Malargal Pesuma?
By Maheshwaran
2/5
()
About this ebook
தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.
இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.
குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.
வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.
மிக்க அன்புடன்
மகேஷ்வரன்
Read more from Maheshwaran
Varuvean Naan Rating: 5 out of 5 stars5/5Tick.. Tick.. Thik. Rating: 4 out of 5 stars4/5Aayiram Kodi Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Kuthirai Rating: 0 out of 5 stars0 ratingsLinga Pura Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsMullil Vizhuntha Kili Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Thoppu Marmam Rating: 5 out of 5 stars5/5Pachaikili Rating: 0 out of 5 stars0 ratingsManal Sirpangal Rating: 0 out of 5 stars0 ratingsUn Manasula Naan Irukkena? Rating: 0 out of 5 stars0 ratingsThik Thik Thilothi Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mudiyavillai...! - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsIravum Pagalum Un Uruvam Rating: 0 out of 5 stars0 ratingsMayanginean Solla Thayanginean Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Naanuranga Rating: 0 out of 5 stars0 ratingsEn Vasam Naanillai...! Rating: 0 out of 5 stars0 ratingsRaja Nagam Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Kobam Varum! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vennila Rating: 0 out of 5 stars0 ratingsThappithu Vidu... Kanmani! Rating: 0 out of 5 stars0 ratingsIravum Nilavum Valarattumey...! Rating: 0 out of 5 stars0 ratingsPovom Ini Kaadhal Desam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Oviyam Kaiyil Serumo! Rating: 0 out of 5 stars0 ratingsManasukkul Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsElla Muthangalum Enakke! Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Aayiram Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyirai Azhaikkirean... Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Irukkum Ponnaana Nimidangal Rating: 0 out of 5 stars0 ratingsMaranthu Poguma Kaadhal Mugam? Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Naan Swasikiren… Rating: 0 out of 5 stars0 ratings
Related to Malargal Pesuma?
Related ebooks
Vishwa Thulasi! Rating: 0 out of 5 stars0 ratingsAnandha Alaigal Rating: 5 out of 5 stars5/5Kalainthu Pona Mehangal Rating: 0 out of 5 stars0 ratingsThean Sindhum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsAnandha Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsAagayam Kaanatha Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsPoothu Kottiya Paadhai Rating: 0 out of 5 stars0 ratingsMannikka Mudiyatha Kutram Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Vamsam Neeyo! Rating: 1 out of 5 stars1/5Manas Rating: 5 out of 5 stars5/5Oru Coffee Kudikalama? Rating: 4 out of 5 stars4/5Kanniley Anbirunthaal Rating: 5 out of 5 stars5/5Rathidevi Vanthaal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalaagi Kasindhurugi Rating: 0 out of 5 stars0 ratingsNalla Manam Vazhga! Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5அமுத கீதம் Rating: 0 out of 5 stars0 ratingsAmutha Geetham Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsPogumidam Vegu Thooramillai Rating: 5 out of 5 stars5/5Thoongum Maanaviyai Sight Adippathu Thappa? Rating: 0 out of 5 stars0 ratingsChittukuruvi Suttu Pazhagu Rating: 0 out of 5 stars0 ratingsNaalellam Pournami Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratingsArathanai Rating: 0 out of 5 stars0 ratingsEndhan Manam Unnai Sutruthey... Rating: 4 out of 5 stars4/5Nilavukku Kalangamillai Rating: 0 out of 5 stars0 ratingsOdum Mehangal Rating: 0 out of 5 stars0 ratingsYandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5
Reviews for Malargal Pesuma?
1 rating0 reviews
Book preview
Malargal Pesuma? - Maheshwaran
http://www.pustaka.co.in
மலர்கள் பேசுமா?
Malargal Pesuma?
