன்னாள்.

    தெரியுதே... உன்னைப் பார்த்தாலே தெரியுதே! ஏம்மா... உனக்கு எத்தனை முறை சொல்லியிருக்கேன்? இவளுக்கு மட்டன் தராதேன்னு! ஏற்கனவே ஊதிப்போய் இருக்கா! இதுக்கு மேலேயும் பெருத்தா... இவளுக்கு எங்கே போய் மாப்பிள்ளைத் தேடுவேன்? பாதி கிண்டலும், பாதி அக்கறையும் கலந்திருந்தது பேச்சில்.

    பொறாமை... பொறாமை! அம்மா நாளைலேர்ந்து எனக்கு தனியா வச்சு சாப்பாடு போடு! யார் முன்னாலேயும் இனி சாப்பிடமாட்டேன். சொல்லிட்டேன்! என்ற மோகனாவிற்கு இருபத்தி நாலு வயது. ஆனால் முப்பது வயது பெண்மணியைப் போன்ற தோற்றம். வஞ்சனை இல்லாமல் சாப்பிட்டு, வகை தெரியாமல் குண்டாகி விட்டிருந்தாள் உடம்புதான் அப்படி, ஆனால் முகம் அழகு. ஒல்லியாய் இருந்திருந்தால்... மாப்பிள்ளை க்யூவில் நிற்பார்கள்.

    ஆமாம்மா... நாளைலேர்ந்து உன் பொண்ணுக்கு தனியாவே பரிமாறு. மிச்சம் மீதியிருந்தா எங்களுக்குப் போடு! என்றான் கேலியாய்.

    திவ்யா கலகலவென சிரித்தபடி சரியா சொன்னீங்கண்ணா! என்றாள்.

    ஓஹோ... உங்கண்ணனுக்கு ஒத்து ஊதறீங்களாக்கும்! என்றாள் கழுத்தை ஒடித்து.

    திவ்யா பதிலேதும் பேசாமல்... கவுதமிற்கு ரசம் விட்டாள்.

    போதும்... திவ்யா... சாப்பிட முடியல... இதெல்லாம் வேஸ்ட்தான்! தட்டில் பாதி சாப்பாடு இருந்தது.

    வாரத்துல ஒருநாள்தான்... சூடா, வாய்க்கு ருசியா சாப்பிடறீங்க. மத்த நாளெல்லாம் ஆபீஸ் கேன்டீன்ல போடறதை வெந்ததோ, வேகாததோ சாப்பிட்டு தொலைக்கணும். இதையாவது ஒழுங்கா சாப்பிடக் கூடாதாண்ணா! முன்னைக்கு இப்ப கொஞ்சம் இளைச்சிக்கூடப் போய்ட்டீங்க! திவ்யா வருத்தமாய் சொன்னாள்.

    அடடா... பாசமலர் படம் பார்க்கிற மாதிரி இருக்கு! சாதத்தில் தயிரை விட்டு பிசைந்தபடி நக்கலாய் சொன்னாள் மோகனா.

    அவளுக்கு பொறாமை, நீங்க சாப்பிடுங்கண்ணா!

    போதும்மா... இதுக்கு மேலே என்னால முடியாது தட்டில் கையை கழுவப் போனான்.

    அண்ணா... கையை இதுல கழுவிடாதீங்க. சாப்பாடு வேஸ்ட்டாக வேணாம். நான் சாப்பிடறேன்.

    திவ்யா... வேணாம்... இது எச்சில்!

    என் அண்ணனோட எச்சில்தானே! அண்ணா இந்த சாப்பாடே நீ போடறதுதானேண்ணா! நான் சாப்பிட்டுக்கறேன். நீங்க போங்க!

    கவுதம் தங்கையை நெகிழ்வாய் பார்த்தபடி போனான்.

    ஹும்... என்று உதடை சுளித்தாள் மோகனா. அந்த பாசப் பறவைகளைப் பார்த்து பூரித்துப் போனாள் பவளம்.

    ***

    அவசர அவசரமாய் டிரஸ் செய்துக் கொண்டிருந்தாள் மோகனா.

    திவ்யா... தோசையை தட்டில் வைத்து அவளிடம் நீட்டினாள்.

    வேணாம் திவ்யா! சாப்பிட்டு கிளம்பற அளவுக்கு நேரமில்லை!

