Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chinnanchiru Sirukathaigal
Chinnanchiru Sirukathaigal
Chinnanchiru Sirukathaigal
Ebook143 pages1 hour

Chinnanchiru Sirukathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இருபத்தைந்து சிறுகதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு சிறுகதையும் சுருக்கமாகவும் கருத்தாழம் மிக்கதாகவும் நகைச்சுவை உணர்வை தூண்டும் விதத்திலும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
கவலையும், சலிப்பும் மிகுந்த வாழ்க்கை வாழும் இன்றைய மக்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐய்யமில்லை. எனவே அனைவரும் இந்நூலினைப் படித்து மகிழ்ந்திட வாழ்த்துகிறோம்.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580136906120
Chinnanchiru Sirukathaigal

Read more from Kalaimamani Kovai Anuradha

Related to Chinnanchiru Sirukathaigal

Related ebooks

Related categories

Reviews for Chinnanchiru Sirukathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chinnanchiru Sirukathaigal - Kalaimamani Kovai Anuradha

    http://www.pustaka.co.in

    சின்னஞ்சிறு சிறுகதைகள்

    Chinnanchiru Sirukathaigal

    Author:

    கலைமாமணி கோவை அனுராதா

    Kalaimamani Kovai Anuradha

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kalaimamani-kovai-anuradha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. இந்த ஆளுக்கு எப்படிக் கெடைச்சது?

    2. "வைரத் தோடு போடுவார்களா?''

    3. கடவுள் படும்பாடு!

    4. உள்ளங்கள் பேசட்டும்!

    5. அப்பா வந்தார்

    6. பப்பாளி மரம்

    7. இது ஒரு வெள்ளிவிழாப் படக்கதை

    8. சுதாவுக்கு அவனைப் பிடிக்கவில்லை

    9. வேலனைப் போட்டோ எடுக்கறாங்க

    10. என் பேரு ராமைய்யா

    11. கட்டில் புதுசு.... பொண்டாட்டி பழசு

    12. அவள் ஒரு மாதிரியான உறவு

    13. அப்பா, தாத்தா திதி எப்ப வரும்?

    14. பிளாக் டிக்கெட்

    15. மெதுவா...... மெதுவா.... தொடலாமா?

    16. தீபாவளி வெளியீடு

    17. வளர்ப்பு (சிறுகதை)

    18. இன்று முதல்

    19. அவர் ஒரு வித்தியாசமானவர்

    20. சப்வே...!

    21. சற்றுத் தள்ளி நின்று படிக்கவும்...

    22. மனசு எத்தனை தினுசு

    23. பூமா ஏன் கோவிலுக்குப் போகிறாள்?

    24. நாட்டு நடப்புகள்

    25. சபலம்

    1. இந்த ஆளுக்கு எப்படிக் கெடைச்சது?

    இன்று உலகத்தில் கிடைக்கும் அத்தனை அயிட்டங்களும் சொர்க்கத்தில் தாராளமாய்க் கிடைத்தன.

    எங்குப் பார்த்தாலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் பூலோக மனிதர்கள். கொடைவள்ளல் மாணிக்கம் தன் மனைவியுடன் மூன்றாவது தேன்நிலவை அனுபவித்து வந்தார்.

    கல்யாணம் முடிந்ததும் கொடைக்கானலில் முதல் தேன்நிலவு. இரண்டாவது மகன் அமெரிக்காவில் இருக்கும்போது போய் 6 மாதம் மனைவியுடன் தங்கிவிட்டு வந்தது. மூன்றாவது சொர்க்கத்தில், மாணிக்கத்தின் மனைவிக்கு மெகா சீரியல் என்றால் உயிர். சொர்க்கத்தில் 1500 சேனல்கள். மொத்தம் 6587 சீரியல்கள். இருக்கும் இடத்தைவிட்டு நகராமல் சீரியல் பார்த்து வந்தாள். சாப்பாடு, சிற்றுண்டி எல்லாவற்றையும் தேவதூதர்கள் இருக்குமிடத்திற்கே வந்து ஊட்டி விட்டார்கள்.

    தினமும் காலையில் ஒரு முறை கடவுள் காட்சி அளித்து, எல்லோரையும் விசாரித்து வந்தார். மாணிக்கத்தின் மனைவி சிலசமயம் அவர் வருவதைக் கூட கவனிக்காமல், சீரியல் பார்ப்பாள். ஆனால் கடவுளுக்குக் கோபமே வராது. தன் படைப்பில் இதற்கு மட்டும் இத்தனை கவர்ச்சியா? என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே செல்வார்.