Author:
மகேஷ்வரன்
Maheshwaran
For more books
http://pustaka.co.in/home/author/maheshwaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
1
தோசைக்கல்லாய் சாலை சுட்டதைப் பொருட்படுத்தாமல் வாகனங்கள் விருட்விருட்டென்று நகர்ந்தன. சிக்னலில் வாகனங்கள் நின்று கொண்டிருந்த நேரமாய்ப் பார்த்து சாலையின் குறுக்கே நடந்து அந்தப்புறம் இருந்த பஸ் நிறுத்தத்திற்கு வந்து நின்றாள் துளசி.
வெய்யில் ஊசியாய்க் குத்தியது; குப்பென்று வியர்த்து. சேலை உடம்போடு ஒட்டிக் கொண்டது. கைக்குட்டையால் முகத்தை துடைத்துக் கொண்டாள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்கே திரும்பினாலும் ஒரே கட்டிடமாகவே தெரிந்தது. ஆசைக்கு கூட ஒரு மரத்தைப் பார்க்க முடியவில்லை.
'ஒவ்வொரு கட்டிடத்தின் வாசலிலும் ஒரு வேப்ப மரத்தையோ புங்கை மரத்தையோ கட்டாயம் வளர்க்க வேண்டும் என்று அரசாங்கம் சட்டம் கொண்டு வந்தால் என்ன.....?’ என்று தோன்றியது. புதுசாய் மரங்களை நடுகிறார்களோ இல்லையோ.... ஏற்கனவே இருக்கிற மரங்களையேனும் வெட்டாமல் பாதுகாத்தாலே போதும்! மாசடைந்து கொண்டிருக்கும் சுற்றுப்புறச்சூழலை துளியேனும் காப்பாற்றலாம்!
பஸ் நிறுத்தத்தின் இரும்புத் தூண்மீது சாய்ந்து கொண்டாள் துளசி. தான் போக வேண்டிய பஸ் எப்போது வருமோ.... என்று ஏக்கமாக இருந்தது. இந்த நேரத்தில் தான் போக வேண்டிய இடத்திற்கு பஸ் இருக்கிறதா என்று கூட துளசிக்குத் தெரியாது. எப்பவும் ஆபீஸ் முடிந்து சாயங்கால வேளையில்தான் இங்கே வந்து நிற்பாள். வேலையில் சேர்ந்த மூன்று வருடங்களில் அரை நாளோடு வீட்டுக்கு கிளம்புவது இதுதான் முதல் முறை.
மத்தியான சாப்பாட்டை முடித்துவிட்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்து ஓய்வெடுக்கலாம் என்று கண்களை சற்று மூடியபோது பியூன் வந்து கூப்பிட்டான்.
மேடம்... உங்களுக்கு போன்! லைன்ல இருக்காங்க..!
‘அகிலிடமிருந்துதான் எனக்கு போன் வந்திருக்கிறது.’ என்று நினைத்தபடி ரிசப்ஷனை நோக்கி ஓடினாள். அங்கே மல்லாந்த நிலையிலிருந்த ரிஸீவரைக் கையிலெடுத்தாள்.
ஹலோ
துளசிக்கா! நா ஹேமா பேசறேன். உங்கம்மாவுக்கு திடீர்னு உடம்பு முடியாமப் போயிடுச்சுக்கா! நெஞ்சுவலின்னு துடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஹாஸ்பிட்டலுக்கு போகலாம்னதுக்கு வேணாம்னுட்டாங்க! எங்கம்மா சுக்கு கஷாயம் வெச்சு கொடுத்தாங்க. அத குடிச்சதும் இப்போ கொஞ்சம் தேவலாம்! ஆபீசுக்கு லீவு போட்டுட்டு நீங்க உடனே கிளம்பி வாங்கக்கா!
பக்கத்துவீட்டு இளம் பெண் ஹேமாதான் பேசினாள்.
துளசிக்கு குப்பென்று வியர்த்தது. இதயம் அதிவேகமாய்த் துடிக்கத் தொடங்கியது.
ஹே...மா.... எங்கம்மாவுக்கு.... வேறொண்ணுமில்லையே...?
