Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thedu Kidaikathu
Thedu Kidaikathu
Thedu Kidaikathu
Ebook163 pages1 hour

Thedu Kidaikathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Thedu Kidaikathu

Read more from Rajeshkumar

Related to Thedu Kidaikathu

Related ebooks

Related categories

Reviews for Thedu Kidaikathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thedu Kidaikathu - Rajeshkumar

    24

    1

    எடிட்டர் தரணிபதியின் ஏர்க்கண்டிஷன் அறை.

    சப்-எடிட்டர் சூர்யமைத்தன் கை நிறையக் காகிதங்களோடு உள்ளே நுழைந்தார்.

    ஸார்...

    என்ன... கவிதைகளை படிச்சுட்டீங்களா... எத்தனை தேறுது?

    ஒண்ணே ஒண்ணுதான் ஸார்...

    யார் எழுதினது...?

    எஸ். குமாரகிருஷ்ணன்னு ஒருத்தர்... அரசியலைப் பத்தி கொஞ்சம் காரசாரமாவே எழுதியிருக்கிறார்...

    கொண்டாங்க பார்க்கலாம்...

    சப்-எடிட்டர் கையில் வைத்திருந்த கவிதையை நீட்ட எடிட்டர் தரணிபதி வாங்கி கண்ணாடியை உயர்த்திவிட்டுக் கொண்டு வாய்விட்டுப் படித்தார்.

    அரசியல்வாதிகளில் பலர்

    அரக்கர்கள் என்பதாலேயே

    ராட்சஸ வடிவில்

    கட்-அவுட் கட்டப்படுகிறது.

    எலெக்ஷன் என்றதுமே

    கலெக்ஷன் ஆரம்பம் - அவர்கள்

    கொடுப்பது வாய்க்கரிசி

    பெறுவது வாக்குச் சீட்டு.

    சுவரொட்டி ஒட்டியவன்

    வயிறு ஒட்டி வாடுகிறான்

    ஊர்வலம் தொண்டனுக்கு

    கார்வலம் தலைவனுக்கு.

    தலைவனை வாழ்க என்று சொல்லி

    தான் மட்டும் வீழ்பவன் - இவனைத்

    தொண்டன் என்று அழைப்பதா?

    முண்டம் என்று சொல்வதா?

    கைதியின் தவறுகளுக்கு

    நீதிபதிக்கு தண்டனையா?

    தலைவனின் ஊழல்களுக்கு

    தொண்டனின் தீக்குளிப்பா?

    கும்பகர்ணக் குடிமகனே

    புரிந்து கொண்டால்

    விழித்துக் கொள்வாய்

    விழிக்காவிட்டால்

    அழிந்து போவாய்.

    கவிதையைப் படித்துவிட்டு புன்னகையோடு நிமிர்ந்தார் எடிட்டர் தரணிபதி.

    அற்புதமா எழுதியிருக்கார்... பப்ளிஷ் பண்ணிடுங்க... பத்திரிக்கை சார்பா ஒரு பாராட்டுக் கடிதத்தையும் அனுப்பிடுங்க...

    எடிட்டர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இண்டர்காம் அழைத்தது.

    ரிஸீவரை எடுத்தார்.

    ரிசப்ஷனிஸ்ட் பேசினாள்.

    ஸார்...! உங்களைப் பார்த்துப் பேசறதுக்காக ஒரு லேடி வந்து காத்திட்டிருக்காங்க... ஏதோ பர்சனல் மேட்டராம்...

    பொண்ணு பேரு...?

    சபரீஸ்வரி...

    என்ன சொன்னே... சபரீஸ்வரியா...?

    ஆமா ஸார்...

    பேறே வித்தியாசமா இருக்கு... பொண்ணோட அப்பியரன்ஸ் எப்படி...?

    வெரி டீஸண்ட் ஸார்... ஹைலி எஜிகேட்டட் மாதிரி தெரியுது...

    ஏஜ்...?

    இருபத்தஞ்சிலிருந்து முப்பது வயசுக்குள்ளே இருக்கலாம் ஸார்...

    டொனேஷன் கேஸ் மாதிரி தெரியலையே...?

    அப்படித் தெரியலை ஸார்...

    சரி அனுப்பு... ரிஸீவரை வைத்துவிட்டு எதிரில் நின்றிந்த சப்-எடிட்டரைப் பார்த்தார் தரணிபதி.

    தலையங்கம் கம்போஸிங்குக்குப் போய் ஃபர்ஸ்ட் பிரிண்ட் வந்தாச்சா...?

    இன்னும் வரலை... ஸார்...

    வந்ததும் என்னோட டேபிளுக்கு அனுப்புங்க.

    எஸ்... ஸார்...

    பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர் கிட்டே சிறுகதைகள் கேட்டிருந்தோம்... அனுப்பிட்டாங்களா...?

    இன்னிக்குத் தர்றதா சொல்லியிருக்காங்க ஸார்...

    அடுத்த வாரத்துக்கான ரேப்பரை ஜெயராஜை வெச்சு பண்ணலாம்னு ஒரு ஐடியா இருக்கு... ஜெயராஜ்க்கு போன் பண்ணி ஆபீஸ் வர முடியுமான்னு கேளுங்க... அவர் பிஸியா இருந்தா... நீங்களே ஒரு நடை போயிட்டு வந்துடுங்க...

    எஸ்... ஸார்...

    டொக்... டொக்...

    அறைக்கதவு வெளியே தட்டப்பட்டது.

    ப்ளீஸ்... கம்... இன்...