    அப்படிப்பட்ட சொர்க்கமே இன்று மாணிக்கத்திற்குக் கசந்தது. காரணம் கூட்டத்தில் தன் பக்கத்து வீட்டுக்காரன் கஞ்சன் கோவிந்தசாமியைப் பார்த்தது தான்...... எச்சில் கையில் காக்காய் ஓட்டாத இவன் எப்படிச் சொர்க்கம் வந்தான்...? மண்டையைப் போட்டுப் பிய்த்துக் கொண்டார் மாணிக்கம். மனைவியிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்தார். நாளை கடவுள் வரும்போது எப்படியும் இதைப்பற்றிக் கேட்டுவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.

    மறுநாள் சொர்க்கத்தில் கூட உன் முகம் வாடியிருக்கிறதே.... என்ன குறை...? கேட்டே விட்டார் கடவுள்.

    ''சாமீ.... நான் தான தருமம் கணக்கு வழக்கு இல்லாம செஞ்சவன்...... சொர்க்கத்துக்கு வந்து சேர்ந்தேன்.... ஒன்னுமே செய்யாத பக்கத்து வீட்டுக் கோவிந்தசாமி எப்படி இங்க வந்தான்? அதுதான் சாமி.... என் கவலை" என்றார் மாணிக்கம்.

    தன் மோகனச் சிரிப்பை உதிர்த்தார் கடவுள்......

    "பக்தே....! தருமத்தில் உயர்ந்த தருமம் இன்னொருவரின் பசியைப் போக்குவதுதான். மடிப்பாக்கத்தில் குடியிருந்த கோவிந்தசாமி, தன் கஞ்சத்தனத்தினால் கொசுவர்த்தி சுருள் உபயோகித்ததில்லை. தெரிந்தோ தெரியாமலோ தன் வாழ்நாளில் கோடிக்கணக்கான கொசுக்களுக்குத் தன் ரத்தத்தையே உணவாக அளித்துள்ளான்.

    கடைசியில் சிக்குன்குனியா நோய்வாய்ப்பட்டு, கொசுக்களுக்காகத் தன் உயிரையும் தந்துள்ளான். அதனால் தான் அவன் சொர்க்கத்திற்கு அழைத்து வரப்பட்டான். என்னதான் தான தருமங்கள் நீ செய்தாலும், அடுத்தவன் சந்தோஷப்படுவதைப் பார்த்துப் பொறாமைப்பட்டு, உனக்கு கொடுத்த வாழ்வை அனுபவிக்கத் தவறியதால் நீ மறுபடியும் மடிப்பாக்கம் கழுவேலிக்கு அருகே பிறந்து 20 வருடங்கள் கழித்து மீண்டும் சொர்க்கம் வருவாயாக......" என்று சொல்லி கடவுள் மறைய......

    கழுவேலியில் உள்ள ஓர் ஆஸ்பத்திரியில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

    2. "வைரத் தோடு போடுவார்களா?''

    "சிவராமா.... உனக்கே இது நல்லா இல்லைடா.... ஜானகி எவ்வளவு அழகா இருக்கா...... வீணையைக் கையிலெடுத்தா அசல் சரஸ்வதியே நேரில் வந்த மாதிரி இருக்கு.... இவளைப் போய் வேண்டான்னு சொல்லிட்டியே…?''

    பஸ்சில் ஜன்னலோரம் உட்கார்ந்து கொண்டு, எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டு வந்த சிவராமனின் கற்பனையைக் கலைத்தாள் சாரதா.... அவள் அக்கா.

    அக்கா...... நீ பேசாம இரு.... பொம்பளைங்க மத்தியில் நீ எப்படியோ தப்பிப் பொறந்துட்டே.... நம்ம வீட்டுக்கு வரப்போற மருமகள் நிச்சயமா வைரத் தோடு போட்டுட்டுத் தான் வரணும்...... அதுதான் அப்பா, அம்மா, ஏன் என்னோட ஆசையும் கூட.... ஜானகி அழகா இருக்கா...... அது மட்டும் போதுமா....?

