Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nenjam Yekkathil Thavikkuthu
Nenjam Yekkathil Thavikkuthu
Nenjam Yekkathil Thavikkuthu
Ebook145 pages49 minutes

Nenjam Yekkathil Thavikkuthu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாறுபட்ட நாவல் இது.

விதவை தாய் தன் மகன் பிருத்வியை ஆளாக்க படாதபாடு படுகிறாள்.. அவனோ சமுத்திராவிடம் காதலில் விழ - காதலை எதிர்க்கிறாள் தாய். இரு தங்கைகள், தாயை உதறிவிட்டு காதலைத் தேடி செல்கிறான் பிருத்வி.

சமுத்திராவோடு கல்யாண ஏற்பாடுகள் நடக்கிறது. ஆனால் இடையில் பிருத்வியின் தாயின் தவிப்பையும் வேதனையையும் புரிந்துக் கொண்ட சமுத்திரா, எடுக்கும் அதிரடி முடிவே இந்நாவல்...

Languageதமிழ்
Release dateJun 30, 2020
ISBN6580128305542
Nenjam Yekkathil Thavikkuthu

Read more from Maheshwaran

Related to Nenjam Yekkathil Thavikkuthu

Related ebooks

Reviews for Nenjam Yekkathil Thavikkuthu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nenjam Yekkathil Thavikkuthu - Maheshwaran

    http://www.pustaka.co.in

    நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

    Nenjam Yekkathil Thavikkuthu

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    உள்ளங்கையளவு முகம் பார்க்கும் கண்ணாடியில் முகத்தைப் பார்த்து தானாக சிரித்துக் கொண்டான் பிருத்வி. கண்ணாடியை உயர்த்தியும், தாழ்த்தியும் தன் முழு தோற்றத்தையும் பார்க்க முயன்றான். முடியவில்லை. அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டிலும், டி-சர்ட்டிலும் ஆளே மாறிப் போயிருந்தான்.

    "கொல்'லென்று சிரிப்பொலி கேட்டது. திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்த்தான். முழுமையாய் தாழிடப்படாத அறைக் கதவின் இடுக்கு வழியே அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர் அவனுடைய தங்கைகள் சந்தியாவும், வந்தனாவும்.

    இங்கே என்ன வேடிக்கை வேண்டிக் கெடக்கு...?

    முறைத்தபடியே அதட்டலாய்க் கேட்டான்.

    நாங்க ஒண்ணும் உன்னை வேடிக்கை பார்க்கலை... எலி இந்த வழியேதான் ரூமுக்குள்ளே ஓடி வந்துச்சு... அதைத்தான் தேடிக்கிட்டு வந்தோம்...

    கேலியாய் சொன்ன சந்தியா அறைக்கதவை சடாரென விரியத் திறந்தாள்.

    ஏய்... கதவை மூடு... இப்ப மூடப் போறியா இல்லையா...?

    அவளை அடிப்பதற்காக செல்லமாய் கையை ஓங்கினான்.

    அட... அண்ணனுக்கு வெட்கத்தைப் பாரேன்... கைக்கொட்டி சிரித்தாள் வந்தனா.

    எப்படியும் வெளியே வந்துதானே ஆகணும்... இதுல, வெட்கம் என்னத்துக்கு...? இன்னைக்குத்தாண்ணே நீ ஆம்பளையா, லட்சணமா, ஹேண்ட்சம்மா இருக்கே. ரெண்டு செட் வாங்கி வெச்சுக்க. தெனமும் இப்படியே டிரெஸ் பண்ணிக்கோ...

    கண்கள் மலர பிருத்வியை பார்த்தாள் சந்தியா.

    இதை வாங்க நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்... இதுல ரெண்டு செட் டிரெஸ் வாங்கி வெச்சுக்கணுமா...? அதுக்கு எங்காச்சும் போய் கொள்ளையடிச்சாத்தான் உண்டு... தோள்களைக் குலுக்கினான பிருத்வி.

    பிருத்வி சாதாரணமாய் வேஷ்டி சட்டைதான் அணிந்து கொண்டிருப்பான்.