அதெல்லாம்... ஒண்ணுமில்லை. நீங்க பயப்படாம... பதறாம கிளம்பி வாங்க…!
ஹேமா மறுமுனையில் ரிஸீவரை வைத்துவிட்டாள்.
துளசிக்கு கண்களை இருட்டியது. எப்படி பதறாமல் இருக்க முடியும்? அம்மாவுக்கு ஏதேனும் ஒன்று என்றால்... தாங்க முடியுமா? தன்னை பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தெய்வமாயிற்றே...! அப்பா செத்துப் போனபிறகு தன்னை ஆளாக்குவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள். கண்களில் நீர் துளிர்க்க கடவுளையெல்லாம் வேண்டிக் கொண்டாள். பரபரவென்று எம்டியின் அறைக்குள் சென்று அரைநாள் விடுப்பு எழுதிக் கொடுத்துவிட்டு இதோ பஸ்சுக்காக காத்து நிற்கிறாள்.
இருபது நிமிடங்கள் கால்கடுக்க நின்ற பிறகுதான் அவள் செல்ல வேண்டிய பஸ் வந்தது. கூட்டம் அதிகமில்லை. ஏறி..... ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
காலணிகளை வாசலிலேயே விட்டுவிட்டு வீட்டிற்குள் ஓடினாள். கூடம், படுக்கையறை என்று ஒவ்வொரு இடமாய் அம்மாவைத் தேடினாள். எங்கும் காணாமல் போகவே அடுக்களைக்குள் புகுந்தாள்,
நெய் வாசனை அடுக்களையையே நிறைத்திருக்க... டிபன் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தாள் கோகிலம். ஐம்பது வயது மதிக்கலாம். நூல் சேலையில் பளிச்சென்று இருந்தாள். முகத்தில் சாந்தம் குடியிருந்தது. அவளுக்கு உதவியாக பக்கத்து வீட்டு ஹேமாவும் அங்கே இருந்தாள்.
கோகிலம் துளசியைக் கவனிக்கவில்லை. ஹேமா கவனித்துவிட்டாள்.
துளசியக்கா வந்தாச்சு...!
கிசுகிசுத்தாள்.
வா... துளசி...
கோகிலம் சிரித்தபடியே வரவேற்றாள்.
சுடச்சுட 'கேரட் போண்டா’ ஒன்றை எடுத்து இரண்டாய் உடைத்து ஒரு துண்டை ஹேமாவிடமும் இன்னொரு துண்டை துளசியிடமும் நீட்டினாள்.
நல்லா இருக்கா... உப்பு போதுமான்னு டேஸ்ட்டு பாரு..!
அம்மா.....
உனக்கு நெஞ்சுவலின்னு... ஹேமா... போன் பண்ணினாளே..! நல்லா இருக்கியாம்மா..? ஒரு நிமிஷம்.... அப்படியே ஆடிப்போயிட்டேன் தெரியுமா..?"
கோகிலத்தின் தோள்மீது சாய்ந்தாள்.
பயந்துட்டியா துனிசி....? அதெல்லாம் ஒண்ணுமில்லை. அப்படி ஒரு பொய்யை சொன்னாத்தான்... நீ உடனே கிளம்பி வருவேன்னு எனக்குத் தெரியும். அதான்.... ஹேமாவை விட்டு போன் பண்ணச் சொன்னேன்.
ஏம்மா?
அவங்கள்ளாம்... மூணு மணிக்கு உன்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்களாம்...! திடுதிப்புன்னு வந்து தரகர் சொல்றாரு! எனக்கு ஒண்ணுமே புரியலை. கையும் ஓடலை... காலும் நகரலை...! உண்மையை சொன்னா.... மூணு நாளைக்கு நீ இந்தப் பக்கம் வரமாட்டியே..! அதான்...
கோகிலம் பெருமிதமாய் தோள்களைக் குலுக்க துளசிக்கு எரிச்சல்