Pinnal
()
About this ebook
Read more from Subrabharathi Manian
Matrum Silar Rating: 0 out of 5 stars0 ratingsSayathirai Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Chimizh Rating: 0 out of 5 stars0 ratingsAazham Rating: 0 out of 5 stars0 ratingsArivippu Rating: 0 out of 5 stars0 ratingsSudumanal Rating: 5 out of 5 stars5/5
Related to Pinnal
Related ebooks
Inimeal Charumathi Rating: 0 out of 5 stars0 ratingsAvargal Artham Purinthavargal Rating: 0 out of 5 stars0 ratingsManam Virumbuthe Unnaiye! Rating: 4 out of 5 stars4/5Kanne Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsAmma Pillai Rating: 0 out of 5 stars0 ratingsKoottirkkul Puhuntha Uyir Rating: 5 out of 5 stars5/5Kovaiyil Oru Kutram Rating: 5 out of 5 stars5/5Chinnanchiru Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsகோவையில் ஒரு குற்றம் Rating: 0 out of 5 stars0 ratingsThendral Varum Jannal Rating: 0 out of 5 stars0 ratingsMella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Endrendrum Ambudan Rating: 0 out of 5 stars0 ratingsMaranthal Thane Ninaipatharku! Rating: 5 out of 5 stars5/5Oru Vaanam Sila Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsThookkanan Kuruvi Koodu... Rating: 0 out of 5 stars0 ratingsAzhagiya Pizhaigal Rating: 0 out of 5 stars0 ratingsEnathu Nila Kanniley...! Rating: 0 out of 5 stars0 ratingsMamanar Kathaigal Rating: 5 out of 5 stars5/5Iranthavan Pesukirean! Rating: 0 out of 5 stars0 ratingsSathya Kodugal Rating: 0 out of 5 stars0 ratingsKandharva Veenaigal Rating: 5 out of 5 stars5/5Mupparimanam Rating: 0 out of 5 stars0 ratingsKoottupuzhukkal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Poyin Rating: 0 out of 5 stars0 ratingsThoondilil Oru Thimingalam Rating: 2 out of 5 stars2/5Endhan Manam Unnai Sutruthey... Rating: 4 out of 5 stars4/5Sonthamendru Vanthathellam Rating: 5 out of 5 stars5/5Kannodu Kaanpathellam Rating: 0 out of 5 stars0 ratingsAnandha Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsHands - Up Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Pinnal
0 ratings0 reviews
Book preview
Pinnal - Subrabharathi Manian
http://www.pustaka.co.in
பின்னல்
Pinnal
Author:
சுப்ரபாரதி மணியன்
Subrabharathi Manian
For more books
http://www.pustaka.co.in/home/author/subrabharathi-manian
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. வாகனம்
2. பூ
3. பழைய ஒயினும் புதுச்சாராயமும்
4. எதிர்ப்பு
5. காதலர்கள் தினம்
6. சிதைவு
7. தொடுகை
8. பாதுகாப்பு
9. கொசுக்கள்
10. உறுத்தல்
11. நெருப்புக் கோளம்
12. பின்னல்
13. சார்ந்து நிற்க ஒரு மரம்
பின்னல்
(சிறுகதைத் தொகுப்பு)
முன்னுரை
இது எனது பத்தாவது சிறுகதைத் தொகுதி.
இக்கதைகள் மூலம் நான் அறிந்தவர்களின் அனுபவ உலகோடு எனக்கு ஏற்பட்ட அறிமுகங்கள் மன இறுக்கங்களிலிருந்து என்னைத் தவிர்த்துக் கொள்ள உதவியிருக்கிறது. இவர்களோடானப் பரிச்சயம் எழுத்து வெளிப்பாடு இல்லையென்றால் சாத்தியமாகியிருக்காது. என் உலகத்தை வெவ்வேறு வகைகளில் விரித்துக் கொள்வதற்கும் இவர்கள் பயன்பட்டிருக்கிறார்கள்.
திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் வழங்கும் இலக்கிய விருதுகள் நாவல் முதல் மொழிபெயர்ப்பு வரை ஏழு பிரிவுகளில் இருபத்தோரு எழுத்தாளர்களுக்கு என்றாகும். அதில் வானதி வெளியீடுகள் ஒவ்வொரு ஆண்டும் மூன்று, நான்காவது இடம்பெறும். இலக்கிய விருதுகள் பரிசளிப்பிற்கு அவ்வப்போது வானதி திரு. சோமசுந்தரம் அவர்கள் வருவார்கள். எழுத்தாளர்களுடன் வெகு இயல்பாகப் பழகும் அவரின் தன்மை கெளரவப் படுத்துவதாக இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் எனது சிறுகதைகளை வெளியிடக் கேட்டார். இத்தொகுப்பு அவரின் மறைவிற்குப் பின் வெளிவருவது அவருக்கான நினைவஞ்சலியாகவும் அமைந்துவிட்டது.
இக்கதைகளைப் பிரசுரித்த பத்திரிகை ஆசிரியர்களுக்கும், எனது வாசகர்களுக்கும் வணக்கம். தொகுப்பிற்காய் திரு. திருநாவுக்கரசு, திரு. ராமநாதன் ஆகியோர்க்கு நன்றி.
அன்புடன்,
சுப்ரபாரதிமணியன்
8176, பாண்டியன் நகர்,
திருப்பூர்-2.
பொருளடக்கம்
1
வாகனம்
நண்டு ஊருது, நரி ஊருது... நண்டு ஊருது…
தனது கைகளில் பிஞ்சு விரல்களாய் ஒடிக் கக்கத்தில் அருணின் விரல்கள் கிச்சுமுச்சு மூட்டும் போது முன்பெல்லாம் கண் களில் நீர் பனிக்க சிதம்பரம் கூச்சப்படுவான். சற்றேயான கூச்சம் என்றாலும் முகம், உடம்பு நிலை குலைவதைப் போலக் காட்டி அருணை சிரிக்க வைக்கும். என்ன நண்டு இம்செ பண்ணுதா மாமா…
அவன் கேட்க கேட்க கூச்சத்தில் உடம்பு பதறுவது போல மிகைப்படுத்திக் கொள்வான் சிதம்பரம். நண்டு ஊருண்துக்கே இந்தப் பாடு. பதற வேண்டியிருக்குது. இன்னம் நரி ஊருனா எப்படி இருக்கும் அருண்…
ஆமா மாமா… நரி எப்பிடி இருக்கும்...?
ஆமா நரி எப்பிடியிருக்கும், நீ பாத்ததில்லில்லே… நானும் பாத்ததில்ல...
அப்போ நரி பொய்யா... டைனோசார் மாதிரி...
பொய்யின்னு இல்லே. எங்காச்சும் இருக்கும். கட்டுக்குள்ள, அப்புறம் மிருகக்காட்சி சாலையில…
மிருக்கக்காட்சி சாலைன்னா…
அங்கெல்லா மிருகங்களெ அடச்சு வெச்சிருப்பாங்க...
எதுக்கு அடச்சு வெக்கணும்...
ஆமா... எதுக்கு வெக்கறது. இல்லையில்லெ, அப்பிடி அடச்சு வெச்சாதானே உன்னெ மாதிரிக் கொழந்தைகளுக்கெல்லா இது புலி, இது சிங்கம், இது நரின்னு காமிக்க முடியும்…
செரி நரி யாரு மாதிரி இருக்கும்...?
நரி மாதிரிதா...
நாய் மாதிரியா...?
உம்... மனுஷனையும் அப்பிடித்தா சொல்வாங்க...
மனுஷ நரியா…?
இல்லெ நரி மனுஷன்... செரி உங்கையில நரி ஊருனா எப்பிடியிருக்குமுன்னு பாக்கனுமே. நண்டு ஊருது... நரி ஊருது... நண்டு ஊருது…
ஹா… ஹா… ரொம்பவும் கூச்சமா இருக்கு மாமா... வுடு மாமா…
அருணின் சின்ன உடம்பு கூச்சத்தால் தடுமாறி முகம் சிவந்து போகும்.
முடியாது. நண்டு ஊருனா கூச்சம் இருக்கத்தானே செய்யும்…
எதுக்கெதுக்கோ கதை சொல்லுவியே மாமா. இந்தக் கூச்சத்துக்கு கதை எதுவும் இல்லையா...?
