Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Uyirai Azhaikkirean...
En Uyirai Azhaikkirean...
En Uyirai Azhaikkirean...
Ebook137 pages46 minutes

En Uyirai Azhaikkirean...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

செந்தமிழை உயிருக்குயிராய் விரும்பும் செல்வகுமார் தன் காதலை பூட்டியே வைக்கிறான்.

காரணம் செந்தமிழ் தன் நண்பனின் தங்கை.

நட்புக்கு மரியாதைக் கொடுத்து காதலைப் புதைத்துக் கொள்ளும் செல்வக்குமார். ஊரை விட்டே போய்விடுகிறான்.

செந்தமிழின் திருமணம் நின்றுவிடுகிறது. வேறொரு இடத்தில் கல்யாணமாகிறது.

மின்சாரம் தாக்கி மணமகன் பலியாகிவிட...

விரக்தியில் செந்தமிழும் வீட்டை விட்டு வெளியேகிறால்... நள்ளிரவில் திருப்பூரில் வந்து இறங்கும் செந்தமிழ் தப்பான பெண் மணியிடம் சிக்கி கொள்ள...

செல்வகுமாரும் அவளும் சந்தித்தார்களா... வாசியுங்கள்.

Languageதமிழ்
Release dateJun 30, 2020
ISBN6580128305541
En Uyirai Azhaikkirean...

Read more from Maheshwaran

Related to En Uyirai Azhaikkirean...

Related ebooks

Reviews for En Uyirai Azhaikkirean...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Uyirai Azhaikkirean... - Maheshwaran

    http://www.pustaka.co.in

    என் உயிரை அழைக்கிறேன்...

    En Uyirai Azhaikkirean...

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    தாண்டபுரம் கடைத்தெரு -

    ஜெயச்சந்திரன் டிரான்ஸ்போர்ட் பேருந்து வழக்கம் போல இரைச்சலுடன் வந்து நின்றது. இதற்காகவே காத்திருந்த பயணிகள் கூட்டம் பேருந்தில் ஏறுவதற்காக தடதடவென்று ஓடியது. பேருந்தின் இரண்டு பக்க படிகளிலும் தொங்கியபடியே பயணித்த இளைஞர்கள்... பேருந்திலிருந்து இறங்குகிறவர்களுக்காகவும் ஏறுகிறவர்களுக்காகவும்... கீழே இறங்கி சற்றே ஒதுங்கி வழிவிட்டு நின்றார்கள்.

    நேர் எதிரே ஆட்டோ ஸ்டாண்டில்... தனது ஆட்டோவின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து... மௌனமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் செல்வகுமார்.

    செல்வகுமாருக்கு இருபத்தியொன்பது வயது.

    இன்னும் கல்யாணமாகவில்லை.

    அப்பா, அம்மா யாரும் கிடையாது.

    பி.ஏ. தமிழ் படித்திருக்கிறான்.

    சொந்தக்கார அத்தை ஒருத்திதான் அவனைப் படிக்க வைத்து ஆளாக்கினாள். அத்தை தற்போது உயிருடன் இல்லை.

    இன்னும் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்தவர்கள்...

    போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள்...

    காத்திருப்போர் பட்டியலில் இருப்போர்...

    இவர்களுக்கெல்லாம் வேலைகிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும்போது... வெறும் டிகிரி மட்டும் முடித்தவனுக்கு எங்கே வேலை கிடைக்கும்?

    டிகிரியோடு சேர்த்து பி.எட். முடித்திருந்தாலாவது... எதாவதொரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்து விடலாம்.

    அதற்கும் வழியில்லை.

    கூலி வேலையும் தெரியாது.

    யாரிடமும் கை கட்டிக் கொண்டு நிற்கவும் இஷ்டமில்லை.

    டிரைவிங் கற்றுக் கொண்டு... வங்கியில் லோன் கேட்டு வாங்கி... ஒரு ஆட்டோவை வாங்கி விட்டான்.

