Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gandharva Kanavugal
Gandharva Kanavugal
Gandharva Kanavugal
Ebook112 pages38 minutes

Gandharva Kanavugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வெளிநாட்டு மாப்பிள்ளையைத்தான் திருமனம் செய்துகொள்ள வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் சாந்தினியை, டெல்லியில் வேலை பார்க்கும் கந்தர்வன் பெண் பார்க்க வருகிறான். இருவருக்கும் திருமணம் நடைபெற்றதா அதன்பின் கந்தர்வனுக்கு நிகழ்ந்தது என்ன? அந்நிகழ்வால் சாந்தினி எடுத்த முடிவு என்ன? என்பதை ஆர். சுமதியின் - கந்தர்வ கனவுகள் கதையில் காண வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateApr 15, 2023
ISBN6580137109469
Gandharva Kanavugal

Read more from R. Sumathi

Related to Gandharva Kanavugal

Related ebooks

Reviews for Gandharva Kanavugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gandharva Kanavugal - R. Sumathi

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    கந்தர்வ கனவுகள்

    Gandharva Kanavugal

    Author :

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    மாப்பிள்ளை பேர் என்ன தெரியுமா? கேட்டா நீ அப்படியே மயங்கிடுவே மேஜை மீது ஸ்டைலாக சாய்ந்தபடி சொன்ன சாந்தினியைப் பார்த்தாள் அகிலா.

    சாந்தினி அலுவலகத்திற்கு வந்ததிலிருந்து ஒரு வேலையும் செய்யவில்லை. அகிலாவின் மேஜைக்கு வந்து அதில் சாய்ந்தபடி நாளைக்கு தன்னை பார்க்க வரப்போகும் வரனைப்பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள். படிப்பு, வேலை, குடும்ப நிலவரம் எல்லாவற்றையும் சொன்னவள் கடைசியாக பெயரை பெரிய பீடிகையுடன் சொன்னாள்.

    பெயரை கேட்டவுடனே மயக்கம் வருமா? அப்படி என்ன பெயர்? அப்படின்னா ரொம்ப வாசனையான பேராத்தான் இருக்கும். சந்தானம்.. கரெக்ட்?

    ம்.. ஜவ்வாது..

    அட... அப்படிக்கூட பேர் இருக்கா?

    உதைபட போறே?

    அப்ப நீயே சொல்லு...

    நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கந்தர்வன். கர்வமாக சொன்னாள். நிஜமாகவே அகிலா ஆச்சரியமாகப் பார்த்தாள்.

    கந்தர்வன். இப்படி ஒரு பெயரை நான் அம்புலிமாமா புக்லதான் படிச்சிருக்கேன். வித்தியாசமான பெயர்தான். கேட்கவே மயக்கமாத்தானிருக்கு. கந்தர்வனோட ஊரு கந்தர்வலோகமா?

    சாந்தினி சிரித்தாள். லூசு! டெல்லி...டி. சொன்னேனே மறந்துட்டியா?

    மறக்கலைடி. நீ அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா டெல்லி உனக்கு கந்தர்வலோகமாகத்தானே மாறிடும்.

    இதைக்கேட்டு சாந்தினி மயங்கி சிரித்தாள். கண்களை மூடி கற்பனையில் மிதந்தாள்.

    கந்தர்வர்களெல்லாம் வானத்துல பறப்பாங்களாம். அப்ப உன்னை அவன் பெண்பார்க்க ப்ளைட்ல வரமாட்டான். தானே பறந்துதான் வருவான்னு சொல்லு.

    யேங்.. ரொம்ப கலாய்க்காதடி.

    அவனைப் பத்தியே ஆஹா ஓஹோன்னு புகழ்ந்துக்கிட்டிருக்கியே. அவனோட ஃபோட்டோவைக் காட்டுற முதல்ல.

    இரு காட்றேன் என்றபடி தன் மொபைலை உயிர்ப்பித்தாள். மாப்பிள்ளை வீட்டார் அனுப்பியிருந்த கந்தர்வனின் ஃபோட்டோவைக் காட்டினாள். கந்தர்வன் கம்பீரமாகயிருந்தான். கவர்ச்சியாக சிரித்தான். கண்களும் சிரிப்பை பிரதிபலித்தது. சுருள் சுருளான கேசம், காண்பவருக்கு செல்லமாக கலைத்துவிடத் தோன்றும்.

    ரொம்ப அழகாயிருக்கான்டி

    வாலிபமனம் வசப்பட்டதைப்போல் வார்த்தைகள் வந்தன அகிலாவிடமிருந்து.

    தொடர்ந்து சொன்னாள், அதான் மயங்கிட்டே நீ

    தோள்களைக் குலுக்கிக் கொண்டாள் சாந்தினி. உண்மைதான். அதனாலதான் என்னோட லட்சியத்தையே மாத்திக்கிட்டேன்.