உம்... இருக்குமே... இருக்கு. சொல்றன்...
கண்களின் ஒரத்தில் பணித்த நீரை துடைத்துக் கொண்டு சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டான் அருண். கதை கேட்கும் ஆவல் அவன் முகத்தில் பரவசமாயிருந்தது.
ஆமா... கூச்சம்ன்னா என்ன குஷிதானே, முந்தியெல்லா யாருக்கும் கூச்சம் இருக்காது. எல்லாரும் ரொம்பவும் பொறுப்புணர்ச்சியோட வேல பாப்பாங்க. கப்பு சிப்புன்னு இருப்பாங்க. பெரிசா சிரிப்பும் இருக்காது. இதெ பாத்துட்டு நிரந்தலான்னு ஒரு தேவதைக்கு ரொம்பவும் சங்கடமாப் போச்சாமா, என்ன இப்பிடி ஜனங்க மண்ணு மாதிரி, கல்லு மாதிரி இருக்காங்கன்னு. காட்டுக்குப் போயி என்னமோ மெளுகு எடுத்துட்டு வந்து கூச்சம் பண்ற ஒரு உயிர் வண்டுவெ உண்டு பண்ணுச்சு. ஆம்பள பொம்பளக கொழந்தைகன்னு வயித்துக்குள்ள இந்த வண்டெ போற மாதிரி பண்ணுச்சாமா. அக்குள்ளெ, இடுப்புலே, மார்லெ, இரு. யாராவது தொட்டா ஒடு. அவங்களுக்கு கூச்சமும் சிரிப்பும் வரும்னு சொல்லுச்சு. வண்டும் அது மாதிரியே செஞ்சுச்சாமா. அப்புறமென்ன பொம்பளெ இடுப்பைத் தொட்டா கூச்சம், சிரிப்பு, கக்கத்தில் யாராச்சும் கைவெச்சா ஒடம்பு நெளியற மாதிரி... கூச்சம், கும்மாளம் போடற மாதிரி சிரிப்புதா.
ஜெயாவின் கைகள் தன் உடம்பில் ஊருவதற்கு ஆரம்பித்த பின்பு கூச்சம் மறைந்து போய் விட்டது போலத் தான் உணர்ந்தான் சிதம்பரம். வருத்தமாகவே இருந்தது.
அவன் அக்கா கூட ஆதங்கப்பட்டுக் கொள்வாள்: பாலுக்கும் சாதத்துக்குந்தா அருணுக்கு அம்மா ஞாபகம் வருது. மத்த எல்லாத்துக்கும் மாமாதா. எப்பவும் ஒடம்பு சதை மாதிரி ஒட்டிட்டே இருக்கறே...
சிதம்பரம் கார் டிரைவர் உத்யோகம் வந்த பின்பு அவனை விட்டுப் பிரிந்திருக்க வேண்டியானது. சில சமயம் நாலைந்து நாள் என்றாகிவிடும் வீட்டிற்குப் போக. அப்போதெல்லாம் சிதம்பரம் வேதனையில் அமிழ்ந்து போவான். அருணைப் பார்க்க முடியாமல் காருடன் ஒட்டிக் கொண்டிருப்பது அவனுக்கு அருவருப்பைத் தரும். அவன் பார்த்த சீனப் படத்தில் வரும் டாக்ஸி டிரைவர் அனாதையான ஒரு குழந்தையை தனது சீட்டிற்குப் பக்கத்தில் ஒரு தொட்டில் போட்டு கவனிப்பதும், அது அவன் மன நிலையில் ஏற்படுத்தும் கிளர்ச்சிகளையும் அவன் அடிக்கடி நினைத்துப் பார்த்ததுண்டு. அப்படித்தான் அருணுக்கும் தன் காரில் ஒரு இடம் ஒதுக்குவதென்பது கற்பனையாக அவனுக்கு இருந்தது. ஆனால், முதலாளிமார்கள் ஒத்துக்கொள்ள வேண்டுமே என்றிருந்தது.