    சுற்றுப்புற எட்டுக் கிராமத்து ஜனங்களுக்கும் தாண்டபுரத்தில் வந்துதான் மூச்சு விட வேண்டும். தாண்டபுரத்திலிருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு பேருந்து வசதி கிடையாது. இரு சக்கர வாகனத்திலோ ஆட்டோவிலோ தான் செல்ல வேண்டும்.

    ஆட்டோ ஓட்ட ஆரம்பித்த பிறகு செல்வகுமாருக்கு கொஞ்சம் சிரமம் குறைந்திருந்தது. தினமும் குறைந்து எழுநூறு ரூபாய்க்காவது ஓடிவிடும். வங்கிக்கு கட்ட வேண்டிய தவணை தொகை போக மீதி பணத்தை சிறுகச் சிறுக சேமிக்கவும் முடிந்தது.

    செல்வகுமாருக்கு மாநிறம் தான் என்றாலும் களையான முகம். ஒட்ட வெட்டிய கிப் தலை, கிராமத்து உடற்கட்டு, போதுமான உயரம். காக்கி சீருடை செல்வகுமாருக்கு பொருத்தமாய் இருந்தது.

    அவனுக்கு பெண் தர நிறைய பேர் முன் வந்தார்கள். வலிய வந்தே கேட்டார்கள். வந்த வரன்களையெல்லாம் நிராகரித்துக் கொண்டிருந்தான் செல்வகுமார்.

    காரணம் அவன் மனதில் ஒரு தேவதை இருந்தாள். அவளைத்தான் உயிரினும் மேலாய் நேசித்துக் கொண்டிருந்தான். இரவும்,பகலும் அவள் நினைவுதான். எப்பவும் அவளைப் பற்றிய கனவுதான். ஆனால், காதலை வெளியே சொல்லாமல் மனசுக்குள்ளேயே பூட்டி வைத்திருந்தான். ஏதோ ஒரு தயக்கம் அவனைத் தடுத்தது.

    இன்று சொல்லலாம்

    நாளை சொல்லலாம்.

    நாளை மறுநாள் சொல்லலாம் என நாட்களைக் கடத்திக் கொண்டேயிருந்தான். இன்னும் சொன்னபாடில்லை.

    சட்டைப் பையில் இருந்த... செல்போன் சிணுங்கியது. வெளியே எடுத்து பச்சைப் பொத்தானை

    அழுத்தி காதில் வைத்தான்.

    சொல்லு... தேவா...

    மறுமுனையிலிருந்து அழைத்தது அவனுடைய நண்பன் தேவேந்திரன்.

    இருவருக்கும் ஒரே வயது. ஒரே ஊர். பக்கத்து பக்கத்து தெருவில் வீடு. சிறு வயதிலிருந்தே இருவரும் உயிருக்குயிரான நண்பர்கள்.

    இப்ப நீ எங்கடா இருக்கே?

    ஆட்டோ ஸ்டாண்ட்லதான்.

    நல்லதாப் போச்சு... சவாரியோட இருப்பியோன்னு பயந்துட்டேன்...

    என்னடா விஷயம்...?

    ஜெயச்சந்திரன் டிரான்ஸ்போர்ட் வந்துடுச்சா?

    இதோ இப்பத்தான் வந்து நிக்குது... நான் கூட சவாரி ஏதாவது கெடைக்காதான்னுதான் பார்த்துகிட்டிருக்கேன்...

    நம்ம வீட்டுக்கு வரப்போறவங்க... ஜெயச்சந்தின் டிரான்ஸ்போர்ட் பஸ்சுலதான் வர்றதா போன் பண்ணினாங்க... மொத்தம் நாலு பேரு. ஜெயம்னு ஒரு ஆட்டோ நிக்கும். என் பிரெண்டுதான் டிரவைர். அவன்கிட்டே போய்விபரம் சொன்னா... எங்க வீட்டுக்கு பத்திரமா கூட்டிட்டு வந்துடுவான்னு... அவங்ககிட்டே சொல்லி வெச்சிருக்கேன்... பஸ்சிலேர்ந்து எறங்கி யாராவது உன்கிட்ட வந்து என் பேரைச் சொல்லி விசாரிச்சாங்கன்னா... கூட்டி வந்துடு செல்வா..." என்றான் தேவா.

