Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vankkathirkuriya Kaadhal!
Vankkathirkuriya Kaadhal!
Vankkathirkuriya Kaadhal!
Ebook110 pages47 minutes

Vankkathirkuriya Kaadhal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எழிலரசிக்கும் கிரிதரனுக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. கிரிதரன் திருமணக் கனவுகளில் மூழ்கியிருந்தான். ஆனால் திருமண நாள் அன்று எழிலரசி காணாமல் போய்விட்டாள். அவள் எங்கு சென்றாள், எதனால் சென்றாள் என்பதை நெகிழ்ச்சியான இந்த நாவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580137106143
Vankkathirkuriya Kaadhal!

Read more from R. Sumathi

Related to Vankkathirkuriya Kaadhal!

Related ebooks

Reviews for Vankkathirkuriya Kaadhal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vankkathirkuriya Kaadhal! - R. Sumathi

    http://www.pustaka.co.in

    வணக்கத்திற்குரிய காதல்

    Vankkathirkuriya Kaadhal

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 1

    உங்களுக்கு... காதல் கீதல்னு ஏதாவது அனுபவம் உண்டா?

    திடுக்கென அதிர்ந்தாள் எழிலரசி.

    எதிரே கால் மேல் கால் போட்டபடி காபியை பருகிக் கொண்டிருந்த கிரிதரனின் முகத்தில் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டதற்கான எந்த அதிர்ச்சியோ தயக்கமோ இல்லை.

    வெகு சாதாரணமாக காபியை பருகிவிட்டு எதிரேயிருந்த டீபாயின் மேல் வைத்துவிட்டு அவளைப் பார்த்து குறும்பாக சிரித்தான்.

    அவளுக்கோ ஒரு மாதிரியாகிவிட்டது.

    பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை தனியாக பெண்ணிடம் பேச வேண்டும் என்று அனுமதி வாங்கி இப்படி ஒரு கேள்வியை கேட்பான் என்று சத்தியமாக நினைக்கவில்லை.

    என்ன அதிர்ச்சியா பார்க்கறீங்க? நான் ஏதாவது தப்பா கேட்டுட்டனா?

    அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

    நாம ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சு கல்யாணம் பண்ணிக்க முடிவெடுக்கறதுக்கு முன்னாடி இப்படி மனம் விட்டுப் பேசிக்கறது நல்லதுன்னு நினைக்கிறேன். கல்யாணத்துக்கு முன்னாடியான நம்ம வாழ்க்கை ரொம்ப சுதந்திரமானது. அதுல காதல் வரலாம். வராமலும் போகலாம். தப்பில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் யாரையுமே காதலிக்காத ஒருத்தரால் நிச்சயம் எவரையுமே காதலிக்க முடியாது என்றான்.

    ஏதோ பெரிய தத்துவம் சொல்லிவிட்டதைப் போல் பெருமையாக தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.

    எழிலரசி மென்மையாக சிரித்தாள்.

    அப்படியெல்லாம் எதுவுமில்லை என்றாள்.

    ஆனால் நான் அப்படியில்லை தயக்கமில்லாமல் சட்டென்று சொல்லிவிட்டு ஹா... ஹா... என சிரிக்கும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

    தாடையில் கையூன்றி பெரிய பெரிய கண்களை படபடத்து அவள் பார்த்ததில் ஒரு நிமிடம் அவன் திணறித்தான் போனான். அவனுடைய சிரிப்பு மெல்ல அடங்கியது.

    அப்படின்னா... நீங்க யாரையோ காதலிச்சிருக்கீங்க இல்லையா?

    யாரையோ இல்லை. யார் யாரையோ... நிறைய பேர்னு சொல்ல முடியாது! ஒரு அஞ்சாறு பேர்னு சொல்லலாம்.

    அஞ்சாறு பேரா...? வாயைப் பிளந்தாள்.

    ஆமா... அழகா எந்த பொண்ணு என் வழியில் குறுக்கிட்டாலும் அப்படியே காதல்ல விழுந்துடுவேன். ஆனா... சொல்லத்தான் தைரியம் வராது. அந்தக் கால டி. ராஜேந்தர் பட காதலன் மாதிரி ஒரு தலையா காதலிச்சுட்டு ஒரு கட்டத்துல உதறிடுவேன்.

