Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thendrale Ennai Thodu
Thendrale Ennai Thodu
Thendrale Ennai Thodu
Ebook126 pages46 minutes

Thendrale Ennai Thodu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சந்திரபிரபா என்பவள் ஆசிரியையாக பணிபுரிபவள். இவள் தனது வகுப்பை அமைதிபடுத்த வேண்டுமென நினைத்த போது எதிர்பாராவிதமாக மூங்கில்குச்சியின் மரச்செதில் கண்ணில்பட்டது. ஜானுவிற்குஎன்ன ஆனது. அசோக் என்பவன் ஜானுவிற்கு என்ன உறவுமுறை? சந்திரபிரபாவின் மனநிலை என்ன? சந்திரபிரபா அசோக்கின் காதல் என்னவானது காண்போம்...

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580137107248
Thendrale Ennai Thodu

Read more from R. Sumathi

Related to Thendrale Ennai Thodu

Related ebooks

Reviews for Thendrale Ennai Thodu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thendrale Ennai Thodu - R. Sumathi

    https://www.pustaka.co.in

    தென்றலே என்னைத் தொடு

    Thendrale Ennai Thodu

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    அம்மா... நான் ஸ்கூல் போய்ட்டு வர்றேன்.

    உடுத்தியிருந்த காட்டன் சேலையை சரி செய்தவாறே சந்திரபிரபா கைப்பையை எடுத்துக்கொண்டாள்.

    அம்மா பூஜையறையிலிருந்து வெளியே வந்தாள்.

    பொட்டிற்கும் கீழே அழகாக குங்குமத்தை வைத்தாள்.

    முதல் முதலா வேலைக்குப் போறே. நல்லபடியா ஒரு குறையும் வராமயிருக்கணும். சங்கரி... அக்காவுக்கு டிபன் பாக்ஸ் எடுத்து வச்சியா?

    உள்பக்கம் நோக்கி குரல் கொடுத்தாள்.

    சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள் சங்கரி. சந்திரபிரபாவின் தங்கை.

    பிளஸ்டூ படிக்கிறாள். கையில் டிபன் பாக்சுடன் வந்தவள் அதை அக்காவின் கைப்பையில் வைத்துவிட்டு பெஸ்ட் ஆப் லக் என்றாள்.

    சந்திரபிரபா மென்மையாக சிரித்துக்கொண்டாள்.

    உனக்கு ஸ்கூல் டயமாகலையா?

    இதோ... கிளம்பிட்டேன். யூனிபார்ம் போட வேண்டியதுதான் பாக்கி.

    அவசரமாக உள்ளே ஓடினாள். ஓடிய வேகத்திற்கு திரும்ப வந்து நின்றாள்.

    அக்கா... இரேன் நானும் உன்கூடவே வந்துடறேன்.

    ஏய்... சீக்கிரம் வர்றதுன்னா வா. முதல் நாளே லேட்டா போய் நின்னா நல்லாயிருக்காது.

    ரெண்டே நிமிஷத்துல வந்திடறேன்கா.

    சொன்னபடியே யூனிபார்மில் சீக்கிரமே வந்து நின்றாள்.

    அம்மா போய்ட்டு வர்றோம் இருவரும் கோரசாக சொல்லிவிட்டு படியிறங்கினர்.

    அவர்கள் தெருமுனை வரை சென்று மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வேதா உள்ளே சென்றாள்.

    சந்திரபிரபாவும் சங்கரியும் பேசியபடியே வந்தனர். இருபது நிமிட நடைக்குப் பிறகு சந்திரபிரபா வேலை பார்க்கப்போகும் பள்ளிக்கூடம் வந்து விட்டிருந்தது.

    காலை நேர பரபரப்பு பள்ளி வளாகத்தில் தெரிந்தது.

    சின்னச்சின்ன சிட்டுக்களாக குழந்தைகள் ஆட்டோக்களிலிருந்தும் வேன்களிலிருந்தும் இறங்கிக் கொண்டிருந்தனர்.

    அக்கா... நான் வர்றேன். சங்கரி கையாட்டிவிட்டு கிளம்பிச் சென்றாள்.

    சந்திரபிரபா பள்ளியினுள் நுழைந்தாள். அது ஒரு தனியார் பள்ளி. ஒரு அழகான தோட்டம் போல் இருந்தது.

    மரத்தை சுற்றி குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

    சந்திரபிரபா பிரின்சிபலின் அறைக்குள் நுழைந்து வணக்கம் தெரிவித்துவிட்டு வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு சில நிமிடங்கள் அவர் சொன்ன சட்டதிட்டங்களைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு வெளியே வந்தபோது காலைவணக்க கூட்டத்திற்கான மணியோசைக் கேட்டது.

    மாணவ, மாணவிகள் வரிசையும் ஒழுங்குமாக வந்து நின்றனர்.

    காலை வணக்கம் முடிந்தது.

    மாணவ மாணவிகளும், ஆசிரியர்களும் அவரவர் வகுப்பிற்கு சென்றனர்.