    குரலில் படபடப்பு தெரிந்தது.

    சரி... நீ போனை வை. அவங்களை நான் கூட்டி வந்துடுறேன்...

    அவசரமாய் தொடர்பைத் துண்டித்து... செல்போனை சட்டைப் பையில்போட்டுக் கொண்டு... ஆட்டோவில் இருந்தபடியே தலையை வெளியேநீட்டி... ஜெயச்சந்திரன் டிரான்ஸ்போர்ட் பேருந்திலிருந்து இறங்குகிறவர்களை நோட்டம் விட்டான்.

    ஏழெட்டு பேர் இறங்கினார்கள். ஏறுகிறவர்கள் ஏறியதும் விசில் சப்தத்துடன் ஜெயச்சந்திரன் டிரான்ஸ்போர்ட் பேருந்து கடைத்தெருவை விட்டு நகர்ந்தது.

    தேவா வீட்டிற்கு, வருகிறவர்களை எப்படி அடையாளம் கண்டு பிடிப்பது?

    செல்வகுமாரின் புருவங்கள் யோசனையாய் உயர... பேருந்திலிருந்து இறங்கியவர்களில் ஒரு பெரியவர் மட்டும்... சுற்றும் முற்றும் கண்களை அலைபாய விட்டார்.

    ஜெயம் என்ற பெயர் எழுதப்பட்டிருந்த இவனுடைய ஆட்டோ அவருடைய கண்களில் அகப்பட்டிருந்தது.

    அதோ நிக்குது பாருங்க... அந்த ஆட்டோதான் என்றார் தன்கூட வந்தவர்களிடம் உரத்த குரலில்.

    தேவா சொன்னது போல பெரியவரோடு சேர்த்து மொத்தம் நான்கு பேர். அதில் ஒருத்தி மட்டும் நடுத்தர வயது பெண்மணி.

    பெரியவரின் மனைவியாக இருக்க வேண்டும்.

    ஒருவன் இளைஞனாகத் தெரிந்தான். தடியாய்... சிவப்பாய்... காட்சியளித்தான். பேண்ட்டும் சட்டையும் அணிந்து இன் பண்ணியிருந்தான். அந்த பெண்மணியின் சாயல் படர்ந்திருந்தது. ஒருவேளை அவன் அவர்களுடைய மகனாக இருப்பானோ?

    நான்காவது நபர் ஜிப்பா அணிந்திருந்தார். அடிக்கடி குனிந்து அசைபோட்ட வெற்றிலைப் பாக்கைத் துப்பிக் கொண்டேயிருந்தார்.

    தம்பி... இதானே ஜெயம் ஆட்டோ...?

    பெரியவர் செல்வகுமாரை நெருங்கி வந்து கேட்டார்.

    ஆமா...

    நீங்கதானே தேவா தம்பியோட பிரெண்ட்...?

    ஆமா...!

    உங்களோட ஆட்டோவுலதான் எங்களை தேவா தம்பி வரச் சொல்லியிருக்கார்...

    முதல் ஆளாய் ஆட்டோவில் ஏறி அமர்ந்தார்.

    தேவா சொன்னான்... நானும் உங்களைத்தான் தேடிகிட்டு இருந்தேன்... எல்லோரையும் ஏறிக்கச் சொல்லுங்க...

    சினேகமாய் புன்னகைத்தான். ஓட்டுநர் இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து... ஆட்டோவை இயக்கினான். மூன்று பேர் மட்டும் பின்னிருக்கையில் அமர...

    ஜிப்பா பேர்வழி மட்டும்... செல்வகுமாரோடு முன்பக்கமாய் நெருக்கியடித்துக்

    Enjoying the preview?
    Page 1 of 1