    இதைக் கேட்டு தன்னையும் மீறி கைதட்டி பெரிதாக சிரித்தாள் எழிலரசி.

    வெட்டிய மின்னலான அந்த சிரிப்பில் இவன் கட்டவிழ்ந்த நெஞ்சினன் ஆனான்.

    இன்னும் சிரிப்புமூட்டிப் பார்க்க ஆசை வரவே என்னென்னவோ பேச எண்ணலானான்.

    உங்களைப் பார்க்கறதுக்கு முன்ன கூட ஒரு அழகான பொண்ணைப் பாத்து காதல்ல விழுந்துட்டேன்னா பாருங்களேன்...

    அட அப்படியா...? அது யாரு? சிரிப்பொலியை நிறுத்தாமலேயே கேட்டாள்.

    உங்களை பெண் பார்க்கறதுக்காக வந்து நாங்க ஹால்ல உட்கார்ந்து கிட்டிருந்தப்ப ஒரு பொண்ணு ஜீன்ஸ்... டாப்ல உள்ள போனாங்களே... அட…டா.... என்ன அழகு. அப்படியே மனசை பறிகொடுத்துட்டேன். அப்பறம்தான் தெரிஞ்சது அது உங்க தங்கச்சின்னு!

    அதனாலென்ன? எத்தனையோ குடும்பங்கள்ல அக்காவைப் பார்க்க வந்த மாப்பிள்ளை தங்கையை கட்டிக்கிட்ட கதையெல்லாம் நடந்திருக்கே. என் தங்கச்சியைப் பிடிச்சிருந்தா அவளையே கல்யாணம் பண்ணிக்கங்க...

    அட.... என்ன நீங்க....

    நான் விளையாட்டுக்கு சொல்லலை. நான் என் தங்கச்சிக்காக எத்தனையோ விட்டுக் கொடுத்திருக்கேன். அதுல இதுவும் ஒண்ணு.

    ஆஹா... இப்ப சத்தியமா சொல்றேங்க. இதுவரை எனக்கு யார் மேலயும் வராத அளவுக்கு அளவு கடந்த காதல் இந்த ஒரு நிமிஷத்துல உங்க மேல வருதுங்க...

    அதென்ன... திடீர் திடீர்னு உங்களுக்கு காதல் வருது?

    ஒரு விஷயம் இன்னொரு விஷயத்தை மிஞ்சும்போது மிஞ்சற விஷயத்து மேல காதல் வர்றது இயற்கைத்தானே?

    அப்படி என்ன ஒரு விஷயம் இன்னொரு விஷயத்தை மிஞ்சியது?

    தியாகம். உங்க தியாகம் உங்க தங்கையின் அழகை மிஞ்சிட்டு, என் மனசை அப்படியே உங்க முன்னாடி மண்டிப்போட வச்சுட்டுது...

    மறுபடியும் பிறரை மயங்க வைக்கும் சிரிப்பை ஒலியோடு அவனை மென்மையாக அதிர வைத்தாள்.

    தியாகியா? என் பெயர் தியாகிங்க பட்டியல்ல ஹிஸ்டரி புக்ல இருக்கா?

    புக்ல இருந்தாத்தான் தியாகியா? சொந்த தங்கைக்காக தன் வாழ்க்கையையே விட்டுத்தர நினைக்கறீங்களே... இது எவ்வளவு பெரிய தியாகம்? உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா… எனக்காக எவ்வளவு தியாகம் பண்ணுவீங்க...? அதை நினைச்சா நெஞ்சு பெருமையால விம்முது.

    அவனுடைய பேச்சில் மயங்கிய அவள்,

    கல்யாணத்துக்குப் பிறகு நான் என்ன பெரிசா தியாகம் பண்ணிடப்போறேன்? என்றாள்.

    உதாரணத்துக்கு.... உங்க கூட வாழ்ந்து போரடிச்சுப் போய்ட்டுன்னு வச்சுக்கங்க.... இன்னொரு பொண்ணு மேல எனக்கு காதல் வந்துட்டுன்னு வச்சுக்கங்க... நீங்க அவளையும் வீட்டுக்கு கூட்டிட்டு வாங்கன்னு பெரிய மனுசு பண்ணி ஏத்துப்பிங்கள்ல...

    யூ... சட்டென்று எழுந்தவள் பொய்க்

    Enjoying the preview?
    Page 1 of 1