Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enna Vilai Azhage!
Enna Vilai Azhage!
Enna Vilai Azhage!
Ebook115 pages31 minutes

Enna Vilai Azhage!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உங்கள் கையிலிருக்கும் இந்த நாவல் கற்பனைக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றலாம். ஆனால் ஆங்காங்கே பெண்களுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் கொடுமையை மையமாகக் கொண்டு நான் எழுதியிருப்பது உண்மையல்லவா? வளர்ந்து வரும் அறிவியலால் எதுவும் செய்ய முடியும் என்பது ஆச்சரியம் மட்டுமல்ல பெரும் ஆறுதல் அல்லவா? அழகும் காதலும் எப்போதும் இணைந்தே நடைபோடும். இங்கேயும் அதே வழியில் நடைபோடும் நாயகன் நாயகியை வாழ்த்துவோம்.

மீண்டும் சந்திக்க காத்திருக்கும்

- ஆர்.சுமதி

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580137106136
Enna Vilai Azhage!

Read more from R. Sumathi

Related authors

Related to Enna Vilai Azhage!

Related ebooks

Reviews for Enna Vilai Azhage!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enna Vilai Azhage! - R. Sumathi

    http://www.pustaka.co.in

    என்ன விலை அழகே!

    Enna Vilai Azhage!

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 1

    நூறாவது முறையாக கேட்டிருப்பாள் சுவாதி இந்த கேள்வியை,

    அம்மா, இந்த வேலை எனக்கு கிடைக்குமா?

    கண்களில் ஏக்கம் தேக்கமாகி இருந்தது. அவளின் முகம் பார்க்கும் தைரியம் இல்லாததைப் போல் அம்மா அடுப்பில் இருந்த உருளைக்கிழங்கு பொரியலை கிளறினாள்.

    அம்மா... என்னம்மா எதுவுமே சொல்ல மாட்டேங்கறே?

    கிடைக்கும்மா! எத்தனை தடவை சொல்றது? இந்த கேள்வியை இதோட நூறாவது தடவையா கேட்டிருப்பே?

    எப்படிம்மா? உன்னால இவ்வளவு நம்பிக்கையா சொல்ல முடியுது?

    ஒரு தாயோட நாக்கு நம்பிக்கையில்லாத வார்த்தையை எப்படிம்மா சொல்லும்?

    அம்மா... நெகிழ்ச்சியோடு அம்மாவை கட்டிக் கொண்ட சுவாதியின் கண்கள் கலங்கியிருந்தன.

    அம்மா

    ம்

    எனக்கு நம்பிக்கையில்ல எத்தனை இன்டர்வியூக்கள்? எத்தனை கம்பெனிகள்? ஏறி இறங்கியாச்சு. கிடைக்கலையேம்மா. என்ன படிச்சு என்னம்மா? சின்னதா ஒரு வேலை கூட கிடைக்கலையே

    கவலைப்படாதே சுவாதி. திறமைக்கு கண்டிப்பா மதிப்பு உண்டு

    திறமை ப்ச்! நம்பிக்கை இல்லம்மா. எனக்கு என் படிப்புக்கும், திறமைக்கும் தகுந்த வேலை கிடைக்கும்னு நம்பிக்கை இல்லைம்மா

    பொல பொலவென கண்ணீர் உதிர சட்டென்று அம்மாவை அணைத்திருந்த அணைப்பை விட்டு விட்டு தன் அறைக்குள் சென்று விட்டாள்.

    ஓட்டமும் நடையுமாக தன் அறையை நோக்கி ஓடும் மகளின் முதுகையும் அலையலையாய் பாயும் கூந்தலையும் பார்த்தபடி நின்றிருந்தாள் அம்மா அம்சவேணி. அவளுக்குள் வேதனை பொங்கியது. படிப்பிருக்கிறது. திறமையிருக்கிறது. ஆனால் வேலை எப்படி கிடைக்கும்?

    படிப்பு இருந்தால் மட்டும் போதுமா? திறமை இருந்தால் மட்டும் போதுமா?

    அம்மா மிகவும் வற்புறுத்தியதால் பெயருக்கு இரண்டு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டு படுத்து விட்டாள் சுவாதி. வேலைகளையெல்லாம் முடித்து விட்டு அம்சவேணி படுக்கைக்கு வந்தபோது சுவாதி உறங்கி விட்டாளா எனப் பார்த்தாள்.

    உறங்கவில்லை. ஆனால் உறங்குவதைப் போல் கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தாள்.

    அம்மாவிடம் எதுவும் பேச விரும்பவில்லை என்பதற்காக உறங்குவதைப் போல் நடித்தாள்.