மூன்று வருடங்களில் பதினோராவது முதலாளியாக வேலாயுதம் இருந்தார். அங்கு சேருவது என்பது அவனுக்கு பெருமிதமாகவே இருந்தது. மூவாயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணி தரும் ஊரில் ஐந்நூறு கோடி ரூபாய் அவரின் பனியன் கம்பெனிகளில் புரண்டது. சாயப் பட்டறை, விரிங்கேஜ், பேப்ரிகேஷன், ஸ்கிரீன் பிரிண்டிங் என்று எல்லா யூனிட்டுகளையும் கொண்டிருந்தது. நூலாய் சுவர் காம்பவுண்டுக்குள் நுழைவது அழகான வண்ணங்களில் பனியன்களாக வெளிவரும். ஐ.எஸ்.ஒ. 9000ஐயும் அவர் கம்பெனி பெற்றிருந்தது. மாதம் பத்து நாட்கள் வெளியூர், வெளிநாடு என்றிருப்பார். தூங்கி வழிந்து மேஜையின் நுனி பட்டு முன் தலையில் சிறு சிறு தழும்புகளும் இருந்தன. பனியன் கம்பெனியிலேயே பெரும்பாலும் தூக்க மாகவும் கூட இருந்தது. அவர் வீட்டில் இருக்கும் காரை நிர்வகிப்பது சிதம்பரத்தின் பொறுப்பில் இருந்தது.
பல சமயங்களில் சேம்பிள் பீஸ் பனியன் குவியல்களைக் காரில் ஏற்றிக்கொண்டு முதலாளி வீடு போகும் போது அவனுக்குத் திகைப்பாய் இருக்கும். எவ்வளவு வண்ணங்கள்! எவ்வளவு வகைகள்! இவற்றை மாட்டிக் கொண்டு மனிதர்கள் திரிவதைப் பார்க்க பாக்கியம் வேண்டும் என நினைப்பான். எப்போதும் வர்ண மயமான பனியன் குவியலுக்குள் அவனைத் தள்ளிவிட்டது போல அவன் இருப்பது அவனுக்குப் பிடித்திருந்தது. தான் போடும் சட்டைகள் பல சமயம் வெளிறிப்போய் இருப்பதை வர்ண பனியன்களோடு ஒப்பிட்டு சங்கோஜம் அடைந்திருக்கிறான்.
சிதம்பரம்... என்ன வெளுத்துப் போன சட்டையெல் லாம் போடறெ. கம்பனியிலதா காலர் ஷர்ட், டீ ஷர்ட்ன்னு எக்கச்சக்கமா கெடக்குதே. உன்னோட மாநிறத்துக்கு எதுவும் எடுப்பாயிருக்கும்.
- ஜெயா சொன்னாள்.
வேண்டாம்மா...
உன்னோட டிரஸ்ஸிலதா எங்களுக்கும் மரியாதை. அதுவும் சின்ன வயசு.
காலர் ஷர்ட்டுகளுக்குள் அவனை மூழ்கடித்துவிட்டது போல் பலவற்றை ஜெயா கொண்டு வந்து காட்டினாள். எது வேண்ணாலும் எடுத்துக்க. எல்லாம் சாம்பிள் பீஸ்க, வெளிநாட்டுக்குப் போறது. வூட்ல அவருக்கு எப்பவும் கதர் ஷர்ட்தா நாப்பத்தஞ்சு ஆச்சுலெ அவருக்கு. நீ உனக்குப் புடுச்சத போட்டுக்க அவர் கம்பெனியில தயார் பண்ணறது எதையும் போட்டடுக்கறதில்லெ. போட்டுட்டா என்ன மொதலாளி பனியனோட திரியறார்னு கிண்டலா பேச்சு வரும். கதர்தா அவருக்கு...
"அருணுக்கும் விதம் விதமாய் துணிகள் கிடைப்பது தான் அவனுக்குச் சந்தோஷமாக இருந்தது. ஜெயாவை வெளியில் கூட்டிக் கொண்டு போவது, வெளியூர் என்றால் கூட்டிக் கொண்டு போவது என்று காத்திருந்து செய்ய வேண்டி இருந்தது. நேரம் கடந்தால் காரிலேயும் பால்கனியிலும் முடங்க வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் அவனுக்கு