    ஆமா... எட்டு மணி வரைக்கும் வாயப் பொளந்துக்கிட்டு தூங்க வேண்டியது. அப்புறம் ஆபிஸ்க்கு நேரமாய்டுச்சின்னு அரக்கப்பரக்க கிளம்பறது. சாப்பிடறதுக்கு அஞ்சு நிமிஷம் ஒதுக்க முடியாதோ?

    ப்ச்... வேணாம்னா விடேன்! நீ வேற டென்ஷனாக்கிட்டு. எனக்கென்ன நாலுகையா இருக்கு... ஒரே நேரத்திலே எல்லா வேலைகளையும் செய்யறதுக்கு?

    சரி... இப்போதைக்கு இதை உன் கையா நினைச்சுக்க! ஆ... காட்டு... திவ்யா தோசையை விண்டு சட்னியில் தொட்டு மோகனாவிற்கு ஊட்டினாள்.

    அந்த நேசத்திற்கு நெகிழ்ந்துப்போன மோகனா... கண்கள் பனிக்க... தங்கையின் தலையை செல்லமாய் கலைத்து... ஊட்டி விட்டதை வாங்கிக் கொண்டாள்.

    வெள்ளையில் இள நீல நிற கட்டம் போட்ட ஷர்ட்டை வெள்ளை பேண்ட்டினுள் இன் பண்ணிக் கொண்ட கவுதம்... சீப்பிற்கு அடங்காமல் நெற்றியில் வந்து விழுந்த கற்றை முடிகளை மீண்டும் மீண்டும் பிரயத்தனப்பட்டு வாரிக் கொண்டிருந்தான்.

    'உங்க முகத்திற்கு அழகூட்டுவதே உங்க ஹேர் ஸ்டைல்தான் கவுதம்.’ இப்போதும்கூட உதடுகள் உரச காதில் சொல்வது போலிருந்தது விநோதினியின் குரல்.

    அந்த நினைவு எழவும்... கண நேரம் உடல் இயக்கமே நின்று போனது போலிருந்தது.

    ஹும்... பொம்பளை கெட்டாங்கண்ணா உங்கிட்டே! உன் அழகை மெய் மறந்து கண்ணாடி முன்னாலே நின்று எவ்வளவு நேரம்தான் ரசிச்சுக்கிட்டிருப்பே?

    மோகனாவின் குரல் ஒலிக்கவும் திடுக்கிட்டான். அவளைப் பார்த்து அசட்டுத்தனமாய் சிரித்தவன்... அடுத்த கணமே சிடுசிடுத்தான்.

    ஏய்... இதென்ன டிரஸ் இது?

    சுரிதார்!

    தெரியுது! நீ சுரிதாரெல்லாம் போடக் கூடாதுன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்? என் பேச்சை கேட்கமாட்டியா?

    எனக்கு பிடிச்ச டிரஸே இதானே! இதையே போட வேண்டாம்னா எப்படி?

    உனக்கு பிடிச்சிருக்குதான். ஆனா சுரிதாருக்குப் பிடிக்கணுமே! பளிச்சினு சொல்லக் கூடாதுன்னு நினைச்சேன் சொல்லவச்சிடறே! உனக்கு இந்த டிரஸ் எடுபடலை மோகனா! மாவரைக்கிற மிஷின்ல மாட்டியிருக்கிற பை மாதிரி அபத்தமாயிருக்கு! உடம்புக்கு ஏத்த மாதிரி டிரஸ் பண்ணத் தெரியலியே! எல்லா சைஸ் உடம்புக்கும் சேலைதான் அழகு! அதுவும் உனக்கு சேலையை விட்டா... வேற போக்கிடமே கிடையாது.

    ஆமா... உங்களுக்கு என்னைப் பார்த்தா கொஞ்சமும் பிடிக்கறதில்லே! மோகனாவின் முகம் சூம்பிப்போனது.

    கவுதம் அருகில் வந்தான். "ஏய்... குண்டு... உம்மேல அன்பு இருக்கிறதாலதான் கண்டிக்கிறேன். ஆம்பளை பசங்க எந்த மாதிரியெல்லாம் கிண்டல் பண்ணுவாங்கன்னு எனக்குத் தெரியும். என்

    Enjoying the preview?
    Page 1 of 1