    கதவைத் திறந்து கொண்டு அந்தப்பெண் உள்ளே வந்தாள். பளிச்சென்ற நிறம். நீள்வட்ட முகத்தில் பெரிய கண்கள். மொட மொடப்பான வாயல் சேலையைக் கட்டியிருந்த நேர்த்தி அவளை எடுப்பாக்கி காட்டியது. வலது தோளில் பாசிகள் வைத்து தைத்த பை ஒன்று தொங்கியது.

    நெயில் பாலீஷ் பூச்சு விரல்களைக் குவித்தாள்.

    வணக்கம். நான் சபரீஸ்வரி...

    உட்காருங்க... ப்ளீஸ்... தரணிபதி தனக்கு எதிரே இருந்த இருக்கையைக் காட்டிக் கொண்டிருக்கும்போதே சப்-எடிட்டர் வெளியேறினார்.

    அவர் வெளியேறி டோர் க்ளோஷர் சாத்திக் கொள்ளும் வரையில் பொறுமையாக இருந்த எடிட்டர் எதிரே இருந்தவளைப் பார்த்துப் புன்னகைத்தார்.

    சொல்லுங்க... என்ன விஷயம்...?

    சபரீஸ்வரி ஆரோக்கியமான பல்வரிசையில் சிரித்தாள். என்னைப் பத்தி நான் கொஞ்சம் சொல்லிக்கலாமா ...?

    ப்ளீஸ்...

    நான் ஒரு சோஷியல் சைக்காலிஜி ஸ்காலர்... எம்.ஏ. முடிச்சுட்டு... இப்போ பி.ஹெச்.டி. பண்ணியிருக்கேன். நான் என்னோட ஆராய்ச்சிக்கு எடுத்துக்கிட்ட சப்ஜெக்ட் பழங்குடி மக்களோட வாழ்க்கை முறைகளைப் பத்தினது...

    தரணிபதி குறுக்கிட்டார்.

    அதை நிறையபேர் பண்ணியிருக்காங்களே...?

    மே...பி...! பட் மத்தவங்களுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு சார்...!

    என்ன வித்தியாசம்...?

    மத்தவங்க தன்னோட பேர்க்கு பின்னாடி ‘பி.ஹெச்.டி’னு ஒரு பட்டத்தை போட்டுகிறதுக்காக - ஒரு கடமைக்காக ரிசர்ச்ல ஈடுபடுவாங்க. ஆனா நான் அப்படியில்லை... உண்மையான உள்ளார்த்தத்தோடு பி.ஹெச்.டி. பண்ணிட்டிருக்கேன். அதுக்காக நான் தேர்ந்தெடுத்திருக்கிற இடம் வெள்ளியங்கிரி மலை. அதன் உச்சியில் அடர்ந்த காட்டில் குடியிருக்கும் ‘காஷா’ எனப்படும் மலைவாழ் மக்களோடு கடந்த மூணு மாசகாலமாத் தங்கி அவங்களோட வாழ்கை முறையைப் பார்த்து ஆராய்ச்சி பண்ணிட்டு வர்றேன்...

    சரி...

    காஷா இன மக்கள் இன்னமும் இலை தழைகளைத்தான் ஆடையா தைத்து உடுத்திக்கிறாங்க... பருத்தித்துணியை அரசாங்கம் கொடுத்தாலும் அவங்க அதை வாங்கிக்கிறது இல்லை. கல்வியறிவு என்பது மருந்துக்குக்கூட இல்லை. அரசாங்கம் செய்யற எந்த உதவியையும் அவங்க பொருட்படுத்தறது இல்லை... காஷா இன மக்களில் வயசான பெரியவர் ஒருத்தர் இருக்கார். அவரோட வார்த்தைக்கு மட்டும்தான் எல்லாரும் கட்டுப்படுவாங்க...

    தரணிபதி சபரீஸ்வரியை சற்றே சோர்வாய் பார்த்தார். சரி...

    இனி விஷயத்துக்கு வர்றேன் ஸார்...

    எடிட்டர் புன்னகைத்தார்.

    அதுக்காகத்தான் நானும் காத்திட்டிருக்கேன்...

    சபரீஸ்வரி தான் கொண்டு வந்திருந்த பாசிமணி பையின் ஜீப்பைப் பிரித்து ஒரு போட்டோவை எடுத்து எடிட்டரிடம் நீட்டினாள்.

    இதைக் கொஞ்சம் பாருங்க ஸார்...

    தரணிபதி வாங்கிப் பார்த்தார்.

    போட்டோவில் ஒரு மலைசாதிப் பெண் பாறைகளின் பின்னணியில் நின்று கொண்டிருந்தாள்.

    பெண் அவ்வளவு அழகாய் இல்லை. சற்றே மேடிட்ட நெற்றி. பெரிய சைஸ் காதுகள். மொச்சையான பற்கள். மார்பிலிருந்து முட்டுக்கால் வரைக்கும் தேக்கு மர இலைகள் ஆடையாக மாறி அவளுடைய மானத்தைக் காப்பாற்றும் கவசமாய் மாறியிருந்தன. போட்டோ எடுக்கும்போது நிறைய வெட்கப் பட்டிருக்க வேண்டும். விழிகளில் டன் டன்னாய் வெட்கம்.

    தரணிபதி அந்தப் போட்டோவைப் பார்த்துவிட்டு கேட்டார்.

    இந்தப் பொண்ணுக்கு என்ன...?

    "ஸார்... இந்தப் பொண்ணுக்கு வயசு இருபத்திநாலு. காஷா இனப்

    Enjoying the preview?
    Page 1 of 1