    பேண்ட்டெல்லாம் போட்டதே கிடையாது. தனக்கென எந்த உடையையும் வாங்கிக் கொண்டதில்லை. கையில் கொஞ்சம் பணம் இருந்தால்போதும் தங்கைகள் இருவருக்கும் தான் சுடிதார், சேலை என வாங்கி வருவான். சில சமயங்களில் அம்மா மணிமேகலைக்கும் நூல் சேலை வாங்கி வருவான்.

    மெல்லிய கோடுகள் போட்ட நூல் சேலைதான் மணிமேகலைக்குப் பிடிக்கும். அவள் பூ போட்ட சேலையெல்லாம் கட்டி பிள்ளைகள் மூவருமே பார்த்தது கிடையாது.

    மணிமேகலையின் முகத்தில் மெல்லிய சோகம் நிழல்போல படிந்திருக்கும். மணிமேகலை வாய்விட்டு சிரிப்பது அபூர்வம். மணிமேகலை சிரித்து விட்டால் என்றால் உலக அதிசயத்தில் ஒன்று கூடிப் போகும்.

    வந்தனாவும், சந்தியாவும் தான் அந்த வீட்டின் கலகல மணியோசை.

    இருவருமே கல்லூரியில் படிக்கிறார்கள்.

    வந்தனாவிற்கும், சந்தியாவிற்கும் ஒரு வயது வித்தியாசம்.

    வந்தனா பைனல் இயர் பி.ஏ. ஆங்கிலம் படிக்கிறாள். சந்தியா செகண்ட் இயர் கம்ப்யூட்டர் சயின்ஸ்.

    பிருத்வி ப்ளஸ் டூ-விற்கு மேல் படிக்கவில்லை.

    தங்கைகளை விட ஆறு வயது மூத்தவன்.

    டிரைவிங் கற்றுக் கொண்டு டிராவல்ஸ் ஒன்றில் வேலைபார்க்கிறான். மாதம் பதினைந்தாயிரம் சம்பளம் வாங்குகிறான்.

    அப்படியே கொண்டு வந்து மணிமேகலையின் கையில் கொடுத்து விடுவான்.

    இப்போது தான் முதல் தடவையாய் தனக்கென ஜீன்ஸ் பேண்ட்டும், டிசர்ட்டும் வாங்கியிருக்கிறான்.

    வந்தனாவிற்கும், சந்தியாவிற்கும் அதுதான் ஆச்சரியமாக இருந்தது.

    அம்மா... சீக்கிரமா வாயேன்... பிருத்வி அண்ணனோட கோலத்தைப் பாரேன்...

    உற்சாகமாய் அடுக்களைக்குள் ஓடினாள் வந்தனா.

    அடுக்களையில்... சிமெண்ட் தரையில் அழுத்தமான வெள்ளைத் துணியை விரித்துப் போட்டு கை முறுக்கு சுற்றிக் கொண்டிருந்தாள் மணிமேகலை.

    அரிசி மாவில் உளுந்து மாவு, பெருங்காயம், சீரகம், வெண்ணையைக் கலந்து நன்றாகப் பிசைந்து... விரலில் எண்ணையைத் தொட்டுக் கொண்டு... அழகாய் பிரி பிரியாய், சுற்றி, காய்ந்ததும் கொதிக்கிற எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கிற கை முறுக்குகளுக்கு சுவையும் அதிகம்.

    வரவேற்பும் அதிகம்.

    சிறியவர் முதல் வயோதிகர்கள் வரை அனைவரும் விரும்பி வாங்கிச் சாப்பிடுவார்கள்.

    இத்தனை வருடங்களாய் மணிமேகலையைக் காப்பாற்றியது கை முறுக்கு வியாபாரம்தான். உள்ளூரில் இருக்கிற அத்தனை பெட்டிக் கடைகளுக்கும் தனித்தனியே பாலிதீன் கவர்களில் போட்டு... மணிமேகலைதான் விநியோகம் செய்து கொண்டிருந்தாள்.