    எதிர்பட்ட ஆசிரியைகளிடம் வணக்கம் கூறி சிரித்துவிட்டு, தான் செல்ல வேண்டிய வகுப்பு எந்தப் பக்கம் என கேட்டு தெரிந்துக்கொண்டு நடந்தாள் சந்திரபிரபா.

    அப்பொழுதுதான் - வரிசையாக வகுப்பை நோக்கி சென்றுக் கொண்டிருந்த குழந்தைகள் மத்தியிலிருந்து ஒரு சிறுமி மட்டும் ஓடி வந்தாள்.

    நேராக சந்திரபிரபா வந்துக் கொண்டிருந்த இடத்திற்கு ஓடிவந்து நின்று ரோஜாவாக மலர்ந்து சிரித்தாள்.

    மிஸ்... நீங்க பர்ஸ்ட் ஸ்டேன்டர்க்குதானே வர்றீங்க?

    ஆமா!

    அது எங்க க்ளாஸ்தான். வாங்க நான் கூட்டிட்டுப் போறேன் என உரிமையோடு கையை இறுகப் பற்றிக்கொண்ட அந்த சிறுமி இழுக்காத குறையாக இழுத்துக்கொண்டு ஓடினாள். ஓடும்போதே திரும்பித் திரும்பி சிரித்தாள். பேசிக் கொண்டேயிருந்தாள்.

    எங்களுக்கு புது மிஸ் வருவாங்கன்னு சொன்னாங்க. எப்படி வருவாங்களோன்னு பயந்துக்கிட்டேயிருந்தேன். மிஸ்... உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க...

    ஓ... தாங்க்யூ... சிரித்தாள் சந்திரபிரபா.

    வாங்க மிஸ்... இதுதான் என் க்ளாஸ்... ஒரு வகுப்பிற்குள் நுழைந்தாள்.

    நம்ம புது மிஸ் இவங்கதான். நான்தான் அழைச்சிக்கிட்டு வந்தேன்.

    அந்த சிறுமி பெருமையாக தோள்களை குலுக்கிக்கொண்டாள்.

    குழந்தைகள் கொஞ்சமும் பயமும் தயக்கமும் இன்றி கைதட்டி குதூகலித்தனர்.

    மரியாதையாக 'குட்மார்னிங் மிஸ்' என்று சொல்வதற்கு பதிலாக 'ஹையா...' என கைகளை உயர்த்தி குதித்தனர்.

    மிஸ்... மிஸ்... நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க. எங்களுக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு என்றபடி பயமோ தயக்கமோ இன்றி சூழ்ந்துக்கொண்டனர். ஆளாளுக்கு அவளுடைய கையைப்பற்றிக் கொண்டனர்.

    மிஸ்... உங்க பேர் என்ன?

    சொல்றேன். முதல்ல நீங்க எல்லாரும் அவங்கவங்க இடத்துல போய் உட்காருங்க. உங்களோட பெயரை வரிசையா சொல்லுங்க. சரியா...

    ஓ.கே. மிஸ்!

    மறுகணம் பட்டாம்பூச்சிகள் பறந்து சென்று பூக்களில் அமர்வதைப்போல் அவரவர் இடங்களில் அமர்ந்தனர். வரிசையாக பெயர்களை சொல்லிக்கொண்டு வந்தனர்.

    மை நேம் ஈஸ் சசி.

    மீனா...

    சுமன்

    வெங்கட்

    தீபிகா

    அவளை வகுப்பிற்கு அழைத்து வந்த அந்த துருதுரு பெண் என் பெயர் ஜான்சி... என்றாள்.

    வெரிகுட். அப்ப தினமும் குதிரையிலதான் ஸ்கூலுக்கு வருவியா? என்று கேட்டதும், எல்லா குழந்தைகளும் கலகலவென சிரித்தனர். கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

    ஜான்சி வெட்கமாக சிரித்துவிட்டு, மிஸ்... பழைய மிஸ் என்னை செல்லமா ஜானுன்னு கூப்பிடுவாங்க என்று பெருமையாக சொல்லிக் கொண்டாள்.

    அப்படியா? அப்படின்னா நானும் ஜானுன்னே கூப்பிடறேன் என்றாள்.

    ஜான்சி முகத்தில் சந்தோஷம் இரட்டிப்பானது.

    எல்லோருடைய பெயரும் சொல்லி முடிக்கப்பட்டபின் குழந்தைகள் அவளுடைய பெயரை சொல்லச்சொல்லி கூச்சலிட்டனர்.

    என் பெயரை நான் சொல்லமாட்டேன். நீங்களே கண்டுபிடிங்க பார்க்கலாம்.

    ராதா...

    மீனா

    த்ரிஷா.

    சந்திரபிரபா கலகலவென சிரித்தாள்.

    என்ன எல்லாரும் சினிமா நடிகை பெயர்களையே சொல்றீங்க? ரொம்ப சினிமா பார்ப்பீங்க போலிருக்கு.

    மிஸ்... மிஸ்... நீங்களே சொல்லுங்க பிளீஸ்... கெஞ்சினர்.

    ஓ.கே. ஒரு க்ளூ கொடுக்கறேன். கண்டுபிடிங்க

    Enjoying the preview?
    Page 1 of 1