    "ஏண்டா.... நீ சின்னப் பையன்...... இந்தக் காலத்துப் பசங்க வரதட்சணை, சீர் வாங்கக் கூடாதுன்னு அப்படி, இப்படிப் பேசி சங்கமெல்லாம் நடத்தறாங்க.... நீ என்னடான்னா கிழவன் மாதிரிப் பேசி பிடிவாதம் பிடிக்கிறீயே…?''

    "நான் ஒன்னும் பிடிவாதம் பிடிக்கலை...... என்னோட அண்ணி ரெண்டு பேரும் வைரத் தோடு போட்டுக்கிட்டு வந்திருக்காங்க.... நான் அண்ணன்களை விட நிறைய சம்பாதிக்கிறேன்...... நானும் அந்த அளவு அந்தஸ்தோட பொண்ணு எதிர்பார்க்கறது என்னக்கா தப்பு…?'' அவன் தன் எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் கற்பித்தான்......

    ''எப்படியோ போடா...... நான் கல்யாணம் ஆகி வேற வீட்டுக்குப் போனவள்.... என் பேச்சு இந்த வீட்டுல சரிப்பட்டு வராது......'' என்று வரட்டுப் பிடிவாதம் செய்யும், தம்பியிடமிருந்து ஒதுங்கினாள் சாரதா....

    சிவராமன் பார்ப்பது இது எட்டாவது பெண்...... தற்செயலாக ஊருக்கு வந்திருக்கும் அக்கா சாரதாவையும் பெண்பார்க்கக் கூட்டி வந்திருந்தான். சற்று முற்போக்கு எண்ணம் கொண்ட சாரதா, பெண் அழகாக இருக்கிறாள்...... வைரத் தோட்டைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் என்று சொல்லிப் பார்த்தாள். ஆனால் யாரும் மசியவில்லை

    வழக்கம் போல இந்த இடமும் வைரத் தோடு போட முடியாது என்ற காரணத்தினால் தகையாமல் போனது.... சிவராமன் அதற்காகக் கவலைப்பட்டதாகக் தெரியவில்லை. பார்க்கும் பெண்களின் கண் வீச்சு எல்லாம் அவனைத் தொட முடியாத அளவிற்கு மனத்தை வைரமாக வைத்திருந்தான்.

    ஊருக்குப் புறப்படும் சமயம், ஆட்டோவில் ஏறப்போன சாரதா, தம்பியைத் தனியே கூப்பிட்டாள்.

    "சிவா.... உனக்கு இப்பவே வயசு முப்பதாச்சு. பிடிவாதமா வைரத் தோடயே கேட்டிண்டிருந்தா, அப்புறம் உனக்கு வைரக்கடுக்கன் போடற அளவுக்கு வயசாயிடும்.... புத்திசாலித்தனமா நடந்துக்கோ......'' ஊதற சங்கை ஊதி வைப்போம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள் அவள்......

    ஆனால் சிவராமன் ஏமாந்து விடவில்லை. அவன் மனதுப்படியே ஆறு மாசத்தில் ஒரு பெண்ணை பிடித்து விட்டான். பெண் எம்.ஏ. படித்தவள். சந்தனக்கலர். கொள்ளை அழகு. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு ஜதை கேட்டதற்கு, இரண்டு ஜதையாக வைரத் தோடு.

    ஒரே பெண் என்பதால் சிவராமனின் மாமனார் தங்கக்கவசம் போடாத குறையாக நகைகளைச் சொரிந்து அனுப்பியிருந்தார்.

    கல்யாணப் பந்தலில் அக்கா சாரதாவை அலட்சியமாகப் பார்த்தான் சிவராமன். என் சாமர்த்தியத்தைப் பார் என்பது போல் இருந்தது அது.

    முதல் இரவு. தன் நெடுநாளைய கனவுகள் நிறைவேறும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் சிவராமன். ஜனனி.... அவன் ஆசை மனைவி...... வைரத் தோடு நாயகி… அன்னநடை போட்டுப் பாலுடன் உள்ளே வந்தாள்.

    பால் டம்ளரை அங்குள்ள மேஜையின் மேல் வைத்து, அங்கிருக்கும் கத்தியை எடுத்தாள். ஆப்பிள் ஒன்றை எடுத்து நறுக்கினாள்.

    கட்டிலில் அமர்ந்து அவளைக் கவனித்துக் கொண்டிருந்த சிவராமன் பொறுமையை இழந்தான்.

    "ஜனனி.... ஆப்பிளுக்கு இப்ப என்ன

    Enjoying the preview?
    Page 1 of 1