    குனிந்த தலையை நிமிராமல் அவள் பாட்டுக்கு சுற்றிக் கொண்டிருப்பாள். விறகு அடுப்புதான். எந்த நேரமும் தணல் அடிக்க அடுக்களையிலேயேதான் அமர்ந்திருப்பாள். கடைகளுக்கு விநியோகம் செய்தது போக மிச்சம் இருக்கும் கைமுறுக்குகளை தகர டின்னில் அடைத்துக் கொண்டு கான்வென்ட் வாசலுக்குப் போய் விடுவாள்.

    மணிமேகலைக்கு தெரிந்தது எல்லாம் உழைப்பு ஒன்றுதான்.

    வீண் பேச்சு.

    வறட்டுக் கவுரவம் இதெல்லாம் அவளுக்குத் தெரியாது.

    வயது வந்த இரண்டு பெண்களை கரையேற்ற வேண்டுமே என்ற கவலைதான் அவளுடைய கண்களில்தெரியும்.

    குடும்ப செலவு மகள்களின் படிப்பு செலவு போக மீதம் இருக்கிற பணத்தை அப்படியே வங்கியில் சேமித்துக் கொண்டிருந்தாள்.

    மூன்று குழந்தைகளையும் விட்டுவிட்டு சாந்தமூர்த்தி சாலை விபத்தில் பலியானபோது வேறொரு பெண்ணாக இருந்திருந்தால் மனசு நொறுங்கிப் போயிருப்பாள்.

    மணிமேகலைக்கு தன்னம்பிக்கை அதிகம். தன்னை நம்பினாள். தன்னுடைய உழைப்பை நம்பினாள். விளையாட்டாய் கற்றுக் கொண்ட கை முறுக்குதான் கைகொடுத்தது. இன்றளவும் தொடர்கிறது.

    நான்தான் சம்பாதிக்கிறேனே... ஏம்மா... இன்னமும் சிரமப்படறே...? முறுக்கு சுத்தறதை விட்டுடும்மா...

    ஒரு தடவை பிருத்வி தெரியாத்தனமாய் வாயை விட்டு விட்டான்.

    மணிமேகலை உதறி எடுத்து விட்டாள்.

    நீ என்னலட்ச ரூபாயா சம்பாதிக்கறே...? நா முறுக்கு சுத்தறதை விடறதுக்கு...! அப்படியே லட்ச ரூவா சம்பாதிச் சின்னாலும்... இத நான் விடமாட்டேன்டா... உங்கப்பா போன பிறகு நம்ம நாலு பேருக்கும் சொந்தக்காரங்களோ... அக்கம் பக்கத்துல இருக்கறவங்களோ... ஒரு வாய் சோறு போடலை... இந்த கைமுறுக்குதான் சோறு போட்டுச்சு காப்பாத்துச்சு... கவுரவமா வாழ ஒரு வழியைக் காட்டிச்சு... இதை மறக்கக் கூடாதுடா... கை முறுக்கு சுத்திகிட்டு இருக்கறப்பவே என்னுயிர் போயிடணும்... அதான்டா என் ஆசை...

    கண்ணீர் மல்க மணிமேகலை படபடவென பேசியதை பிருத்வியால் காலத்துக்கும் மறக்க முடியாது.

    சாரிம்மா... இனி நா... இது மாதிரி சொல்ல மாட்டேன்...

    அவளை சமாதானப்படுத்துவதற்குள் திணறிப் போய் விட்டான். எந்த விஷயமாக இருந்தாலும் மணிமேகலையிடம் கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் பேச வேண்டும்.

    ஜீன்ஸ் பேண்ட்டும், டி-சர்ட்டும் வாங்கி வந்தது கூட மணிமேகலைக்கு தெரியாது. அவளுக்குத் தெரியாமலே வெளியேறி விடலாம் என நினைத்திருந்தான் பிருத்வி.

    ஆனால், வந்தனா கூச்சலிட்டுக் காட்டிக் கொடுத்து விட்டாள்.

    மணிமேகலையை கையோடு கூட்டியும் வந்துவிட்டாள்.

    "அம்மா... நல்லா பாரு... உத்துப்பாரு... இது வேற

    Enjoying the preview?
    Page 1 of 1