    அம்சவேணியும் எதுவும் பேசாமல் மவுனமாகப் படுத்து விட்டாள். அவளுக்கும் உறக்கம் வரவில்லை. ஆனால் உறங்குவதைப் போல் படுத்திருந்தவள், மெல்ல கண்களைத் திறந்தாள். மகளைப் பார்த்தாள். கண்களை மூடி இவள் பக்கம் திரும்பியிருந்த மகளின் முகத்தைப் பார்த்தாள்.

    எத்தனை தடவை பார்த்தாலும் முதல் தடவை பார்த்த அதிர்ச்சி ஒவ்வொரு முறையும் உண்டானது. அந்த நிமிடத்திலேயே துக்கம் உள்ளுக்குள் புரளத் தொடங்கியது. கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

    இரவு விளக்கின் ஒளியில்...

    அவளுடைய கரிய விகாரப்பட்ட முகம் இன்னும் மோசமாக தோன்ற கிறுகிறுவென வயிற்றில் ஏதோ ஒரு விஷக்கத்தியை சொருகியதைப் போல உணர்ந்தாள்.

    பிறக்கும் போதே இப்படிப் பிறந்திருந்தால் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என மனம் சமாதானமாயிருக்கும்.

    ஆனால், பிறக்கும்போது செவ்வந்தி பூப்போன்றிருந்த இந்த முகம், இப்போது இத்தனை விகாரமாக, இத்தனை அவலட்சணமாக கருகி, அங்கங்கே சதைகள் தடித்து, குழைந்து சுருண்டு... 'கடவுளே.’

    ‘என் பெண்ணிற்கு ஏன் இந்த கொடுமை நிகழ வேண்டும்? அவள் என்ன பாவம் செய்தாள்?'

    பொங்கி வரும் அழுகையை கட்டுப்படுத்தி கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

    'படிப்பிருக்கிறது. திறமை இருக்கிறது. ஆனால் வேலை கிடைக்க மாட்டேங்கிறது. ஏன்?'

    இந்த முகத்தால்தானே? பார்த்த உடனேயே முகத்தை சுளித்து விடுகிறார்கள். உடன் நேர்முகத் தேர்விற்கு வருபவர்களே ஏறிட்டு பார்க்க மறுக்கும் முகத்தை எப்படி தேர்வு செய்வார்கள்?

    ‘பெற்ற தாயான என்னாலேயே பார்த்து சகிக்க முடியவில்லையே. என் மகள் எத்தனை பேரழகி என்று இறுமாந்திருந்தேனே. அதற்கு தண்டனையா?'

    கண்ணீரை வெளிவிடாமல் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள். கண்களைத் திறந்தால் எங்கே கண்ணீர் அருவியாய் கொட்டி விடுமோ என்று இன்னும் இறுக மூடிக் கொண்டாள். சுவாதி மெல்ல தன் கண்களைத் திறந்தாள். அம்மாவின் முகம் பார்த்தாள்.

    இரவு விளக்கின் மங்கிய ஒளியில் கூட அம்மாவின் நிறம் பளிச்சென ஒளிர்ந்தது.

    வளைந்த புருவம். கலைந்த கூந்தல். அந்த கலைதலினால் கலையழகு கூடி மிளிரும் முகம். கூரான நாசி. அதில் ஒளிரும் ஒற்றை மூக்குத்தி. மூடியிருந்த விழிகள். இமைகளின் அடர்த்தியால் மூடியிருந்த விழிகளின் அழகு திறக்காமலேயே தெரிந்தது.

    அம்மா எத்தனை அழகானவள்? அவளுடைய அழகிற்கு ஆசைப்பட்ட அப்பா வரதட்சணை, நகை என எதுவும் வேண்டாம் என்று அம்மாவை மணந்து கொண்டாராம்.

    'உன்னைப் போலவே ஒரு பெண்ணைப் பெத்துக் கொடு. அது போதும் எனக்கு' என்பாராம்.

    அதைப் போலவே அம்மா சுவாதியை அழகு குவியலாய் பெற்றாள். பிறந்தபோது அவளழகைப் பார்த்து ரசித்ததோடு சரி, அதன் பிறகு அவர் வெகுநாட்கள் உயிருடன் இல்லை. வரக்கூடாத நோய் வந்தது. ரத்த புற்றுநோய் இருந்த சேமிப்பையெல்லாம் விழுங்கி விட்டு நிரந்தர வேதனையைக் கொடுத்து விட்டு கணவர் சென்ற பின்பு பாவம் அம்சவேணி பட்ட அவஸ்தைகளை கஷ்டங்களை சொல்லில் வடிக்க முடியாது.

    சுவாதியை அவள் ஒற்றையாய் வளர்க்க பாடுபட்ட காலங்களெல்லாம் சுவாதியின் நெஞ்சில் பசுமரத்தாணியாய் பதிந்துப் போனது.

    அம்மா படிக்காதவள். ஒரு தையல்

    Enjoying the preview?
    Page 1 of 1