Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idhayathai Koduthu Vidu
Idhayathai Koduthu Vidu
Idhayathai Koduthu Vidu
Ebook119 pages27 minutes

Idhayathai Koduthu Vidu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.

இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.

குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.

வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.

மிக்க அன்புடன்
மகேஷ்வரன்

Languageதமிழ்
Release dateNov 23, 2019
ISBN6580128304725
Idhayathai Koduthu Vidu

Read more from Maheshwaran

Related to Idhayathai Koduthu Vidu

Related ebooks

Reviews for Idhayathai Koduthu Vidu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idhayathai Koduthu Vidu - Maheshwaran

    http://www.pustaka.co.in

    இதயத்தைக் கொடுத்து விடு

    Idhayathai Koduthu Vidu

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    நல்ல நேரம் நெருங்கி கிட்டே இருக்கு. சீக்கிரமாச் சாந்தாவைக் கூப்பிடுங்க...

    வயதில் மூத்த பெண்கள் குரல் கொடுத்தார்கள்.

    சாந்தா... எழுந்திரி...

    பூஜையறைக்குள் கண்கள் மூடி... சாமி படத்திற்குமுன் அமர்ந்திருந்த சாந்தாவின் தோளைத் தொட்டாள் அத்தை.

    சாந்தாவைப் பிரமாதமாக அலங்காரம் பண்ணியிருந்தார்கள். அரக்கு நிறத்தில் கத்திரிப்பூ நிறபார்டர் போடப்பட்ட அவளுடைய கல்யாணப்பட்டுச் சேலையைக் கட்டியிருந்தாள். கழுத்திலும் கைகளிலும் நிறையத் தங்க ஆபரணங்கள் மின்னின. தலைநிறையக் கனகாம்பர மல்லிகைப்பூப் பந்தல்... தன் கர்ப்பம் தாங்கிய வயிற்றைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு மூச்சுவாங்கியபடி… இடுப்பில் கை ஊன்றி எழுந்தாள் சாந்தா.

    சாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டியா...? அத்தை கேட்டாள்.

    ம்… தலையை ஆட்டினாள் சாந்தா.

    சாந்தாவின் கையைப் பிடித்துக் கூடத்திற்கு அழைத்து வந்தாள் அத்தை.

    கூடத்தில் உறவுப் பெண்களும், தெருப்பெண்களும் பட்டுச்சேலையில் தலைநிறையப் பூச்சூடிக் குழுமியிருந்தார்கள்.

    சாந்தாவின் அம்மாவும், அவளுடைய தங்கைகள் நித்யாவும், பிரபாவும் வந்திருந்த பெண்களுக்குச் சந்தனம் கொடுத்துக் கொண்டிருக்க...

    கூடத்தில் நடுவில் விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளத்தில் சாந்தாவை அமர வைத்தார்கள்.

    சாந்தாவிற்கு எதிரே இரண்டு பெரிய சைஸ் குத்துவிளக்குகள் அழகாக எரிந்து கொண்டிருந்தன.

    பூ, பழங்கள், மஞ்சள் தடவப்பட்ட தேங்காய், கற்கண்டு என நாலைந்து தாம்பாளங்களில் பொருட்கள் நிரம்பி வழிந்தன.

    மொத வளையலை யாரு போடறது...? வயசான சுமங்கலி ஒருத்தி முன்னே வந்தாள். வளையல்கார அம்மா, தன்னுடைய மரப்பெட்டியைத் திறந்து உள்ளே இருந்து ஒரு பெரிய சைஸ் அட்டைப் பெட்டியை வெளியே எடுத்தாள்.

    உள்ளே கலர் கலராய் வளையல்கள், ஒவ்வொரு சுமங்கலிப் பெண்ணாய், சாந்தாவிற்கு வளையல் மாட்டி விட்டு அவளுடைய கன்னத்தில் சந்தனம் தடவி நெற்றியில் திலகமிட்டுத் தலையில் பூ வைத்துவிட்டு நகர்ந்தார்கள்.

    வீடு முழுக்க ஒரே கிண்டலும் சிரிப்பொலியுமாய் இருந்தது. அடுக்களையில் எலுமிச்சை, தயிர், தேங்காய், மாங்காய் என விதவிதமாய்ச் சாதங்கள் தயாராகிக் கொண்டிருக்கிற வாசனை மூக்கைத் துளைத்தது.

    சாந்தாவிற்கு வளைகாப்பு விழா... இனிதே நடந்து கொண்டிருக்க...

    சாந்தாவின் முகத்தில் சிரிப்பே இல்லை. ஒப்புக்குக் கூடச் சிரிக்காமல் இருந்தாள். அவளுடைய கண்கள் அடிக்கடி வாசல் பக்கம் போய் வந்தன. எந்த நிமிஷமும் அழத் தயாராய் அவளுடைய கண்கள் கலங்கிக் கொண்டிருந்தன.