    லட்சியமா? அது என்னடி லட்சியம் எனக்குத் தெரியாம?

    எனக்கு வெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேணும். கல்யாணத்துக்குப் பிறகு வெளிநாட்டுல போய் செட்டில் ஆகணும். இதான் என் லட்சியமாயிருந்தது. இந்த கந்தர்வனைப் பார்த்ததும் என் லட்சியத்தையே நான் மாத்திக்கிட்டேன்னா பாரேன் இதைக்கேட்டு அகிலா சிரித்தாள்.

    "கந்தர்வனுக்காக லட்சியத்தை மாத்திக்கிட்டியா? இல்லே கொரோனா வைரஸ்ஸுக்காக லட்சியத்தை மாத்திக்கிட்டியா? இப்பவெல்லாம் வெளிநாட்டு மாப்பிள்ளைன்னா அவ அவ அலறுறாளுங்க. எந்த நேரத்துல எந்த வைரஸால தாக்கப்பட்டிருப்பானோன்னு பயப்படறாங்க. பேரன்ஸ்ஸெல்லாம் முன்னாடி பொண்ணுக்கு வெளிநாட்ல வேலைபார்க்கற மாப்பிள்ளைத்தான் வேணும்னு பிடிவாதமாயிருந்தாங்க. இப்பவெல்லாம், கள்ளிப்பட்டி, சுள்ளிப்பட்டின்னு கிராமத்துலேர்ந்து மாப்பிள்ளை கிடைச்சா போதும்கற நிலைமைக்கு வந்துட்டாங்க.

    சாந்தினி தோழியின் அருகில் வந்து தலையில் குட்டினாள்.

    போடி! நான் ஒண்ணும் கொரோனா வைரஸுக்கு பயந்து வெளிநாட்டு மாப்பிள்ளையை வேண்டாம்னு சொல்லலை. உண்மையிலேயே இந்த கந்தர்வனோட ஃபோட்டோவைப் பார்த்ததுமே மனசு லயிச்சுட்டு.

    எனக்கென்னமோ நீ ஃபோட்டோவைப் பார்த்து லயிச்சமாதிரி தெரியலை. அவன் பேரைக்கேட்டே லயிச்சுட்டே

    உண்மைதான். சில பெயருக்கு ஸ்பெஷலா ஒரு வசீகரம் உண்டு. சில பெயரைக் கேட்டாலே மனசுக்குள்ள ஒரு லயிப்பு உண்டாகும். உணர்வு உண்டாகும். ஒவ்வொரு பெயருக்கும் ஒரு குணம் உண்டு. பாரதிங்கற பேரை யார் வச்சிருந்தாலும் அந்த பேரைக் கேட்கும்போது மனசுல நம்மையறியாம வீரம் வரும். தமிழ்ங்கற பேரை கேட்கும்போதெல்லாம் காது குளிரும். அதுமாதிரி இவனை இன்னும் நேர்ல பார்க்கலைன்னாலும் அவன் பெயரே மனசுக்குள்ளே ரீங்காரமிட்டு ஒரு மந்தகாசத்தை உண்டு பண்ணுது. அவனை எப்ப பார்ப்போம்னு இருக்கு.

    ம்.. ஹும். அவன் பேரைக் கேட்டே இப்படி மந்தகாசத்துல இருக்கே. இன்னும் நேர்ல பார்த்தே.. சொல்லவே வேண்டாம். என்னாகப் போறியோ? கடவுளுக்குத்தான் வெளிச்சம். அப்புறம் எங்க வேலை செய்யப்போறே? போ. போய்... அட்லீஸ்ட் ரெண்டு மூணு நாளாவது வேலை செய்.

    சாந்தினியை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டுபோய் அவளுடைய இடத்தில் உட்காரவைத்தாள் அகிலா.

    2

    அடுத்த வாரத்தில் ஒரு நல்லநாளில் கந்தர்வன் பெண் பார்க்க வந்தான்.

    அகிலா சொன்னது உண்மைதான். ‘ஃபோட்டோல பார்த்தே இப்படி மயங்கறே. நேர்ல பார்த்தா என்னாகப் போறியோ?’

    அகிலாவின் வார்த்தைகள்தான் மறுபடி மறுபடி அவளுடைய காதில் ஒலிப்பதைப் போலிருந்தது.

    கந்தர்வன் கம்பீரமாகயிருந்தான். ஆணுக்கு அழகு சேர்க்கும் நல்ல உயரம், எடுப்பான நாசி, அமைதியான கண்கள், அழகான சிரிப்பு, அடக்கமான

    Enjoying the preview?
    Page 1 of 1