    அம்மா அதைக் கவனித்துவிட்டாள்.

    சாந்தாவின் அருகில் வந்தாள். மெல்லிய குரலில் கிசுகிசுத்தாள்.

    டீ... சாந்தா! உம்முனு மூஞ்சியை வெச்சுக்காம, கொஞ்சம் சிரிடீ... எல்லோரும் வந்திருக்காங்க இல்லே...

    எல்லோரும் வந்திருக்காங்க... ஆனா, அவர் இன்னும் வரலியேம்மா...?

    சாந்தாவின் குரல் உடைந்திருந்தது.

    பொலம்பாதே! இப்ப வந்திடுவார்.

    அம்மா நகர்ந்தாள்.

    சாந்தா முகத்தைப் பரிதாபமாய் வைத்துக்கொண்டு அத்தையைப் பார்த்தாள்.

    அத்தே...

    என்ன சாந்தா...

    எங்க... இன்னும் உங்க புள்ளையைக் காணோம்?

    வந்துடுவான்...

    நேத்து... நீங்களும் மாமாவும்... கிளம்பி வந்தப்ப என்ன சொன்னாரு...?

    நாளைக்குக் காலையில் 'டாண்'ணு அங்க வந்திடுவேன்னு சொன்னான்...

    மறந்திருப்பாரா...?

    மறக்கக்கூடிய விஷயமா இது? ஒருவேளை லீவு கெடைக்கலியோ என்னமோ? நல்ல ஆபீஸ்.. நல்ல வேலை... ஒரு நாளு, கெழமைக்குக் கூட லீவு குடுக்க மாட்டேன்கறான்க... அத்தை சபதமாய் முனகினாள்.

    சாந்தா... எழுந்திரிச்சு… பெரியவங்களுக்கெல்லாம் நமஸ்காரம் பண்ணிக்கம்மா...

    வளையல்கார அம்மா சொன்னாள்.

    சாந்தா எழுந்தாள்.

    அத்தை, மாமா, அப்பா, அம்மா, பிற வயசான பெண்கள் அனைவருக்கும் நமஸ்காரம் பண்ணிக்கொண்டாள்.

    மூச்சு வாங்கியது.

    எல்லோரும் இருந்து சாப்பிட்டுத்தான் போகணும்... அப்பா எல்லோரிடமும் சப்தமாய்ச் சொல்லிக் கொண்டிருந்தார்.

    சாந்தாவின் மனசு... அந்தச் சந்தோஷத்தில் கலந்துகொள்ள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது.

    'அவருக்கு என்னாயிற்று?'

    'ஏன் வரவில்லையா?'

    'லீவு கிடைக்கவில்லையா?'

    'மறந்து விட்டாரா?'

    'மனைவியின் வளைகாப்பை விட... வேலை முக்கியமாய்ப் போய்விட்டதா?'

    'வந்து சேரட்டும்... பார்த்துக் கொள்கிறேன். ஒரு பிடி பிடிக்கவேண்டும். இல்லாவிட்டால் சரிப்பட்டு வராது...'

    மனதினுள் நினைத்துக்கொண்டாள் சாந்தா.

    அப்போது...

    எதிர்வீட்டு மாமா, வேக வேகமாய் உள்ளே வந்தார். சாந்தாவின் அப்பாவிடம் சொன்னார்.

    உங்களுக்கு... போன் வந்திருக்கு... லைன்ல இருக்கச் சொல்லியிருக்கேன்... ஓடிவாங்க...

    பேசறது யாராம்...? அம்மா கேட்டாள்.

    உங்க மருமகனோட ப்ரெண்டாம்... ஏதோ முக்கியமான விஷயமாம்... என்னன்னு சொல்லுங்கன்னு கேட்டேன்... அவரைக் கூப்பிடுங்க... அவர்கிட்டேதான் சொல்லணும்னு... பிடிவாதமா சொல்றார்... அதான் ஓடிவந்தேன்.

    அவர் சொல்லவில்லை…

    சாந்தாவின் மனதினுள் இனம்புரியாததொரு… பயம் நிரம்பி வழிந்தது.

    உடம்பு முழுக்கக் குப்பென வியர்க்க ஆரம்பித்தது.

    2

    அம்மாடி... நர்மதா...

    அப்பா உள்ளறைக்குள் இருந்து குரல் கொடுத்தார். கண்ணாடி முன்பு நின்று நெற்றியில் இருந்த ஸ்டிக்கர் பொட்டைச் சரிசெய்துக் கொண்டிருந்த நர்மதா, அவர் கூப்பிட்ட குரலுக்கு இதோ வர்றேன்பா... என்றபடியே மறுபடியும் கண்ணாடியில் தன் தோற்றத்தை அப்படியும் இப்படியும் திரும்பிப் பார்த்தாள்.

    நர்மதாவுக்கு இருபது

    Enjoying the preview?
    Page 1 of 1